CPIM Tamilnadu
1.01K subscribers
11.4K photos
115 videos
214 files
3.99K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
#CPIM கட்சி உறுப்பினரும், பாடகருமான கரிசல்குயில் தோழர் கிருஷ்ணசாமி கடந்த ஏப்ரல் 11 அன்று காலமானதையொட்டி #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று அவரது மனைவி மற்றும் மகள்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
Media is too big
VIEW IN TELEGRAM
தேர்தலில் மட்டும் பாஜகவை தனிமைப்படுத்தி தோற்கடிப்பதல்ல, அவர்கள் பணியாற்றும் ஒவ்வொரு தளத்திலும் எதிர்வினை ஆற்ற வேண்டும் - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #WaqfActAmendmentBill #Waqf #MuslimPropertyRights #DivisivePolitics #BJPAntiMuslim #BJPFails #ModiFailed More: https://youtu.be/AzecYekwG8s
இன்று தோழர் அன்டோணியோ கிராம்சி அவர்களின் நினைவு தினம் (22 ஜன. 1891 - 27 ஏப். 1937).
முன் எப்போதையும் விட, வேறு எவரையும் விட இந்தியாவில் கட்டமைக்கப்படும் நவ பாசிச குணங்களைக் கொண்ட இந்துத்துவ மதவெறிக் கூட்டத்தின் முற்றுகையில் தவித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களாகிய நமக்கு கிராம்சி தேவைப்படுகிறார். அவரின் சிந்தனைகளையும் அனுபவங்களையும் அறிந்து கொள்வது மிக அவசியமானது. #AntonioGramsci #FightAgainstFascism #MarxistQuotes #QuoteOfTheDay #Inspiration #Motivation #motivationalquotes #SocialismIsAlternative #SocialismIsFuture More: https://youtu.be/LqogEtCIqf8
Media is too big
VIEW IN TELEGRAM
கோபத்துடன் இருக்கிறார் மோடி, கண் சிவந்து திரிகிறார் அமித்ஷா என்று எழுதிக் கொண்டிருக்கிறது மோடியின் மீடியாக்கள்... கோபமாக இருக்கும் மோடி ஜம்மு காஷ்மீருக்கோ, கான்பூர்க்கோ போகாமல் பீகார் சென்றது ஏன்? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack More: https://youtu.be/bSC5l_hgxjw
சிகிச்சைக்கு வந்த பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது மனிதாபிமானமற்றது! பஹல்காமில் தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இச்சம்பவத்தை, ஒன்றிய பாஜக அரசாங்கம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தன்னுடைய வெறுப்பு அரசியலை தீவிரப்படுத்துவதற்கு பயன்படுத்துவதையும் #CPIM வன்மையாக கண்டிக்கிறது. - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattack
பயங்கரவாதிகள் வருகிறார்கள்; தாக்குகிறார்கள்; தப்பிக்கிறார்கள். பிரதமரே, சொல்லுங்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, கடலோரப் பாதுகாப்பு, கடற்படை எல்லாம் உங்கள் கையில் இல்லையா? ஆனாலும் பயங்கரவாதிகள் வெளிநாட்டிலிருந்து எப்படி நாட்டிற்குள் நுழைகிறார்கள்?”

2012 ஆம் ஆண்டு பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த பேரணியில் மோடி பேசியது… #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
மோடிக்கு தேர்தலே முக்கியம், மக்களுக்கு என்ன ஆனால் என்ன?
#PahalgamTerroristAttack #BiharElections #ModiFailed
காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட கேரளம் எடப்பள்ளியைச் சேர்ந்த என்.ராமச்சந்திரனின் வீட்டிற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அமைச்சர் கே.என்.பாலகோபால், #CPIM கேரள மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், எர்ணாகுளம் மாவட் டச் செயலாளர் எஸ்.சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர். #PahalgamTerroristAttack
கறிக்கோழி வளர்ப்புக் கூலியை கிலோ ஒன்றுக்கு 20 ரூபாயாக உயர்த்த கோரியும், நலவாரியம், இ.எஸ்.ஐ மருத்துவ வசதி அமைத்திடவும், முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆண்டுதோறும் நடத்தி கூலி உயர்வு நிர்ணயம் செய்யவும், கறிக்கோழி பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் வங்கி மூலம் மானியத்துடன் கடன் வழங்கிடவும், தமிழக அரசு கோழி குஞ்சுகளை வழங்க நடவடிக்கை எடுத்திட வேண்டியும் த.க.வ.வி.சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. #CPIM #Protest More: https://youtube.com/shorts/EDYjx1J0EMA
அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத்துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படும் பத்ம பூஷண் மார் கிறிசோஸ்டம் அறக்கட்டளை விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்க தோழர் எம்.ஏ.பேபி பெற்றுக் கொண்டார். அவ்விருதுத் தொகையை, முதல்வர் நிவாரண நிதிக்கும், மார் கிறிசோஸ்டம் அறக்கட்டளைக்கும் தலா ரூ 25 ஆயிரம் விகிதம் நன்கொடையாக வழங்கினார்.
#CPIM சட்டமன்றக் குழுத் தலைவர் வி.பி.நாகைமாலி, எம்.சின்னதுரை ஆகியோர் ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ள MNREGA ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக பெற்று, விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சட்டமன்றத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கண்ணகி - முருகேசன் சாதி ஆணவப் படுகொலை: வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. சிபிஐஎம் வரவேற்பு! #CPIM #CasteDiscrimination #ManuAndCaste #EndUntouchability More:https://shorturl.at/dfBmd
கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாதஅளவுக்கு பதிலடி கொடுப்போம் 56 இன்ச் பிரதமர் #CPIM #JammuKashmir #Kashmir #pahalgam #pahalgamterroristattac #ModiGovt #ModiFailed #BJP #ModiLies
தமிழ்நாட்டின் முதல் சாதி ஆணவப்படுகொலை என்று குறிக்கப்பட்டுள்ள கண்ணகி, முருகேசன் வழக்கில் குற்றவாளிகள் மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பது சாதி ஆணவத்திற்கு எதிரான போராட்டத்திற்கு நம்பிக்கை தருகிறது - தோழர் கே.சாமுவேல்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #CasteDiscrimination #ManuAndCaste #EndUntouchability
கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்; வாழ வேண்டிய இரண்டு இளம் உயிர்களின் வாழ்க்கையை முற்றாக அழித்த ஆணவக் கொலையும், சாதி வெறிகொண்ட கொலைக் கூட்டத்துக்கு ஆதரவாக நின்ற காவல்துறையினரின் நடவடிக்கையும் கடும் கண்டனத்துக்குரியது. இந்தத் தீர்ப்பு, ஆணவக் குற்றங்களுக்கு எதிரான பல்முனை நடவடிக்கை தேவை என்பதை எடுத்துக்காட்டுகிறது - தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopCasteArrogantKillings
கடன் வசூல் தடுப்புச் சட்ட மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்; மாதர் சங்கத்தின் நீண்ட கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

தமிழக சட்டப்பேரவையில் சனிக்கிழமையன்று துணை முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் வழங்கும் நிறுவனங்களை பதிவு செய்தல், அவற்றின் நடவடிக்கைகளை வெளிப்படைத் தன்மையாக்குதல் மற்றும் வலுக்கட்டாய கடன் வசூலைத் தடுப்பதற்கான புதிய சட்ட மசோதாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. #loanpressure #TNAssembly #AIDWA
காஷ்மீரி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க! அமித்ஷாவுக்கு ஏ.ஏ.ரஹீம் எம்.பி., கடிதம்

”பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீர் மாணவர்கள் மற்ற மாநிலங்களில் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் பற்றிய செய்திகள் ஆபத்தானவை.

டேராடூனில் (உத்தரகண்ட்) வகுப்புவாத குழுக்களின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து மாணவர்கள் தங்களுடைய விடுதிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சமூக ஊடகங்கள் மூலம் வெறுப்புணர்வை பரப்பி வருவதாகத் தெரிகிறது. எனவே, மாணவர்களை பாதுகாக்க ஒன்றிய அரசின் அவசர தலையீடு தேவை. #PahalgamTerroristAttack