CPIM Tamilnadu
1.01K subscribers
11.7K photos
118 videos
214 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
தெருவோர வியாபாரிகள்தான் சென்னை மாநகருக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கிறார்கள். நகரத்தின் வளர்ச்சி என்ற பெயரில் இப்போது அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நகரத்திற்கு அழகு தொழிலாளர்கள்தான், இந்த தொழிலாளர்கள் இல்லாமல் சென்னை ஒருபோதும் உருவாகியிருக்காது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் அணி திரள வேண்டும் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Workers More: https://youtube.com/shorts/3zCuVf8e0js Full video: https://youtu.be/oqfh5HlcL30
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்!

மத்திய, மாநில அரசுகள் எப்படி முக்கியமோ, அதேபோல உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கும் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து 6 மாதமாகிவிட்டதால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை நடத்தினால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் சின்னாபின்னமாகிவிடும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும் - தோழர் கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Election
அனகாபுத்தூர் அடையாறு கரையோர வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்க கோரி #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் மனு அளித்தனர். #Anakaputhur #AdyarRiver #PattaDemand #TamilNaduPolitics
பொது மக்களிடம் வைப்பு நிதி மற்றும் தங்கமகள் சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு கணக்கில் வரவு வைக்காமல் பல லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ள திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி தபால் நிலையத்தில் பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் ராஜலதா மீது நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களிடம் ஏமாற்றி கையாடல் செய்யப்பட்ட தொகையை திருப்பி அளிக்க வேண்டுமென #CPIM ஸ்ரீரங்கம் பகுதிக்குழு உறுப்பினர் வீரமுத்து தலைமையில் அதிகாரிகளை முற்றுகையிடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க முயற்சி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.
பாஜக ஆட்சியில் வெறுப்பை எப்படி கொண்டு சொல்ல வேண்டும் என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் ஆழமான பிரச்சினை. இந்திய-பாக். போர்; தொடர்ந்து கட்டுக்கதைகளை பரப்பும் பிரதான ஊடகங்களின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை இழக்க வைத்திருக்கிறது - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #BJPFails More: https://youtu.be/vhgditO9SJU?si=_3ckjvFj-A3U4FCS
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை அவமதித்து பாஜக அரசு பழிவாங்கல் #CPIM #SupremeCourt #BRGavai #BJPFails More: https://shorturl.at/HsYUi
கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வரும் 27ம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது. அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

“கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி. மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Keezhadi
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வெள்ளுவாடி, சோலை நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியாக வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார்.
Forwarded from SNEHA
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐ(எம்) தொடர் போராட்டத்தால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் ஆலை நிர்வாகத்திடமிருந்து மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ 30 லட்சம் இழப்பீடு பெறப்பட்டது. #Tirupur #ManualScavenging #DalitLivesMatter More: https://youtube.com/shorts/dXwTG7_MsGI
மாவோயிஸ்டுகள் 27 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சிபிஐ(எம்) கடும் கண்டனம்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் பொதுச் செயலாளர் நம்பாலா கேசவராவ் உள்ளிட்ட 27 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்

மாவோயிஸ்டுகள் விடுத்த நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக் கோரிக்கைகளைப் புறக்கணித்து, மத்திய அரசும் பாஜக-தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசும் கொலை மற்றும் அழிவு போன்ற மனிதாபிமானமற்ற கொடூரக் கொள்கையைப் பின்பற்றி வருகின்றன.

மாவோயிஸ்டுகளை ஒழிக்க கடைசி நாள் வரைறுப்பு விதிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதும், "பேச்சுவார்த்தை தேவையில்லை" என சத்தீஸ்கர் முதலமைச்சர் கூறியதும், மனித உயிர்களின் மரணத்தை வெறித்தனமாக கொண்டாடும் பாசிச மனோபாவத்தையும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் வெளிப்படுத்துகின்றன.

மாவோயிஸ்டுகளின் கொள்கைகளுக்கு நாம் எதிராக இருந்தாலும், அவர்களின் பேச்சுவார்த்தைக் கோரிக்கையை உடனடியாக ஏற்று, துணை இராணுவப் படைகளின் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கிறோம். #Chattisgarh #Maoists #Encounter More: https://shorturl.at/xdwMl
விவசாயத் தொழிலாளர்களின் நிலையற்ற வாழ்க்கை - பீப்பிள்ஸ் டெமாக்ரசி கட்டுரையாளர் விக்ரம் சிங் #Agriculturelabour #FarmersLife #BJPFails More: https://shorturl.at/BypDW
அனகாபுத்தூர் அடையாறு கரையோர வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்க கோரி #CPIM தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து தென்சென்னை #CPIM மாவட்டச் செயலாளர் வேல்முருகன் விளக்குகிறார். #Anakaputhur #AdyarRiver #PattaDemand #TamilNaduPolitics More: https://youtu.be/xtIHAG0w-yQ
ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக, உழைக்கும் மக்களின் போராட்டத்தில் எப்போதும் முன்நின்ற, தமிழ்நாடு எல்லைப் போராட்டத்தில் ரத்தம் சிந்திய, தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் நினைவுநாள் இன்று. அவரது நினைவை போற்றுவோம்! அவர் காட்டிய வழியில் முன்னேறுவோம்! #CPIM #ComradeMRVenkatRaman #MRVenkatraman #Communist #TNPolitics #Communist #CommunistLeader
பிரதமர் மோடி,”என் நரம்புகளில் ஓடுவது ரத்தமல்ல, செந்தூரம்” என பேசுகிறார்.

ஒருவேளை “உயிரியல் அல்லாத (Non Biological)” மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது – பிரகாஷ்ராஜ் திரைக்கலைஞர் #prakashraaj #OperationSindoor #Sindoor #ModiFails