CPIM Tamilnadu
1K subscribers
11.7K photos
118 videos
215 files
4.1K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பெண் அடிமைத்தனத்தை புரிந்து கொள்ளவும் அதைக் களையவும் அறிவியல் பூர்வமான மார்சியப் பார்வை வேண்டும். இந்தியாவில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். அதில் சாதியும் மதமும் ஊடுருவி நிற்கிறது. பெண்ணடிமைத் தனத்தின் வேர் வர்க்கத்தோடு இணைந்தது. பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான போராட்டத்தை அனைவரும் சேர்ந்து முன்னெடுப்போம்! பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவோம்! #StopRapeAgainstWomen
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை அமெரிக்காவின் தலையீடு குறித்து பிரதமர் மோடி பேசாதது ஏன்?

சங்-பரிவாரத்தின் தேசியவாத வெறி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு முன் அமைதியாகிவிடுகிறது.

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு விலங்கு பூட்டி திருப்பி அனுப்பப்பட்டனர்.அப்போதும் எந்த எதிர்ப்பும் இல்லை.

ஒருதலைப்பட்சமாக நம் மீது வரிகள் விதிக்கப்பட்டன; இந்திய விவசாயத்தை காவுகொடுக்கும் செய்யும் ஒரு ரகசிய ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது டிரம்ப் வர்த்தகத் தடை மிரட்டலின் மூலமே மூலம் போரை நிறுத்தினேன் என்கிறார். எப்படி மார்தட்டினாலும், இந்த சரணாகதியை மறைக்க முடியாது - டாக்டர் தாமஸ் ஐசக் கேரள முன்னாள் நிதியமைச்சர் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #IndiaPakistanWar2025 #Trump #ModiFails
பாஜக ஆட்சிக்கு வந்த பின் இரயில்வே பட்ஜெட்டை ஒழித்துக்கட்டினார்கள். இரயில்வே திட்ட விபரங்கள் அடங்கிய பிங்க் புத்தகத்தை சென்ற ஆண்டு பொது பட்ஜெட் முடியும் வரை வெளியிடப்படவில்லை. இதனை நாடாளுமன்றத்தில் நான் உள்பட பல உறுப்பினர்களும் சுட்டிக்காட்டி விமர்சித்தோம்.

தொடர்ந்து நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. பட்ஜெட் முடிந்தபின் தான் பிங்க் புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு பட்ஜெட் முடிந்த பின்னும் பிங்க் புத்தகம் வெளியிடப்படவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் பிங்க் புத்தகம் வெளியிடப்பட போவதில்லை என்றும் அதற்கு பதிலாக ஒவ்வொரு ரயில்வேக்கும் தொகுக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் பதில் அளித்தது.

பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் வெளியானது. கடைசியாக நேற்றுதான் தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப் பட்டியல் ஒவ்வொரு ரயில்வேக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் பார்த்தால் அதில் முதலீட்டு திட்டங்கள் என்ற பெயரில் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு திட்டத்துக்கும் திட்ட மதிப்பீடு எவ்வளவு என்று வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் பிங்க் புத்தகத்தில் இருந்த விவரங்களான திட்ட மதிப்பு, இதுவரை ஆன செலவு, இந்தாண்டுக்கு எவ்வளவு ஒதுக்கீடு போன்ற விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இல்லை. திட்ட மதிப்பீடு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது இதுவரை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது 25 -26க்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் அதில் குறிப்பிடப்படவில்லை. இதனால் ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

ஏற்கனவே பல ரயில்வே திட்டங்களுக்கு, குறிப்பாக புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியிருப்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டி இருந்தேன். எவ்வளவு ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள் என்கிற விவரம் வந்தால்தான் நம்மால் ஆயிரம் ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்களா அல்லது கூடுதலாக ஒதுக்கி இருக்கிறார்களா என்கிற விவரம் நமக்கு தெரிய வரும். அதை குறித்து விமர்சனங்களையும் முன்வைக்க முடியும்.

ஆனால் அந்த விவரங்கள் வழங்கப்படாமல் வெறும் திட்ட மதிப்பு மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எந்த பயனும் இல்லை. அதுமட்டுமல்ல தெற்கு ரயில்வேக்கு இந்த ஆண்டுக்கு ஒவ்வொரு திட்டத்துக்கும் எவ்வளவு ஒதுக்கீடு என்ற ஒரு சுருக்க அறிக்கை பிங்க் புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கும். அந்த விவரம் இப்பொழுது முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் மொத்த திட்ட செலவுகள் ஒவ்வொரு திட்டத்துக்கும் தரப்பட்டுள்ளது. ஆனால் தெற்கு ரயில்வேக்கு அல்லது ஒவ்வொரு ரயில்வேக்கும் தனித்தனியாக எவ்வளவு ஒதுக்கீடு என்கிற விவரம் மறைக்கப்பட்டுள்ளது. மறுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல ஏற்கனவே சர்வே முடிந்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்ட ஆவடி- திருப்பெரும்புதூர் இருங்காட்டு கோட்டை புதிய பாதை திட்டம் பட்ஜெட்டில் இருந்து எடுக்கப்பட்டு சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு வெறும் ஒன்றரை கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஏற்கனவே சர்வே முடித்து பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று இரட்டை பாதை திட்டங்கள் இப்போது மீண்டும் சர்வே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. காட்பாடி - விழுப்புரம்; ஈரோடு- கரூர் - சேலம்; கரூர் - திண்டுக்கல் ஆகிய மூன்று திட்டங்களுக்கு இரண்டு கோடியும் 81 லட்சமும் 2 கோடியுமாக முறையே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.

இதைப் போல மற்ற புதிய பாதை திட்டங்களான அத்திப்பட்டு - புத்தூர்; திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை; திண்டிவனம் - நகரி; ஈரோடு- பழனி; மொரப்பூர் - தர்மபுரி ஆகிய திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் இல்லாததால் நம்மால் அதன் உண்மை நிலையை அறிய முடியாத வகையில் மறைத்திருக்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரை அகல பாதை திட்டம் இரட்டை பாதை திட்டம் புதிய பாதை திட்டம் ஆகியவற்றுக்கு இந்த தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரப்பட்டியலிலும் எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற விவரம் இல்லாமல் தமிழக மக்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்கள். - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி.,மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #IndianRailway #PinkBook #MinistryofRailways #BJPFailed #BJPBetrayedTN
செய்தி கொடுப்பது மட்டும்தானே உங்களுக்கு வேலை? போரை வைத்து பரபரப்பு தேடுவதை நிறுத்துங்கள்!

வட இந்திய செய்தி சேனல்கள் எல்லாம் கோமாளிகள் ஆகிவிட்டன. ஆர்ப்பாட்டமான காட்சிகள், சத்தம், அலறுதல், கத்துவது என கொடுமை செய்கிறார்கள். செய்தி கொடுப்பது மட்டும்தானே உங்களுக்கு வேலை?

போரை வைத்து பரபரப்பு தேடுவதை நிறுத்துங்கள். ஏற்கனவே மக்கள் பதட்டத்தில் இருக்கின்றனர்.

உண்மை செய்திகளுக்கு மட்டும் மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செய்தி என்கிற பெயரில் தரப்படும் இந்த குப்பைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் - சோனாஷி சின்ஹா திரைக்கலைஞர் #IndianNavyAction #SonakshiSinha
துப்பாக்கி ஓசை ஓயும்போது உதிரும் கேள்விகள் - டாக்டர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி #CPIM #IndiaPakistanConflict #ceasefire #Trump #BJPFailed More: https://shorturl.at/EbXxn
கர்னல் சோபியா குரேஷி குறித்து, பாஜக அமைச்சர் பேசிய கண்டனத்திற்குரிய கருத்து; ம.பி. உயர்நீதிமன்றம், தானே முன்வந்து வழக்கு தொடங்கியிருப்பதை வரவேற்கிறோம்!

பொது வாழ்க்கையில், மதச்சார்பு விஷக் கருத்துகளுக்கு இடமளிக்கக் கூடாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பதவியேற்றவர்கள், நம் அரசியலமைப்பின் விழுமியமான மதச்சார்பின்மை உள்ளிட்ட அம்சங்களை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் கடமை கொண்டவர்கள் - தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #IndianArmy #SofiyaQureshi #KunwarVijayShah #HateSpeech
1992ம் ஆண்டு வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை நிகழ்த்தப்பட்டபோதும், சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு அவரது கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கிலும், பொள்ளாச்சி சம்பவத்திலும் அதிமுக அரசு இப்படிப்பட்ட சம்பவங்கள் எதுவுமேம் நடக்கவில்லை என்று சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைச் செய்தது - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen More: https://youtu.be/MCJLFxI9uWw
வடகாடு கிராமத்தில் அனைத்து இளைஞர்களும் விளையாடும் வகையில் பொது மைதானத்தை தமிழ்நாடு அரசு உருவாக்குவதுதான் அங்கு நடைபெறும் சாதிய பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் – தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Pudukottai #Vadakadu #StopViolenceAgainstDalits More: https://youtu.be/NeMTijr7Yls
இப்படிப்பட்ட பாஜக அமைச்சர்களை வைத்துக் கொண்டு தேசப்பற்றுடன், கொடியை உயர்த்திப் பிடிப்பதால் என்ன பயன்?

கர்னல் சோபியா குரேஷி இஸ்லாமியர் என்கிற ஒரே காரணத்துக்காக பாகிஸ்தானிகளின் சகோதரி என பாஜக அமைச்சர் விஜய் ஷா பேசிய பேச்சுக்கு மேடையில் இருப்போரும் கை தட்டுகின்றனர் - ராஜ்தீப் சர்தேசாய் மூத்த பத்திரிகையாளர் #ColonelSofiyaQureshi #BJPMinister #VijayShah
பதிலடி ஓகே... பதில் எப்போது? - விகடன் தலையங்கம் #CPIM #IndiaPakistanConflict #ceasefire #AmitShah #BJPFailed More: https://shorturl.at/zoKTd
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு தொடுத்த அன்றைய அதிமுக அரசு!

குறிப்பாக இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்தது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடியவர்கள் மீது தொடர்ந்து வழக்கு இப்போதும் தொடர்வது நியாயம் இல்லை. ஆகவே தோழர்கள் மீதான வழக்குகளை உடனடியாகத் திரும்பப் பெற உரிய நடவடிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் எடுக்க வேண்டும். தோழர் பெ.சண்முகம் மாநிலச் செயலாளர், #CPIM #PollachiCase #PollachiVerdict #StopRapeAgainstWomen
இந்தியாவின் தேசிய நலன்களை மோடி அரசு முற்றிலும் கைவிட்டுவிட்டதா? டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகள் குறித்த அறிக்கை பற்றி அரசாங்கம் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும். #CPIM #Trump #ModiFailed
சமூக அமைதிக்கு ஆதரவாகவும், போரை ஆதரிக்க மறுத்த காரணத்திற்காகவும், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல்கள்;

இந்திய மாணவர் சங்கத் தலைவர்கள் அய்சி கோஷ், தீப்சிதா தர் மீது தீவிர வலதுசாரி கும்பல்கள் படுபாதக சைபர் தாக்குதலுக்கு வன்மையான கண்டனங்கள்!

ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ்ஸின் துணையோடு சமூக வலைத்தள பொய்ப் பிரச்சார பீரங்கிகள் மூலம் வெறுப்பு அரசியலை எதிர்க்கும் குரலை அடக்க நினைக்கும் பிரிவினைவாத வெறுப்பு நிகழ்ச்சி நிரல் இங்கே வெற்றி பெறாது. #SFI #StopViolenceAgainstDalits #DalitLivesMatter #IndiaPakistanConflict
பேச்சாளர், எழுத்தாளர், கிளர்ச்சியாளர், ஆலோசகர், களப்பணியாளர் தலைவர்களை உருவாக்கிய தலைவர் என பன்முகத்தன்மை வாய்ந்த ஆளுமையாக விளங்கிய தோழர் கே.வரதராசன் அவர்களது வாழ்க்கை இன்றைய கம்யூனிஸ்ட்களுக்கு மிகச்சிறந்த பாடமாக விளங்கும்.

தோழர் கே.வரதராசன் காட்டிய வழியில் அவரைப்போல அர்ப்பணிப்புடனும், இயக்கப் பணிகளில் செயலாக்கத்துடன் செயல்படுவதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியை பலப்படுத்துவோம், மக்களுடன் நெருக்கமாக பயின்று வெகுஜன போராட்டங்களை வளர்த்தெடுப்போம்! #Comrade #CPIMLeaderRead More: https://bit.ly/3Lj2Drn
வட சென்னை கொடுங்கையூரில் புதிதாக அமைக்க உள்ள எரிஉலை திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி #CPIM சார்பில் தர்ணா போராட்டம் ஆர்.ஆர்.நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எழில் நகரில் உள்ள குப்பை கழிவுகள் கொட்டும் வளாகத்தை பார்வையிட்டார். உடன் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட தோழர்கள் இருந்தனர். #Kodungaiyur #IncineratorProject #StopKodungaiyurIncineratorProject
சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் தடுத்து நிறுத்துவது குறித்த தமிழ்நாடு அரசின் மனு மீது, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை, குடியரசுத் தலைவரிடம் தள்ளிவிடும் ஒன்றிய அரசின் முடிவுக்கு #CPIM கண்டனம்!

ஆளுநர்கள் ஆளும் கட்சியான பாஜகவின் கட்டளைப்படி செயல்படுகிறார்கள், எதிர்க்கட்சி தலைமையிலான மாநில அரசுகளின் செயல்பாட்டைத் தடுக்கிறார்கள். அவர்கள் நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள கூட்டாட்சி கொள்கைகளை மீறுகிறார்கள்.

பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகளும் இந்நடவடிக்கையைக் கண்டிக்க வேண்டும். மேலும் மாநில உரிமைகளை விலையாகக் கொடுத்து அதிகாரங்களை மையப்படுத்துவதற்கு எதிரான போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் - தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர், #CPIM #Tamilnadu #ImposeDeadlines #Governors #ModiFailed #SupremeCourt #SaveConstitution #SaveFederalism