CPIM Tamilnadu
874 subscribers
16.3K photos
752 videos
321 files
5.84K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
இந்துத்துவா சக்திகளை வலுவாக எதிர்த்து நிற்போம்! 5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து #CPIM அரசியல் தலைமைக்குழு அறிக்கை More: https://shorturl.at/KOTKn
Media is too big
VIEW IN TELEGRAM
"பதவியும் அதிகாரமும் நிரந்தரமல்ல என்பதை உணர்ந்து, சாதாரண மனிதனாக வாழ்வதே ஒரு சிறந்த தலைவனுக்கு அழகு". #Comrade #PinarayiVijayan More : https://youtube.com/shorts/TYpS3FXbyQ8
மதவெறி சக்திகளை வலுவாக எதிர்ப்போம்!

மாநிலத்தில் இந்துத்துவா மதவெறி சக்திகளின் வளர்ச்சியை எதிர்த்து நிற்பதில் கட்சி எப்போதும் போல முன்னணியில் நிற்கும். மேலும் சமூகத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பைப் பாதுகாக்கும்.

மக்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து கையில் எடுப்பதோடு, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான எத்தகைய தாக்குதல்களையும் கட்சி உறுதியாக எதிர்த்து நிற்கும். - சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு அறிக்கை #CPIM #DefendSecularism #SecularIndia #StopHindutvaPolitics #LeftPolitics More: https://shorturl.at/KOTKn
பிரதமர் மக்களுக்கு ஏழு கோரிக்கைகளை வைத்துள்ளார்.

அதில் குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் மோடி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

- தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #MODI #ForeignTrips #EconomicCrisis #TravelBan
1
வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிலையம், பேருந்து நிலையங்களின் அருகாமையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பிற்கு #CPIM வரவேற்பு! More: https://shorturl.at/yf4ak
CPIM Tamilnadu
Photo
அன்று பாசிசத்தை வீழ்த்திய செங்கொடி, இன்று நவபாசிசத்தையும் வீழ்த்தும்!

1945-இல் வீழ்த்தப்பட்ட பாசிசம் இன்று ‘நவபாசிசமாக’ உலகின் பல பகுதிகளில் தலை யெடுத்து வருகிறது. அதில் ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் “இந்துத்துவா” என்பது இந்திய வடிவத்திலான பாசிசம் ஆகும்.

பழைய பாசிசத்துடன் இந்துத்துவா சக்திகள் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். இந்துத்துவாவின் பிதாமகர்களில் ஒருவரான பி.எஸ். மூஞ்சே நேரடியாக முசோலினியைச் சந்தித்துப் பேசினார். ஹிட்லர் சிறுபான்மை யூதர்களை இனப்படுகொலை செய்த நடைமுறை களை இந்தியாவில் கையாள வேண்டும் என அன்றே கோல்வால்கர், சாவர்க்கர் ஆகியோர் பாராட்டியதுடன் வாதிடவும் செய்தனர்.
இன்று இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்க எத்தனிக்கும் ஒரு ஆக்டோபஸாக இந்துத்துவா முன்வந்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பெரும்பான்மை மக்களை அணி திரட்ட முயலும் அதேவேளையில், இந்து மதத்திற்குள் இருக்கும் வர்ணாசிரமத்தையோ அல்லது மனுவாத கருத்தியலையோ அது நிராகரிப்பதில்லை. தமிழ் போன்ற மொழிகளின் தனித்தன்மையைச் சிதைத்து, அனைத்தையும் ஒரே குடையின் கீழ் அடைக்க முயற்சிகள் ஏவப்படுகின்றன. அனைத்துவிதமான பன்முகத்தன்மைகளையும் காலில் போட்டு மிதிக்க நவீன பாசிச சக்திகள் முயல்கின்றன.
இந்தியாவில் இந்துத்துவாவையும் ஏனைய மதவாதங்களையும் எதிர்த்து எவ்விதச் சமரசமு மின்றி உறுதியாகப் போராடும் குணம் கொண்டது செங்கொடி இயக்கம் மட்டுமே! அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்ட அயராது பாடுபடும் இயக்கம் இது. பழைய பாசிசத்தை வீழ்த்திய பெருமை செங்கொடிக்கே உண்டு; அதுபோல இந்தியாவின் நவீன பாசிசத்தை வீழ்த்தும் கடமையிலும் செங்கொடியே முன்நிற்கும்!

- தோழர் அ. அன்வர் உசேன் #CPIM #RedFlagRises #DefeatFascism #StopNeoFascism #RejectHindutva More: https://shorturl.at/ejCqj
Media is too big
VIEW IN TELEGRAM
உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் தர்க்கத்திற்குப் புறம்பாகவும், சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் புறக்கணிப்பதாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இத்தகைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வேண்டிய அரசாங்கம், தன் தோல்விகளை மறைக்க தேசபக்தி என்ற போர்வையில் மக்களின் நுகர்வின் மீது பழியைப் போடுவது கண்டிக்கத்தக்கது. #CPIM #MODI #ForeignTrips #EconomicCrisis #TravelBan More: https://shorturl.at/hsa9L
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர்.

அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல!

இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல.

தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
"நீட்" தேர்வு ரத்து! கேள்வித் தாள் கசிவு! சி.பி.ஐ விசாரணை!

எத்தனை முறை குழப்பம்? எவ்வளவு முறைகேடு? இருந்தாலும், "நீட்"டிய வாளை உறைக்குள் போட மாட்டோம் என ஏன் இந்த பிடிவாதம்?

மாநில உரிமைகள் மீது, மாணவர் எதிர்காலம் மீது, வீசப்படும் கொடுவாள் - இந்த "நீட்டை" முறிப்போம்!

- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #NEET #BanNEET #NEETPaperLeak #CBIProbe #StopNEET #TamilNaduAgainstNEET
நீட் தேர்வு ரத்து: மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்தது! நீதித்துறையின் மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிடுக!! #CPIM வலியுறுத்தல்!!! #CPIM #NEET #NEETPaperLeak #StopNEET #TamilNaduAgainstNEET #JusticeForStudents More: https://shorturl.at/N9Qwi
Media is too big
VIEW IN TELEGRAM
மோடியின் கோரிக்கை: சாமானியனுக்கா? கார்ப்பரேட்டுக்கா? #CPIM #MODI #ForeignTrips #GOLD #EconomicCrisis #TravelBan More : https://youtube.com/shorts/0m9W8bxJ0-U
சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு #CPIM ஆதரவு.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மூலமாக பாஜக நுழைவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், மக்கள் நலனுக்குப் பாதகமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டால் சிபிஐ(எம்) அதைத் துணிச்சலோடு எதிர்க்கும். #tvk #cmotamilnadu More: https://youtu.be/bXNd_qcO4HQ
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்திட ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., வலியுறுத்தல்!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் மே 10 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு இயந்திர பழுது ஏற்பட்டு கட்டுப்பாடு இன்றி எல்லைப் பகுதியை தாண்டிச் சென்றுள்ளது. இலங்கை கடற்படை எவ்வித விசாரணையும் இன்றி தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. அவர்களை விடுவிப்பதற்கு ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஒன்றிய வெளியுறவுத் துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் வாயிலாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் வலியுறுத்தியுள்ளார்‌. #ReleaseTamilFishermen #TamilNadu #SaveTamilFishermen
சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு #CPIM ஆதரவு.

தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி மூலமாக பாஜக நுழைவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறோம். அதேநேரம், மக்கள் நலனுக்குப் பாதகமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டால் சிபிஐ(எம்) அதைத் துணிச்சலோடு எதிர்க்கும். - தோழர் ஆர் செல்லசுவாமி, எம்.எல்.எ., சட்டமன்றக்குழு தலைவர் #CPIM #TVK #TamilNadu #CMOTamilnadu