CPIM Tamilnadu
867 subscribers
16.4K photos
765 videos
321 files
5.91K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வேட்டை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

கேரளத்தில் செங்கொடி தொடர்ந்து பறக்கும். அந்த செங்கொடி பாதுகாக்கப்படும். பினராயி விஜயன் மீது கை வைக்காதே! #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi #ModiGovtFails More: https://shorturl.at/mxokA
CPIM Tamilnadu
Photo
முன்னாள் கேரள முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைeவர் தோழர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் இல்லத்தில் அரசு அமைப்புகள் நடத்திய அரசியல் உள்நோக்கம் கொண்ட சோதனைகளை பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

டெல்லியில் அமலாக்கத் துறை தலைமையகத்திற்கு வெளியே தோழர் பினராயி விஜயனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்கள் பலரை கைது செய்ததையும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

செக் குடியரசு, ஜோர்டான், கென்யா ஆகிய நாடுகளை தொடர்ந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும், வலதுசாரி பிற்போக்கு அரசுகள் மக்கள் சக்திகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் மற்றும் போலீஸ் அடக்குமுறையை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது ஒரு சர்வதேச நிகழ்வாக மாறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்களுடனும், நமது சகோதரக் கட்சியான சிபிஐ(எம்) உடனும் முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. சங்கம் சேரும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் கம்யூனிஸ்ட்களின் அரசியல் அமைப்புரிமை ஆகியவற்றின் மீது இந்திய அரசின் அரசியல் சார்பு கொண்ட அமைப்புகளால் நடத்தப்படும் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதத் தாக்குதல்களை எதிர்க்கும் அதன் போராட்டத்தில் இந்த ஒற்றுமை உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவை விடுவிக்கும் சுதந்திரப் போராட்டத்தைத் துவங்கினர். அதற்காக அவர்கள் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்தனர். இன்று சிபிஐ(எம்) இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து, மோடி அரசின் ஒடுக்குமுறை மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகிறது.

தொழிலாளர் வர்க்கத்திற்கான அரசியல் இடத்தை மீட்டெடுத்து விரிவுபடுத்தும் போராட்டம் நெடியதாகவே இருக்கும். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்களின் பாதை எந்த வித இடைவெளியும் இல்லாமல் தொடர்கிறது. #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi #ModiGovtFails
CPIM Tamilnadu
Photo
ஒன்றிய பாஜக அரசு போக்கை மாற்றாவிட்டால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி கடுமையாக இருக்கும்!

அமலாக்கப் பிரிவின் சோதனையின் முடிவில், ‘எதையும் கைப்பற்றவில்லை’ என்று அமலாக்கத்துறையினர் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளது.

ஏற்கெனவே பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட தங்கம் கடத்தல் வழக்கை, ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அவர் எடுத்துரைத்தார்.

1952-இல் இ.எம்.எஸ். நம்பூதி ரிபாட் தொடங்கி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, மாணிக் சர்க்கார், பினராயி விஜயன் வரை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்துள்ளதை அவர் பட்டியலிட்டார்.

யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத அளவிற்குத் தூய்மையான நிர்வாகத்தை நடத்தியவர்கள் மார்க்சிஸ்டுகள்.

அத்தகைய கட்சியின் தலைவர்களைச் சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்துவது அநாகரிகமானது என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதிகார ஆணவத்தில் மார்க்சிஸ்டுகள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடூரத் தாக்குதலை ஒன்றிய பாஜக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்.

தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi #ModiGovtFails More: https://shorturl.at/c8XU8
👍1
Media is too big
VIEW IN TELEGRAM
அமெரிக்க - ஈரான் போர் தாக்குதலும், இந்தியாவில் எகிறும் எரிபொருள் விலையும்: தவிக்கும் சாமானியர்கள்! #CPIM #StopTheWar #StopImperialism #OilPolitics #IRAN #TRUMP More: https://youtube.com/shorts/54dWCji6-7c
🙏1
ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!

“ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்து பவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.

மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும்.

மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும். இதில் சமரசத்திற்கு இடமில்லை.

மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது. #TNGovt #TVK #StateRights #ConstitutionalRights #TamilNadu

More: https://shorturl.at/dULh0
👍1
மாபெரும் மக்கள் தலைவர் தோழர் கே.ரமணி (16 ஜூலை 1916 - 30 மே 2006) நினைவு தினம் இன்று; தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக தோழர் கே.ரமணி ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறத்தக்கது, வழிகாட்டக் கூடியது. #Comrade #KRamani #CommuistLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று... #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல் - #CPIM அரசியல் தலைமைக்குழு! #SIR More: https://shorturl.at/rtkiv
CPIM Tamilnadu
Photo
ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைக்குச் சோதனையா?

தேர்தல் ஆணையம் மேற்கு வங்கம், தமிழ்நாடு, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்திய ‘சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த முறை’ மற்றும் அதன் விளைவாக நாடு முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பெரும் விவாதங்களையும் கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர் பட்டியலைத் திருத்தவும், குடியுரிமை குறித்து முதற்கட்ட ஆய்வு நடத்தவும் அதிகாரம் உண்டு என சட்டப் பூர்வமாக உறுதிப்படுத்தியிருந்தாலும், எளிய மக்களின் வாக்குரிமையைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

தேர்தல் ஆணையத்திற்குச் சட்டப்படி அதிகாரம் இருந்தாலும், அவர்கள் முடிவெடுக்கும் வேகமும், தேர்தலை நடத்தும் விதமும் ஜனநாயகத்தின் அடிப்படைக்கே ஆபத்தாக அமைந்து விடக்கூடாது.

வாக்குரிமை குடிமக்களின் வாழ்வுரிமை மற்றும் அரசியல் முகவரி என்பதை நீதிமன்றமும் அரசும் உணர்ந்து, விடுபட்ட எளிய மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். நியாயமான முறையில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் நடைபெற வேண்டுமே தவிர விருப்பு வெறுப்பு அடிப்படையிலோ அரசியல் அடிப்படையிலோ அல்ல. #CPIM #SIR #ECI #StopSIR #SupremeCourt

தீக்கதிர் தலையங்கம் More: https://shorturl.at/KoNef
அமலாக்கத்துறைக்கு ஆள் எடுப்பது என்பது பாஜக ஆட்சிக்கு அடியாள் வேலை செய்ய அல்ல!

காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யும் நல்ல எண்ணம் என்பதை நாங்கள் உணர வேண்டும் என்றால், ஒன்றிய பாஜக அரசு காலியாக உள்ள பல லட்சம் பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும், அதை செய்ய முன்வராதது ஏன்? இது நோக்கபூர்வமானது இல்லையா? #CPIM #ED #WhereAreTheJobs #FillGovtVacancies #BJPExposed
1
மே 30 – #CITU அமைப்பு தினம்: #CITU தனது வர்க்கக் கடமையை சமரசமின்றி நிறைவேற்றும்! - தோழர் அ.சவுந்தரராசன், அகில இந்திய துணைத்தலைவர் #CITU #WorkersUnity #WorkingClass #LabourMovement #TradeUnion #WorkersRights More: https://youtu.be/eCRCjtzncT8
இந்தியாவில் மதவெறிக் கொள்கைகள் மிக வேகமாக மக்களிடையே பரப்பப்படும் மோசமான சூழலில், குழந்தை களைக் குறிவைத்து மதவெறியூட்டும் விஷமப் பிரச்சாரங்களில் ஆர்எஸ்எஸ் - இந்துத்துவா அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. மேலும் பாடத் திட்டங்களில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றைத் திரித்து, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் வரலாறுகளை சேர்க்கிற செயலில் ஒன்றிய அரசு இறங்கியுள்ளது. பிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக குரலை உயர்த்துவோம். #InternationalChildrensDay #internationalchildrensday2026 #ChildrensDay
CPIM Tamilnadu
Photo
கல்வித் துறையைச் சீரழிக்கும் மோடி அரசு!

ஒன்றிய பாஜக அரசு தனது கார்ப்பரேட் சார்புக் கொள்கைகளால் நாட்டின் கல்வித் துறையை முற்றிலுமாகச் சிதைத்து வருகிறது என்பதற்குச் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள இமாலயக் குளறுபடிகளே சாட்சியமாகும்.

முறையான முன் திட்டமிடல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றி, அவசர கதியாகப் புகுத்தப்பட்ட ‘திரைவழி விடைத்தாள் திருத்தும் முறை’ (On-Screen Marking - OSM) முற்றிலும் தோல்வியடைந்து, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அரசு, தனது “கூட்டுக் களவு” கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பலன் சேர்க்கும் நோக்கில், ‘COEMPT Eduteck’ என்ற தனியார் நிறுவனத்திற்கு விடைத் தாள் திருத்தும் மென்பொருள் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது. இந்தத் தனியார் நிறுவனம், கடந்த காலங்களில் தெலுங்கானாவில் இருமுறை இத்தகைய தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்ட ‘குளோபரினா’ (Globarena) நிறுவனத்தின் மறுபெயரே ஆகும்.

நாட்டின் உயர்கல்வியையும் லட்சக்கணக்கான ஏழை எளிய மாணவர்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் ஒரு பொதுத் தேர்வை, கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டைக்காகவும் ஊழலுக்காகவும் பகடைக்காயாகப் பயன்படுத்திய மோடி அரசு, மாணவர்களின் மன உளைச்சலுக்கும் தரவுப் பாதுகாப்பு மீறல்களுக்கும் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். #EducationCrisis #ModiGovernment #SaveEducation #CBSE #StudentsRights #StopPrivatization

தீக்கதிர் தலையங்கம் More: https://shorturl.at/HdrJ5
மே 30 மற்றும் 31 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவு முழுவதும், மேற்கு வங்காளத்தில் உள்ள பாஜக அரசு, ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற போர்வையில் டம் டம் மற்றும் உத்தர்ப்பாரா ரயில் நிலையங்களில் புல்டோசர் மூலம் இடிப்பு இயக்கத்தை நடத்தியது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளும், பல சிறிய ஸ்டால்களும் இடித்து தள்ளப்பட்டன. இது ஏராளமான உழைக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்ததுடன், நூற்றுக்கணக்கான மக்களைப் பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளது.

மக்களுக்கு ஆதரவாக, #CPIM தோழர்களும், #CITU தொழிலாளர்களும் இரவு முழுவதும் இரு ரயில் நிலையங்களிலும் தங்கி நின்றனர். அவர்களின் உறுதியான எதிர்ப்பு, ஆரம்பத்தில் அதிகாரிகளை இடிப்பு நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்த கட்டாயப்படுத்தியது. இருப்பினும், பின்னர் நிர்வாகம் பலத்த போலீஸ் படையுடன் வந்து, போராட்டத்தை ஒடுக்கிவிட்டு இடிப்புப் பணியைத் தொடர்ந்தது.

பாஜக அரசின் இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைக்கு எதிராக சிபிஐ(எம்) மற்றும் சிஐடியு அமைப்புகள் ஞாயிற்றுக்கிழமை அன்று கண்டனக் கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தின.
1