Forwarded from T.M. சிவப்பிரகாசம்
ஐயா வணக்கம்..
1).. தூதுவேளை சூரணம்..100..gm
2).. முசுமுசுக்கை சூரணம்..======
3).. ஆடாதொடை சூரணம்..======
மேற்கண்ட மூன்று வகையான சூரணம் இதனுடன்
4).. திரிகடுகுச் சூரணம்..
இந்த திரிகடுகுச் சூரணத்தை வறுத்து எடுத்து கொள்ளவும்..
..100.. கிராம் அளவுக்கு..
மேற்கண்ட நான்கு மருந்துகளையும் ஒன்று சேர்த்து கலந்து கொண்டு
இரண்டு ஸ்பூன் அளவிற்கு சூரணத்தை எடுத்து கொண்டு
..300.. மில்லி அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து..100..
அளவுக்கு வந்ததும் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொண்டு தேவைக்கேற்ப
பனங்கருப்பட்டி வெல்லம் சேர்த்து கலந்து தினமும் காலையில் உணவுக்கு முன் சாப்பிட வேண்டும்..
இதைவிட சிறந்த மருந்தாக,, எனக்கு வேறு எதையும் சொல்ல மனமில்லை..!!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து..!!
ஐயா நான் இரச பாஷாண மருந்துகளின் விசப்புகையில் இருந்து தப்பித்தேன் பிழைத்தேன்
என்றால் இந்த குடிநீரை அருந்தினேன்.. ஏதோ விவரம் சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள்..
.. நன்றி
1).. தூதுவேளை சூரணம்..100..gm
2).. முசுமுசுக்கை சூரணம்..======
3).. ஆடாதொடை சூரணம்..======
மேற்கண்ட மூன்று வகையான சூரணம் இதனுடன்
4).. திரிகடுகுச் சூரணம்..
இந்த திரிகடுகுச் சூரணத்தை வறுத்து எடுத்து கொள்ளவும்..
..100.. கிராம் அளவுக்கு..
மேற்கண்ட நான்கு மருந்துகளையும் ஒன்று சேர்த்து கலந்து கொண்டு
இரண்டு ஸ்பூன் அளவிற்கு சூரணத்தை எடுத்து கொண்டு
..300.. மில்லி அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து..100..
அளவுக்கு வந்ததும் இறக்கி வடிகட்டி எடுத்துக் கொண்டு தேவைக்கேற்ப
பனங்கருப்பட்டி வெல்லம் சேர்த்து கலந்து தினமும் காலையில் உணவுக்கு முன் சாப்பிட வேண்டும்..
இதைவிட சிறந்த மருந்தாக,, எனக்கு வேறு எதையும் சொல்ல மனமில்லை..!!
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிட வேண்டிய நல்ல நோயெதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து..!!
ஐயா நான் இரச பாஷாண மருந்துகளின் விசப்புகையில் இருந்து தப்பித்தேன் பிழைத்தேன்
என்றால் இந்த குடிநீரை அருந்தினேன்.. ஏதோ விவரம் சொல்கிறேன் என்று எண்ணி விடாதீர்கள்..
.. நன்றி
Forwarded from அ. கந்தன்
*பட்டினத்தார் சொன்னது*...
உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?
இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டதா?
பெருத்தன சிறுக்கும்!!
சிறுத்தன பெருக்கும்!!
என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?
"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.
இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!
நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!
இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!!
அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!!
அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.!!
பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்!!
இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?
சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,
காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,
பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்!!
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு,
மண் என்னைப்பார்த்து, "மகனே!!! நானிருக்கிறேன்....
என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது....
அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம்
வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீ நீயாக இரு...
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது....
அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்....
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது....
எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை...
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன...
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்....
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.....
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.....
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
"நான்" தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.
உணவை தான் உண்டேன் எப்படி மலம் ஆனது?
உயிரோடுதானே இருந்தேன் எப்படி மாண்டு போனேன்?
மலம்தான் உணவாக இருந்ததா?
மரணம்தான் வாழ்வாய் இருந்ததா?
இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை சுகித்ததா?
இந்த சூம்பும் மார்புகளுக்கா இத்தனை கண்கள் வட்டமிட்டதா?
பெருத்தன சிறுக்கும்!!
சிறுத்தன பெருக்கும்!!
என்று பட்டினத்தார் பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வை தானா?
"இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே" என்று மனைவியும் சுற்றமும் பேசியது எனக்கு அவர்கள் என்னை நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது.
இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன்!!
நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருந்தது!!
இளமையாய் இருக்கும் போதே முதுமையை பழகி விட வேண்டும்!!
அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்க மாட்டேன்!!
அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனை போல் பதுக்கி இருக்கமாட்டேன்.
காலம் கடந்த ஞானம்.!!
பாயும் நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள்!!
இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்?
பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொள்ளவா முடியும்?
சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவா போகிறது?
கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும்,
காதலா, என் உயிரே என்று சொன்ன மனைவியும்,
பிணமானபின் சுடுகாட்டில் அல்லவா விட்டு செல்வார்கள்!!
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசிசென்ற பிறகு,
மண் என்னைப்பார்த்து, "மகனே!!! நானிருக்கிறேன்....
என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது....
அருந்தின மலமாம்
பொருந்தின அழுக்காம்
வெறுப்பன உவப்பாம்
உவப்பன வெறுப்பாம்
உலக பொய் வாழ்க்கை நீ நீயாக இரு...
உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது....
அதனால் வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்....
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது....
எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் சாப்பாடு கேட்பதில்லை.
எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.
எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை...
மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன...
மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்....
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.....
முதுமை என்று எதுவும் இல்லை.
நோய் என்று எதுவும் இல்லை.
இயலாமை என்று எதுவுமில்லை.
எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது.
சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.
நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.....
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் தான் வீடு கட்டினேன்,
நான்தான்உதவிசெய்தேன்,
நான் பெரியவன்,
நான் தான் வேலைவாங்கி கொடுத்தேன்,
நான் நான் நான் நான் என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
"நான்" தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா??
நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு..
ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள்.
உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்..!
உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்...!
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.
லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள்..
மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை .
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !
தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்
அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !
இவ்வளவு தாங்க வாழ்க்கை...
யாருக்கும் உதவாத...
வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்....
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்.🙏.
மரணத்தை_விட_உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. !
இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன்.!
இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர் களிலும் விலை உயர்ந்த ஆடைகள் விலை உயர்ந்த காலணிகள் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய_கவுனில் இருக்கிறேன்.!
என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே.!!
என் வீடு அரண்மனை போன்று கோட்டை போன்று உள்ளது ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன்.
இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன். ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபிற்க்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன்.!
அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில்_முடியே இல்லை .
உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு. !
தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். ?
எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ! ஆனால்
சில அன்பானவர்களின் முகங்களும்
அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. !
இவ்வளவு தாங்க வாழ்க்கை...
யாருக்கும் உதவாத...
வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்....
நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்.🙏.
Forwarded from https://t.me/Bakampriyal https://t.me/Bakampriyal
_*பிறப்புடன் பிறக்கும் ஐந்து*_
_*ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது.*_ _*அதனுடன் ஐந்து விஷயங்கள்*_ _*கூடவே பிறக்கின்றன.*_
_*(1) ஆயுள்:*_ மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.
_*(2) வித்தம்:*_ இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.
_*(3) வித்யா:*_ இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
_*(4) கர்மா:*_ தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
_*(5) மரணம்:*_ இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம்
என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. யாராலும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான்
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.
_*ஆக இந்த ஐந்தும்*_ _*கர்ப்பத்தில் இருக்கும்*_ _*போதே பூர்வ வினைக்கு*_
_*ஏற்ப நிர்ணயிக்கப படுகிறது.*_ _*இதை*_
_*மற்றயாராலும்*_ _*மாற்ற முடியாது.*
🕉️
_*ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது.*_ _*அதனுடன் ஐந்து விஷயங்கள்*_ _*கூடவே பிறக்கின்றன.*_
_*(1) ஆயுள்:*_ மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது.
_*(2) வித்தம்:*_ இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது.
_*(3) வித்யா:*_ இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.
_*(4) கர்மா:*_ தொழில், குணம், மனைவி
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன்
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
_*(5) மரணம்:*_ இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில்
இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம்
என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. யாராலும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை
மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு
மருத்துவர் அரை மணி நேரம் முன்பு
வந்திருந்தால் பிழைத்திருப்பார்
என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும்
மருத்துவர் இதே கேள்வியை தான்
கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான்
பிழைப்பார்.
_*ஆக இந்த ஐந்தும்*_ _*கர்ப்பத்தில் இருக்கும்*_ _*போதே பூர்வ வினைக்கு*_
_*ஏற்ப நிர்ணயிக்கப படுகிறது.*_ _*இதை*_
_*மற்றயாராலும்*_ _*மாற்ற முடியாது.*
🕉️
Forwarded from Ruthran Narbavi Jeyakumar Ramasamy Achary
*தமிழகத்தில் காசிக்கு நிகரான*
*ஆறு தலங்கள்*:
இது தொடர்பான ஒரு ஸ்லோகம்
"சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!
சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட்!!
என்ற இந்த ஸ்லோகத்தின் படி திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் தான் காசிக்குச் சமம் என்பது வரலாறு . இதைத்தவிர அவிநாசி, தென்காசியும் கூட காசிக்குச் சமமானவை என்கிறார்கள் ஒரு சில ஆன்மிகப் பெரியவர்கள்.
1)திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருவெண்காடு சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வராலும் தேவரப் பாடல் பெற்ற தலம்.
அதோடு நவகிரக ஸ்தலங்களில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலில் ருத்ரபாதம் உள்ளது.
இதை வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறைக்கும் ஏற்பட்ட பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.
திருவெண்காடு ருத்ரபாதத்தை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசிக்கு போய் தரிசித்த பலனைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் உள்ள புதன் பகவானை தரிசித்தால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பந்து, திருமணம், செல்வச்செழிப்பு, கலைத்துறையில் உயர்வு என எட்டு வகையான அதிகாரங்கள் தேடிவரும்
2)திருவையாறு:
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும்.
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மண் லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம்.
சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தலம் பூலோக கைலாயம்.
இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.
மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறப்பா' என்று சொன்னால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.
இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.
மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர்,
அம்மன் தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி,
ஈசனிடம் இரண்டு நாழி நெல் பெற்று 32 அறங்களையும் குறைவின்றி செய்தவள் ஆதலால், இந்த அம்பிகையை அறம்வளர்த்த நாயகி என்றும் போற்றுவர்.
மேலிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் திகழ்வதால், இந்த தேவி விஷ்ணு அம்சத்தினளாக அருள்புரிகிறாள் என்கின்றனர் பக்தர்கள்.
திருமால், அப்பர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சூரியபகவான், திருநாவுக்கரசர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,
சுந்தரர் ஆகியோர் பதிகம் பாடியுள்ளனர்.
சப்த ஸ்தானம் என்று போற்றப்படும் ஏழு தலங்களில் திருவையாறு முதன்மையானது.
திருநாவுக்கரசருக்கு, இறைவன் கயிலாய தரிசனம் தந்த இந்தத் தலத்தைத் தரிசிக்க, காசியம் பதியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
3)திருவிடைமருதூர்
மிக அழகான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது ஆகும்.
இக்கோயிலில் உள்ள மாடங்களும், ஒவ்வொரு பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும்.
நான்கு புறமும் நான்கு கோபுரங்களுடன் நுழைவு
வாயில்கள் உள்ளன.
இவ்வூரின் எந்தத் திசையில், எந்தத் தெருவில் நின்று பார்த்தாலும் இக்கோயிலின் ராஜகோபுரம் தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கருவறையில் உள்ளது சுயம்பு லிங்கம் என்பதால் அதிக சக்தி கொண்டதாக உள்ளது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் தன்னுடைய இறுதிக்காலத்தில் இக்கோயிலில் தான் கழித்தார்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபடவேண்டிய கோயிலாகும்.
இக்கோயிலுக்குள் நுழைந்தால் வேறு நுழைவுவாயில் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும்.
4)மயிலாடுதுறை
மாயூரம், மாயவரம் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள மயூரநாதர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த சிவன் கோயிலாகும்.
இக்கோயிலின் கிழக்குக் கோபுரம் ஒன்பது நிலைகளுடனும், மற்ற மூன்று கோபுரங்களும் மொட்டைக் கோபுரங்களாக காட்சியளிக்கின்றன.
அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட கோயில்கள் மயிலாப்பூர், மயிலாடுதுறை என இரண்டு தலங்கள் ஆகும்.
இக்கோயிலில் ஸ்ரீமயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை மயில் வடிவிலும் அருள்பாலிக்கின்றனர்.
பொதுவாக கந்த சஷ்டி விழாவின் போது முருகன் அன்னை பார்வதியிடம் தான் வேல்வாங்குவது வழக்கம்.
ஆனால் இங்கு முருகன் தந்தை சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாகும்.
இத்தலத்தின் மற்றொ
*ஆறு தலங்கள்*:
இது தொடர்பான ஒரு ஸ்லோகம்
"சுவேதாரண்யம் பஞ்சநதம் கௌரீமாயூர மர்ஜுனம்!
சாயாவனம்ச ஸ்ரீவாஞ்சியம் காசீ க்ஷேத்ர ஸமான ஷட்!!
என்ற இந்த ஸ்லோகத்தின் படி திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்) திருவையாறு, திருவிடைமருதூர், (தஞ்சாவூர் மாவட்டம்) மயிலாடுதுறை, பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம்(நாகை மாவட்டம்) ஸ்ரீவாஞ்சியம் (திருவாரூர் மாவட்டம்) ஆகிய ஆறு தலங்கள் தான் காசிக்குச் சமம் என்பது வரலாறு . இதைத்தவிர அவிநாசி, தென்காசியும் கூட காசிக்குச் சமமானவை என்கிறார்கள் ஒரு சில ஆன்மிகப் பெரியவர்கள்.
1)திருவெண்காடு
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது திருவெண்காடு சமயக்குரவர்களான அப்பர், சம்பந்தர், சுந்தரர் மாணிக்கவாசகர் என நால்வராலும் தேவரப் பாடல் பெற்ற தலம்.
அதோடு நவகிரக ஸ்தலங்களில் புதன் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
இக்கோயிலில் ருத்ரபாதம் உள்ளது.
இதை வழிபட்டால் நம்முடைய 21 தலைமுறைக்கும் ஏற்பட்ட பாவங்கள் தொலையும் என்பது நம்பிக்கை.
திருவெண்காடு ருத்ரபாதத்தை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசிக்கு போய் தரிசித்த பலனைக் காட்டிலும் மூன்று மடங்கு கூடுதல் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் உள்ள புதன் பகவானை தரிசித்தால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பந்து, திருமணம், செல்வச்செழிப்பு, கலைத்துறையில் உயர்வு என எட்டு வகையான அதிகாரங்கள் தேடிவரும்
2)திருவையாறு:
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 51 வது தேவாரத்தலம் ஆகும்.
காவிரிக்கரையில் காசிக்கு சமமாகக் கருதப்படும் 6 சிவஸ்தலங்களில் திருவையாறும் ஒன்றாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மண் லிங்கம் ஆகையால் ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.
சிவபெருமானின் ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம்.
சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சன்னதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தலம் பூலோக கைலாயம்.
இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.
மூன்றாம் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்குநோக்கி, ‘ஐயாறப்பா' என்று சொன்னால் ஏழுமுறை எதிரொலிக்கும் அற்புதத் திருத்தலம் இது.
இத்தலம் பூலோக கைலாயம். இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.
மூலவர் ஐயாறப்பன், பஞ்சநதீஸ்வரர்,
அம்மன் தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி,
ஈசனிடம் இரண்டு நாழி நெல் பெற்று 32 அறங்களையும் குறைவின்றி செய்தவள் ஆதலால், இந்த அம்பிகையை அறம்வளர்த்த நாயகி என்றும் போற்றுவர்.
மேலிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் திகழ்வதால், இந்த தேவி விஷ்ணு அம்சத்தினளாக அருள்புரிகிறாள் என்கின்றனர் பக்தர்கள்.
திருமால், அப்பர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர்கோன், அருணகிரிநாதர், வள்ளலார், தியாகராஜர், முத்துசாமி தீக்ஷிதர், சூரியபகவான், திருநாவுக்கரசர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர்,
சுந்தரர் ஆகியோர் பதிகம் பாடியுள்ளனர்.
சப்த ஸ்தானம் என்று போற்றப்படும் ஏழு தலங்களில் திருவையாறு முதன்மையானது.
திருநாவுக்கரசருக்கு, இறைவன் கயிலாய தரிசனம் தந்த இந்தத் தலத்தைத் தரிசிக்க, காசியம் பதியை தரிசித்த புண்ணியம் கிடைக்கும்.
3)திருவிடைமருதூர்
மிக அழகான திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் குறைந்தபட்சம் மூன்று மணிநேரமாவது ஆகும்.
இக்கோயிலில் உள்ள மாடங்களும், ஒவ்வொரு பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதாகும்.
நான்கு புறமும் நான்கு கோபுரங்களுடன் நுழைவு
வாயில்கள் உள்ளன.
இவ்வூரின் எந்தத் திசையில், எந்தத் தெருவில் நின்று பார்த்தாலும் இக்கோயிலின் ராஜகோபுரம் தெரியும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
இக்கோயிலின் கருவறையில் உள்ளது சுயம்பு லிங்கம் என்பதால் அதிக சக்தி கொண்டதாக உள்ளது என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
பதினோராம் நூற்றாண்டில் வாழ்ந்த பட்டினத்தார் தன்னுடைய இறுதிக்காலத்தில் இக்கோயிலில் தான் கழித்தார்.
பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபடவேண்டிய கோயிலாகும்.
இக்கோயிலுக்குள் நுழைந்தால் வேறு நுழைவுவாயில் வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்பது ஐதீகமாகும்.
4)மயிலாடுதுறை
மாயூரம், மாயவரம் என்றும் அழைக்கப்படும் ஊரில் உள்ள மயூரநாதர் ஆலயம் மிகவும் தொன்மை வாய்ந்த சிவன் கோயிலாகும்.
இக்கோயிலின் கிழக்குக் கோபுரம் ஒன்பது நிலைகளுடனும், மற்ற மூன்று கோபுரங்களும் மொட்டைக் கோபுரங்களாக காட்சியளிக்கின்றன.
அம்பிகை மயில் வடிவில் வழிபட்ட கோயில்கள் மயிலாப்பூர், மயிலாடுதுறை என இரண்டு தலங்கள் ஆகும்.
இக்கோயிலில் ஸ்ரீமயூரநாதர் சுயம்பு மூர்த்தியாகவும், அபயாம்பிகை மயில் வடிவிலும் அருள்பாலிக்கின்றனர்.
பொதுவாக கந்த சஷ்டி விழாவின் போது முருகன் அன்னை பார்வதியிடம் தான் வேல்வாங்குவது வழக்கம்.
ஆனால் இங்கு முருகன் தந்தை சிவனிடம் வேல் வாங்குவது விசேஷமாகும்.
இத்தலத்தின் மற்றொ
Forwarded from Ruthran Narbavi Jeyakumar Ramasamy Achary
ரு சிறப்பு ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் துலா நீராடல் ஆகும்.
அந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்து இத்தல இறைவனை தரிசித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்
மாயூரம் எனப் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்து ஈசனை கங்கையை விட புனிதமான காவிரி நதியில் ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தமாடி, சிவனை வழிபட வேண்டும்.
ஆக, இந்தத் தலத்துக்கு வந்து
இடப தீர்த்தமாகிய காவிரியில்
நீராடி, மாயூர நாதரையும் அபயாம்பிகையையும் தரிசிப்பவர்களுக்கு, காசியில் வழிபட்ட புண்ணியம் உண்டு.
மேலும், இந்தத் தலத்துக்கு வடக்கே உள்ள வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் ஈசன்
5)திருச்சாய்க்காடு - சாயாவனம்
நாகை மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்பதாவது கோயில் சாயாவனம் என்னும் சாயாவனேஸ்வரர் கோயில் ஆகும்.
பழங்காலம் தொட்டே இந்திர விழா என்னும் பெயரில் சித்ரா பௌர்ணமி விழா 21 நாட்கள் இங்கு நடைபெறுகிறது.
சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தன்னுடைய நாட்டில் யானை புகாத வகையில், மாடக் கோயில் என்னும் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான்.
அதில் இக்கோயிலும் ஒன்றாகும்.
எம பயத்தை நீக்கி உயிர்களுக்கு முக்தி தரும் க்ஷேத்திரம் என்பதால், காசி தலத்துக்கு நிகரானதாகப் போற்றப்படுகிறது.
இங்கு சாயவனேஸ்வர ஸ்வாமியும் கோஷாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாருக்கு இறைவன் காட்சி கொடுத்த தலம் ஆகும்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள முருகப் பெருமான் கையில் வில்லேந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ருசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கையில் வில்லுடன் காட்சி தரும் திருச்சாய்க்காடு வேலவனை தரிசிக்க நம் வினைகள் யாவும் நீங்கும் !
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற திருச்சாய்க்காடு திருத் தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது
6)ஸ்ரீவாஞ்சியம்:
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவரால் தேவரப் பாடல் பெற்ற, ஸ்ரீவாஞ்சியம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் இறைவன் ஸ்ரீவாஞ்சிநாதர் அம்பாள் ஸ்ரீமங்களநாயகியுடன் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீமஹாலட்சுமி ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடைய வேண்டி இங்கு வந்து சிவபூஜை செய்து விருப்பம் நிறைவேறியதால் திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
காசிக்கு ஒப்பாக கருதப்படும் காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்குள்ள அம்மனுக்கு வாழவந்த நாயகி என்ற பெயரும் உண்டு.
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார்.
அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.
காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும் புனிதமானது.
இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார்.
இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள்.
எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள்.
திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.
சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.
‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும், சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த ‘ஸர்வா’ என்ற முனிவர் துடித்துப் போனார்.
கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை அவரை வருத்தியது.
அப்போது ‘திருவாஞ்சியம்’ என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது.
இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார்.
அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது.
இதனால் முனிவர், ‘சிவாய நம.. திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார்.
பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார்.
ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது.
கலியுகத்தில் நமக்கு ஏற்படும்
சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களையும் திருத்தலம்
அந்த நாட்களில் காவிரியில் மூழ்கி எழுந்து இத்தல இறைவனை தரிசித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது ஐதீகம்
மாயூரம் எனப் புராணங்கள் போற்றும் இந்தத் தலத்து ஈசனை கங்கையை விட புனிதமான காவிரி நதியில் ஐப்பசி மாதம் முழுவதும் தீர்த்தமாடி, சிவனை வழிபட வேண்டும்.
ஆக, இந்தத் தலத்துக்கு வந்து
இடப தீர்த்தமாகிய காவிரியில்
நீராடி, மாயூர நாதரையும் அபயாம்பிகையையும் தரிசிப்பவர்களுக்கு, காசியில் வழிபட்ட புண்ணியம் உண்டு.
மேலும், இந்தத் தலத்துக்கு வடக்கே உள்ள வள்ளலார் கோயிலில் மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்கிறார் ஈசன்
5)திருச்சாய்க்காடு - சாயாவனம்
நாகை மாவட்டத்தில் காவிரிக்கரையில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்பதாவது கோயில் சாயாவனம் என்னும் சாயாவனேஸ்வரர் கோயில் ஆகும்.
பழங்காலம் தொட்டே இந்திர விழா என்னும் பெயரில் சித்ரா பௌர்ணமி விழா 21 நாட்கள் இங்கு நடைபெறுகிறது.
சோழ மன்னன் கோச்செங்கண்ணன் தன்னுடைய நாட்டில் யானை புகாத வகையில், மாடக் கோயில் என்னும் எழுபது சிவன் கோயில்களைக் கட்டினான்.
அதில் இக்கோயிலும் ஒன்றாகும்.
எம பயத்தை நீக்கி உயிர்களுக்கு முக்தி தரும் க்ஷேத்திரம் என்பதால், காசி தலத்துக்கு நிகரானதாகப் போற்றப்படுகிறது.
இங்கு சாயவனேஸ்வர ஸ்வாமியும் கோஷாம்பிகையும் அருள்பாலிக்கின்றனர்.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனாருக்கு இறைவன் காட்சி கொடுத்த தலம் ஆகும்.
இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சம், இங்குள்ள முருகப் பெருமான் கையில் வில்லேந்தி போருக்கு புறப்படும் நிலையில் சத்ருசம்ஹார மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
கையில் வில்லுடன் காட்சி தரும் திருச்சாய்க்காடு வேலவனை தரிசிக்க நம் வினைகள் யாவும் நீங்கும் !
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற திருச்சாய்க்காடு திருத் தலம் நாகப்பட்டினம் மாவட்டம், திருவெண்காட்டில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது
6)ஸ்ரீவாஞ்சியம்:
திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் என மூவரால் தேவரப் பாடல் பெற்ற, ஸ்ரீவாஞ்சியம் என்றழைக்கப்படும் இத்தலத்தில் இறைவன் ஸ்ரீவாஞ்சிநாதர் அம்பாள் ஸ்ரீமங்களநாயகியுடன் காட்சியளிக்கிறார்.
ஸ்ரீமஹாலட்சுமி ஸ்ரீமஹாவிஷ்ணுவை அடைய வேண்டி இங்கு வந்து சிவபூஜை செய்து விருப்பம் நிறைவேறியதால் திருவாஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது.
காசிக்கு ஒப்பாக கருதப்படும் காவிரிக்கரையில் உள்ள ஆறு சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்குள்ள அம்மனுக்கு வாழவந்த நாயகி என்ற பெயரும் உண்டு.
ஒரு சமயம் சிவபெருமான், உமையவளுடன் ரிஷப வாகனத்தில் உலகை வலம் வந்தார்.
அப்போது பல திருத்தலங்களைக் காட்டி அதன் சிறப்புகளை எடுத்துரைத்தபடி வந்தார் ஈசன்.
காசி, காஞ்சீபுரம், காளஹஸ்தி என பல திருத்தலங்களை உமையவளுக்கு காட்டிய ஈசன், திருவாஞ்சியத்தின் மகிமையை கூறும்போது, ‘காசியை விட பன்மடங்கு உயர்வான புண்ணிய தலம் இது.
இங்குள்ள தீர்த்தமான குப்தகங்கை, கங்கையை விடவும் புனிதமானது.
இந்த தலத்தில் ஓர் இரவு தங்கி இருந்தாலே, கயிலாயத்தில் சிவ கணமாய் இருக்கும் புண்ணியம் கிடைக்கும்’ என்று கூறினார்.
இதையடுத்து திருவாஞ்சியத்தில் தங்க உமையவள் திருவுளம் கொண்டாள்.
எனவேதான் இத்தல நாயகிக்கு ‘வாழ வந்த நாயகி’ என்ற பெயர் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
ஒரு முறை லட்சுமிதேவி, மகாவிஷ்ணுவிடம் கோபம் கொண்டு பிரிந்து சென்றாள்.
திருமகள் இல்லாததால், வைகுண்டம் விட்டு பூலோகம் வந்தார் விஷ்ணு.
சந்தன மரக்காடுகள் நிறைந்த பகுதியில் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு அதற்கு பூஜை செய்து வழிபட்டார்.
இதையடுத்து ஈசன், மகாலட்சுமியை அழைத்து வரச் செய்து மகாவிஷ்ணுவோடு சேர்ந்து வைத்தார்.
‘திரு’ என்று அழைக்கப்படும் திருமகளை, மகாவிஷ்ணு வாஞ்சையால் விரும்பிச் சேர்ந்த இடம் என்பதால் இந்தத் தலம் ‘திருவாஞ்சியம்’என்று பெயர் பெற்றது.
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந் திருக்கும் கணவன்-மனைவி இங்கு வந்து இறைவனை வழிபட்டால் ஒற்றுமை பலப்படும் என்பது நம்பிக்கை.
துவாபர யுகம் முடிந்து கலியுகம் தொடங்கியதும், சரஸ்வதி நதிக் கரையில் தவமிருந்த ‘ஸர்வா’ என்ற முனிவர் துடித்துப் போனார்.
கலியுகத்தில் தர்மம் அழிந்து விடுமோ என்ற கவலை அவரை வருத்தியது.
அப்போது ‘திருவாஞ்சியம்’ என்ற வார்த்தை அசரீரியாக ஒலித்தது.
இதையடுத்து முனிவர் திருவாஞ்சியம் கோவிலை நோக்கி ஓடினார்.
அவரை கலி துரத்திக் கொண்டிருந்தது.
இதனால் முனிவர், ‘சிவாய நம.. திருவாஞ்சியம் அபயம்’ என்று கூறியபடியே சென்றார்.
பக்தனின் குரல் கேட்டு, வாஞ்சிநாத சுவாமி அங்கு தோன்றி முனிவரை துரத்தி வந்த கலியை, திருவாஞ்சியத்திற்கு சற்று தொலைவிலேயே தடுத்து நிறுத்தினார்.
ஈசன், கலியை தடுத்து நிறுத்திய இடம் தற்போது ‘கலிமங்கலம்’ என்று வழங்கப்படுகிறது.
கலியுகத்தில் நமக்கு ஏற்படும்
சகல தோஷங்களையும், கிரக பீடைகளையும் களையும் திருத்தலம்
Forwarded from Ruthran Narbavi Jeyakumar Ramasamy Achary
திருவாஞ்சியம் ஆகும்.
காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது.
காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன.
அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார்.
ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது.
அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை.
இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் இங்கு இல்லை.
இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள்.
திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மிகுந்த தனம் பெறலாம் என்கிறார்கள்.
இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள்.
இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது 1000 கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன்வந்து. தனது பாவங்கள் நீங்கி புனிதம் பெறுவதற்காகமுனி தீர்த்தத்தில் (குப்த கங்கையில்)நீராடி, வாஞ்சிநாதரை வழிபட்டு அருள் பெற்றாளாம்.
நவதீர்த்தங்களைக் கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள குப்த கங்கையில் நீராடி ஸ்ரீவாஞ்சிநாதரையும், எமதர்மனையும் வழிபட்டால்
சகல நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது.
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்!
குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷம்.
இக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார்
யமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது
பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார்.
அவர் ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி யமனும் ஸ்ரீவாஞ்சியத்தில் தவம் இருந்தார்.
தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் வரம் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார்.
மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார்.
இத்தலத்தில் யமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.
இத்தலத்தில் எம வாகனத்தில்
சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.
யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் (காசிக்கு வீசம் பெரியது ஸ்ரீவாஞ்சியம்)காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.
காசியில் வழங்கப்படுவது போல் திருவாஞ்சியத்திலும் காசிக்கயிறு எனும் கருப்புக் கயிறு வழங்கப்படுகிறது.
காசியில் பாவமும், புண்ணியமும் சேர்ந்தே வளர்கின்றன.
அதனால் நம் பாவங்களுக்கு காசியில் பைரவர் தண்டனை வழங்குகிறார்.
ஆனால் திருவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளர்கிறது.
அதனால் பைரவர் தண்டனை இங்கு இல்லை.
இத்தல பைரவர் தண்டத்தைக் கீழே வைத்து விட்டு, தியான நிலையில் யோக பைரவராக மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறார். நாய் வாகனமும் இங்கு இல்லை.
இவரை ஆசன பைரவர் என்று அழைக்கிறார்கள்.
திருவாஞ்சியத்தில் பைரவர் தவமிருந்து பொன் வண்டு வடிவில் ஈசனை வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.
இத்தல பைரவரை பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட்டு மிகுந்த தனம் பெறலாம் என்கிறார்கள்.
இத்தலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ராகு-கேதுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடை அகலும்.
இத்தலத்தில் உள்ள குப்த கங்கை என்னும் தீர்த்தம், சிவபெருமானின் சூலத்தால் கங்கையின் பாவங்களைப் போக்கிட உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
காசியில் தன்னிடம் வந்து நீராடுபவர்களின் பாவங்களைக் கங்கை ஏற்கிறாள்.
இங்கு இருக்கும் குப்த கங்கையில் தனது 1000 கலைகளில் ஒன்றை மட்டும் காசியில் விட்டு விட்டு, மீதமுள்ள 999 கலைகளுடன் இங்கு ரகசியமாக குப்த கங்கை என்ற பெயருடன்வந்து. தனது பாவங்கள் நீங்கி புனிதம் பெறுவதற்காகமுனி தீர்த்தத்தில் (குப்த கங்கையில்)நீராடி, வாஞ்சிநாதரை வழிபட்டு அருள் பெற்றாளாம்.
நவதீர்த்தங்களைக் கொண்டுள்ள இக்கோயிலுக்கு வந்து இங்குள்ள குப்த கங்கையில் நீராடி ஸ்ரீவாஞ்சிநாதரையும், எமதர்மனையும் வழிபட்டால்
சகல நோய்களும் நீங்கி நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலின் தீர்த்தம், குப்த கங்கை எனப்படுகிறது.
கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக் கிழமைகளில், இங்கு வந்து நீராடிவிட்டு, இறைவனைத் தரிசித்தால் ஏழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்பது ஐதீகம்!
குறிப்பாக, கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை இன்னும் விசேஷம்.
இக்கோயிலில் உள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார்
யமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்வதால் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது
பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள தோஷத்தால் மனஅமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று முறையிட்டார்.
அவர் ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடச் சொல்ல, அதன்படி யமனும் ஸ்ரீவாஞ்சியத்தில் தவம் இருந்தார்.
தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் வரம் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக இயமனை நியமித்தார்.
மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லியும், இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், அமைதியான இறுதிக்காலத்தையும் தரச் சொல்லியும் உத்தரவிட்டார்.
இத்தலத்தில் யமனை வழிபட்ட பின்னரே, சிவபெருமான் தரிசனம் செய்தல் மரபு.
இத்தலத்தில் எம வாகனத்தில்
சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார்.
யமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் (காசிக்கு வீசம் பெரியது ஸ்ரீவாஞ்சியம்)காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.
கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம்.
ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.
Forwarded from Ruthran Narbavi Jeyakumar Ramasamy Achary
இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி' என்று வருந்துபவர்களுக்கு ஒரு எளிய தீர்வு!
ஒவ்வொருவரும் 12 தமிழ் மாதங்களில் ஏதாவது ஒரு மாத த்தில் பிறந்திருப்பார்கள்.
12 தமிழ் மாதங்களில் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் தெய்வங்கள் இருக்கின்றார்கள்.
12 தமிழ் மாதங்களின் தெயவங்களுக்கும் மந்திரங்கள் உள்ளது.
இது மிகவும் ரகசியமாக வைக்கபட்டுள்ளது.
மிகவும் ரகசியமாக வைக்கபட்டுள்ள ஒவ்வொரு தமிழ்மாதத்திற்குரிய தெய்வங்களின் சக்திவாய்ந்த அதிர்ஷ்டம் அளிக்கும் மந்திரங்களை அந்தந்த தமிழ் மாதங்களில் ஜெபித்து வந்தால் ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி என்று வருந்துபவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறிவிடுவாரகள்.
12 தமிழ் மாத தெய்வங்களின் மந்திரங்கள்.
மாதம்--தெய்வம்
சித்திரை- மது:
சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே
வைகாசி- மாதவர்:
கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே
ஆனி- சுக்ரர்:
த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே
ஆடி- சுசி:
த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்
ஆவணி - நபோ:
சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே
புரட்டாசி- நபஸ்யர்:
பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!
ஐப்பசி- கிஷர்:
ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே
கார்த்திகை - ஊர்ஜர்:
த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே
மார்கழி - ஸஹர்:
வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம்
நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்
தை- ஸஹஸ்யர்:
ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்
மாசி - தபோ:
சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ
பங்குனி - தபஸ்யர்:
தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.
ஒவ்வொருவரும் 12 தமிழ் மாதங்களில் ஏதாவது ஒரு மாத த்தில் பிறந்திருப்பார்கள்.
12 தமிழ் மாதங்களில் ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும் தெய்வங்கள் இருக்கின்றார்கள்.
12 தமிழ் மாதங்களின் தெயவங்களுக்கும் மந்திரங்கள் உள்ளது.
இது மிகவும் ரகசியமாக வைக்கபட்டுள்ளது.
மிகவும் ரகசியமாக வைக்கபட்டுள்ள ஒவ்வொரு தமிழ்மாதத்திற்குரிய தெய்வங்களின் சக்திவாய்ந்த அதிர்ஷ்டம் அளிக்கும் மந்திரங்களை அந்தந்த தமிழ் மாதங்களில் ஜெபித்து வந்தால் ராசியே இல்லாத துரதிஷ்ட சாலி என்று வருந்துபவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறிவிடுவாரகள்.
12 தமிழ் மாத தெய்வங்களின் மந்திரங்கள்.
மாதம்--தெய்வம்
சித்திரை- மது:
சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே
வைகாசி- மாதவர்:
கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே
ஆனி- சுக்ரர்:
த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே
ஆடி- சுசி:
த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்
ஆவணி - நபோ:
சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே
புரட்டாசி- நபஸ்யர்:
பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!
ஐப்பசி- கிஷர்:
ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே
கார்த்திகை - ஊர்ஜர்:
த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே
மார்கழி - ஸஹர்:
வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம்
நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்
தை- ஸஹஸ்யர்:
ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்
மாசி - தபோ:
சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ
பங்குனி - தபஸ்யர்:
தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.
Forwarded from https://t.me/Bakampriyal https://t.me/Bakampriyal
நாம் தினந்தோறும் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ தவறுகள் செய்கிறோம்.மனதால் கெட்டதை நினைக்கிறோம். வாக்கால் மற்றவர்களைப் புண் படுத்துகிறோம்.
சுயநலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது.
அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் பட்டினத்தார் .இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பாடப்பெற்றது.
*கல்லாப் பிழை:*
*இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.*
*கருதாப்பிழை:*
*இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.*
*கசிந்துஉருகி நில்லாப்பிழை:*
*இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.*
*நினையாப்பிழை:*
*இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.*
*பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை:*
*முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.*
*துதியாப்பிழை:*
*தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?*
*தொழாப்பிழை:*
*தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.*
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி*
*நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்*
*நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்*
*துதியாப் பிழையும் தொழாப் பிழையும்*
*எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே."*
என்பது அந்த அற்புதமான பாடல். தினமும் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா?
சுயநலம் அதிகரிக்கும்போது செய்யும் காரியங்கள் தவறு மயமாக ஆகிவிடுகின்றன. கவனம் இப்படித் திசைமாறிப் போகும் போது என்றாவது ஒரு நாள் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
நம்மைத் தினமும் காப்பாற்றும் தெய்வத்தை நினைக்காமலும் வழிபடாமலும் காலத்தை வீணாகப் போக்கும் பிழை அந்த தெய்வத்தால் மட்டுமே மன்னிக்கக் கூடியது.
அப்பிழைகளை நமக்குப் புரியும்படி ஒரே பாடலில் எளிமையாகக் காட்டுகிறார் பட்டினத்தார் .இப்பாடல் காஞ்சி ஏகாம்பரநாத சுவாமி மீது பாடப்பெற்றது.
*கல்லாப் பிழை:*
*இறைவனைப் பற்றிய நூல்களைப் படித்து அதன்படி வாழ்க்கையை நடத்தாமல் இருப்பது ஒரு பிழை. இதையே கல்லாப் பிழை என்கிறார் பட்டினத்தார்.*
*கருதாப்பிழை:*
*இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாமல் வாழ்வதும் பிழையே.*
*கசிந்துஉருகி நில்லாப்பிழை:*
*இறைவனது கருணையை எண்ணி எண்ணிக் கசிந்து மனம் உருகி வாழாவிட்டால் அதுவும் பிழையே.*
*நினையாப்பிழை:*
*இறைவனை மறப்பது நன்றி மறப்பதற்கு சமம். அப்படிப்பட்ட நாட்கள் பிறவாத நாட்கள் என்கிறார் அப்பர் சுவாமிகள்.*
*பஞ்சாக்ஷரஜபம் செய்யாதபிழை:*
*முன்பெல்லாம் பஞ்சாக்ஷர ஜபம் செய்யாத வீடுகள் மிகக் குறைவாக இருந்தது. அதற்கு மேல் மந்திரம் வேறு எதுவும் இல்லாததால் நான்கு வேத நடுவில் இருக்கும் மகிமை உள்ள இந்த மந்திரத்தைப் பெரியோர்கள் ஜபிக்கும்படிச் சொன்னார்கள் .ஆதலால் இதைச் செய்யாமல் இருப்பது பெரிய பிழை ஆகிறது.*
*துதியாப்பிழை:*
*தோத்திரங்களால் துதித்தல் மிகவும் முக்கியமானது. தேவர்களும் அசுரர்களும் முனிவர்களும் பிறரும் செய்த தோத்திரங்கள் ஏராளமாகப் புராணங்களில் காணப்படுகின்றன. இறைவனை அவனது நாமங்களால் துதித்தால் பிழைகளை மன்னித்து அருள்வான். அப்படித் துதிக்காமல் இருப்பது தவறு அல்லவா?*
*தொழாப்பிழை:*
*தெய்வம் நமக்குத் தந்த கைகள் அவனைத் தொழுவதற்கே ஏற்பட்டவை. மனிதர்களைத் தொழுதுவிட்டுத் தெய்வத்தை தொழாதவர்களும் இருக்கிறார்கள். இதனால் பெரிய பிழை செய்தவர்கள் ஆகிறார்கள். இப்படியாகப் பல பிழைகளை நாள்தோறும் செய்கிறோம். இதைத் தெய்வத்தைத் தவிர யாரால் மன்னிக்க முடியும்? இப்பொழுது முழுப் பாடலையும் பார்ப்போம்.*
*"கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி*
*நில்லாப் பிழையும் நினையாப் பிழையும்*
*நினஞ்செழுத்தைச் சொல்லாப் பிழையும்*
*துதியாப் பிழையும் தொழாப் பிழையும்*
*எல்லாப் பிழையும் பொறுத்து அருள்வாய் கச்சி ஏகம்பனே."*
என்பது அந்த அற்புதமான பாடல். தினமும் இப்பாடலைச் சொல்வதை இன்று முதல் வழக்கமாகக் கொள்வோமா?
Forwarded from https://t.me/Bakampriyal https://t.me/Bakampriyal
படித்ததில்
பிடித்தது!
*இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.*
📷 ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...
📷 எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு...
📷 நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
📷 என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
📷 அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை வெளியிளே அழைத்து சென்று இருக்கலாம்...
📷 ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...
📷 அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...
📷 ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
📷 நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
📷 நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...
📷 அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...
📷 அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்...
📷 அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...
📷 என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
📷 நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...
📷 என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...
📷 தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...
📷 என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...
📷 நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...
📷 மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மனைவியே! என்னை மன்னித்து விடு...
📷 மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...
📷 எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்
வாழ்க்கை வசந்தமாகும்.
*தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்*
படித்ததில் பகிர்ந்தது.....
பிடித்தது!
*இல்லற வாழ்வில் கணவன்-மனைவி தாம்பத்திய உறவை வர்ணிக்கும் அருமையான கண்களில் நீரை வரவழைக்கும் வரிகள்.*
📷 ஒரு கணவர் அவரது மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையின் அனுபவத்தை எழுதுகிறார்...
📷 எழுபத்தைந்து வயதில்..... ஆதரவு இன்றி நிக்குது மனசு...
📷 நாற்பதைந்து வருடம் - ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
📷 என் கோபத்தை தள்ளுபடி செய்து ஒரு நாளாவது அவளை கொண்டாடி இருக்கலாம்....
📷 அவள் சமையலை ஒருமுறையாவது நான் மனம் நிறைய பாராட்டி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது நான் சமையல் செய்து அவளுக்கு ஊட்டி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது அவளுக்கு பதில் - நான் அவளது துணியையும் சேர்த்து துவைத்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது TV யையும், Mobil லையும் அணைத்துவிட்டு, அவளை கொஞ்சி இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது வேலை தளத்தின் கோபத்தையும் எரிச்சலையும் அங்கேயே விட்டு விட்டு வந்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது, என் விடுமுறை நாட்களில் - அவளை வெளியிளே அழைத்து சென்று இருக்கலாம்...
📷 ஊர் ஊராய் சுற்றி அவளை உற்சாகப்படுத்தி இருக்கலாம்...
📷 அவள் விரும்பி கேட்காத போதும் - ஒரு புடவை வாங்கி கொடுத்து இருக்கலாம்...
📷 ஒரு மாசமாவது− என் முழு சம்பளப் பணத்தை அவளிடமே கொடுத்து இருக்கலாம்...
📷 ஒரு நாளாவது காலையில் அலாரத்தை கொஞ்சம் அணைத்து வைத்து அவளை தூங்க விட்டு இருக்கலாம்...
📷 நீ சாப்பிட்டியா என்று அவளை ஒரு நாளாவது கேட்டு இருக்கலாம்...
📷 நீயும் வா என்னுடன் வந்து சாப்பிடு என்று ஒரு நாளாவது சொல்லி இருக்கலாம்...
📷 அவள் உடல் நலத்தைப் பற்றி ஒருமுறையாவது விசாரித்து இருக்கலாம்...
📷 அவள் தன்னை கவனிப்பதை விடுத்து பிள்ளைகளை மட்டும் கவனிப்பதை கண்டு நான் கொஞ்சம் - அவளை
கவனித்து இருக்கலாம்...
📷 அவள் நோயில் விழுந்த போது நான் கடன் பட்டேனும் அவளை காப்பாற்றி இருக்கலாம்...
📷 என் தாயே! தாரமே ! − நீ என்னுடன் இருந்த போது நான் கம்பீரமாய் வாழ்ந்தேன்...
📷 நீ என்னை விட்டு போனதும் நான் பலமுறை கால் தடுக்கி விழுகிறேன்...
📷 என்னை தூக்கி விடவும் மூத்தவனுக்கு நேரம் இல்லை...
📷 தேனீர் ஏதாவது போட்டுத்தரக் கேட்டால் இளையவளுக்கு சினம் வருது...
📷 என் மனைவியே உன்னை நான் தினமும் கொண்டாடி இருக்க வேண்டும்...
📷 நான் தவறுகள் இழைத்ததற்கு என்னை நீ மன்னித்து விடு...
📷 மூச்சு இழந்த - உன் புகைப்படத்துக்கு தினம் தினம் முத்தமிட்டு உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன்...
மனைவியே! என்னை மன்னித்து விடு...
📷 மீண்டும் ஒரு பிறப்பு இருக்கும் என்றால் நீயே என் மனைவியாய் வந்து விடு... நான் உன்னை கொண்டாட வேண்டும்...
📷 எழுபத்தைந்து வயதில்... இந்த நிலை யாருக்கும் வராமலிருக்க....
உங்கள் மனைவியை தினமும் நீங்கள் நேசியுங்கள்
வாழ்க்கை வசந்தமாகும்.
*தாய்க்கு பின் தாரம் மறந்து விடாதீர்கள்*
படித்ததில் பகிர்ந்தது.....
*ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்*
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.
*நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது*
நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.
*நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது*
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.
*தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.*
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
*நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.*
உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.
*சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.*
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.
*சமாதானம் செய்யுங்கள்.*
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .
*மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...*
நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்றுகொண்டிருக்கிறோம்.
*நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது*
நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை.
*நாம் வரிசையின் பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து வெளியேறவும் முடியாது. நாம் வரிசையைத் தவிர்க்க முடியாது*
எனவே நாம் வரிசையில் காத்திருக்கும்போது - நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்.
*தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.*
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்.
*நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.*
உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.
*சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.*
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள். அன்பை உருவாக்குங்கள்.
*சமாதானம் செய்யுங்கள்.*
நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள் .
*மகிழ்ச்சியாயிருங்கள், எந்த கவலையும் எதையும் மாற்றப்போவதில்லை...*
Forwarded from https://t.me/Bakampriyal https://t.me/Bakampriyal
இந்த மந்திர சொற்களை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிப் பாருங்கள்! உங்களை வெல்ல எவராலும்
முடியவே முடியாது ....!
சித்தர்கள் ஒரு விஷயத்தை உருவாக்க அதிசக்தி வாய்ந்த மந்திர சொற்களை பிரயோகிப்பது உண்டு. ஆக ஒரு பொருளுக்கு சக்தி கிடைக்க மந்திரம் தேவை,
அதே போல நம் மனதிற்கு சக்தி கிடைக்க மந்திரங்களை உச்சரிப்பது சிறந்த பலன்களை கொடுக்கும்.
அந்த வகையில் எந்த மந்திரத்தை எந்த நேரத்தில் உச்சரித்தால் நமக்கு சிவனருள் கிடைக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்,
சிவ பக்தர்கள் சிவ சிவ என்கிற நாமத்தை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருப்பார்கள்...
"ஓம் நமசிவாய" என்கிற இந்த பஞ்சாட்சர மந்திரம் எவர் ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமாக உச்சரித்து வருகிறார்களோ, அவர்களுக்கு மோட்சகதி நிச்சயம் உண்டு என்கிறது புராணம்.
அது போல விஷ்ணு பக்தர்களுக்கு, "ஓம் நமோ நாராயணாய" எனும் எட்டெழுத்து மந்திரம் நற்கதியை பெற்றுக் கொடுக்கும்.
இப்படி ஒவ்வொரு மந்திரத்திற்கும், ஒவ்வொரு சக்திகள் இருக்கும் பொழுது காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை சொல்லக்கூடிய சிவ போற்றிகள் என்னென்ன?
காலையில் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது, "அண்ணாமலை எம் அண்ணா போற்றி, கண்ணார் அமுதக் கடலே போற்றி!" என்கிற இந்த போற்றியை சொல்லிவிட்டு பின்னர் எழுந்து பாருங்கள் சுறுசுறுப்பு தன்னாலே வரும்.
அதே போல குளிக்க செல்லும் பொழுது நீங்கள் "சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி!" என்று சொல்லிக் கொண்டே குளிக்கலாம். இதனால் கங்கையில் குளித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.
கோவிலுக்கு செல்லும் பொழுது கோபுர தரிசனத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆகும். அந்த கோபுர தரிசனத்தின் போது, "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்று உச்சரித்துக் கொண்டே தரிசனம் செய்வது சிறப்பு!
நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல போகிறீர்கள் என்றால், "காவாய் கனகக் குன்றே போற்றி, ஆவா எந்தனுக்கு அருளாய் போற்றி!" இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்.
நல்ல நண்பர்களை காணும் பொழுது, "தோழா போற்றி, துணைவா போற்றி!' என்றும், நீங்கள் தரையில் சம்மணம் போட்டு அமரும் பொழுது, "பாரிடை ஐந்தாய், பரந்தாய் போற்றி!" என்றும், தண்ணீர் குடிக்கும் பொழுது, "நீரிடை நான்காய், நிகழ்ந்தாய் போற்றி!" என்றும் சொல்லிவிட்டு அந்தந்த வேலைகளை செய்யலாம்.
ஒவ்வொரு அணுவிலும் ஈசன் நிறைந்து காணப்படுகிறார். ஒவ்வொரு விஷயத்திலும் அவரை போற்றி புகழ்ந்தால் புண்ணியம் பெருகும்.
கடை வைத்திருப்பவர்கள் கடையைத் திறக்கும் பொழுது, "வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி!" என்று உச்சரிக்கலாம்.
அதே போல சமையலறையில் அடுப்பை பற்ற வைக்கும் பொழுது, "தீயிடை மூன்றாய், திகழ்ந்தாய் போற்றி!" என்று உச்சரிக்க வேண்டும்.
சாப்பாடு சாப்பிடும் பொழுது, "தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி, இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி!" என்று கூற வேண்டும்.
திடீரென உங்களுக்கு மனதில் ஒரு விதமான அச்சம் குடி கொள்ளும் பொழுது
"அஞ்சேல் என்றிங்கு, அருளாய் போற்றி!"
என்று உச்சரித்தால் வந்த பயம் தன்னாலே ஓடிப் போய்விடும்.
அதே போல நீங்கள் தூங்க செல்லும் பொழுது, "ஆடக மதுரை அரசே போற்றி, கூடல் இலங்கு குருமணி போற்றி!" என்று சொல்லிக் கொண்டே நீங்கள் தூங்கி பாருங்கள்,
சட்டென உறக்கம் வந்துவிடும். எல்லாமே இங்கு சிவ மயம் தான் எனவே அந்த ஈசனை இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் துணைக்கு அழைத்துக் கொண்டால், உங்களை வெல்ல எவராலும் முடியாவே முடியாது. 🙏🙏🙏
முடியவே முடியாது ....!
சித்தர்கள் ஒரு விஷயத்தை உருவாக்க அதிசக்தி வாய்ந்த மந்திர சொற்களை பிரயோகிப்பது உண்டு. ஆக ஒரு பொருளுக்கு சக்தி கிடைக்க மந்திரம் தேவை,
அதே போல நம் மனதிற்கு சக்தி கிடைக்க மந்திரங்களை உச்சரிப்பது சிறந்த பலன்களை கொடுக்கும்.
அந்த வகையில் எந்த மந்திரத்தை எந்த நேரத்தில் உச்சரித்தால் நமக்கு சிவனருள் கிடைக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம்,
சிவ பக்தர்கள் சிவ சிவ என்கிற நாமத்தை தொடர்ந்து உச்சரித்து கொண்டே இருப்பார்கள்...
"ஓம் நமசிவாய" என்கிற இந்த பஞ்சாட்சர மந்திரம் எவர் ஒருவர் தன் வாழ்நாளில் அதிகமாக உச்சரித்து வருகிறார்களோ, அவர்களுக்கு மோட்சகதி நிச்சயம் உண்டு என்கிறது புராணம்.
அது போல விஷ்ணு பக்தர்களுக்கு, "ஓம் நமோ நாராயணாய" எனும் எட்டெழுத்து மந்திரம் நற்கதியை பெற்றுக் கொடுக்கும்.
இப்படி ஒவ்வொரு மந்திரத்திற்கும், ஒவ்வொரு சக்திகள் இருக்கும் பொழுது காலையில் எழுந்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை சொல்லக்கூடிய சிவ போற்றிகள் என்னென்ன?
காலையில் நீங்கள் எழுந்திருக்கும் பொழுது, "அண்ணாமலை எம் அண்ணா போற்றி, கண்ணார் அமுதக் கடலே போற்றி!" என்கிற இந்த போற்றியை சொல்லிவிட்டு பின்னர் எழுந்து பாருங்கள் சுறுசுறுப்பு தன்னாலே வரும்.
அதே போல குளிக்க செல்லும் பொழுது நீங்கள் "சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி!" என்று சொல்லிக் கொண்டே குளிக்கலாம். இதனால் கங்கையில் குளித்த பலன் உங்களுக்கு கிடைக்கும்.
கோவிலுக்கு செல்லும் பொழுது கோபுர தரிசனத்தை கட்டாயம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் ஆகும். அந்த கோபுர தரிசனத்தின் போது, "தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!" என்று உச்சரித்துக் கொண்டே தரிசனம் செய்வது சிறப்பு!
நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல போகிறீர்கள் என்றால், "காவாய் கனகக் குன்றே போற்றி, ஆவா எந்தனுக்கு அருளாய் போற்றி!" இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு செல்லுங்கள்.
நல்ல நண்பர்களை காணும் பொழுது, "தோழா போற்றி, துணைவா போற்றி!' என்றும், நீங்கள் தரையில் சம்மணம் போட்டு அமரும் பொழுது, "பாரிடை ஐந்தாய், பரந்தாய் போற்றி!" என்றும், தண்ணீர் குடிக்கும் பொழுது, "நீரிடை நான்காய், நிகழ்ந்தாய் போற்றி!" என்றும் சொல்லிவிட்டு அந்தந்த வேலைகளை செய்யலாம்.
ஒவ்வொரு அணுவிலும் ஈசன் நிறைந்து காணப்படுகிறார். ஒவ்வொரு விஷயத்திலும் அவரை போற்றி புகழ்ந்தால் புண்ணியம் பெருகும்.
கடை வைத்திருப்பவர்கள் கடையைத் திறக்கும் பொழுது, "வாழ்வே போற்றி, என் வைப்பே போற்றி!" என்று உச்சரிக்கலாம்.
அதே போல சமையலறையில் அடுப்பை பற்ற வைக்கும் பொழுது, "தீயிடை மூன்றாய், திகழ்ந்தாய் போற்றி!" என்று உச்சரிக்க வேண்டும்.
சாப்பாடு சாப்பிடும் பொழுது, "தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி, இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி!" என்று கூற வேண்டும்.
திடீரென உங்களுக்கு மனதில் ஒரு விதமான அச்சம் குடி கொள்ளும் பொழுது
"அஞ்சேல் என்றிங்கு, அருளாய் போற்றி!"
என்று உச்சரித்தால் வந்த பயம் தன்னாலே ஓடிப் போய்விடும்.
அதே போல நீங்கள் தூங்க செல்லும் பொழுது, "ஆடக மதுரை அரசே போற்றி, கூடல் இலங்கு குருமணி போற்றி!" என்று சொல்லிக் கொண்டே நீங்கள் தூங்கி பாருங்கள்,
சட்டென உறக்கம் வந்துவிடும். எல்லாமே இங்கு சிவ மயம் தான் எனவே அந்த ஈசனை இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் துணைக்கு அழைத்துக் கொண்டால், உங்களை வெல்ல எவராலும் முடியாவே முடியாது. 🙏🙏🙏