ஏகாதிபத்திய ஆணவம்!
டாலர் வர்த்தகத்தை விட்டு விலக நினைத்து டாலர் மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்க முனைந்தால் 100 சதவீத இறக்குமதி வரி பன் துருவ உலகம் நோக்கிய முன்னெடுப்பான "பிரிக்ஸ்" ஒப்பந்த நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல். சுதந்திர சந்தை என்பதெல்லாம் ஊருக்குதான் உபதேசம் எனக்கு நான் வைத்ததுதான் சட்டம். #Trump #TrumpInauguration2025 #BRICS #Tariffs #Dollar
டாலர் வர்த்தகத்தை விட்டு விலக நினைத்து டாலர் மேலாதிக்கத்திற்கு சவால் விடுக்க முனைந்தால் 100 சதவீத இறக்குமதி வரி பன் துருவ உலகம் நோக்கிய முன்னெடுப்பான "பிரிக்ஸ்" ஒப்பந்த நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல். சுதந்திர சந்தை என்பதெல்லாம் ஊருக்குதான் உபதேசம் எனக்கு நான் வைத்ததுதான் சட்டம். #Trump #TrumpInauguration2025 #BRICS #Tariffs #Dollar
CPIM Tamilnadu
Photo
அமெரிக்காவுக்கும் மற்றும் சீனாவுக்கும் இடையே சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா மிக மோசமான முறையில் மீறிவிட்டது என சீன வர்த்தக அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் சீனாவின் நலன்கள் பாதிக்கப்படும் நிலையில் சொந்த நாட்டின் நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
மே 12 அன்று ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சீனா மீது அமெரிக்கா விதித்த அதிகப்படியான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டது. சீனாவும் அமெரிக்கா மீதான வரிகளை நிறுத்தி வைத்தது. இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரி கட்டுப்பாடு அல்லாத உறவுகளில் அமெரிக்கா தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றது. உதாரணமாக சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு சிப்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான உலகளாவிய தடைகள், சீன நிறுவனங்களுக்கு சிப் வடிவமைப்பு மென்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தியது, மற்றும் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது என பல சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் சீனா, அமெரிக்காவின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது. வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது. இதற்காக சீனாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்கா தனது “தவறான நடவடிக்கைகளை” உடனடியாகச் சரி செய்ய வேண்டும். சீனாவுக்கு எதிரான பாகுபாட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், ஜெனீவாவில் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. #USA #tariffs #trade #China
மே 12 அன்று ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சீனா மீது அமெரிக்கா விதித்த அதிகப்படியான வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டது. சீனாவும் அமெரிக்கா மீதான வரிகளை நிறுத்தி வைத்தது. இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட 10 சதவீத வரி அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரி கட்டுப்பாடு அல்லாத உறவுகளில் அமெரிக்கா தொடர்ந்து பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றது. உதாரணமாக சீனாவின் ஹவாய் நிறுவனத்திற்கு சிப்கள் பயன்படுத்துவதை தடுக்கும் வகையிலான உலகளாவிய தடைகள், சீன நிறுவனங்களுக்கு சிப் வடிவமைப்பு மென்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தியது, மற்றும் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது என பல சீன எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் சீனா, அமெரிக்காவின் நலனுக்கு எதிராகச் செயல்படுகிறது. வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக மீறிவிட்டது. இதற்காக சீனாவிற்கு பதிலடி கொடுக்கப்படும் என டிரம்ப் எந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அமெரிக்கா தனது “தவறான நடவடிக்கைகளை” உடனடியாகச் சரி செய்ய வேண்டும். சீனாவுக்கு எதிரான பாகுபாட்டு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றும், ஜெனீவாவில் நடந்த உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த கருத்தையும் கூட்டு ஒப்பந்தத்தையும் நடைமுறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. #USA #tariffs #trade #China