#CPIM பெரம்பலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவருமான தோழர் என்.செல்லத்துரை உடலுக்கு #CPIM மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமுவேல்ராஜ், டி.ரவீந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.ஜெயசீலன், எம்.சின்னதுரை, பி.டில்லி பாபு, சாமி நடராஜன், கே.பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் முகமது அலி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, #CPIM புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர், திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி, அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றினார்கள்.
வணிக சமையல் எரிவாயு விலை உயர்வு
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலை உயர்வு தான் காரணம் - ஒன்றிய அரசு!
ஒன்றிய பாஜக அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், அதன் பலனை மக்களுக்கு வழங்காதது ஏன்?
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்காதது ஏன்?
வணிக சிலிண்டர் விலையை உயர்த்தி சிறு வியாபாரிகளையும், ஏழை, எளிய, நடுத்தர மக்களையும் நசுக்காதே!
மக்களின் பணத்தைச் சூறையாடி கார்ப்பரேட் கஜானாவை நிரப்புவதைக் கைவிடு!
"ஏழை எளிய மக்களின் மீது சுமை ஏற்றி, பெரு முதலாளிகளை வாழ வைக்கும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத போக்கினை முறியடிப்போம்!"
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
சர்வதேச சந்தையில் எல்.பி.ஜி. விலை உயர்வு தான் காரணம் - ஒன்றிய அரசு!
ஒன்றிய பாஜக அரசாங்கம் கடந்த நான்காண்டுகளாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகள் மூன்றில் ஒரு பகுதி குறைந்த போதும் அதன் பலனை சாதாரண மக்களுக்கு வழங்க முன்வரவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், அதன் பலனை மக்களுக்கு வழங்காதது ஏன்?
கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்காதது ஏன்?
வணிக சிலிண்டர் விலையை உயர்த்தி சிறு வியாபாரிகளையும், ஏழை, எளிய, நடுத்தர மக்களையும் நசுக்காதே!
மக்களின் பணத்தைச் சூறையாடி கார்ப்பரேட் கஜானாவை நிரப்புவதைக் கைவிடு!
"ஏழை எளிய மக்களின் மீது சுமை ஏற்றி, பெரு முதலாளிகளை வாழ வைக்கும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத போக்கினை முறியடிப்போம்!"
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ரயில்வேயின் பணியிடக்குறைப்பை கைவிடு!!
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வழங்கிக் கொண்டிருக்கும் ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதோடு மேலும் அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது.
ஒன்றிய அரசுப் பணிகளில் 10 லட்சம் பணியிடங்களை காலியாக வைத்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இருந்த 13 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் இருக்கும் வேலைகளையும் பறிக்கும் முயற்சி இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் செயலாகும்.
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்கிற முழக்கத்தோடு மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலை வழங்கிக் கொண்டிருக்கும் ரயில்வேயில் அனுமதிக்கப்பட்ட 14 லட்சம் பணியிடங்களில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பாமல் வைத்துள்ளதோடு மேலும் அதை குறைப்பதற்கு திட்டமிடுகிறது.
ஒன்றிய அரசுப் பணிகளில் 10 லட்சம் பணியிடங்களை காலியாக வைத்துள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது இருந்த 13 லட்சம் நிரந்தர பணியிடங்களில் தற்போது 9 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில் இருக்கும் வேலைகளையும் பறிக்கும் முயற்சி இளைஞர்களின் வாழ்வில் மண் அள்ளிப்போடும் செயலாகும்.
மே 7, 2026 அன்று சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் சார்பில் தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!!! #CPIM #May7Protest #VCK #CPI #CPIML #RailwayJobCuts #StopLPGHike
CPIM Tamilnadu
Photo
தஹானுவில் 15,000 பேர் பங்கேற்ற #CPIM - #AIKS பிரம்மாண்ட பேரணி: கோட்டாட்சியரிடம் நிலம் தொடர்பான கோரிக்கைகள் சமர்ப்பிப்பு
2026 மே 5 ஆம் தேதி, கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளன்று, 15,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பேரணி தஹானுவில் உள்ள கோட்டாட்சியர் (Sub Divisional Officer - SDO) அலுவலகத்தை நோக்கிச் சென்று, ஆயிரக்கணக்கான நிலம் தொடர்பான கோரிக்கைகளைச் சமர்ப்பித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) தலைமையின் கீழ், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு மற்றும் தலாசாரி ஆகிய இரண்டு தாலுகாக்களில் இருந்து மட்டுமே இந்த விவசாயிகள் வந்திருந்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்குவர்.
சிஐடியு (CITU), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் ஏஏஆர்எம் (AARM) ஆகிய அமைப்புகளும் இப்பேரணிக்கு தீவிரமாக ஆட்களைத் திரட்டின. இந்த மாபெரும் சிவப்புப் பேரணியால் தஹானு நகரமே சிவப்பாக மாறியது.
மே 6 முதல் 12 ஆம் தேதி வரை, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் இதேபோன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பேரணிகள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான நிலக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.
2026 இல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பால்கர், நாசிக் மற்றும் அகோலே நீண்ட பயணங்களின் (Long Marches) விளைவாக, வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் வரும் நிலங்கள், பழைய நிலச்சுவான்தார்களின் நிலங்கள், கோயில் நிலங்கள், வீட்டு மனை நிலங்கள் உள்ளிட்ட நிலம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் புதிதாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இந்த நில உரிமைகள் விவசாயிகளின் பெயர்களில் வழங்கப்படும் என்றும் ஆட்சியர்களும், பின்னர் மாநில அரசும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன்படி, ஆயிரக்கணக்கான புதிய நிலம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, தானே-பால்கர் மாவட்டங்களில் ஏஐகேஎஸ் (AIKS) சார்பில் மாபெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் இன்றைய பேரணியின் மூலம் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெறப்பட்டன. அனைத்துக் கோரிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மறுஆய்வு செய்து, மிக விரைவாக நில உரிமைகளை வழங்குவதற்கு கோட்டாட்சியர் ஒப்புக் கொண்டார்.
தண்ணீர், பாசனம், மின்சாரம், வேலைவாய்ப்பு, கல்வி, ரேஷன், சாலைகள் போன்ற மக்களின் முக்கியமான மற்ற உள்ளூர் பிரச்சினைகளையும் தலைவர்கள் எழுப்பினர். இவற்றின் மீது உறுதியான மற்றும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்வு காண்பதற்கான உத்தரவாதங்களை கோட்டாட்சியர் அளித்தார்.
மகாராஷ்டிராவில் பெசா (PESA) திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் ஒருங்கிணைப்பாளர்களின் எண்ணிக்கையை 3,000-ல் இருந்து 1,000 ஆகக் குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இந்தப் பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
2026 மே 5 ஆம் தேதி, கார்ல் மார்க்ஸின் பிறந்தநாளன்று, 15,000 பேர் கலந்து கொண்ட மாபெரும் கண்டனப் பேரணி தஹானுவில் உள்ள கோட்டாட்சியர் (Sub Divisional Officer - SDO) அலுவலகத்தை நோக்கிச் சென்று, ஆயிரக்கணக்கான நிலம் தொடர்பான கோரிக்கைகளைச் சமர்ப்பித்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) தலைமையின் கீழ், மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு மற்றும் தலாசாரி ஆகிய இரண்டு தாலுகாக்களில் இருந்து மட்டுமே இந்த விவசாயிகள் வந்திருந்தனர். இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளைஞர்கள் அடங்குவர்.
சிஐடியு (CITU), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI), இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் ஏஏஆர்எம் (AARM) ஆகிய அமைப்புகளும் இப்பேரணிக்கு தீவிரமாக ஆட்களைத் திரட்டின. இந்த மாபெரும் சிவப்புப் பேரணியால் தஹானு நகரமே சிவப்பாக மாறியது.
மே 6 முதல் 12 ஆம் தேதி வரை, மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கோட்டாட்சியர் அலுவலகத்திற்கும் இதேபோன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் பேரணிகள் நடத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கான நிலக் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.
2026 இல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பால்கர், நாசிக் மற்றும் அகோலே நீண்ட பயணங்களின் (Long Marches) விளைவாக, வன உரிமைச் சட்டத்தின் (FRA) கீழ் வரும் நிலங்கள், பழைய நிலச்சுவான்தார்களின் நிலங்கள், கோயில் நிலங்கள், வீட்டு மனை நிலங்கள் உள்ளிட்ட நிலம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் புதிதாக மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், இந்த நில உரிமைகள் விவசாயிகளின் பெயர்களில் வழங்கப்படும் என்றும் ஆட்சியர்களும், பின்னர் மாநில அரசும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதன்படி, ஆயிரக்கணக்கான புதிய நிலம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி, தானே-பால்கர் மாவட்டங்களில் ஏஐகேஎஸ் (AIKS) சார்பில் மாபெரும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அவை அனைத்தும் இன்றைய பேரணியின் மூலம் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெறப்பட்டன. அனைத்துக் கோரிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் மறுஆய்வு செய்து, மிக விரைவாக நில உரிமைகளை வழங்குவதற்கு கோட்டாட்சியர் ஒப்புக் கொண்டார்.
தண்ணீர், பாசனம், மின்சாரம், வேலைவாய்ப்பு, கல்வி, ரேஷன், சாலைகள் போன்ற மக்களின் முக்கியமான மற்ற உள்ளூர் பிரச்சினைகளையும் தலைவர்கள் எழுப்பினர். இவற்றின் மீது உறுதியான மற்றும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தீர்வு காண்பதற்கான உத்தரவாதங்களை கோட்டாட்சியர் அளித்தார்.
மகாராஷ்டிராவில் பெசா (PESA) திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் ஒருங்கிணைப்பாளர்களின் எண்ணிக்கையை 3,000-ல் இருந்து 1,000 ஆகக் குறைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு இந்தப் பேரணியில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து, ஈரோடு ஜவான் பவன் முன்பு இடதுசாரி கட்சிகள் மற்றும் விசிக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமை தாங்கினார். இதில் #CPIM மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், #CPI மாநிலக்குழு உறுப்பினர் ப.ம.பாலமுருகன், #CPI(ML)L மாநிலக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தராஜ் விசிக ஈரோடு மண்டல செயலாளர் ஏ.ஜாபர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக கிழக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமை தாங்கினார். இதில் #CPIM மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன், #CPI மாநிலக்குழு உறுப்பினர் ப.ம.பாலமுருகன், #CPI(ML)L மாநிலக்குழு உறுப்பினர் ஏ.கோவிந்தராஜ் விசிக ஈரோடு மண்டல செயலாளர் ஏ.ஜாபர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து தஞ்சை, தலைமை தபால் நிலையம் முன்பு #CPIM மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், #CPI மாவட்டச் செயலாளர் கோ.சக்திவேல், விசிக மாநகர் மாவட்டச் செயலாளர் இடிமுரசு இலக்குவணன், #CPI(ML)L மாவட்டச் செயலாளர் கே.மாசிலாமணி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.