CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
CPIM Tamilnadu
Photo
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியினர் குடும்பம் CPIM, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வி.தொ.ச தலையிட்டால் மீட்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சியைச் சேர்ந்த பாரிவனம் கிராமம் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரிய தம்பி (52) குடும்பத்தினர் வறுமையின் காரணமாக கடனாக பெற்ற ரூ.5 லட்சத்தில், ரூ.2 லட்சம் திரும்ப செலுத்திய பிறகும், தொடர்ந்து சேலம் - முத்தாம்பட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் தோட்டத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்ட குடும்பத்தினர்.

தொடர்ந்து காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். வேலை செய்ய மறுத்தால் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியதம்பி (52), அவரது மனைவி சின்னப்பாப்பா (45), மகன்கள் முரளி, சின்னையா (20) மற்றும் மருமகள் வள்ளியம்மாள் (21) ஆகிய ஐந்து பேரும், முத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் என்பவரது தோட்டத்தில் கடந்த 8 மாதங்களாகக் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி & வி.தொ.ச தலையீட்டால் வாழப்பாடி காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று (26.03.2026) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன், தீஒமு மாவட்ட தலைவர் எம்.முத்து, செயலாளர் ஏ.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2
CPIM Tamilnadu
Photo
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியினர் குடும்பம் சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வி.தொ.ச தலையிட்டால் மீட்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சியைச் சேர்ந்த பாரிவனம் கிராமம் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரிய தம்பி (52) குடும்பத்தினர் வறுமையின் காரணமாக கடனாக பெற்ற ரூ.5 லட்சத்தில், ரூ.2 லட்சம் திரும்ப செலுத்திய பிறகும், தொடர்ந்து சேலம் - முத்தாம்பட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் தோட்டத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்ட குடும்பத்தினர்.

தொடர்ந்து காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். வேலை செய்ய மறுத்தால் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியதம்பி (52), அவரது மனைவி சின்னப்பாப்பா (45), மகன்கள் முரளி, சின்னையா (20) மற்றும் மருமகள் வள்ளியம்மாள் (21) ஆகிய ஐந்து பேரும், முத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் என்பவரது தோட்டத்தில் கடந்த 8 மாதங்களாகக் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி & வி.தொ.ச தலையீட்டால் வாழப்பாடி காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று (26.03.2026) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன், தீஒமு மாவட்ட தலைவர் எம்.முத்து, செயலாளர் ஏ.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #CPIM #TribalRights #IrularCommunity #HumanRights
"எனது செயல்பாடுகளே விவாதப் பொருளாக வேண்டும், எனது உருவமல்ல"!

"நான் மக்களிடம் துணிச்சலாகச் சென்று, செய்த காரியங்களைச் சொல்லி வாக்கு கேட்கக் கூடியவள். எனது தோற்றத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, எனது செயல்திறனைப் பற்றி விவாதியுங்கள்".

- தோழர் யு.பிரதிபா.எம்.எல்.ஏ கேரளம் காயம்குளம் சட்டமன்றத் தொகுதி LDF வேட்பாளர் #CPIM #uprathibha #ldf #keralassemblyelection #udf #muslimleague #AssemblyElection #keralapolitics
🔥1
Media is too big
VIEW IN TELEGRAM
திருநர் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்: ஜனநாயகப் படுகொலை #CPIM #LGBTQIA #GenderEquality #ProtectTransLives #HumanRights #StandWithTrans More : https://youtube.com/shorts/Xz9jPPy5iWs
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தாலும் "பெட்ரோல் விலை குறையாது"!

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) லிட்டருக்கு ₹10 குறைத்துள்ளது. வரி குறைக்கப்பட்டாலும், சில்லறை விற்பனை விலை குறைய வாய்ப்பில்லை என பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைத் தடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த வரி சலுகை எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை. #CPIM #PetrolPrice #DieselPrice #FuelTax #FuelScam #ModiGovernment
1
பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! #WomensRights #StopAbuse #GenderJustice More: https://url-shortener.me/IN0C
குடும்பப் பராமரிப்பில் நீடிக்கும் பாலினப் பாகுபாடு:
79% ஆண்கள் எந்தப் பணியும் செய்வதில்லை மோடி அரசின் வெற்று அறிக்கையை அம்பலப்படுத்திய ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.!

அரசின் போலிப் பெருமிதம் கடந்த பிப்ரவரி 25, 2025 அன்று பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்தியக் குடும்பங்களில் பாலின வேறுபாடின்றி பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது” என்று ஒன்றிய அரசு உரிமை கோரியிருந்தது.

இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி., கேள்வி எழுப்பினார். #CPIM #modi #GenderInequality #ValueWomensWork #WomensRights #EqualWork
CPIM Tamilnadu
Photo
காஞ்சிபுரம் மாவட்டம், நீர்வல்லூர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுக்க சிஐடியு சங்கத்தை அமைக்க முயற்சி செய்தபோது, நிர்வாகம் அவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அனைத்து நிரந்தரத் தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்தது. தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி தொழிலாளர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களையும், உண்ணாவிரதங்களையும் நடத்திய போதிலும், மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள், "குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று சங்க அலுவலகத்தை நாடினர். இதன் தொடர்ச்சியாக, இன்று (27.03.2026) வேலை வழங்கக் கோரி தொழிலாளர்கள் நிறுவனத்திற்குள் சென்று அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறை, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பப் பெண்கள், குழந்தைகளை அராஜகமான முறையில் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது. இத்தகைய அராஜகமான போக்கை காஞ்சிபுரம் சிஐடியு மாவட்டக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், மாவட்ட ஆட்சி நிர்வாகம் தலையிட்டு பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டுமெனவும் காஞ்சிபுரம் சிஐடியு மாவட்டக் குழு வலியுறுத்துகிறது. #CITU #WorkersRights #LabourRights #SitInProtest
ஈரான் போரை நிறுத்தச் சொல்லி கெஞ்சுகிறது என்று கடந்த சில நாட்களாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கதறி கொண்டு இருக்கிறார்.

கதறலின் உச்சம் வெளி உலகத்திற்கு கெஞ்சலாகவே தெரிகிறது.

ஏகாதிபத்தியமே போரை நிறுத்து உலக நாடுகளின் இயற்கை வளத்தை எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்காதே என்பதே வேண்டுகோள்.

- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopTheWar #StopImperialism #OilPolitics #IRAN #TRUMP
இந்தியாவிலேயே ஊழல் மிகக் குறைந்த மாநிலம் கேரளமாகும்.

இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) ஆட்சியில் இருந்ததால்தான் இந்த நிலையை அது அடைந்தது. இதுதான் இடது ஜனநாயக முன்னணியின் கலாச்சாரம்.

ஊழல் விஷயத்தில் அது சமரசமற்ற அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. கேரளம் குறைந்த ஊழல் கொண்ட மாநிலம் என்ற தகுதியை அல்ல, மாறாக ஊழலற்ற மாநிலம் என்கிற தகுதியையே விரும்புகிறது அதை நோக்கி முன்னேறுவோம்.

- தோழர் பினராயி விஜயன், கேரள முதல்வர் #CPIM #PinarayiVijayan #KeralaModel #LDFGovernment #KeralaDevelopment
"கியூபா தனித்தீவல்ல; உலகளாவிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்!"

கியூபாவுடன் கைகோர்க்கும் ஆப்பிரிக்காவின் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒருமித்த குரல்!

கியூபா இன்று சந்தித்து வரும் கடுமையான நெருக்கடிக்கு எதிராக, ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் உள்ள முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்துள்ளன.

கியூபாவின் சூழலை அதன் "உள்நாட்டுத் தோல்வி" என்று சித்தரிக்கும் ஏகாதிபத்திய ஊடகப் போக்கை ஆப்பிரிக்க அமைப்புகள் வன்மையாக மறுக்கின்றன.

பொருளாதார முற்றுகையை எதிர்கொள்ளும் கியூபா மக்களுக்கு மருந்து மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பி ஆப்பிரிக்க நாடுகள் உதவி வருகின்றன.

#CubaSolidarity #AfricaStandsWithCuba #EndTheBlockade #PanAfricanism #JusticeForCuba
மீண்டும் உருவெடுக்கும் பாசிசம்!

"முதலாளித்துவ அமைப்பின் பல பரிமாண நெருக்கடி, அதனை எப்போதும் அதிக ஆக்ரோஷமானதாகவும், அதிதீவிர பழமைவாதமாகவும் மாற்றுகிறது. அது மிகவும் பகுத்தறிவற்ற மற்றும் பாசிச முறையில் செயல்படுகிறது.

அந்த மனப்போக்கு, சுயநிர்ணய உரிமையைப் பாதுகாப்பவர்களையும், வேறுபட்ட ஒரு மாதிரியை முன்னெடுப்பவர்களையும் மோசமாகப் பார்க்க வைக்கிறது.

மேலும் அவர்கள் பொருளாதார, அரசியல், தூதரக அழுத்தம் மற்றும் ஊடக நச்சுத்தன்மை ஆகியவற்றின் மூலம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்."

தோழர் மிகுவெல் டயஸ்-கானெல், சோசலிச கியூபா அதிபர் #Fascism #Socialism #Cuba #பாசிசம்_எதிர்ப்போம் #LeftVoices #StandAgainstFascism #DefendDemocracy #PeoplePower