2026 ஏப்ரல் 23 அன்று தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அண்ணாச்சி அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் கே.பாலபாரதி அவர்கள் ஆத்தூர் மற்றும் குரும்பூரில் தேர்தல் பரப்புரை செய்தார்.
தமிழகத்திலே மோடியின் ஏஜெண்டாகச் செயல்படும் கவர்னர், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகத் தொடர்ந்து முட்டுக்கட்ட போட்டு வருகிறார்.
இதற்கு எதிராகத் தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராட வேண்டிய சூழல் உள்ளது.
மாநில உரிமைகளைக் காக்கத் துணிவில்லாத அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
- தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர், #CPIM #StateRights #Federalism #KeralaStandsStrong #VoiceOfTamilNadu #TNElection2026
இதற்கு எதிராகத் தமிழக முதலமைச்சரும், கேரள முதலமைச்சரும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராட வேண்டிய சூழல் உள்ளது.
மாநில உரிமைகளைக் காக்கத் துணிவில்லாத அதிமுகவுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
- தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர், #CPIM #StateRights #Federalism #KeralaStandsStrong #VoiceOfTamilNadu #TNElection2026
CPIM Tamilnadu
Photo
பாஜகவின் பாசிசப் போக்கு தொடர அனுமதித்தால் இந்தியா சிதறி விடும்!
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகிய மூவரும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே அழிக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாகப் பார்க்க விரும்பவில்லை. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது, தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் வலுவான இருப்பைக் கொண்டிருந்தால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வலுவாக இருக்கும் என்ற அரசியலமைப்பின் கருத்தை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
இவர்களின் இந்த எதேச்சதிகார நவீன பாசிசப் போக்கை இப்படியே தொடர அனுமதித்தால் இந்தியா சிதறிவிடும்: அது மிகப்பெரிய ஆபத்து.
இந்தியாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கத் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் வெற்றி மிகவும் முக்கியமானது.
- தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், #CPIM #NarendraModi #AmitShah #MohanBhagwat #RSS #TNElection2026
இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுக்கிறது. ஆனால், நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆகிய மூவரும் இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே அழிக்க விரும்புகிறார்கள்.
அவர்கள் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியமாகப் பார்க்க விரும்பவில்லை. மாநிலங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது, தங்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அனைத்து மாநிலங்களும் வலுவான இருப்பைக் கொண்டிருந்தால் தான் ஒட்டுமொத்த இந்தியாவும் வலுவாக இருக்கும் என்ற அரசியலமைப்பின் கருத்தை அவர்கள் கருத்தில் கொள்வதில்லை.
இவர்களின் இந்த எதேச்சதிகார நவீன பாசிசப் போக்கை இப்படியே தொடர அனுமதித்தால் இந்தியா சிதறிவிடும்: அது மிகப்பெரிய ஆபத்து.
இந்தியாவை ஒருங்கிணைத்து வைத்திருக்கத் தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணியின் வெற்றி மிகவும் முக்கியமானது.
- தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர், #CPIM #NarendraModi #AmitShah #MohanBhagwat #RSS #TNElection2026
CPIM Tamilnadu
Photo
அதிமுக-பாஜக கூட்டணிக்கு போடும் ஓட்டு நமக்கே நாம் வைத்துக் கொள்ளும் வேட்டு!
அதிமுக, பாஜகவை தன் தோள் மீது சுமந்து தமிழகத்தில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தோளில் அமர்ந்திருக்கும் பாஜக வெகு சீக்கிரத்தில் அதிமுகவின் எடப்பாடியின் காதை கடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிக மோசமான ஒரு கட்சியை சுமந்து கொண்டு வருவது அதிமுகவினுடைய சரிவின் அடையாளம்.
வெறுப்பு அரசியல், மத வெறி அரசியல், சிறுபான்மைக்கு எதிரான அரசியல், நல்ல திட்டங்களுக்கு எதிரான அரசியல், கோவில் மனையில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கொடுக்க வேண்டும், கிரயம் செய்து கொடுக்க வேண்டும் அல்லது வாடகையை குறைக்க வேண்டும் என கேட்கிறார்கள். திமுக அரசும் அதை பரிசீலித்து வருகிறது. ஆனால் குடியிருக்கும் அந்த மக்களை அப்புறப்படுத்தி, அந்த நிலத்தை எல்லாம் மீண்டும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வழக்கு போடும் கட்சியாக பாஜக இருக்கிறது என்பதை இந்த பகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் சட்டம், விவசாயிகள் சட்டம், விதைகள் சட்டம் என்று அத்தனை சட்டங்களும் மக்களுக்கு எதிரானவை, ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிரானவை. இவை கடுமையான விளைவு களை உண்டாக்கும். இந்த சட்டங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, ராஜ்யசபாவில் அது வெற்றி பெறாது என்ற நிலை இருந்தது. அதிமுக கை தூக்கித்தான் இந்த
எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், மோசமான சட்டங்களும் அமலுக்கு வந்தது.
எனவே அதிமுக வீழ்த்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கி வரும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும். அவர்களோடு இணைந்திருக்கும் அனைத்து கட்சிகளும் வீழ்த்தப்பட வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை வீழ்த்தப்பட வேண்டும்.
தோழர் அ.சவுந்தராரசன், மூத்த தலைவர், #CPIM #ADMK #BJP #ADMK_BJPAlliance #TNElection2026
அதிமுக, பாஜகவை தன் தோள் மீது சுமந்து தமிழகத்தில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தோளில் அமர்ந்திருக்கும் பாஜக வெகு சீக்கிரத்தில் அதிமுகவின் எடப்பாடியின் காதை கடிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிக மோசமான ஒரு கட்சியை சுமந்து கொண்டு வருவது அதிமுகவினுடைய சரிவின் அடையாளம்.
வெறுப்பு அரசியல், மத வெறி அரசியல், சிறுபான்மைக்கு எதிரான அரசியல், நல்ல திட்டங்களுக்கு எதிரான அரசியல், கோவில் மனையில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கொடுக்க வேண்டும், கிரயம் செய்து கொடுக்க வேண்டும் அல்லது வாடகையை குறைக்க வேண்டும் என கேட்கிறார்கள். திமுக அரசும் அதை பரிசீலித்து வருகிறது. ஆனால் குடியிருக்கும் அந்த மக்களை அப்புறப்படுத்தி, அந்த நிலத்தை எல்லாம் மீண்டும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று வழக்கு போடும் கட்சியாக பாஜக இருக்கிறது என்பதை இந்த பகுதி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பாஜக கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் சட்டம், விவசாயிகள் சட்டம், விதைகள் சட்டம் என்று அத்தனை சட்டங்களும் மக்களுக்கு எதிரானவை, ஒவ்வொரு பிரிவினருக்கும் எதிரானவை. இவை கடுமையான விளைவு களை உண்டாக்கும். இந்த சட்டங்கள் எல்லாம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது, ராஜ்யசபாவில் அது வெற்றி பெறாது என்ற நிலை இருந்தது. அதிமுக கை தூக்கித்தான் இந்த
எல்லா அடக்குமுறைச் சட்டங்களும், மோசமான சட்டங்களும் அமலுக்கு வந்தது.
எனவே அதிமுக வீழ்த்தப்பட வேண்டும். அவர்கள் தூக்கி வரும் பாஜக வீழ்த்தப்பட வேண்டும். அவர்களோடு இணைந்திருக்கும் அனைத்து கட்சிகளும் வீழ்த்தப்பட வேண்டும். ஒரு முறை அல்ல பல முறை வீழ்த்தப்பட வேண்டும்.
தோழர் அ.சவுந்தராரசன், மூத்த தலைவர், #CPIM #ADMK #BJP #ADMK_BJPAlliance #TNElection2026
Media is too big
VIEW IN TELEGRAM
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் ஆர். செல்லசுவாமி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP More : https://youtube.com/shorts/uQQZHDoXK_I
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், கந்தர்வகோட்டை(தனி) தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் மா.சின்னதுரை அவர்களை ஆதரித்து, #CPIM மூத்த தலைவர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் கறம்பக்குடி பகுதியில் 'சுத்தியல் அரிவாள் நட்சத்திரம்' சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சார்பில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திரு. அ. கடற்கரை ராஜ் அவர்களை ஆதரித்து, #CPIM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அவர்கள் ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சத்திரப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPI சார்பில் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் மகாலிங்கம் அவர்களை ஆதரித்து, #CPIM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அவர்கள் வத்திராயிருப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்.
Media is too big
VIEW IN TELEGRAM
தமிழ்நாட்டிற்கு பாஜக என்ன செய்தது என்கிற கேள்வியை, வாக்கு கேட்டு வரும் பாஜக வேட்பாளர்களிடம் அனைவரும் கேட்க வேண்டும். - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK More: https://youtu.be/2GdnyAFRrPY
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியிருப்பது அப்பட்டமான பொய்.
தமிழர்களின் உணவுப் பழக்கத்தைக் கேலி செய்ததும், ஒடிசா தேர்தலுக்காக ஜெகநாதர் கோவில் சாவியைத் தமிழர்கள் ஒளித்து வைத்திருப்பதாகப் பிரதமர் மோடி பேசியதும் எத்தகைய 'மரியாதை' என்பதை மக்கள் அறிவார்கள்.
தமிழுக்கு மரியாதைதருவதாகச் சொல்லும் பாஜக அரசு, கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 22,000 பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,532 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், உலகளாவிய தொன்மை மொழியான தமிழுக்கு 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஒதுக்கியுள்ளது.
தேர்தல் காலப் பொய்களைச் சொல்லித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதைப் பியூஷ் கோயல் உணர வேண்டும். #CPIM #PiyushGoyal #NarendraModi #RespectTamil #LanguageJustice
தமிழர்களின் உணவுப் பழக்கத்தைக் கேலி செய்ததும், ஒடிசா தேர்தலுக்காக ஜெகநாதர் கோவில் சாவியைத் தமிழர்கள் ஒளித்து வைத்திருப்பதாகப் பிரதமர் மோடி பேசியதும் எத்தகைய 'மரியாதை' என்பதை மக்கள் அறிவார்கள்.
தமிழுக்கு மரியாதைதருவதாகச் சொல்லும் பாஜக அரசு, கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 22,000 பேர் பேசும் சமஸ்கிருதத்திற்கு 2,532 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால், உலகளாவிய தொன்மை மொழியான தமிழுக்கு 100 கோடி ரூபாய்க்கும் குறைவாகவே ஒதுக்கியுள்ளது.
தேர்தல் காலப் பொய்களைச் சொல்லித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதைப் பியூஷ் கோயல் உணர வேண்டும். #CPIM #PiyushGoyal #NarendraModi #RespectTamil #LanguageJustice
Media is too big
VIEW IN TELEGRAM
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கந்தர்வக்கோட்டை(தனி) சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் எம்.சின்னதுரை அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #CPIM #TNElection2026 #TNAssemblyElections2026 #RejectADMK #RejectBJP
அம்பேத்கர் நமக்குச் சொன்ன செய்தி; “எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்”. வர்க்கப் போரை நிகழ்த்தி அம்பேத்கர் கண்ட கனவை நனவாக்க அவரது பிறந்த தினத்தில் சபதமேற்போம்! #Ambedkar #AmbedkarJayanti #AmbedkarJayanti2026 #அமபேத்கர் #ஜெய்பீம் #JaiBhim #EqualityDay
அதிமுக - பாஜகவின் நிழல் கூட்டணி
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடி மோடியின் கண்ணாடி. கடந்த காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் பாஜக கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத மசோதாக்களுக்கும் ஆதரவாகக்கையை உயர்த்தினார்கள்.
சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள் நடந்தபோதும், எப்சிஆர்ஏ (FCRA) சட்டத் திருத்தம் வந்தபோதும் அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
தமிழக உரிமைகளை மோடி அரசு பறித்தபோது, அதிமுக எம்பிக்கள் வாயில் ஃபெவிகால்' போட்டு ஒட்டிக்கொண்டது போல அமைதி காத்தார்கள்.
- தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர், #CPIM #ADMK #BJP #ADMK_BJPAlliance #TNElection2026
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அணிந்திருக்கும் கண்ணாடி மோடியின் கண்ணாடி. கடந்த காலத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்கள் பாஜக கொண்டு வந்த அனைத்து மக்கள் விரோத மசோதாக்களுக்கும் ஆதரவாகக்கையை உயர்த்தினார்கள்.
சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்கள் நடந்தபோதும், எப்சிஆர்ஏ (FCRA) சட்டத் திருத்தம் வந்தபோதும் அவர்கள் மௌனமாக இருந்தார்கள்.
தமிழக உரிமைகளை மோடி அரசு பறித்தபோது, அதிமுக எம்பிக்கள் வாயில் ஃபெவிகால்' போட்டு ஒட்டிக்கொண்டது போல அமைதி காத்தார்கள்.
- தோழர் பிருந்தா காரத், மூத்த தலைவர், #CPIM #ADMK #BJP #ADMK_BJPAlliance #TNElection2026