CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பஹல்காம் படுகொலை; துப்பாக்கி ஓசை ஓயும்போது உதிரும் கேள்விகள்? - தோழர் ஜான் பிரிட்டாஸ், மாநிலங்களவை உறுப்பினர் #CPIM #PahalgamTerrorAttack #OperationSindoor #SpecialParliamentSession https://shorturl.at/syZZs
இந்தியா மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அழுத்தமாக முழங்கிய தோழர் பி.சுந்தரய்யா நினைவுதினம் இன்று! (1 மே 1913 - 19 மே1985)

பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற விடுதலைக்காகப் போராடிய பல தேசிய இனங்கள் ஒன்றுபட்ட ஒரு நாடுதான் இந்தியா என்பதை விளக்கியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் பொதுச் செயலாளர் #Comrade #PSundarayya #ComradePSundarayya #CommunistLeader #FreedomFighter #TelanganaRebellion #SocialismIsFuture
"நீங்கள் ஒரு கட்சிப் போராளி என்றால், உண்மையான புரட்சிகர ஒழுக்கம் உடையவராய் நீங்கள் இருக்க வேண்டும்.

மக்கள் உங்கள் மீது நம்பிக்கையும், மதிப்பும், அன்பும் வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பதற்கு, நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தையும் நேர்மையுடன் செய்ய வேண்டும்" - தோழர் ஹோசிமின் பிறந்த நாள் இன்று (19 May 1890 - 2 Sep. 1969 ) #HoChiMinh #ComradeHochiMinh #Communist #Communism #SocialismIsFuture
நீங்கள் கவனமாக இல்லாவிட்டால் பத்திரிக்கைகள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுக்கவும், யார் ஒடுக்குகிறார்களோ அவர்களை நேசிக்கவும் செய்துவிடும் - கறுப்பின ஒடுக்குமுறைக்கு எதிரான விடுதலை சிந்தனை தோழர் மால்கம் எக்ஸ் பிறந்த தினம் இன்று (19 மே 1925 - 21 பிப். 1965) #MalcomX
முழுமையான சுதந்திரத்தையும், சுரண்டலற்ற நாட்டையும் உருவாக்க சோசலிசமே ஒரே வழி!

இந்திய அரசியல் அமைப்பு குடிமக்களுக்கு வழங்கியுள்ள பேச்சு சுதந்திரம் தற்போது ஆளும் பாஜக அரசால் பறிக்கப்படுகிறது.

படிக்கும் மாணவர்கள் உபா போன்ற கொடும் சட்டங்களால் கைது செய்யப்படுகின்றனர்.

குரலற்றவர்களின் குரலாகச் செயல்பட வேண்டிய ஊடகங்கள் அரசின் ஊதுகுழலாக மாறிவிட்டன.

சோசலிசமே ஒரே வழி தத்துவத்தின் அடிப்படையில் மாணவர்களை அணிதிரட்ட இந்திய மாணவர் சங்கத்தின் 27வது மாநில மாநாடு வழிவகுக்கும் - தோழர் செ.முத்துக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #SFI #SFITamilnadu #27th_State_Conference
மே 19; கம்யூனிச கோட்பாடுகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர். கேரள அரசியல் மற்றும் சமூக மாற்றத்திற்கான போராட்டத்தின் சின்னம் தோழர் ஈ.கே.நாயனார் நினைவு தினம்! (9 டிச. 1919- 19 மே 2004) #Comrade #EKNayanar #CommunistLeader
அரசியலமைப்பு கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது!

நாட்டில் அனைத்துத் தூண்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுதான் நாட்டிற்கு நல்லது. ஆனால் நாட்டில் உயர்ந்தது நீதித்துறையோ அல்லது நிர்வாகமோ அல்ல. மாறாக நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரசியலமைப்பைத் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், “அடிப்படை கோட்பாடு” கட்டமைப்பைத் தொடக் கூட முடியாது.

நாட்டில் தங்குமிடமும், பிற உரிமைகளும் மிக உயர்ந்தது. அதனால் “புல்டோசர்”நடவடிக்கை அநீதியானது - பி.ஆர்.கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி #Constitution #IndianConstitution #IndianParliament #Democracy #JusticeBRGavai
ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி குறித்த பேச்சுக்கு ம.பி. பாஜக அமைச்சர் குன்வர் ஷா கேட்ட மன்னிப்பை ஏற்க முடியாது!

“மிக மோசமான கருத்துகளை பேசிவிட்டு, “என்னுடைய பேச்சு மனதை புண்படுத்தி இருந்தால்... எனக் கூறி மன்னிப்பு வீடியோ வெளியிட்டுள்ளார். மன்னிப்பில் கூட உண்மைத்தன்மை இல்லை. வழக்கில் இருந்து தப்பிக்க வீடியோ வெளியிட்டுள்ளார்” - சூர்யகாந்த், என்.கே.சிங் உச்சநீதிமன்ற நீதிபதிகள் #KunwarVijayShah #SofiyaQureshi #SupremeCourt
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஆதிவாசி மக்களுக்கு நீர், நிலம் மற்றும் வன வளங்களின் உரிமைக்காக, ஆதிவாசி அதிகார் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பின் சார்பில் நடைபெற்ற பேரணியில் அவ்வமைப்பின் தலைவரும், #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் ஜிதேந்திர சவுத்ரி கோரிக்கைகளை முன்வைத்து கூடியிருந்த மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய பின்னர், தும்ரி மாவட்ட துணை கலெக்டரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சுயநிதிக் கல்லூரிகள்: கட்டணக் கொள்ளையின் உச்சம் - தமிழ் இந்து தலையங்கம் #FeeHike #EducationScam #JusticeForStudents More: https://shorturl.at/F0LSG
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே என்ன சாதி என்று கேட்டு தலித் இளைஞர் சதீஷ் பாண்டியனை கொடூரமாக தாக்கிய சாதி ஆதிக்க சக்திகளை வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின்கீழ் கைது செய்ய வேண்டும். மேலும், தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் மீதே காவல்துறையினர் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாக்கியவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்.புதுப்பட்டி போலீசார் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். #StopViolenceAgainstDalits More: https://youtube.com/shorts/4CvCsyx1nnc
நாட்டிற்கே வழிகாட்டும் கேரளம்!

பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் ரொபோட்டிக்ஸ் அவசியமாக்கியதன் மூலம் நாட்டுக்கே முன்மாதிரியாகியுள்ளது கேரளம். 4.3 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு செயல்வழி கற்றல் அனுபவம் பெறும் தருகிற இம்முயற்சி, வகுப்பறைக் கற்றலை முன்னேற்றுகிறது. எதிர்கால நுட்பங்களை வகுப்பறைகளில் ஒருங்கிணைக்கிறது. #Kerala #SchoolEducation #Robotics #EducationForFuture #KeralaLeads #LeftAlternative
மாவுக்கட்டுக் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி தேவை! #MadrasHighCourt #police More: https://shorturl.at/mi1Gc
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வெற்றி!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (சிஐடியு) தொடர்ச்சியாக போராடி வந்த நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் முன்னிலையில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் தலைவர் இ.முத்துகுமார், சாம்சங் நிர்வாக தரப்பினர் ஆகியோருடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு கோரிக்கையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மனிதாபிமானத்திற்கு எதிரானது! அகதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது சர்வதேச சட்டத்தின் கட்டாயம். - தோழர் எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SupremeCourtofIndia
மானுடத்தின் மாபெரும் நம்பிக்கை சோசலிச கியூபா! - தோழர் எம்.கண்ணன் #Cuba #CubaGovt #SocialismIsFuture More: https://shorturl.at/nVUpS