விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே என்ன சாதி என்று கேட்டு தலித் இளைஞர் சதீஷ் பாண்டியனை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மீதே காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.புதுப்பட்டி போலீசார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். #StopViolenceAgainstDalits More: https://youtube.com/shorts/4CvCsyx1nnc
YouTube
தலித் இளைஞரை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளுக்கு துணைபோன போலீசை கைது செய்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே என்ன சாதி என்று கேட்டு தலித் இளைஞர் சதீஷ் பாண்டியனை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பி...
நாட்டிற்கே வழிகாட்டும் கேரளம்!
பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரொபோட்டிக்ஸ் அவசியமாக்கியதன் மூலம் நாட்டுக்கே முன்மாதிரியாகியுள்ளது கேரளம். 4.3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் அனுபவம் பெறும் தருகிற இம்முயற்சி, வகுப்பறைக் கற்றலை முன்னேற்றுகிறது. எதிர்கால நுட்பங்களை வகுப்பறைகளில் ஒருங்கிணைக்கிறது. #Kerala #SchoolEducation #Robotics #EducationForFuture #KeralaLeads #LeftAlternative
பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரொபோட்டிக்ஸ் அவசியமாக்கியதன் மூலம் நாட்டுக்கே முன்மாதிரியாகியுள்ளது கேரளம். 4.3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் அனுபவம் பெறும் தருகிற இம்முயற்சி, வகுப்பறைக் கற்றலை முன்னேற்றுகிறது. எதிர்கால நுட்பங்களை வகுப்பறைகளில் ஒருங்கிணைக்கிறது. #Kerala #SchoolEducation #Robotics #EducationForFuture #KeralaLeads #LeftAlternative
மாவுக்கட்டுக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை! #MadrasHighCourt #police More: https://shorturl.at/mi1Gc
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.முத்துகுமார், சாம்சங் நிர்வாக தரப்பினர் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.முத்துகுமார், சாம்சங் நிர்வாக தரப்பினர் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மனிதாபிமானத்திற்கு எதிரானது! அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது சர்வதேச சட்டத்தின் கட்டாயம். - தோழர் எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SupremeCourtofIndia
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மனிதாபிமானத்திற்கு எதிரானது! அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது சர்வதேச சட்டத்தின் கட்டாயம். - தோழர் எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SupremeCourtofIndia
மானுடத்தின் மாபெரும் நம்பிக்கை சோசலிச கியூபா! - தோழர் எம்.கண்ணன் #Cuba #CubaGovt #SocialismIsFuture More: https://shorturl.at/nVUpS
அகதிகளுக்கு சத்திரமா என்று கேட்ட உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும்! உச்சநீதிமன்றத்திற்கு அகதிகளிடம் ஆத்திரமும் வெறுப்பும் ஏன்?
அகதிகளுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்தான். தன் சொந்த நாட்டை இழந்து வெளியேறுகிற அவலம் யாருக்கும் வரக் கூடாது. அப்படிப்பட்ட நிலைமை வந்தால் ஆதரவு கொடுக்க மனித சமூகம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு திரும்ப பெறப்பட தலைமை நீதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசின் நிலை என்ன? வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #SupremeCourtofIndia
அகதிகளுக்கு தேவை அன்பும் அரவணைப்பும்தான். தன் சொந்த நாட்டை இழந்து வெளியேறுகிற அவலம் யாருக்கும் வரக் கூடாது. அப்படிப்பட்ட நிலைமை வந்தால் ஆதரவு கொடுக்க மனித சமூகம் இருக்கிறது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவு திரும்ப பெறப்பட தலைமை நீதிபதி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் ஒன்றிய பாஜக அரசின் நிலை என்ன? வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #SupremeCourtofIndia
அகதிகள் பிரச்சனையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் மனிதாபிமானமற்ற அணுகுமுறை! #CPIM விமர்சனம். #SupremeCourtofIndia More: https://shorturl.at/0FzO6
அகதிகள் குறித்து தர்மசத்திரம் இல்லை, வேறு நாட்டுக்குப் போ என்று சொல்வது மிகவும் பிற்போக்குத்தனமான, மனிதாபிமானமற்ற வார்த்தை. இது நியாயமற்றது - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SupremeCourtofIndia More: https://youtu.be/I1j6B3Gh_DA
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மாதிரி நமது காதுகளுக்குக் கேட்காத பல பெண்களின் கதறல்கள் இருக்கிறது. பல வழக்குகளில் FIR பதிவு செய்வதற்கே பெரிய போராட்டத்தைப் பெண்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. பல வழக்குகளில் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். சாட்சிகளைப் பாதுகாப்பதற்கு என்று சட்டங்கள் இந்தியாவில் கிடையாது. குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்கிற மனநிலை காவல் துறையிடம் இல்லை – தோழர் பி.சுகந்தி, மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/4zbD4Jrurd0
YouTube
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகப் பார்க்காத மனநிலையில் இன்றும் காவல் துறை
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மாதிரி நமது காதுகளுக்குக் கேட்காத பல பெண்களின் கதறல்கள் இருக்கிறது. பல வழக்குகளில் FIR பதிவு செய்வதற்கே பெரிய போராட்டத்தைப் பெண்கள் முன்னெடுக்க வேண்டியிருக்கிறது. பல வழக்குகளில் சாட்சிகள் மிரட்டப்படுகிறார்கள். சாட்சிகளைப் பாதுகாப்பதற்கு…
கடலூர் சிப்காட்டில் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிற்சாலையில் 6 லட்சம் லிட்டர் கழிவுநீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்த டேங்க் வெடித்து ஏற்பட்ட விபத்து குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டுமென மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து #CPIM சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கடந்த 15 மே 2025 வியாழக்கிழமை அதிகாலை கடலூர் சிப்காட்டில் நடந்த விபத்து குறித்து #CPIM சார்பில் கடந்த 17.5.25 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜி.மாதவன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலான குழு கள ஆய்வு செய்து மேற்கண்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். #Cuddalore #sipkot More: https://shorturl.at/3Wazg
கடந்த 15 மே 2025 வியாழக்கிழமை அதிகாலை கடலூர் சிப்காட்டில் நடந்த விபத்து குறித்து #CPIM சார்பில் கடந்த 17.5.25 அன்று மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயலாளர் ஜி.மாதவன் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையிலான குழு கள ஆய்வு செய்து மேற்கண்ட மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். #Cuddalore #sipkot More: https://shorturl.at/3Wazg
காசாவில் இனப்படுகொலையை நிறுத்துக; #CPIM அரசியல் தலைமைக்குழு #GazaGenocide More: https://shorturl.at/aMqMc
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
காசாவில் இனப்படுகொலையை நிறுத்துக; சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு
<!-- wp:paragraph --> காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் வேதனையளிக்கின்றன. இஸ்ரேலின் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், சண்டை நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் சி.பி.ஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வ…
மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; இப்பணிகளால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும். சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Madurai #StoneQuarry
மதுரை- வாடிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட கொண்டையம்பட்டி கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் சிறு கனிம சுரங்க விதிகளுக்குப் புறம்பாகவும், அனுமதியே இல்லாமலும் பாறைகளை வெட்டியெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன; இப்பணிகளால் சுற்றுச்சூழலுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதோடு, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீரழிவும் ஏற்படும். சட்டவிரோதக் குவாரி நடவடிக்கைகள் மீது தமிழக அரசு முழுமையாக ஆய்வு செய்து சட்டப்படியான நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #Madurai #StoneQuarry
அகதிகள் பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசுவது கொஞ்சம் கூட பொருத்தமாக இல்லை. ஒரு நாட்டின் நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் நிச்சயமாகப் பார்க்க வேண்டும். ஆனால் அதையும் தாண்டி ஒரு மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு இந்தப் பிரச்சனையை அணுக வேண்டும் - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #SupremeCourtofIndia #SupremeCourt #Refugees More: https://youtu.be/aiBOGek2Sx0
Media is too big
VIEW IN TELEGRAM
தலைக்கவசம் அணிவதை அவர்களால் என்றைக்கு 100 சதவீதம் நிறைவேற்ற முடிந்திருக்கிறது. தலைக்கவசம் இல்லை என்றால் 1000 ரூபாய் அபராதம் என்பதை உணர்த்தும் அரசு, தீண்டாமை கொடுமை செய்தால் கடுமையான தண்டனை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை உணர்த்தவில்லை - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopDomesticViolence #StopCasteAtrocities #StopCasteArrogantKillings #AnnihilationOfCaste More: https://youtu.be/RKyw32sSXL4
அரசியல் வாழ்க்கையில் ஒட்டுமொத்தமாக ஒன்பதரை ஆண்டுகளைச் சிறை. 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை. 1949ல் ரயில்வே தொழிலாளர் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தியவர்.
1970ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் தொழிற்சங்க மைய ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், முதல் மாநாட்டிலிருந்து தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளைப் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களை நடத்தியவர்.
டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அண்ணா அரசாங்கம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காய் வாதாடினார். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். இப்படி தான் வாழ்ந்த காலம் முழுவதும் உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://bit.ly/3PKgt9R
1970ல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியத் தொழிற்சங்க மைய ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், முதல் மாநாட்டிலிருந்து தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்தார்.
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளைப் பெறுவதற்கு பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமான வேலை நிறுத்தங்களை நடத்தியவர்.
டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் போது உமாநாத் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டபோது அண்ணா அரசாங்கம் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மக்கள் நலனுக்காய் வாதாடினார். சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். இப்படி தான் வாழ்ந்த காலம் முழுவதும் உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்த தோழர் ஆர்.உமாநாத் நினைவு தினம் இன்று! #Comrade #RUmanath #CPIMLeader #CommunistLeader More: https://bit.ly/3PKgt9R