CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூன் 11-20 #CPIM கிளர்ச்சி பிரச்சாரம்! #CPIMProtest
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் #CPIM தலைவர்கள் சந்தித்து, வடகாடு கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உரிமை தொடர்பான வழக்கை விரைந்து நடத்தி தீர்வு காணவும், சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து போன வீட்டுக்குப் பதிலாக அரசே புதிய வீட்டை கட்டித்தரவும், சேதமடைந்த வீடுகள், கார், இருசக்கர வாகனங்கள் மற்றும் உடைமைகளுகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இழப்பீடுகள் வழங்கவும், அப்பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்றிடவும், இப்பிரச்சினைக்கு சம்மந்தமில்லாத நபர்களை கைது செய்யக் கூடாது என வலியுறுத்தியும் மனு அளிக்கப்பட்டது. #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits
கொரோனா கால இறப்பு எண்ணிக்கையை வேண்டுமென்றே மாற்றிச் சொல்லிய இந்திய அரசாங்கம்

சிஆர்எஸ் தரவு 2021 ஆம் ஆண்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளதை காட்டுகிறது. இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட கொரோனா கால மரணங்களை விட சுமார் 6 மடங்கு அதிகம் - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #COVID #COVIDData #IndiaFightsCorona #COVID19 #CoronaResults #GovtLies
மே 20 - பொது வேலைநிறுத்தம் ஏன்?

நியாயமான ஊதியம், ஓய்வுக்காலப் பயன்கள், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பொருளாதார நீதிக்கான வேலை நிறுத்தம். #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
வட காடு கிராம பிரச்சனையில் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் சிபிஐ(எம்) தலைவர்கள் அளித்த மனு அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி!

வடகாடு கிராமத்தில் சாதி ஆதிக்க சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாகி முற்றிலும் எரிந்து போன வீடுகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை 1 வாரத்தில் அகற்றப்படும். சேதம் அடைந்த வீடுகள், வாகனங்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு. இப்பிரச்சனையில் சம்பந்தம் இல்லாத எவரையும் கைது செய்ய மாட்டோம். #CPIM #Pudukottai #Vadakadu #MuthumariammanTemple #StopViolenceAgainstDalits
பொறுப்பான பத்திரிகைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் மோடி அரசு, வகுப்புவாத வெறுப்பு மற்றும் தவறான தகவல்களை ஊக்குவிக்கும் ஊடகங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பத்திரிகை நேர்மையை நிலைநிறுத்தும் தி வயர் மீதான தடையை உடனே விலக்கிக் கொள்ள வேண்டும்.

போரின் முதல் பலி உண்மைதான். அதனால்தான் போர் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவில் பல தனியார் தொலைக்காட்சிகள் போர் போர் என கூப்பாடு போட்டன. போர் தொடங்கியவுடன் அவை உண்மைகளை புதைத்து வருகின்றன. இக்கட்டான நேரத்தில் தேசத்திற்கு அமைதியும் தெளிவும்தான் தேவை. பொய்யான தகவல்கள் அல்ல - தீக்கதிர் தலையங்கம் #TheWire #IndiaFreedom #DemocracyKills
நீல வானத்து சிவப்புப் பேரொளி தோழர் ஆர்.பி.மோரே நினைவு தினம்!

மராட்டிய மாநிலத்தில், சமரசமில்லாத கம்யூனிஸ்ட் போராளியாக திகழ்ந்த தோழர் ஆர்.பி.மோரே அண்ணல் அம்பேத்கரின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.

1927ல் அம்பேத்கரின் தலைமையில் 5000 பேரை திரட்டி மகத் குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை நடத்தியவர்.

பாட்டாளி வர்க்க புரட்சிக்கான இயக்கத்திற்கும், சாதி ஒடுக்குமுறையை முடிவு கட்டும் இயக்கத்திற்கும் இடையில் ஒரு உறுதிமிக்க பாலமாக அவர் வாழ்ந்தார். #Comrade #RBMore https://bit.ly/3srBTOZ
மே 20 - பொது வேலைநிறுத்தம் ஏன்?

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 39ன் படி அரசு பின்பற்ற வேண்டியவைகள்;

நியாயமான மற்றும் நீதியுடன் கூடிய சமூக ஒழுங்கை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அனைத்து குடிமக்களுக்கும் போதுமான வாழ்வாதார வழிகளை அதாவது சம்பாதிக்கும் வழி முறைகளை உருவாக்குதல், வளங்களை சமமாக விநி யோகித்தல் அதாவது ஒரு சாராரின் கைகளில் செல்வம் குவிவதை தடுக்க வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம் அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒரே அல்லது ஒத்த வேலைக்கு சம ஊதியம் பெறுவதை உறுதி செய்ய அரசு பாடுபட வேண்டும்.

தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு அதாவது ஆண், பெண் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் வலிமையையும், குழந்தைகளின் இளமைப் பருவத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும்.

சுரண்டப்படவோ அல்லது பொருத்தமற்ற வேலையில் தள்ளப்படவோ கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகள் ஆரோக்கியமான முறையில், சுதந்திரத்துடனும், கண்ணியத்துடனும் வளர அரசு வாய்ப்புகளை வழங்க வேண்டும். #CPIM #WorkersStrike #ModiGovtFails #BJPDestroyingIndia
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடனடியாக நடைமுறைக்கு வரும் சண்டை நிறுத்த (ceasefire) அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நேர்மறையான முன்னேற்றம் எனக் கருதுகிறது. #CPIM அரசியல் தலைமைக்குழு அறிக்கை #IndiaPakistanConflict More: https://bit.ly/43bhdwa
பொய் சொல்வது யார்? மோடியா? டிரம்பா?

அமெரிக்க ஜனாதிபதியால் கூறப்பட்டது போல், மூன்றாவது தரப்பான அமெரிக்கா நடுவராக இருந்து போர் நிறுத்தத்தை ஏற்பாடு செய்தது என்பது உண்மையா? யாரோ ஒருவர் பொய் சொல்கிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி இந்திய மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #IndiaPakistanWar2025 #Trump
48 மணி நேரம் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சொல்கிறார்? பேசவே இல்லை என்று பிரதமர் சொல்கிறார்? பொய் சொல்வது யார்?. இது தொடர்பாக பிரதமர் மோடி மௌனமாக இருப்பது ஏன்? - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Trump #Modi More: https://youtu.be/17XGZQ6DpPg
‘நவ-பாசிசம்’ என்பதில் புதிதாக இருப்பது என்ன? - கட்டுரையாளர் தோழர் சுதீப் தத்தா #ModiFails More: https://shorturl.at/XvAyY