CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.11K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
கீழடி அகழாய்வு திருத்தம் யாருக்காக கேட்கிறீர்கள்? வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல…!

“திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்” என்று ஒன்றிய அரசு சொல்கிறது. நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார்.

பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது. - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Keezhadi #BJPGovt #BjpFails
கீழடி அகழாய்வு திருத்தம் யாருக்காக கேட்கிறீர்கள்?
வரலாறென்பது விஸ்வகுருவின் வீட்டுச்சரக்கல்ல…!

“திருத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்” என்று ஒன்றிய அரசு சொல்கிறது. நீங்கள் கேட்கிற திருத்தத்தைச் செய்ய முடியாது என்று அகழாய்வு நடத்தியவர் தெரிவித்துவிட்டார்.

பின்னர் யாரிடம் திருத்தம் கேட்கிறீர்கள்? யாருக்காக கேட்கிறீர்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகளை உங்கள் அதிகாரத்தின் மூலம் திருத்த முடியாது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Keezhadi #BJPFails
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் நடைப்பெற்ற #CPIM நடைபயண காட்சிகள் #Kerala #WayanadLanslide #CPIM #LDFGovt
மாபெரும் மக்கள் தலைவர் தோழர் கே.ரமணி (16 ஜூலை 1916 - 30 மே 2006) நினைவு தினம் இன்று; தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக தோழர் கே.ரமணி ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறத்தக்கது, வழிகாட்டக் கூடியது. #Comrade #KRamani #CommuistLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று... #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெறுவதைக் கண்டித்து #CPIM சார்பில் வாடிபட்டியில் கண்டன முழக்க போராட்டம் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர். #Madurai #StoneQuarry
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன், தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக விளங்கிய தோழர் கே.ரமணி ஆகியோரின் நினைவு தினத்தை முன்னிட்டு #CPIM மாநிலக்குழு அலுலவகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் 2000 ஏக்கர் பை மாசி (இனாம் நிலம்) நில சாகுபடியாளர்களுக்கு பட்டா வழங்கிட கோரியும், தென்பெண்ணை ஆற்று நீரில் கலக்கும் ரசாயன கழிவுகளை தடுக்க கோரியும், காவிரி தெற்கு வன சரணாலயம் பகுதியில் 165 கிராம மக்களை வெளியேற்றத்திற்கு எதிராகவும், விவசாயிகளின் பல்வேறு வாழ்வுரிமை கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் #CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் உள்ளிட்டு 1500க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். #AIKS #CPIMProtest
CPIM Tamilnadu
Photo
எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ 2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங்கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டும் விதி முறைகளை வகுக்குமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மக்களின் குரலுக்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி.

எனது கவனத்திற்கு இப்பிரச்சினையை கொண்டு வந்த பொது மக்களின் உணர்வுகளை ஒன்றிய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றேன். நேரில் சந்தித்த போது உறுதி அளித்தபடி உடனடி தலையீட்டை செய்துள்ள மாண்புமிகு நிதியமைச்சருக்கு நன்றி.

புதிய விதிமுறைகளை இறுதி செய்யும் போது எளிய நடுத்தர மக்களை, சிறு தொழிலகங்கள் - வணிகர்களை - விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தலைகளை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுமென்று நம்புகிறேன். கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டுமென்று நிதியமைச்சரை கேட்டுக் கொள்கிறேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #ReserveBank #RBI #GoldLoan #RevisedRegulations #FinanceMinister
தமிழ்நாடு அரசின் இ-சேவைகள் மூலம் பட்டா, ஏ-பதிவேடு சாராம்சங்களை பார்க்கவும், சரிபார்க்கவும் முடியும் என்றாலும், நடைமுறையில் பட்டா வழங்கும் பணி மெதுவாக நடந்து வருவது விவசாயிகள் பலரின் குறையாக உள்ளது.

வன உரிமை சட்டம் “வன உரிமை சட்டமானது, பல நூற்றாண்டுகளாக வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களுக்கும் மற்றும் பாரம்பரிய வன வாசிகளுக்கும் நில உரிமையை அங்கீகரிக்கும் சட்டம். ஆனால், இதனைச் சரியாக அமல்படுத்தாதது, பல மாநிலங்களிலும் பொதுவான ஒரு பிரச்சனையாக உள்ளது.

தென்பெண்ணை ஆறு மாசுபாடு “தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலத்தில் 112 கி.மீ. தூரமும், தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பாய்ந்து இறுதியில் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதில், கர்நாடகம் கழிவுநீரை கலப்பது நீண்ட காலமாக உள்ளது.

இதில், ஒன்றிய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுவாமிநாதன் குழு பரிந்துரைகள், வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் குறித்த எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகள், ஒன்றிய அரசால் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வக்கற்ற பாஜக ஆட்சி அமைக்கக் கோரும் வெட்கக்கேடு! #ManipurCrisis #PresidentRule #EthnicViolence #NBirenSingh #Manipur More: https://shorturl.at/7puSA
திரைப்படக் கலைஞர் ராஜேஷ் மறைவுக்கு #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேரில் அஞ்சலி செலுத்தினார். உடன் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன்.
பஹல்காம் பாதுகாப்பு குறைபாட்டிற்கு இன்னும் பதிலளிக்காத மோடி அரசு!

போர் நிறுத்தமும் ஏற்பட்டுவிட்ட பின்னணியில், தற்போதாவது நாட்டின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும்.

எல்லையிலிருந்து நூறு கி.மீ தொலைவில் உள்ள பஹல்காமை பயங்கரவாதிகள் எந்தத் தடையும் இல்லாமல் எப்படி அடைந்தார்கள்?

படுகொலையை செய்துவிட்டு, எப்படி அவர்களால் இந்தியாவை விட்டு வெளியேற முடிந்தது?

ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொலையாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்யவோ கொல்லவோ முடிந்ததா?

இதற்கு இப்போது வரை பதிலளிக்கப்படவில்லை.

பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், ஒன்றிய அரசு அதற்கு தயாராக இல்லை. அரசே கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்ளவும் இல்லை. ஆனால் அவர், பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession
தில்லியில் தமிழர்களின் வீடுகளை சட்டவிரோதமாக இடிப்பதை நிறுத்துங்கள்!

தில்லியில் தமிழர்கள் வசிக்கும் மதராஸி குடியிருப்பு பகுதிகளை இடித்து, அங்குள்ள உழைக்கும் வர்க்க மக்களை இடம்பெயரச் செய்யும் புல்டோசர் கொள்கையை எதிர்த்து தில்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிபிஐ(எம்) மூத்த தலைவர் பிருந்தா காரத் உரையாற்றினார்.

தேர்தல் அறிக்கையில் குடிசைகள் இருக்கும் இடத்திலேயே உழைக்கும் ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும் என்ற வாக்குறுதியை பாஜக அளித்தது. தற்போது உரிய மறுவாழ்வுத் திட்டங்கள் இல்லாமல் குடிசைப்பகுதிகள் இடிக்கப்படுகின்றன.

இவ்வாறு குடிசைகள் இடிக்கப் படுவது பாஜகவின் ஏழைகளுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான கொள்கையை அம்பலப்படுத்துகிறது. மறுவாழ்வுத் திட்டங்களின்றி குடிசைகள் இடிக்கப்படுவதால் லட்சக்கணக்கான ஏழைகள், கட்டாய மாக மாநகரத்திற்கு வெளியே இடம் பெயர்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர். வாழ்வாதாரம் இழந்து பாதுகாப்பின்மை உருவாகியுள்ளது. இது அரசமைப்புச் சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறும் செயலாகும். #Delhi #Tamil #HouseDemolition BrindaKarat