CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.12K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பேரிடர் நேரங்களிலும் தயங்காமல் அரசியல் வித்தைகளையும் பாரபட்சமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் பாஜக

2018 கேரள வெள்ளத்தின்போது, வெளிநாடுகளின் நிதியுதவியை ஏற்க ஒன்றிய அரசு அனுமதி மறுத்தது. ஆனால் இப்போது, மகாராஷ்டிராவில் எந்த பேரிடரும் இல்லாத நிலையில், மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு (CMDRF) வெளிநாட்டு நன்கொடைகளை ஏற்க அனுமதி வழங்கியுள்ளது. - டாக்டர் தாமஸ் ஐசக், கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #FCRA #Maharashtra #Kerala
நேற்று டெல்லியின் மதராசி கேம்ப் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இடிக்கப்பட்ட தங்களின் வீட்டிலிருந்து மீதமுள்ள கதவைச் சுமந்து செல்லும் தந்தையும் அவரது குழந்தைகளும். தன் இளைய சகோதரியை கைகளில் சுமந்து கொண்டு சிறுமி தன் தந்தையுடன் நடந்து செல்கிறாள். PC: Pv Sujith (Deshabhimani Daily)
டெல்லி தமிழர்களின் குடியிருப்புகள் பாஜக டெல்லி மாநில அரசு புல்டோசர் வைத்து தகர்ப்பு!

தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராசி கேம்ப் குடியிருப்புகளை, ஆளும் பாஜக அரசானது, கொஞ்சமும் ஈவிரக்கமில்லாமல் புல்டோசர் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது. இதனால், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான தமிழர்கள், தங்களின் வசிப்பிடத்தை இழந்து, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நிர்க்கதியான நிலையில் வீதியில் தள்ளப்பட்டுள்ளனர்.

வீடிழந்த தமிழர்களோடு தொடர்ந்து போராடி வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், டெல்லி மாநிலச் செயலாளர் தோழர் அனுராக் சேக்சேனா மற்றும் தோழர்களும். #Delhi #Tamils #MadrasiCamp #BJPFailed #BJPBulldozer
#CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அவர்களை அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஜுலை 9 அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெறும் மாபெரும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரினர். உடன் #CITU மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளனர். #July9thStrike #WorkersStrike #WorkersRights #LabourRights
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை #CPIM வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை! More: https://bit.ly/4dGFDCm #AnnaUniversity #AnnaUniversityCase
பாலியல் வல்லுறவு குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை; #CPIM வரவேற்பு! எப்.ஐ.ஆர் கசியவிட்ட வழக்கிலும் கடும் நடவடிக்கை தேவை! #AnnaUniversityCase #Gnanasekaran #StopViolenceAgainstWomen #StopRape https://shorturl.at/VhJQ5
வரலாற்று அழித்தொழிப்புகளை தனது சாதனை என்று வெளிப்படையாவே கூறிவரும் பாஜகவின் நிபுணர்களிடமிருந்து கீழடி உண்மைகளை காப்பாற்றவே நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

ஒன்றிய பாஜக அரசு கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தம் தேவை என்றும், நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில்தான் திருத்தம் கேட்கிறோம் என்று வலியுறுத்துவதற்கும் காரணம் இதுதான். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails
நக்சல் அழிப்பு என சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை ஒன்றிய மற்றும் மாநில பாஜக ஆட்சியாளர்கள் படுகொலை செய்வதைக் கண்டித்து சென்னையில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், #CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் #VCK தலைவர் தொல்.திருமாவளவன், CPI(ML)L மாநில பொதுச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அமெரிக்காவின் வரி வெறி: இந்தியாவின் வர்த்தக அவலம் #India #USA #Trump #ModiGovt #Tax #USIndiaTrade #IndianExporters More: https://bit.ly/4kr3PeG
#CPIM பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு

#CPIM பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை நேரில் சந்தித்து நடப்பு அரசியல் சூழ்நிலைகள் மற்றும் பல்துறை வளர்ச்சிகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இதில் #CPIM மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத் அவர்களும் டெல்லி சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி ஆகியோரும் உடனிருந்தார்.
அரசியல் பாரபட்சத்துடன் கேரளாவின் உரிமைகளை மறுக்கும் ஒன்றிய பாஜக அரசு!

பேரிடருடன் கேரளம் வெள்ளத்தில் தத்தளித்த போது வெளிநாட்டு நிதிகளுக்கு அனுமதி மறுத்துவிட்டது. ஆனால் மகாராஷ்டிராவிற்கு சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. கேரளாவின் உரிமைகளை தொடர்ச்சியாக ஒன்றிய அரசு மறுக்கிறது. தோழர் கே.என்.பாலகோபால், கேரள நிதியமைச்சர் #CPIM #Kerala #BJPGovt #BJPGovtFails
CPIM Tamilnadu
Photo
கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழு தமிழக அமைப்பு துவக்கம்!

அமெரிக்க ஏகாதிபத்தியம் சோசலிச கியூபாவை அடக்கி ஒடுக்கி பொருளாதார தடைகள் விதித்து தனிமைப்படுத்த முயற்சித்து வரும் சூழலில் கியூபாவுக்கான சர்வதேச ஆதரவை வெளிப்படுத்தவும் தேவையான உதவிகளை வழங்கவும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து அகில இந்திய அளவில் கியூபா ஒருமைப்பாட்டு தேசியக்குழுவை அமைத்துள்ளனர். அதன் தமிழக அமைப்பை உருவாக்கும் கூட்டம் ஜூன் 2 நடைபெற்றது.

இதில் #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், #CITU மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், தலைவர்கள் எஸ்.கண்ணன், கே.சி.கோபிகுமார், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுகநயினார், ஆர்.பத்ரி, இரா.சிந்தன், மூத்த தலைவர் ப.சுந்தரராஜன், தொழிற்சங்க தலைவர்கள் ஆர்.செல்லப்பா, கே.சீனிவாசன், மலர்விழி, விவசாயிகள் சங்கத் தலைவர்கள் கே.பி.பெருமாள், பி.பெருமாள், இரா.சரவணன், எஸ்.அனு, சிபிஐ(எம்) தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், #DYFI தென்சென்னை தலைவர் தீ.சந்துரு, என்.குமரன், #SFI தென்சென்னை தலைவர் ஆனந்த், வீ.பா.கணேசன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜி.சுகுமாறன் கௌரவத் தலைவராகவும், திரைக்கலைஞர் ரோஹிணி தலைவராகவும், ஐ.ஆறுமுகநயினார் பொதுச் செயலாளராகவும், சி.பி.கிருஷ்ணன் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இடது ஜனநாயக முன்னணியின் வாக்குறுதிகள் பொய்யானதோ, சாத்தியமற்றதோ அல்ல என்பதை மக்கள் அறிவார்கள்!

”கடந்த 9 ஆண்டுகளாக தொடரும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு சமூகத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றத்தை மக்கள் பார்க்கிறார்கள். அந்த மாற்றத்தை அனுபவித்தவர்கள் நிலம்பூர் மக்கள். எல்டிஎப் அளிக்கும் வாக்குறுதிகள் பொய்யானதோ, சாத்தியமற்றதோ அல்ல என்பதை மக்கள் அறிவார்கள்.

நாட்டின் மீதும், மக்கள் மீதும் உள்ள கடமைகளே எல்டிஎப்க்கு முக்கியம். நாட்டிற்கு துரோக மிழைப்பது எதுவாக இருந்தாலும் அதை எதிர்ப்பதில் எல்டிஎப் தயக்கம் காட்டியதில்லை. எல்டிஎப்புக்கு மக்கள் தொடர் ஆட்சியை வழங்கியதன் மூலம் அனைத்து துறைகளிலும் பாய்ச்சல் வேக வளர்ச்சியும், மாற்றங்களும் ஏற்பட்டன. இது தொடர வேண்டும். தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #LDF #LDF4Nilambur #LDFKeralam #LeftAlternative
அழிவின் பிடியில் காசா; பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலின் பயங்கரத்திற்கு எதிராக உரத்து முழங்குவோம்!

பாலஸ்தீனத்துடனான சர்வதேச ஒற்றுமை வளர்ந்து வருகிறது. இஸ்ரேலின் சகிக்க முடியாத செயல்களைக் கண்டிக்க இந்திய மக்கள் அணிதிரண்டு மோடி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனை நிறைவேற்றும் பொறுப்பு நம் அனைவரிடமும் உள்ளது. #CPIM #Israel #GazaGenocide #Palestine #PalestineLivesMatter
CPIM Tamilnadu
Photo
அமெரிக்காவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மிக மோசமான முறையில் மீறிவிட்டது என சீன வர்த்தக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனாவின் நலன்கள் பாதிக்கப்படும் நிலையில் சொந்த நாட்டின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

மே 12 அன்று ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சீனா மீது அமெரிக்கா விதித்த அதிகப்படியான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டது. சீனாவும் அமெரிக்கா மீதான வரிகளை நிறுத்தி வைத்தது. இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரி கட்டுப்பாடு அல்லாத உறவுகளில் அமெரிக்கா தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றது. உதாரணமாக சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு சிப்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான உலகளாவிய தடைகள், சீன நிறுவனங்களுக்கு சிப் வடிவமைப்பு மென்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தியது, மற்றும் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது என பல சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில் சீனா, அமெரிக்காவின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது. வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது. இதற்காக சீனாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்கா தனது “தவறான நடவடிக்கைகளை” உடனடியாகச் சரி செய்ய வேண்டும். சீனாவுக்கு எதிரான பாகுபாட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், ஜெனீவாவில் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. #USA #tariffs #trade #China