CPIM Tamilnadu
Photo
நேற்று மும்பையில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில், தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்ற பி.ஆர்.கவாய்க்கு மதிப்புக் கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படவில்லை. இந்த போக்கு, இந்தியாவில் தொடரும் சாதிப் பாகுபாட்டின் கொடூர உருவமாகும்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் ஆகிய நீதிபதி கவாய்க்கு மகாராஷ்டிர அரசு அன்பான வரவேற்பை நல்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அவமரியாதை செய்யப்பட்டது. இந்தியாவை ஆளும் இந்துத்துவ சக்திகள் அடிப்படையில் தலித் எதிர்ப்பாளர்களே என்பதை காட்டுகிறது.
தலைமை நீதிபதி கவாய் பேசும்போது: "மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தலைமை நீதிபதி முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது, மாநில முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர், மும்பை கமிஷனர் போன்றோர் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியான முடிவா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த நடைமுறைகள் புதியவை அல்ல; அவை ஒரு அரசியலமைப்பு நிறுவனம் மற்றொன்றுக்கு வழங்கும் மரியாதையைக் குறிக்கின்றன" என்றார்.
இந்த சம்பவம், பாஜக அரசின் தலித் எதிர்ப்பு நிலைப்பாட்டின் மற்றொரு உதாரணம் மட்டுமே ஆகும்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு செய்யப்பட்ட இந்த அவமரியாதையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #SupremeCourt #BRGavai
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் ஆகிய நீதிபதி கவாய்க்கு மகாராஷ்டிர அரசு அன்பான வரவேற்பை நல்கியிருக்க வேண்டும். ஆனால், அவருக்கு அவமரியாதை செய்யப்பட்டது. இந்தியாவை ஆளும் இந்துத்துவ சக்திகள் அடிப்படையில் தலித் எதிர்ப்பாளர்களே என்பதை காட்டுகிறது.
தலைமை நீதிபதி கவாய் பேசும்போது: "மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு தலைமை நீதிபதி முதல் முறையாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது, மாநில முதன்மை செயலாளர், காவல்துறை இயக்குநர், மும்பை கமிஷனர் போன்றோர் கலந்து கொள்ளாமல் இருப்பது சரியான முடிவா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த நடைமுறைகள் புதியவை அல்ல; அவை ஒரு அரசியலமைப்பு நிறுவனம் மற்றொன்றுக்கு வழங்கும் மரியாதையைக் குறிக்கின்றன" என்றார்.
இந்த சம்பவம், பாஜக அரசின் தலித் எதிர்ப்பு நிலைப்பாட்டின் மற்றொரு உதாரணம் மட்டுமே ஆகும்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு செய்யப்பட்ட இந்த அவமரியாதையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #SupremeCourt #BRGavai
25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு. தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண #CPIM வலியுறுத்தல். #privateschoolreservation #privateschool More: https://shorturl.at/iUSxM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை சேர்க்க முடியாது என தனியார் பள்ளி நிர்வாகங்கள் கைவிரிப்பு! தமிழ்நாடு அரசு தலையிட்டு…
<!-- wp:paragraph --> கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் படி ஏழை, எளிய மாணவர்களுக்கான 25 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு தமிழக அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தர வேண்டிய தொகை நிலுவையாக உள்ளது என்கிற காரணத்தை முன்னிறுத்தி RTE-படி
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் பொன்மலை சங்கத்திடலில் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன் தலைமையில் நடைபெற்றது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி மாலை அணிவித்து புகழஞ்சலி உரை நிகழ்த்தி, மரக்கன்றும் நட்டு வைத்தார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ரயில்வே தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader
குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுகளுக்கு எதிராக #CPIM கோவை மாவாட்டக்குழு சார்பில் கோவை மாநகராட்சி முன்று மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிள், #CPIM மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டு தோழர்கள் திரளாக பங்கேற்றனர். #CPIMProtest More: https://youtube.com/shorts/iuyXrXmlf7s
YouTube
குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுகளுக்கு எதிராக கோவையில் சிபிஐ(எம்) போராட்டம்
குடிநீர் கட்டணம், பாதாளச் சாக்கடை இணைப்பு கட்டண உயர்வுகளுக்கு எதிராக #CPIM கோவை மாவாட்டக்குழு சார்பில் கோவை மாநகராட்சி முன்று மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன் ...
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் தலைமைகுழு உறுப்பினர் உ.வாசுகி மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ. உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://youtube.com/shorts/RcfHSWu6rgg
YouTube
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://youtu.be/Js90HEp...
காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் தடை; காசா மீதான தனது கொடூர தாக்குதலை மீண்டும் துவக்கியுள்ள இஸ்ரேல்!
கடந்த 11 வாரங்களாக காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் தடையால் காசாவில் வசிக்கும் 92 % மக்களுக்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஏராளமான குழந்தைகள் உணவின்றி மடியும் நிலை உருவாகியுள்ளதாக ஐ.நா. அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக நாடுகள் கண்டனம். #Gaza #Israel #UnitedNations #worldhealthorganization
கடந்த 11 வாரங்களாக காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் தடையால் காசாவில் வசிக்கும் 92 % மக்களுக்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
ஏராளமான குழந்தைகள் உணவின்றி மடியும் நிலை உருவாகியுள்ளதாக ஐ.நா. அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக நாடுகள் கண்டனம். #Gaza #Israel #UnitedNations #worldhealthorganization
எந்த தமிழ்நாட்டின் அமைச்சர்கள் எல்லாம் சாம்சங் நிறுவனத்தின் பக்கம் நின்று பேசினார்களோ அவர்களை இன்று தொழிலாளர்கள் பக்கம் நின்று, தொழிலாளர்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று சாம்சங் நிறுவனத்திற்கு சொல்ல வைத்தது சிஐடியு - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtube.com/shorts/gt94w-VErOg Full video : https://youtu.be/oqfh5HlcL30
YouTube
சாம்சங் தொழிற்சங்கம்; அரசை தொழிலாளர்கள் பக்கம் நிற்க வைத்த சிஐடியு.
எந்த தமிழ்நாட்டின் அமைச்சர்கள் எல்லாம் சாம்சங் நிறுவனத்தின் பக்கம் நின்று பேசினார்களோ அவர்களை இன்று தொழிலாளர்கள் பக்கம் நின்று, தொழிலாளர்கள் உரிமையை நிலைநாட்...
கேரள அரசு ஏற்படுத்திய 'உலக கேரள சங்கத்தின்' அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுள்ளது இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்.
இது, புலம்பெயர் கேரள மக்களை சென்றடையும் கேரள மாநிலத்தின் முன்னெடுப்புகளுக்கு ஒரு அங்கீகாரம் ஆகும்.
புலம்பெயர்வு அதிகம் நடக்கும் பிற பகுதிகளிலும் இது போன்ற அமைப்புகளை முன்னெடுக்கும் திட்டத்துடன், வெளியுறவுத் துறை இந்த விபரங்களை கேட்டுள்ளது. #LDF #LDFGovt #KeralaLeads
இது, புலம்பெயர் கேரள மக்களை சென்றடையும் கேரள மாநிலத்தின் முன்னெடுப்புகளுக்கு ஒரு அங்கீகாரம் ஆகும்.
புலம்பெயர்வு அதிகம் நடக்கும் பிற பகுதிகளிலும் இது போன்ற அமைப்புகளை முன்னெடுக்கும் திட்டத்துடன், வெளியுறவுத் துறை இந்த விபரங்களை கேட்டுள்ளது. #LDF #LDFGovt #KeralaLeads
Media is too big
VIEW IN TELEGRAM
சாம்சங் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஊதிய உடன்பாடு உலகலாவிய தொழிற்சங்க இயக்கத்திற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வளவு பெரிய நிறுவனமாக, அரசாக இருந்தாலும் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம் அவர்களை தோற்கடிக்கும் என்பதற்கு சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்தான் சாட்சி – தோழர் இ.முத்துகுமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtu.be/ny_M4QgxcEU?si=GHtCntQM1wzwGg1N
பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலிருந்து இதயத்தை நொறுக்கும் செய்தி!
சுமார் 14,000 குழந்தைகள் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளதால் தங்கள் உயிரை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாக ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் இஸ்ரேல் அரசின் தாக்குதல்களில் 2,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #Gaza #Israel #UnitedNations #worldhealthorganization
சுமார் 14,000 குழந்தைகள் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளதால் தங்கள் உயிரை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாக ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் இஸ்ரேல் அரசின் தாக்குதல்களில் 2,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #Gaza #Israel #UnitedNations #worldhealthorganization
தெருவோர வியாபாரிகள்தான் சென்னை மாநகருக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கிறார்கள். நகரத்தின் வளர்ச்சி என்ற பெயரில் இப்போது அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நகரத்திற்கு அழகு தொழிலாளர்கள்தான், இந்த தொழிலாளர்கள் இல்லாமல் சென்னை ஒருபோதும் உருவாகியிருக்காது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் அணி திரள வேண்டும் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Workers More: https://youtube.com/shorts/3zCuVf8e0js Full video: https://youtu.be/oqfh5HlcL30
YouTube
நீங்கள் யார் எங்களை வெளியேற்ற; சாலையோர விபாபாரிகள் சென்னைக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுப்பவர்கள்
தெருவோர வியாபாரிகள்தான் சென்னை மாநகருக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கிறார்கள். நகரத்தின் வளர்ச்சி என்ற பெயரில் இப்போது அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். இந...
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்!
மத்திய, மாநில அரசுகள் எப்படி முக்கியமோ, அதேபோல உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கும் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து 6 மாதமாகிவிட்டதால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை நடத்தினால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் சின்னாபின்னமாகிவிடும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும் - தோழர் கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Election
மத்திய, மாநில அரசுகள் எப்படி முக்கியமோ, அதேபோல உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கும் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து 6 மாதமாகிவிட்டதால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை நடத்தினால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் சின்னாபின்னமாகிவிடும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும் - தோழர் கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Election
அனகாபுத்தூர் அடையாறு கரையோர வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்க கோரி #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் மனு அளித்தனர். #Anakaputhur #AdyarRiver #PattaDemand #TamilNaduPolitics
பொது மக்களிடம் வைப்பு நிதி மற்றும் தங்கமகள் சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு கணக்கில் வரவு வைக்காமல் பல லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ள திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி தபால் நிலையத்தில் பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் ராஜலதா மீது நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களிடம் ஏமாற்றி கையாடல் செய்யப்பட்ட தொகையை திருப்பி அளிக்க வேண்டுமென #CPIM ஸ்ரீரங்கம் பகுதிக்குழு உறுப்பினர் வீரமுத்து தலைமையில் அதிகாரிகளை முற்றுகையிடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க முயற்சி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க முயற்சி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.