CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
214 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
சங்கம் அமைக்கக் கூடாது என்பதை கொள்கையாகவே வைத்திருக்கும் சாம்சங் நிறுவனத்தில் போராடி சங்கத்தைப் பதிவு செய்து, ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைப் பெற்று உலக தொழிலாளர் வர்க்கத்திற்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்த சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் கதையை விளக்குகிறார் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் இ.முத்துகுமார் #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtu.be/9mLTuDixpE8
பாட்டாளி வர்க்கம் எப்படி உருவானது?

கடந்த (18வது) நூற்றாண்டின் பிந்தைய பாதியில் இங்கிலாந்தில் உருவாகி, அதன் பின்னர் உலகின் அனைத்து நாகரிக நாடுகளிலும் தொடர்ந்து நிகழ்ந்த தொழில் புரட்சியின் விளைவாக பாட்டாளி வர்க்கம் உருவானது. #QuoteOfTheDay #MarxistQuotes #KarlMarx #FriedrichEngels #PrinciplesofCommunism #WorkingClass #IndustrialRevolution #Inspiration #Motivation
சட்டமுன் வடிவுக்கு ஆளுநர்களுக்கு காலம் நிர்ணயிப்பு குறித்து குடியரசு தலைவர் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கும் மலிவான அரசியல் நாடகம். #DroupadiMurmu #Governor #SupremeCourt #RNRavi More: https://shorturl.at/zw6Wk
இடது ஜனநாயக முன்னணி அரசின் 4ம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்! மக்கள் கடலாக மாறியது புதரிக்கண்டம் திடல்

கொரோனா இரண்டாவது அலை, கனமழை - வெள்ளம், நிலச்சரிவு, ஒன்றிய அரசின் மிக மோசமான நிதிப் பாரபட்சம், பழிவாங்கல் நடவடிக்கைகள் என கடினமான காலங்களிலிருந்து கேரளத்தை மீட்டெடுத்தது இடது ஜனநாயக முன்னணி அரசு.

வளர்ச்சிக் குறியீடுகளிலும் மாநிலத்தை தொடர்ந்து முதலிடத்தில் தக்க வைத்து, கேரளத்தை மீண்டும் உயிர்ப்பித்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் கொண்டாட்டத்தில் கேரள மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். #Kerala #CPIM #LDF #LeftAlternative
2024 ஜூலை மாதம் வயநாட்டில் நடந்த நிலச் சரிவுக்கு நிவாரணம் வழங்காமல் புறக்கணிக்கும் பாஜக அரசை கண்டித்து கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டும் மழையிலும் #CPIM நடைபயணம். #Kerala #WayanadLanslide #CPIM #LDFGovt
காசா மீதான தாக்குதல் மனிதாபிமானமற்ற, மனித உரிமைகளை மீறிய பேரழிவு விரிவடையும் ஆக்கிரமிப்பு.

1,993 புதிய குடியேற்ற பகுதிகளுக்கு அனுமதி. இவற்றில் ஜெருசலேமில் மட்டும் 760 குடியிருப்புகள்

223 சட்ட விரோத இடிப்புகள், 329 பேர் கட்டாயமாக வெளியேற்றம் (இதில் 50% குழந்தைகள்)

இது வெறும் மோதல் அல்ல திட்டமிட்ட கொலைகள், அழித்தொழிப்பு, இடப்பெயர்வுக்கான நடவடிக்கை.

உலகம் இதனை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது. #GazaGenocide
இஸ்ரேல் திரைப்பட விழாவை தமிழ்நாடு அரசு உடனடியாக தடை செய்ய முன்வர வேண்டும்!

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தி பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், பொதுமக்களை கொன்று குவித்து வருகிறது இஸ்ரேல். அத்தியாவசிய பொருட்களை கூட தடை செய்து அமெரிக்கா ஆதரவுடன் மக்களை பட்டினி போட்டு கொள்ளும் மனித விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகையை கொடூரமான இஸ்ரேல் நாட்டின் திரைப்பட விழா தமிழ்நாட்டில் நடைபெற அனுமதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இது இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களுக்கு மறைமுகமாக ஆதரவு அளிப்பதாகவே கருதப்படும்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இஸ்ரேல் திரைப்பட விழாவை தடை செய்ய முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது. தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM
தாம்பரம் மாநகராட்சி அனகாபுத்தூர் அடையாறு கரையோரம் கல்லாங்குத்து புறம்போக்கில் உள்ள காயிதேமில்லத் நகர், ஸ்டாலின் நகர் மக்களின் வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்க வலியுறுத்தி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம், #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர்.
குஜராத் சியாசத் நகரில் 8,000 முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு; தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக அரசு அடாவடி!

சியாசத் நகரில் வங்கதேசத்தில் இருந்து முற்காலத்தில் புலம் பெயர்ந்த 1,200 முதல் 1,500 குடும்பங்கள் வசித்து வந்தன. ஆனால் அவர்களில் 90% பேர் இந்திய குடிமக்களாக மாறிவிட்டனர். அதாவது அவர்கள் இந்தியர்கள்தான்.

ஆனால் இவர்கள் இந்திய குடி மக்கள் அல்ல; இவர்களால் நாட்டுக்கு ஆபத்து எனக் கூறி, குறிப்பிட்ட காலத்தில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து தரைமட்டமாக்கியுள்ளது குஜராத் பாஜக அரசு.

இதே போல ஆதார் அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டைகள் வைத்திருந்த மேலும் 7,000 முஸ்லிம் குடும்பங்களின் வீடுகளும் இடிக்கப்பட்டன.

ஆக்கிரமிப்பு எனக் கூறி பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் முஸ்லிம் மக்களை துரத்த மற்றும் ஒடுக்க புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டு வந்தன.

இந்த புல்டோசர் அடாவடிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் குஜராத் பாஜக அரசு புதிய வியூகத்தை கையாண்டு வருகிறது. #Gujarat #Bulldozer #SupremeCourt #ModiFailed
மாவோயிஸ்டுகள் மீதான போலி மோதல் படுகொலைகளை நிறுத்து - நீதி விசாரணைக்கு உத்தரவிடு!
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்எல்) லிபரேசன் கட்சிகளின் சார்பில் ஜூன் 2 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம். #Chattisgarh #Maoists #Encounter More: https://shorturl.at/LFXrP
ரிசர்வ் வங்கியின் நகைக் கடன் புதிய விதிமுறைகள்; எளிய மக்களின் கடைசி புகலிடத்திற்கும் பூட்டு - ஒன்றிய நிதி அமைச்சருக்கு மதுரை நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்பி கடிதம்

கடன் அளவு குறைப்பு, நகை அடகு வைத்தாலும் வருமானத் தகுதி நிபந்தனை, பயன்பாட்டுச் சான்று என்ற பெயரால் கடன்தாரர் உரிமை பறிப்பு, ஒவ்வொரு முறை கடனுக்கும் புதிய கடன் தகுதி பரிசீலனை எனக் கட்டணச் சுமை, நகை உடைமைச் சான்று எனப் போகாத ஊருக்கு வழி.

தங்க நாணயங்களுக்கு நிபந்தனை, கடன் தொகை நிர்ணய முறைமையில் கடன் விகிதத்தில் குறைப்பு, கடனை திருப்பி கட்டினாலும் ஏழு நாள் கழித்து நகை என இழுத்தடிப்பு.

எளிய மக்களை, சிறு வணிகர்களை கழுத்தைப் பிடித்து கந்து வட்டிக் காரர்களிடமும், நகை கடன் வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தள்ளுகிற ரிசர்வ் வங்கி விதிமுறைகளை திரும்பப் பெறுமாறு கோரி ஒன்றிய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளேன். #bank #loan #goldloan #RBI #GoldLoanRules
சாம்சங் வரலாறே மோசடியின் குவி மையம். சாம்சங் நிறுவனத்தின் அடக்குமுறையும், அரசாங்கத்தின் அடக்குமுறையும்தான் எங்களை வீரியமாக போராட வைத்தது – தோழர் இ.முத்துக்குமார், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத் தலைவர் #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtube.com/shorts/nKPiP-EqLkw Full video: https://youtu.be/9mLTuDixpE8
தேசப்பற்று இல்லாவிடில் பாகிஸ்தான் செல்லுங்கள். பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அதிமுக ஆட்சியில் சேர்த்ததை பாஜகவுக்கு வந்து பதுக்கி வைக்கிறார். இதில் தேச பக்தி எங்கே? - தோழர் கே.பாலபாரதி மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #BJPFails
தனி நபர் வருமானத்தில் 140வது இடம் மனித வளக் குறியீட்டில் 133வது இடம்.

உலகில் 4வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து விட்டோம் என மார்தட்டுவதில் என்ன பயன்? - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #BJPFails
குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம் !
திருப்பூர் மாநகராட்சி குப்பை கழிவுகளை பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறை குழிகளில் கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இனி இப்பகுதியில் குப்பை கொட்ட லாரிகள் வந்தால் சிறை பிடிப்போம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். #cpim #tncpim #cpimtirupur #marxist #comrade
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக சந்தேகித்து 4 இஸ்லாமியர்கள் படுகொலை!

காவல்துறையின் தயவால் பரவிவரும் இந்துத்துவ மதவெறி கும்பல்களின் அக்கிரமம்!

மதவெறி செயல்களை செய்துவிட்டு சுதந்திரமாக சுற்றிவரும் சூழல் மாற வேண்டும். இந்த பாதக செயல்கள் செய்தவர்களை மீது விரைந்து நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #UttarPradesh #Beef #Meat #Attack #BJPFails
அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டியிருக்கும் காசா கிராண்ட் மற்றும் மாதா பொறியியல் கல்லூரி கட்டிடங்களை இடிக்க தமிழக அரசுக்கு தயக்கம் ஏன்?

ஏழைகளுக்கு எதிராக புல்டோசர்களை நிறுத்தும் அரசு பணக்காரர்களைக் கண்டால் பதுங்கி கிடப்பது ஏன்? - தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #Bulldozer