CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
"எங்களுக்கு இடங்களின் எண்ணிக்கையை விட சித்தாந்தமே முக்கியம்"!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும், பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க சிபிஐ(எம்) தீவிரமாகப் போராடும்.

#CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலின் தமிழாக்கம் #CPM #PShanmugam #TamilNaduElection #Politics #Secularism #LeftFront
மூன்று சக்திகளிடம் சரணடைந்த மோடி!

நரேந்திர மோடி அரசு மூன்று சக்திகளிடம் பணிந்துள்ளது:

பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப். நரேந்திர மோடி இந்தச் சக்திகளிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்.

- தோழர் அசோக் தாவ்லே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #ModiGovernment #DonaldTrump #Netanyahu #RSS #Hindutva
சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச் சட்டத்தின் அவசியத்தை பல ஆண்டுகளாக வலியுறுத்தி போராடி வருகிறோம். தனிச் சட்டம் அவசியமில்லை என்று தமிழக சட்டமன்றத்தில் பலமுறை மறுக்கப்பட்டுள்ள போதும் சிபிஐ(எம்) தோழமை கட்சிகளின் விடாப்பிடியான வலியுறுத்தலுக்கு பின் கே.என்.பாஷா ஆணையம் அமைக்கப்பட்டு கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

சமூக நீதியின் முன்னோடி மாநிலமாக உள்ள தமிழ்நாட்டில் நிலைமை இப்படியிருக்கும்போது, அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஆணவக் கொலை தடுப்புக்கான சட்டம் நிறைவேறியுள்ள மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

தேர்தல் முடிந்த கையோடு தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைகளை முற்றாகத் தடுக்கும் வகையில் சட்டமியற்றி தீவிரமாக அமலாக்கிட வேண்டும்.

- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு #CPIM #StopHonorKillings #EndCasteViolence #HumanRightsIndia #EqualityForAll #LawAgainstHonorKilling
தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட காலப் போராட்டத்தின் பலனாக, கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் பகுதியில் 292 குடும்பங்களுக்கு தலா 1.5 சென்ட் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (26.03.2026), தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் பி.சுகந்தி, உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் இருகூர் தோழர்கள் அப்பகுதி மக்களை நேரில் சந்தித்தனர்.

பட்டா பெற்ற மக்கள் அளவற்ற மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்ததுடன், அந்தப் பகுதியில் குடிசை அமைக்கும் பணிகளையும் தொடங்கிவிட்டனர். மேலும், புதிய குடியிருப்பு பகுதிக்கு “தோழர் சிவஞானம் நகர்” எனப் பெயரிட வேண்டுமெனவும் அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

மேலும், இந்த பட்டா இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்ததைக் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதி நினைவு நாளாகக் கொண்டாட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. #CPIM #LandRights #PattaRights #MassMovement #Coimbatore #Irugur
1
அதிமுக தேர்தல் அறிக்கை 2026: மக்கள் பிரச்சனைகளை தீர்க்கும் அறிவிப்புகள் இடம்பெறவில்லை!

தேர்தல் நேரத்தில் அனைத்து கட்சிகளும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்குவது வழக்கமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் வழக்கத்துக்கு விரோதமாக நடைமுறை சாத்தியமா என்பதைப் பற்றி கவலைப்படாமல், எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு அபரிமிதமான வாக்குறுதிகளை வழங்குவதை பல கட்சிகள் வழக்கமாக வைத்துள்ளன. பிறகு பலவற்றை நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்படுகிறது.

அதிமுக தேர்தல் அறிக்கையில் வேலை வாய்ப்பை உருவாக்குவது, புதிய தொழில் வளர்ச்சி ஏற்படுத்துவது, அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பது போன்ற வாக்குறுதிகள் இல்லை.

குறிப்பாக பெண் வாக்காளர்களை ஈர்ப்பதற்கான முறையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மக்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முறையில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் எந்த ஒரு வாக்குறுதியும் இல்லை.

- தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #AIADMK #EPS #TamilNaduElections2026 #ElectionManifesto #Elections2026 #NoPromises
கியூபாவின் பொருளாதார மற்றும் மின்சக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டிற்கு மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் சர்வதேசக் கப்பல் படையின் முதல் கப்பல் செவ்வாய்க்கிழமை ஹவானாவை வந்தடைந்தது.

சூரிய சக்தி தகடுகள் (solar panels), மிதிவண்டிகள், உணவு மற்றும் மருந்துகளை ஏற்றி வந்த இந்தக் கப்பலில் சுமார் 30 பேர் இருந்தனர். கியூபாவிற்கு வரவிருக்கும் மூன்று கப்பல்களில் இது முதலாவதாகும்.

தற்போது கியூபா கடுமையான மின்வெட்டு, சிதைந்து வரும் மின் விநியோகக் கட்டமைப்பு மற்றும் அமெரிக்காவின் எரிசக்தி முற்றுகை (U.S. energy blockade) போன்ற சவால்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

"அமெரிக்காவின் கடுமையான எரிசக்தி முற்றுகை மற்றும் பொருளாதாரத் தடைகளால் கியூபா இருளில் மூழ்கியுள்ள நிலையில், சூரிய சக்தி தகடுகள், மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுடன் சர்வதேசத் தோழமை கியூபாவைச் சென்றடைந்துள்ளது. இது வெறும் உதவி அல்ல; ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான ஒற்றுமை!". #SolidarityWithCuba #CubaNotAlone #HumanitarianAid #LetCubaLive #StandWithCuba #EndTheEmbargo #GlobalSolidarity #AntiImperialism More: https://youtube.com/shorts/bDi1fqHVP5I
Media is too big
VIEW IN TELEGRAM
இந்திய வெளியுறவு கொள்கை அமெரிக்காவிற்கு அடிமையாக மாற்றப்பட்டிருக்கிறது! - தோழர் ஐ.ஆறுமுக நயினார், மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #USSubmarineAttacks #IranSailorsDeath #StopUSTerrorism More: https://youtube.com/shorts/QbjVJDLlIzw
போரில் ஈரான் வீழ்ந்தால், இந்தியா உட்பட்ட ஒட்டுமொத்த தெற்குலக நாடுகளும் மீண்டும் காலனித்துவத்திற்கு ஆளாகும் அபாயம் ஏற்படும்!

நேரடி காலனித்துவம் இல்லையென்றாலும், அமெரிக்காவிற்கு அடிபணிந்து நடக்கும் ஆட்சிகள் அங்கு அமையும்.

அமெரிக்கா ஈரானை வீழ்த்திவிட்டால், பல நாடுகளில் இது போன்ற ஆட்சி மாற்ற முயற்சிகளைத் தொடர அதற்கு மேலும் அதிக தைரியம் வரும். அந்த வகையில், இந்தியா உட்பட ஒட்டுமொத்த தெற்குலக நாடுகளின் (Global South) சுதந்திரமும், ஈரானில் நடக்கும் இந்த போரோடு இணைந்துள்ளதாக நான் நம்புகிறேன்.

இதில் இன்னொரு விசயமும் உள்ளது. அமெரிக்கா ஈரானுடன் சமரசம் செய்து கொண்டால், அதனால் டிரம்பிற்கு ஏற்படும் அவமானம் மற்ற நாடுகளிலும் டிரம்புக்கு எதிரான எதிர்ப்பை வலுப்படுத்தும்.

பேரா.பிரபாத் பட்நாயக் மார்க்சிய பொருளாதார வல்லுநர் #CPIM #StopTheWar #HandsOffIran #DonaldTrump #USPolitics #WorldPolitics
1
CPIM Tamilnadu
Photo
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியினர் குடும்பம் CPIM, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வி.தொ.ச தலையிட்டால் மீட்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சியைச் சேர்ந்த பாரிவனம் கிராமம் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரிய தம்பி (52) குடும்பத்தினர் வறுமையின் காரணமாக கடனாக பெற்ற ரூ.5 லட்சத்தில், ரூ.2 லட்சம் திரும்ப செலுத்திய பிறகும், தொடர்ந்து சேலம் - முத்தாம்பட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் தோட்டத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்ட குடும்பத்தினர்.

தொடர்ந்து காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். வேலை செய்ய மறுத்தால் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியதம்பி (52), அவரது மனைவி சின்னப்பாப்பா (45), மகன்கள் முரளி, சின்னையா (20) மற்றும் மருமகள் வள்ளியம்மாள் (21) ஆகிய ஐந்து பேரும், முத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் என்பவரது தோட்டத்தில் கடந்த 8 மாதங்களாகக் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி & வி.தொ.ச தலையீட்டால் வாழப்பாடி காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று (26.03.2026) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன், தீஒமு மாவட்ட தலைவர் எம்.முத்து, செயலாளர் ஏ.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
2
CPIM Tamilnadu
Photo
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட பழங்குடியினர் குடும்பம் சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வி.தொ.ச தலையிட்டால் மீட்பு!

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், வேடகட்டமடுவு ஊராட்சியைச் சேர்ந்த பாரிவனம் கிராமம் இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெரிய தம்பி (52) குடும்பத்தினர் வறுமையின் காரணமாக கடனாக பெற்ற ரூ.5 லட்சத்தில், ரூ.2 லட்சம் திரும்ப செலுத்திய பிறகும், தொடர்ந்து சேலம் - முத்தாம்பட்டி பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த செந்தில் என்பவரின் தோட்டத்தில் கொத்தடிமையாக வைக்கப்பட்ட குடும்பத்தினர்.

தொடர்ந்து காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஓய்வின்றி வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டுள்ளனர். வேலை செய்ய மறுத்தால் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியதம்பி (52), அவரது மனைவி சின்னப்பாப்பா (45), மகன்கள் முரளி, சின்னையா (20) மற்றும் மருமகள் வள்ளியம்மாள் (21) ஆகிய ஐந்து பேரும், முத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள செந்தில் என்பவரது தோட்டத்தில் கடந்த 8 மாதங்களாகக் கடும் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சிபிஐ(எம்), தீண்டாமை ஒழிப்பு முன்னணி & வி.தொ.ச தலையீட்டால் வாழப்பாடி காவல் நிலையத்தில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று (26.03.2026) தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்ட செயலாளர் இரா.சிசுபாலன், தீஒமு மாவட்ட தலைவர் எம்.முத்து, செயலாளர் ஏ.சேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும், அவர்களின் மறுவாழ்வை உறுதி செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். #CPIM #TribalRights #IrularCommunity #HumanRights
"எனது செயல்பாடுகளே விவாதப் பொருளாக வேண்டும், எனது உருவமல்ல"!

"நான் மக்களிடம் துணிச்சலாகச் சென்று, செய்த காரியங்களைச் சொல்லி வாக்கு கேட்கக் கூடியவள். எனது தோற்றத்தைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, எனது செயல்திறனைப் பற்றி விவாதியுங்கள்".

- தோழர் யு.பிரதிபா.எம்.எல்.ஏ கேரளம் காயம்குளம் சட்டமன்றத் தொகுதி LDF வேட்பாளர் #CPIM #uprathibha #ldf #keralassemblyelection #udf #muslimleague #AssemblyElection #keralapolitics
🔥1
Media is too big
VIEW IN TELEGRAM
திருநர் பாதுகாப்புச் சட்டத்திருத்தம்: ஜனநாயகப் படுகொலை #CPIM #LGBTQIA #GenderEquality #ProtectTransLives #HumanRights #StandWithTrans More : https://youtube.com/shorts/Xz9jPPy5iWs
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தாலும் "பெட்ரோல் விலை குறையாது"!

மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை (Excise Duty) லிட்டருக்கு ₹10 குறைத்துள்ளது. வரி குறைக்கப்பட்டாலும், சில்லறை விற்பனை விலை குறைய வாய்ப்பில்லை என பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த வரி குறைப்பு எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தைத் தடுப்பதற்காகவே செய்யப்பட்டுள்ளது. அதாவது, இந்த வரி சலுகை எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பில்லை. #CPIM #PetrolPrice #DieselPrice #FuelTax #FuelScam #ModiGovernment
1
பெண்கள் குறித்து கண்ணியமற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்! #WomensRights #StopAbuse #GenderJustice More: https://url-shortener.me/IN0C