CPIM Tamilnadu
1.01K subscribers
11.6K photos
118 videos
214 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு!
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் ஜூன் 2 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். #Chattisgarh #Maoists #Encounter More: https://shorturl.at/LFXrP
ரிசர்வ் வங்கியின் நகைக் கடன் புதிய விதிமுறைகள்; எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு - ஒன்றிய நிதி அமைச்சருக்கு மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி.

தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.

எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்து வட்டிக் காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கோரி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். #bank #loan #goldloan #RBI #GoldLoanRules
சாம்சங் வரலாறே மோசடியின் குவி மையம். சாம்சங் நிறுவனத்தின் அடக்குமுறையும், அரசாங்கத்தின் அடக்குமுறையும்தான் எங்களை வீரியமாக போராட வைத்தது – தோழர் இ.முத்துக்குமார், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtube.com/shorts/nKPiP-EqLkw Full video: https://youtu.be/9mLTuDixpE8
தேசப்பற்று இல்லாவிடில் பாகிஸ்தான் செல்லுங்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிமுக ஆட்சியில் சேர்த்ததை பாஜகவுக்கு வந்து பதுக்கி வைக்கிறார். இதில் தேச பக்தி எங்கே? - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #BJPFails
தனி நபர் வருமானத்தில் 140வது இடம் மனித வளக் குறியீட்டில் 133வது இடம்.

உலகில் 4வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து விட்டோம் என மார்தட்டுவதில் என்ன பயன்? - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #BJPFails
குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம் !
திருப்பூர் மாநகராட்சி குப்பை கழிவுகளை பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறை குழிகளில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இப்பகுதியில் குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #cpim #tncpim #cpimtirupur #marxist #comrade
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகித்து 4 இஸ்லாமியர்கள் படுகொலை!

காவல்துறையின் தயவால் பரவிவரும் இந்துத்துவ மதவெறி கும்பல்களின் அக்கிரமம்!

மதவெறி செயல்களை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றிவரும் சூழல் மாற வேண்டும். இந்த பாதக செயல்கள் செய்தவர்களை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #UttarPradesh #Beef #Meat #Attack #BJPFails
அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?

ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #Bulldozer
மகள்களைப் பாதுகாக்கும் லட்சணம் இதுதான்!

அண்ணாமலையின் சாட்டை என்ன செய்து கொண்டிருக்கிறது?

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதுதான் பாஜகவின் gender policy!

புரிந்து கொண்டால் சரி... - தோழர் உ.வாசுகி அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopViolenceAgainstWomen #StopViolenceAgaindChild #ModiFailed
அதி கனமழையை தாங்காத டில்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்தது. சென்னையில் ஏசி ரயில் பிளாட்பாரத்தை இடித்து சென்றது.

இவை பாஜக ஆட்சியாளர்களின் வளர்ச்சி முழக்கத்திற்கு ஏற்பட்ட அவமானம்.

நிரந்தரமற்ற அனுபவக் குறைவான ஒப்பந்த தொழிலாளர்களை அதிக அளவில் லாபத்திற்காக ஈடுபடுத்தும் கான்ட்ராக்டர்களும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும், ஆட்சியாளர்களின் கொள்கைகளும் இந்த இடிபாடுகளுக்கு காரணம்.

மோடியின் தாராளமய கொள்கையே பொறுப்பு. - தோழர் எஸ்.கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #DelhiAirPort #ACTrain #BJPFailsIndia
மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு! #CPIM #CPI #VCK, CPI(ML)L கட்சிகளின் சார்பில் ஜூன் 2, மாலை 4 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம். #Chattisgarh #Maoists #Encounter More: https://shorturl.at/LFXrP
ஜப்பானை பின்தள்ளி நான்காவது பெரிய பொருளாதார நாடாக மாறியது இந்தியா _ நிதி ஆயோக்

இந்த நாள் வரை உயிரோடு இருப்பேன் என கனவிலும் நினைக்கவில்லை! #IndiaGDP #Japan
வெனிசுலாவில் தொடரும் இடதுசாரிகள் வெற்றி!

வெனிசுலாவின் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் மற்றும் ஆளுநர்களுக்கான தேர்தலில் ஆளும் வெனிசுலா சோசலிஸ்டு கட்சி தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் படி, கிட்டத்தட்ட 83% வாக்குகளைப் பெற்றனர். #Venezuela #Elections #PSUV #NicolásMaduro #VivaLaVictoria
நூறு நாள் திட்டத்தை முடக்கி நிதி பட்டினி போடும் மோடி அரசு!

ஏப்ரல், மே மாதங்களில் 2.09 கோடி மனித வேலை நாட்கள் நமக்கு கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததோ 59 லட்சம் மனித வேலை நாட்கள் மட்டுமே.

ஒன்றிய அரசின் அநீதியால் 88 லட்சம் தமிழ்நாடு கிராமப்புற உழைப்பாளி மக்கள் பாதிப்பு - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #MNREGA
சென்னை இசைக் கல்லூரி வளாகத்தில் மே 29 முதல் 31 வரை இஸ்ரேல் திரைப்பட விழா நடத்திட அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது பாலஸ்தீனியர்கள் மீது கொடூரமான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி பல்லாயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டு வரும் நிலையில் இவ்விழாவை தமிழ்நாட்டில் நடத்துவது இஸ்ரேலுக்கு ஆதரவான ஒரு நடவடிக்கையாகவே கருதப்படும்.

எனவே இவ்விழாவை தடை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை எழுப்பப்பட்டது. இக்கோரிக்கைக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகளும் பல பிரபலங்களும் தங்களுடைய குரலை எழுப்பினர்.

இந்த நிலையில் கால வரையறை இன்றி திரைப்பட விழாவை ஒத்தி வைப்பதாக சம்பந்தப்பட்ட அமைப்பினர் அறிவித்துள்ளனர். நிரந்தரமாக இதை ரத்து செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

இருப்பினும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரேலுக்கு எதிராகவும் குரல் எழுப்பிய, ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் #CPIM சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் - தோழர் பெ.சண்முகம்
மாநிலச் செயலாளர் #CPIM #israel #palestine #israelattack #phoenix #phoenixcinema
CPIM Tamilnadu
Photo
எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடிய ரிசர்வ் வங்கியின் நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சு.வெங்கடேசன்.எம்.பி., நேரில் சந்தித்து கடிதம்!

ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலையின்மை, குறைந்த வேலை, விவசாயத்திற்கும், சிறு குறு நடுத்தர தொழில்களுக்கும் ஆதரவின்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள, சாமானிய மக்களின் வாழ்க்கையில் ரிசர்வ் வங்கியின் புதிய நகல் விதிமுறைகள் மேலதிக துயரங்களை கொண்டு வந்து சேர்க்கும்.

அனைத்து எதிர்மறை நிபந்தனைகளும் திரும்பப் பெறப்படாவிட்டால் அவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுவதோடு, கந்துவட்டிக்காரர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் ஆகியவற்றை நோக்கி தள்ளப்பட்டுவிடுவார்கள்.

ஆகவே தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, அனைத்து எதிர்மறை நிபந்தனைகளையும் திரும்பப் பெறுமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #ReserveBank #RBI #GoldLoan #RevisedRegulations #FinanceMinister #SuVenkatesanMP
எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடிய ரிசர்வ் வங்கியின் நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகளை உடனடியாக திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்த வலியுறுத்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சு.வெங்கடேசன்.எம்.பி., நேரில் சந்தித்து கடிதம்! - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM ReserveBank #RBI #GoldLoan #RevisedRegulations #FinanceMinister #SuVenkatesanMP More: https://youtu.be/RviF0J9oOfg