CPIM Tamilnadu
991 subscribers
12.3K photos
124 videos
279 files
4.4K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் பிராட்பேண்ட் இணைய சேவையான கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் (K-FON) OTT தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், சோனி லைவ் உள்ளிட்ட 29க்கும் மேற்பட்ட OTT தளங்களும், 350க்கும் மேற்பட்ட முக்கிய தொலைக்காட்சி சேனல்களும் இச்சேவையில் இணைக்கப்பட உள்ளன.

கேரள அரசின் பிராட்பேண்ட் இணைய சேவையான கேரள ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க் லிமிடெட் (கே-போன்), ஒரு லட்சம் சந்தாதாரர்கள் என்ற மைல்கல்லை எட்டிய பிறகு, OTT தளத்தில் நுழைந்துள்ளது.

குறைந்த கட்டணத்தில் அதிவேக இணையத்தை வழங்கி தனது திறனை நிரூபித்துள்ள கே-ஃபோன், கேரளம் முழுவதும் இதுவரை 23,163 அரசு அலுவலகங்கள், 74,871 வீடுகள் மற்றும் 3,067 நிறுவனங்கள் உள்ளிட்டு 1,15,320 இணைப்புகளை வழங்கியுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள (BPL) 14,194 குடும்பங்களுக்கு இலவசமாக இணையம் வழங்கப்பட்டுள்ளது.

#Kerala #PinarayiVijayan #LDFGovt #OTTplatform #GovtOTTplatform #KeralaLeads #LeftAlternative
கால்நடைத்துறை அரசு ஊழியர்களைத் திரட்டுவதிலும், தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவை உருவாக்கியதிலும், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தை உருவாக்கியதிலும், தமிழக மக்கள் ஒற்றுமை மேடையை உருவாக்கியதிலும் க்கிய பங்கு வகித்தவர் தோழர் தே.லட்சுமணன்.

செங்கல்பட்டு மாவட்டக்குழுவின் முதல் அமைப்புச் செயலாளராகவும், மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர். அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் பணியாற்றிய தோழர் தே.லட்சுமணன் நினைவு தினம் (24 ஆக. 2020) இன்று. #Comrade #DLakshmanan #CPIMLeader #CommunistLeader
டிரம்பின் 50% வரி விதிப்பைக் கண்டிக்கிறோம்; இந்தியாவுக்கு சீனா துணை நிற்கும்!

“இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவிகித வரியை விதித்திருக்கிறது. மேலும் வரி விதிக்கப் போவதாகவும் மிரட்டுகிறது. இதனை சீனா கடுமையாக எதிர்க்கிறது. அமைதியாக இருப்பது, கொடுமைக்காரர்களுக்கு பலம் சேர்க்கும். எனவே, சீனா, இந்தியாவின் பக்கம் நிற்கும், நியாயத்துக்கு விரோதமான வரி விதிப்பு முறைகளை எதிர்க்கும்”. ஸு பெய்ஹோங், இந்தியாவுக்கான சீன தூதர் #IndiaTariff #Trump #US #China #Parliament #ModiFailed #ModiGovt #Tax #USIndiaTrade #IndianExporters
30 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா; ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கும் பாஜகவுக்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்! #CPIM #Modifailed #AmitShah #130thamendment #Parliament #BJPFails
கேரள சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையைப் பெறுவோமென பேசியது அமித்ஷாவின் விருப்பம் மட்டுமே!

இருப்பினும், அதற்காக எந்த மோசமான வழிகளும் பின்பற்றப்படும் என்பதற்கான முன்னறிவிப்பே அமித்ஷாவின் பேச்சு.

தோழர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் #CPIM #Modifailed #AmitShah #BJPFails
இந்திய மாணவர் சங்கத்தின் 27 ஆவது தமிழ்நாடு மாநில மாநாட்டில் மாநிலத் தலைவராக சி.மிருதுளா, மாநிலச் செயலாளராக தௌ.சம்சீர் அகமது தேர்வு

புதிய நிர்வாகிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்… #SFI #SFITamilNadu #SFI27thTNStateConference
தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ள தனி ஏற்பாடு இல்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம். காதலர்களுக்காக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் திறந்தே இருக்கின்றன. நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதேசமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும். வருகிற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை முதலமைச்சர் கொண்டு வர வேண்டும். - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #SpecialACT
பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது!!! முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாக்கூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல, பாஜகவினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது. நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம். தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #AnuragThakur #Hanuman #NeilArmstrong #YuriGagarin
சிபிஐ(எம்) தொடர்ந்த வழக்கில் கொடிக் கம்பங்களை அகற்ற இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்! பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை. “அரசியல் கட்சிகள் தங்களின் அடையாளங்களை வெளிப்படுத்த உரிமை உள்ள நிலையில் அடையாளங்களை பொது வெளியில் | காட்சிப்படுத்த தடை விதிப்பது அதன் நோக்கத்தையே சீர்குலைத்து விடும்” என உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக #CPIM தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து.#CPIM #Redflag #Supremecourt #Flags #Tamilnadu
நெல்லையில் ஒரே வருடத்தில் 240 கொலைகள் நிகழ்ந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்ட கணக்கு. நிலைமை கை மீறி செல்கிறது. கொலைகாரனை கொண்டாடுகிற சூழல் உள்ளது. அதேசமயம் பொதுச் சமூகத்தில் ஆணவக் கொலைக்கு எதிரான நிலை உருவாகி உள்ளது. இந்த சூழலை அரசு பயன்படுத்திக் கொண்டு சாதி ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #SpecialACT MORE: https://youtu.be/XGLnmvvmkLg
தூய்மை பணியாளர் கைது விவகாரம்; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து #CPIM #CPI மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு! பெருநகர சென்னை மாநகராட்சியின் மன்றக் கூட்டம் செவ்வாயன்று (ஆக.26) மேயர் ஆர். பிரியா தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்ற குழு தலைவர் ஆர்.ஜெயராமன், தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை எழுப்பினார். அதற்கு மேயர், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாகவும், இது குறித்து விவாதிக்க முடியாது என்றும் கூறினார். இதனை ஏற்க மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். #CPIM #SanitationWorkers#PermanentJob #StopPrivatisation #ChennaiCorporation
தென்னக ரயில்வே அதிகாரிகள் இந்தியை பயன்படுத்தினால், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என 'அலுவல் மொழி' இணை இயக்குநர் அறிவித்துள்ளார். தென்னக ரயில்வே இயங்கும் மாநிலங்களில் இந்தியே கிடையாது. அட்டவணை 8 இல் இடம் பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தேசிய மொழிகள் உள்ளன. மேலும், இந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் அலுவல் மொழியாக தொடரலாம் என சட்டமே சொல்கிறது.
எனவே, இயற்கை நீதிக்கும், சட்டத்திற்கும் புறம்பாக இங்கு இந்தியில் கடிதம் எழுதினால், கோப்புகளை இந்தியில் பராமரித்தால் பதவி உயர்வில், சலுகைகளில் முன்னுரிமை என்பது அப்பட்டமான இந்தி திணிப்பு நடவடிக்கையே ஆகும். இந்தப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தென்னக ரயில்வே செயல்படும் அனைத்து மாநிலங்களின் மொழிக்கும் முக்கியத்துவம் வழங்குவதுடன், அதிகாரிகளை அந்தந்த மொழிகளைக் கற்கவும் பயன்படுத்தவும் ஊக்குவித்து, அவ்வாறு செயல்படுவோருக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.- தோழர் கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Hindi_Imposition #IndianRailways #SouthernRailway
அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள அறிவியல் மனப்பான்மைக்கு துரோகம் செய்யும் பாஜக எம்.பி., அனுராக் தாகூர்

அனுராக் தாகூர் போன்ற பாஜக தலைவர்கள் அறிவியலை ஏளனம் செய்கிறார்கள்!. புராணத்தில் கூட, அனுமன் விண்வெளியில் அல்ல, வளிமண்டலத்தின் வழியே பயணித்தார். மாணவர்களுக்கு அவர் அளிக்கும் அறிவுரை, நமது அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள அறிவியல் மனப்பான்மைக்கு உண்மையில் துரோகம் செய்வதாகும்.

பகுத்தறிவு சிந்தனையின் மீதான இந்தத் தாக்குதல் நமது மாணவர்களையும் விஞ்ஞானிகளையும் அவமதிப்பதாகும். இந்தியாவிற்கு ஆராய்ச்சி மற்றும் கல்வியில் முதலீடு தேவை - அறிவியல் எதிர்ப்பு நாடகங்களில் அல்ல. - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #DefendScience #AnuragThakkur #BJPFails
எலி ஏன் அம்மணமாய் ஓடுது? மதம் கடந்த காதல் திருமணங்களை 'லவ் ஜிகாத்' என பெயர் சூட்டி அதைத் தண்டிக்க பாஜக ஆளும் மாநிலங்களில் ஆயுள் தண்டனை சட்டம் இயற்றியுள்ளதை திரு.அண்ணாமலை அறியாதவரா?

சிபிஐ(எம்) சொன்னதும் பாஜக அலுவலகத்திற்கும் காதலர்கள் வரலாம் என 'உம்' விகுதியோடு பேசியிருக்கிறார். இது நாள் வரை ஒருமுறையாவது பாஜக தமிழ்நாடு சாதி ஆணவக் கொலைகளை கண்டித்ததுண்டா?

தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #CPIMOffice #Lovemarriage #Intercastmarriage #STOPCsatearrogantkillings #SpecialACT
👍1
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திருநெல்வேலியில் பேசுகையில் ஒரு இடத்தில் கூட கவின் சாதி ஆணவப் படுகொலை பற்றிப் பேசவில்லை. அவர் சாதி ஆணவக்கொலையை பற்றி பேசவோ, தனி சட்டம் வேண்டும் என்று சொல்லவோ தயங்குவதற்கு காரணம் வாக்குகளை இழந்து விடக்கூடாது என்பதை தவிர வேறு இல்லை - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopCasteArrogantKillings #EPS #Aiadmk More: https://youtu.be/eV3zYKncHkA