CPIM Tamilnadu
867 subscribers
16.4K photos
765 videos
321 files
5.91K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு முழுவதும், மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக அரசு, ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற போர்வையில் டம் டம் மற்றும் உத்தர்ப்பாரா ரயில் நிலையங்களில் புல்டோசர் மூலம் இடிப்பு இயக்கத்தை நடத்தியது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும், பல சிறிய ஸ்டால்களும் இடித்து தள்ளப்பட்டன. இது ஏராளமான உழைக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

மக்களுக்கு ஆதரவாக, #CPIM தோழர்களும், #CITU தொழிலாளர்களும் இரவு முழுவதும் இரு ரயில் நிலையங்களிலும் தங்கி நின்றனர். அவர்களின் உறுதியான எதிர்ப்பு, ஆரம்பத்தில் அதிகாரிகளை இடிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த கட்டாயப்படுத்தியது. இருப்பினும், பின்னர் நிர்வாகம் பலத்த போலீஸ் படையுடன் வந்து, போராட்டத்தை ஒடுக்கிவிட்டு இடிப்புப் பணியைத் தொடர்ந்தது.

பாஜக அரசின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு எதிராக சிபிஐ(எம்) மற்றும் சிஐடியு அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டனக் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.
1
காஞ்சிபுரம் மாவட்ட தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து வனத்துறை அமைச்சருடன் #CPIM #CITU தலைவர்கள் சந்திப்பு!

தமிழக வனத்துறை அமைச்சர் மாண்புமிகு R.V.ரஞ்ஜித் குமார் அவர்களை, சிபிஐ(எம்) மற்றும் சிஐடியு நிர்வாகிகள் நேற்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர்.

சாம்சங் சங்க நிர்வாகிகள் 27 பேர் பணி இடைநீக்கம், ஹூண்டாய் நிறுவனத்தின் 10 நிர்வாகிகள் பணிநீக்கம் & 67 தொழிலாளர்கள் சஸ்பென்ஷன் மற்றும் எஸ்.எஸ். எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் நீக்கம் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வலியுறுத்திய பிரச்சினைகள் குறித்து அரசின் அனைத்து மட்டங்களிலும் பேசி, நல்லதொரு தீர்வை ஏற்படுத்தலாம் என அமைச்சர் உறுதியளித்தார்.

புதிய அரசு, புதிய அமைச்சர்கள் சிபிஐ(எம்) ஆதரவோடு அமைந்துள்ள பின்னணியில், தொழிலாளர் நலன் காக்கத் தொடர்ந்து கவனம் செலுத்தி முடிவு காணும் நோக்கில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

இச்சந்திப்பில் சிபிஐ(எம்) மாவட்ட செயலாளர் தோழர் கே.நேரு, சிஐடியு மாவட்டச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட சாம்சங் சங்க நிர்வாகிகள் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

#WokersRights #CITU #CPIM #Samsung #Hyundai
கேரளாவில் அரசியல் பழிவாங்கலோடு கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் அவர்களின் வீட்டில்  நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தோடு தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் காவல் துறையினர் மேற்கொள்ளும் வன்முறை நடவடிக்கைகளும் மிரட்டல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

ஈ.டி.யை அரசியல் ஆயுதமாக்கி #LDF தலைமையை வேட்டையாடுவதற்கு எதிராகப் போராடியவர்களின் குடும்பங்களை வேட்டையாடும் அணுகுமுறையைத்தான் காவல்துறை கடைப்பிடித்து வருகிறது. தற்போது கைதாகி சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினரை #CPIM கேரள மாநிலக்குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தோழர் வி.சிவன்குட்டி நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

குடும்ப உறுப்பினர்களைக் காவல் துறையினர் மிரட்டி, அவர்களை அச்சத்தின் விளிம்பில் வைத்துள்ளனர். இதுமட்டுமன்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கும் காவல் துறையினர் சென்று பயத்தை உருவாக்கி, அவர்களின் வேலைச் சூழலை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அப்பாவி குடும்ப உறுப்பினர்களையும், வேலை செய்பவர்களையும் இப்படி துன்புறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை ஒடுக்கவே காவல்துறை முயற்சிக்கிறது.

போராடியவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கைகளைத் தொடர்வது அரசியலமைப்பு உரிமைகளை மீறும் செயலாகும்.
சட்டவிரோதமான காவல்துறை அத்துமீறல்களை கேரள அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். போராடியவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் வேட்டையாடும் நடவடிக்கைகளில் இருந்து காவல் துறை பின்வாங்க வேண்டும்.
சோசலிசம் தாமதமாகலாம்; ஆனால் அதுவே நிச்சயமானது!

போரினால் பேரழிவிற்குள்ளான, மிகக் குறைந்த மூலதனமே கொண்ட, 70 சதவீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவின்மை நிலவிய, ஒரு விவசாயச் சமூகத்தில் சோசலிசத்தை எப்படிக் கட்டமைப்பது என்பதுதான் அவரைப் பெரிதும் ஆட்கொண்ட கேள்வியாகும்.

அந்த உன்னதமான கட்டுரையில் லெனின் இவ்வாறு குறிப்பிட்டார்: “நிகரற்ற மாபெரும் உழைப்பிற்குப் பிறகு, ஒரு சிறிய விவசாய, பேரழிவிற்குள்ளான நாட்டின் உழைக்கும் வர்க்கத்திற்கு, புதிய உழைப்புச் சக்திகள் வளர்வதற்கும் பழைய சக்திகள் தங்களை மீட்டெடுத்துக் கொள்வதற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி தேவைப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்தின் புதிய சக்திகளின் வளர்ச்சி வேகம் தற்காலிகமாகக் குறைவதை நாம் புரிந்துகொண்டு அதற்கேற்பச் செயல்பட வேண்டும்.”

பேராசிரியர் விஜய் பிரசாத்
தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.

More: https://shorturl.at/dN6ch