CPIM Tamilnadu
1.01K subscribers
10.3K photos
88 videos
212 files
3.62K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
இந்திய மண்ணில் மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய பெருமைக்குரியவர் தோழர் ம.சிங்காரவேலர் நினைவு தினம் #Singaravelar #சிங்காரவேலர் #CommunistLeader More: https://youtu.be/20KOQF0gK8w?si
சிந்தனைச் சிற்பி தோழர் மா.சிங்காரவேலர் அவர்களின் நினைவு தினத்தில் #CPIM மாநிலக்குழு அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் உள்ளிட்டு தோழர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், ரா.சிந்தன், கே.சரவணன் மற்றும் அலுவலகத் தோழர்கள் கலந்து கொண்டனர். #Comrade #Singaravelar #CommunistLeader
மதம் எதுவானாலும் மனித நேயம் காப்போம்!

ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகள் குறித்து பொய்ச்செய்திகளை அரசியல் ஆதாயத்திற்காக பரப்பி, மக்களை மோத விடத்துடிக்கிற மதவெறி அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

தீய நோக்கம் கொண்ட பொய் பிரச்சாரங்களை புறக்கணித்து அமைதி காத்த திருப்பரங்குன்றம் மக்களை பாராட்டுகிறோம்!

திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, விசிக, மமக, ஐஎம்யுஎல், அஇமுமுக திரிணாமுல் காங்கிரஸ், மநீமய்யம். #Madurai #Thiruparankundram #ReligiousHatred #RejectBJP #RejectRSS #SaveTamilnadu
இந்தியாவில் உள்ள ஐஐடி களில் 2023 - 24 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனை பேர் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நான் நாடாளுமன்றத்தில் கேள்வி (922/10.02.2025) எழுப்பி இருந்தேன். அதற்கான பதிலை கல்வி இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் நாடாளுமன்றத்தில் தந்துள்ளார்.

நான் கேட்ட கேள்விக்கு ஒரே வரியில் முனைவர் படிப்புகளுக்கு மொத்தம் 6210 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களில் 2484 பேர் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

பதிலிலுள்ள மற்ற வரிகள் எல்லாம் எவ்வாறு ஒன்றிய அரசு ஐஐடிகளுக்கு இட ஒதுக்கீடு பற்றி வலியுறுத்தி இருக்கிறது, அதை ஐஐடி நிறுவனங்கள் எவ்வாறு அமலாக்குகின்றன என்பதை பற்றிய வெற்று விளக்கங்களாகவே உள்ளன.

நான் கேள்வியில் எழுப்பி உள்ளது போல, இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக துறைவாரியாக நிறுவன வாரியாக அமைச்சர் தரவில்லை. இது தற்செயலானதாக கருதப்படவில்லை.

முழு விவரங்களை தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஆனால் அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்படாததை அம்பலத்திற்கு கொண்டு வர வந்துள்ளது.

6210 மொத்த மாணவர் அனுமதிகளில் 2484 இடஒதுக்கீட்டு பிரிவினர் என்றால் 40% மட்டுமே வருகிறது. ஓ.பி.சி 27 %, எஸ்.சி 15%, எஸ் டி 7.5% என்றால் மொத்தம் 49.5% இடங்கள் இட ஒதுக்கீட்டின் கீழ் வந்திருக்க வேண்டும். இதன்படியே 590 இடங்களை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் பறி கொடுத்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

பொதுப் பட்டியல் இடங்களில் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி மாணவர்கள் இடம்பெற்றுள்ளார்களா? அல்லது அந்த இடங்கள் இட ஒதுக்கீட்டு இடங்களில் சரிக் கட்டப்பட்டுள்ளனவா என்பதும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இட ஒதுக்கீட்டு பிரிவினர் விவரங்களை தனித்தனியாக தந்தால் எந்தெந்த ஐஐடிகள் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளை மீறி இருக்கின்றன என்பதும் பொது வெளிக்கு தெரிய வரும்.

நாடாளுமன்றத்தில் முழுமையான பதில் தரப்படவில்லை என்பதை தெரிவித்தும், முழு விவரங்களை வெளியிடுமாறும் கேட்டு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #IIT #Reservation #OBC #SC #ST #Seats #PhD #Dharmendrapradhan
சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 79வது நினைவு தினத்தையொட்டி ராயபுரம் கல்லறை சாலையில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.
#CPIM 24வது அகில இந்திய மாநாடு ஏப் 2-6 தேதிகளில் மதுரையில் நடைபெறுவதையொட்டி ராயப்பேட்டை ஜி.பி.சாலையில் நடைபெற்ற உண்டியல் வசூலை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டு தோழர்கள் உடனிருந்தனர்.
மாநில உரிமையை கேட்டால் தமிழக மாணவர்களை பழிவாங்குவதா? ஒன்றிய அரசுக்கு #CPIM கண்டனம்.

தமிழ்நாட்டுக்கு, கல்விக்காக ஒன்றிய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்.எஸ்.ஏ) திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டிய 2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க மறுத்திருக்கிறது.

ஒன்றிய அரசின் நிபந்தனையை ஏற்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை மற்ற மாநிலங்களுக்கு பகிர்ந்திருக்கும் ஒன்றிய ஆட்சியின் போக்கு மிகுந்த கண்டனத்திற்குரியது.

உடனடியாக தமிழ்நாட்டிற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு எந்த நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும் - தோழர். பெ.சண்முகம் மாநில செயலாளர், #CPIM #TamilNadu #samagrashikshaabhiyan #PMSHRI #BJPFailsIndia More: https://bit.ly/4hSRjTF
தில்லி தேர்தலில் பாஜக வெற்றி; நவீன பாசிச போக்குகளுக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பின்னடைவு!

சோகம் என்னவென்றால், தில்லியில் உள்ள எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் சுயவிமர்சன சுயபரிசோதனை செய்ய முன்வரவில்லை - டாக்டர் தாமஸ் ஐசாக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #Delhi #DelhiElection #ElectionResult2025
மதம் எதுவானாலும் மனித நேயம் காப்போம்!

ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகள் குறித்து பொய்ச்செய்திகளை அரசியல் ஆதாயத்திற்காக பரப்பி, மக்களை மோத விடத்துடிக்கிற மதவெறி அமைப்புகளை வன்மையாக கண்டிக்கிறோம்.

தீய நோக்கம் கொண்ட பொய் பிரச்சாரங்களை புறக்கணித்து அமைதி காத்த திருப்பரங்குன்றம் மக்களை பாராட்டுகிறோம்!

திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்), சிபிஐ, மதிமுக, விசிக, மமக, ஐஎம்யுஎல், அஇமுமுக, திரிணாமுல் காங்கிரஸ், மநீமய்யம். #Madurai #Thiruparankundram #ReligiousHatred #RejectBJP #RejectRSS #SaveTamilnadu
மாணவி ஸ்ரீமதி மரணம் : கலவர வழக்கில் மாணவியின் தாயாரையே குற்றவாளியாக்குவதா? சிபிசிஐடி-யின் குற்றப்பத்திரிக்கைக்கு #CPIM கண்டனம் - தோழர் பெ.சண்முகம் மாநில செயலாளர் #CPIM #Kallakuruchi #Srimathi #SrimathiDeathCase #CBCID #StopSexualHarassment #sexualharassment More: https://bit.ly/4hD1bkz