CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அரசியல் தலைமைகுழு உறுப்பினர் உ.வாசுகி மாலை அனுவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை.எம்.எல்.ஏ. உள்ளிட்டு தோழர்கள் கலந்து கொண்டனர்.
காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் தடை; காசா மீதான தனது கொடூர தாக்குதலை மீண்டும் துவக்கியுள்ள இஸ்ரேல்!

கடந்த 11 வாரங்களாக காசாவிற்குள் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் தடையால் காசாவில் வசிக்கும் 92 % மக்களுக்கு கடுமையான உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

ஏராளமான குழந்தைகள் உணவின்றி மடியும் நிலை உருவாகியுள்ளதாக ஐ.நா. அமைப்பு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக நாடுகள் கண்டனம். #Gaza #Israel #UnitedNations #worldhealthorganization
எந்த தமிழ்நாட்டின் அமைச்சர்கள் எல்லாம் சாம்சங் நிறுவனத்தின் பக்கம் நின்று பேசினார்களோ அவர்களை இன்று தொழிலாளர்கள் பக்கம் நின்று, தொழிலாளர்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று சாம்சங் நிறுவனத்திற்கு சொல்ல வைத்தது சிஐடியு - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtube.com/shorts/gt94w-VErOg Full video : https://youtu.be/oqfh5HlcL30
கேரள அரசு ஏற்படுத்திய 'உலக கேரள சங்கத்தின்' அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுள்ளது இந்திய வெளியுறவு துறை அமைச்சகம்.
இது, புலம்பெயர் கேரள மக்களை சென்றடையும் கேரள மாநிலத்தின் முன்னெடுப்புகளுக்கு ஒரு அங்கீகாரம் ஆகும்.
புலம்பெயர்வு அதிகம் நடக்கும்‌ பிற பகுதிகளிலும் இது போன்ற அமைப்புகளை முன்னெடுக்கும் திட்டத்துடன், வெளியுறவுத் துறை இந்த விபரங்களை கேட்டுள்ளது. #LDF #LDFGovt #KeralaLeads
Media is too big
VIEW IN TELEGRAM
சாம்சங் நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள ஊதிய உடன்பாடு உலகலாவிய தொழிற்சங்க இயக்கத்திற்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. எவ்வளவு பெரிய நிறுவனமாக, அரசாக இருந்தாலும் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம் அவர்களை தோற்கடிக்கும் என்பதற்கு சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம்தான் சாட்சி – தோழர் இ.முத்துகுமார், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் #CITU #Samsung #SamsungWorkersStrike #WorkersStrike More: https://youtu.be/ny_M4QgxcEU?si=GHtCntQM1wzwGg1N
பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலிருந்து இதயத்தை நொறுக்கும் செய்தி!

சுமார் 14,000 குழந்தைகள் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை இஸ்ரேல் அரசு தடை செய்துள்ளதால் தங்கள் உயிரை இழக்கும் நிலை உருவாகி உள்ளதாக ஐ.நா சபை கவலை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் இஸ்ரேல் அரசின் தாக்குதல்களில் 2,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்தவும், அமைதியை ஏற்படுத்தவும் உலக நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும். - தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #Gaza #Israel #UnitedNations #worldhealthorganization
தெருவோர வியாபாரிகள்தான் சென்னை மாநகருக்கு பொருளாதாரத்தை ஈட்டிக் கொடுக்கிறார்கள். நகரத்தின் வளர்ச்சி என்ற பெயரில் இப்போது அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நகரத்திற்கு அழகு தொழிலாளர்கள்தான், இந்த தொழிலாளர்கள் இல்லாமல் சென்னை ஒருபோதும் உருவாகியிருக்காது. தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் அணி திரள வேண்டும் - தோழர் ஜி.செல்வா, மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் #CPIM #Workers More: https://youtube.com/shorts/3zCuVf8e0js Full video: https://youtu.be/oqfh5HlcL30
தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்!

மத்திய, மாநில அரசுகள் எப்படி முக்கியமோ, அதேபோல உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பங்கும் நாட்டுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் முடிந்து 6 மாதமாகிவிட்டதால், உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரிகளைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளை நடத்தினால், அடித்தட்டு மக்களின் உரிமைகள் சின்னாபின்னமாகிவிடும். ஊழல், முறைகேடுகள் அதிகரிக்கும் - தோழர் கே.பாலகிருஷ்ணன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #Election
அனகாபுத்தூர் அடையாறு கரையோர வீடுகளை அகற்றாமல் பட்டா வழங்க கோரி #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் மனு அளித்தனர். #Anakaputhur #AdyarRiver #PattaDemand #TamilNaduPolitics
பொது மக்களிடம் வைப்பு நிதி மற்றும் தங்கமகள் சிறுசேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு கணக்கில் வரவு வைக்காமல் பல லட்சம் ரூபாய் வரை கையாடல் செய்துள்ள திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி தபால் நிலையத்தில் பணியாற்றிய போஸ்ட் மாஸ்டர் ராஜலதா மீது நடவடிக்கை எடுப்பதோடு பொதுமக்களிடம் ஏமாற்றி கையாடல் செய்யப்பட்ட தொகையை திருப்பி அளிக்க வேண்டுமென #CPIM ஸ்ரீரங்கம் பகுதிக்குழு உறுப்பினர் வீரமுத்து தலைமையில் அதிகாரிகளை முற்றுகையிடப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க முயற்சி செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.
பாஜக ஆட்சியில் வெறுப்பை எப்படி கொண்டு சொல்ல வேண்டும் என்ற செயல் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது மிகவும் ஆழமான பிரச்சினை. இந்திய-பாக். போர்; தொடர்ந்து கட்டுக்கதைகளை பரப்பும் பிரதான ஊடகங்களின் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பை இழக்க வைத்திருக்கிறது - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #BJPFails More: https://youtu.be/vhgditO9SJU?si=_3ckjvFj-A3U4FCS
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை அவமதித்து பாஜக அரசு பழிவாங்கல் #CPIM #SupremeCourt #BRGavai #BJPFails More: https://shorturl.at/HsYUi
கீழடி எனும் வரலாற்றுத் தொல் நகரம் கண்டறிய நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கையை திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் 2023 ஜனவரி மாதம் ஒன்றிய தொல்லியல் துறைக்கு சமர்பித்தார்.

ஆனால் ஒன்றிய தொல்லியல் துறை அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்ட போது “விரைவில் வெளியிடப்படும்” என்று தொல்லியல் துறையால் உறுதி மொழி அளிக்கப்பட்டது. ஆனாலும் இப்பொழுது வரை அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் வரும் 27ம் தேதி நாடாளுமன்ற உறுதிமொழிக் குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கீழடி அறிக்கையில் திருத்தம் தேவை என ஒன்றிய தொல்லியல் துறை அமர்நாத் இராமகிருஷ்ணனின் அறிக்கையை திருப்பி அனுப்பியுள்ளது.

கீழடியின் உண்மைகளை அதிகார பூர்வமாக அறிவிக்க ஒன்றிய தொல்லியல் துறை எளிதில் முன்வராது.

“தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும்” என்றென்றும் எதிரிகள் யார் என்பதை ஒன்றிய தொல்லியல் துறையின் ஒவ்வொரு செயலும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

புராணங்களை வரலாறாக மாற்ற நாள்தோறும் பணியாற்றி பாஜக அரசு அதே வேகத்தோடு நமது வரலாற்றை மறைக்கவும் பணியாற்றி வருகிறது.

தமிழர்களின் வரலாற்றுத் தொன்மை என்பது பாஜக அரசின் அரசாணையோடு சம்பந்தபட்டதல்ல. நிரூபிக்கப்பட்ட அறிவியலோடு சம்பந்தபட்டது. அதனை மறைக்க அவர்களால் ஒரு போதும் முடியாது.

“கீழடி தமிழர்களின் தாய்மடி” என்ற உண்மையை உரக்கச் சொல்வோம் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி. மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Keezhadi
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றியம் வெள்ளுவாடி, சோலை நகர் பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியாக வேப்பந்தட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. உடனடியாக குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார்.
Forwarded from SNEHA
தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிபிஐ(எம்) தொடர் போராட்டத்தால் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் ஆலை நிர்வாகத்திடமிருந்து மூவரின் குடும்பத்திற்கும் தலா ரூ 30 லட்சம் இழப்பீடு பெறப்பட்டது. #Tirupur #ManualScavenging #DalitLivesMatter More: https://youtube.com/shorts/dXwTG7_MsGI