CPIM Tamilnadu
867 subscribers
16.4K photos
765 videos
321 files
5.9K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
CPIM Tamilnadu
Photo
"நீண்ட காலமாகவே ED எனது வீட்டில் சோதனை நடத்த விரும்பியது. இந்த சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்கு பெரும் திருப்தியைத் தரும் என்று நினைக்கிறேன். பினராயி விஜயனின் வீடு ஏன் சோதனையிடப்படவில்லை, ஏன் கைது செய்யப்படவில்லை என ராகுல் காந்தி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

பாஜக அரசு எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு எதிராக நாடு முழுவதும் வலுவான போராட்டங்கள் எழுந்துள்ளன.

தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிராக ED-வின் ஊடுருவலும் நடவடிக்கைகளும் தொடர வேண்டும் என்பதே காங்கிரசின் நிலைப்பாடாக உள்ளது.

இவை எதுவும் எங்களை பயப்படுத்தப் போவதில்லை. இதை நாங்கள் ஒரு தொடக்கமாக மட்டுமே பார்க்கிறோம். இத்தகைய நடவடிக்கைகள் எங்களை அழித்துவிடும் என்று யாரும் நினைக்கக் கூடாது.

உள்ளூர் மக்களின் மற்றும் கட்சித் தோழர்களின் உணர்வுகள் இங்கு வெளிப்பட்டுள்ளது. எதிரிகள் என்னைத் தாக்கத் தயாராகும் போதெல்லாம், கட்சியின் வலுவான ஆதரவை நான் பெற்றேன்.

இன்று தோழர்கள் நிரூபித்திருப்பது என்னவென்றால், அந்த ஆதரவில் எந்தக் குறைவும் இல்லை என்பதுதான். இதுதான் எங்கள் வலிமை. அனைத்து சோதனைகளையும் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்." - தோழர் பினராயி விஜயன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் #LDF #Kerala #ED #Modi #AmitShah #PinarayiVijayan #EDRaid #ModiGovtFails
தோழர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!

டில்லியில் அமலாக்கத்துறையை கண்டித்து போராடிய கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் உட்பட தலைவர்கள் கைது!!

இதனைக் கண்டித்து மாநில முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சிபிஐ(எம்) அறைகூவல்!!! #Kerala #ED #Modi #AmitShah #PinarayiVijayan #EDRaid #ModiGovtFails More: https://shorturl.at/V5DbL
தோழர் பினராயி விஜயன் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்வது வன்மையான கண்டனத்திற்குரியது!

இதனைக் கண்டித்த பொதுச் செயலாளர் எம்.ஏ பேபி, பிருந்தா காரத் உள்ளிட்ட சிபிஐ(எம்) தலைவர்களை கைது செய்திருப்பதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாசிச பாஜகவை எதிர்கொள்ள துணிவோடு கம்யூனிஸ்ட்டுகள் களத்திலே நிற்கிறோம்.நேர்மையாளர்களை சோதிப்பதும் ஊழல் பெருச்சாளிகள் ஒன்றிய பாஜக அமைச்சராகவும், அரசாகவும் தொடர்கிற இந்த கேடுகெட்ட அரசியலை துடைத்தெறிய தோழர்களே ஒன்று கூடுவோம், போராடுவோம்…

செங்கொடி என்பது கொடி அல்ல, செங்குருதி… வீரத்தின் செங்குருதி!
விடமாட்டோம், பாசிசத்தின் பிடறியைப்பிடித்து உலுக்குவோம்!
பாசிச பாஜக ஒழிக!

தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi
பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களால் உயர்கல்வி சீர்கெடும் அபாயம்! தமிழ்நாடு அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க #CPIM வலியுறுத்தல்!! More: https://shorturl.at/QnAx9
கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டப்படுவதை தடுத்திடக் கோரி சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்)லிபரேசன் இடதுசாரி கட்சிகள் சார்பில் 2026 மே 29 அன்று தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்! #Mekedatu #LeftParties More: https://shorturl.at/UOPvD
மேகதாது அணை கட்டுமானத்தை தடுக்கக் கோரிக்கை மே 29-இல் தஞ்சாவூரில் இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

மேகதாது அருகே அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த ஒன்றிய அரசையும், தமிழ்நாடு அரசையும் வலியுறுத்தி, சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்)லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம். #Mekedatu #LeftParties More: https://shorturl.at/UOPvD
பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை வேட்டை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

கேரளத்தில் செங்கொடி தொடர்ந்து பறக்கும். அந்த செங்கொடி பாதுகாக்கப்படும். பினராயி விஜயன் மீது கை வைக்காதே! #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi #ModiGovtFails More: https://shorturl.at/mxokA
CPIM Tamilnadu
Photo
முன்னாள் கேரள முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைeவர் தோழர் பினராயி விஜயனின் திருவனந்தபுரம் இல்லத்தில் அரசு அமைப்புகள் நடத்திய அரசியல் உள்நோக்கம் கொண்ட சோதனைகளை பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

டெல்லியில் அமலாக்கத் துறை தலைமையகத்திற்கு வெளியே தோழர் பினராயி விஜயனுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர்கள் பலரை கைது செய்ததையும் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.

செக் குடியரசு, ஜோர்டான், கென்யா ஆகிய நாடுகளை தொடர்ந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும், வலதுசாரி பிற்போக்கு அரசுகள் மக்கள் சக்திகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் மற்றும் போலீஸ் அடக்குமுறையை ஆயுதங்களாகப் பயன்படுத்துவது ஒரு சர்வதேச நிகழ்வாக மாறியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்களுடனும், நமது சகோதரக் கட்சியான சிபிஐ(எம்) உடனும் முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்துக் கொள்கிறது. சங்கம் சேரும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் கம்யூனிஸ்ட்களின் அரசியல் அமைப்புரிமை ஆகியவற்றின் மீது இந்திய அரசின் அரசியல் சார்பு கொண்ட அமைப்புகளால் நடத்தப்படும் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோதத் தாக்குதல்களை எதிர்க்கும் அதன் போராட்டத்தில் இந்த ஒற்றுமை உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியாவை விடுவிக்கும் சுதந்திரப் போராட்டத்தைத் துவங்கினர். அதற்காக அவர்கள் கடுமையான ஒடுக்குமுறையைச் சந்தித்தனர். இன்று சிபிஐ(எம்) இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுடன் இணைந்து, மோடி அரசின் ஒடுக்குமுறை மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடுகிறது.

தொழிலாளர் வர்க்கத்திற்கான அரசியல் இடத்தை மீட்டெடுத்து விரிவுபடுத்தும் போராட்டம் நெடியதாகவே இருக்கும். ஆனால் இந்திய கம்யூனிஸ்ட்களின் பாதை எந்த வித இடைவெளியும் இல்லாமல் தொடர்கிறது. #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi #ModiGovtFails
CPIM Tamilnadu
Photo
ஒன்றிய பாஜக அரசு போக்கை மாற்றாவிட்டால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி கடுமையாக இருக்கும்!

அமலாக்கப் பிரிவின் சோதனையின் முடிவில், ‘எதையும் கைப்பற்றவில்லை’ என்று அமலாக்கத்துறையினர் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளது.

ஏற்கெனவே பினராயி விஜயன் மீது சுமத்தப்பட்ட தங்கம் கடத்தல் வழக்கை, ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததையும் அவர் எடுத்துரைத்தார்.

1952-இல் இ.எம்.எஸ். நம்பூதி ரிபாட் தொடங்கி, ஜோதிபாசு, புத்ததேவ் பட்டாச்சார்யா, மாணிக் சர்க்கார், பினராயி விஜயன் வரை மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பல மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இருந்துள்ளதை அவர் பட்டியலிட்டார்.

யாரும் விரல் நீட்டி குற்றம் சொல்ல முடியாத அளவிற்குத் தூய்மையான நிர்வாகத்தை நடத்தியவர்கள் மார்க்சிஸ்டுகள்.

அத்தகைய கட்சியின் தலைவர்களைச் சோதனை என்ற பெயரில் இழிவுபடுத்துவது அநாகரிகமானது என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.

அதிகார ஆணவத்தில் மார்க்சிஸ்டுகள் மீது நடத்தப்படும் இத்தகைய கொடூரத் தாக்குதலை ஒன்றிய பாஜக அரசு இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையென்றால் மார்க்சிஸ்டுகளின் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும்.

தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #PinarayiVijayan #EDRaid #BJP #Modi #ModiGovtFails More: https://shorturl.at/c8XU8
👍1
Media is too big
VIEW IN TELEGRAM
அமெரிக்க - ஈரான் போர் தாக்குதலும், இந்தியாவில் எகிறும் எரிபொருள் விலையும்: தவிக்கும் சாமானியர்கள்! #CPIM #StopTheWar #StopImperialism #OilPolitics #IRAN #TRUMP More: https://youtube.com/shorts/54dWCji6-7c
🙏1
ஊசலாட்டமின்றி மாநில உரிமையை நிலைநாட்டுக!

“ஒரு அரசியல் சாசனம் எவ்வளவு நன்மை வாய்ந்ததாக இருந்தாலும் அதை செயல்படுத்து பவர்கள் நல்லவர்களாக இல்லாவிட்டால் அது மோசமானதாகவே இருக்கும்” என்பது சட்ட மேதை அம்பேத்கரின் மணி வாசகங்களில் ஒன்று.

மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் உச்சநீதிமன்றம் வரை சென்று பெறப்பட்டுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழகத்தில் அமைந்துள்ள தவெக அரசு முன்வர வேண்டும்.

மாநிலங்களில் அரசு மாறலாம், ஆனால் மாநில உரிமைகள் என்பதும், கூட்டாட்சி என்பதும் அரசியல் சட்டத்தின் அடிப்படை மாண்புகளாகும். இதில் சமரசத்திற்கு இடமில்லை.

மாநில உரிமைகளை நிலைநாட்டுவதில் தவெக அரசுக்கு ஊசலாட்டம் கூடாது. #TNGovt #TVK #StateRights #ConstitutionalRights #TamilNadu

More: https://shorturl.at/dULh0
👍1
மாபெரும் மக்கள் தலைவர் தோழர் கே.ரமணி (16 ஜூலை 1916 - 30 மே 2006) நினைவு தினம் இன்று; தமிழக அரசியல், தொழிற்சங்க வரலாற்றில் மக்கள் பிரதிநிதியாக, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராக, இதற்கெல்லாம் மேலாக மாபெரும் மக்கள் தலைவராக தோழர் கே.ரமணி ஆற்றிய பணி என்றென்றும் நினைவு கூறத்தக்கது, வழிகாட்டக் கூடியது. #Comrade #KRamani #CommuistLeader
பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக, சாதியக் கொடுமைகளுக்கு எதிராக, தொழிலாளர்களின் நலன்களுக்காக எண்ணற்ற பணிகளைச் செய்த தோழர் மைதிலி சிவராமன் அவர்களின் நினைவு தினம் (14.12.1939 - 30.05.2021) இன்று... #Comrade #ComradeMythili #MythiliSivaraman #WomenFreedom #WomenLiberation #ClassStruggle
தேர்தல் ஆணையம் மேற்கொண்ட, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை சரிதான் என்று உச்சநீதிமன்றம் உயர்த்திப் பிடித்திருப்பது ஜனநாயகத்தின் மீதான கடும் தாக்குதல் - #CPIM அரசியல் தலைமைக்குழு! #SIR More: https://shorturl.at/rtkiv