CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கச் சட்டம் இயற்றப் பரிந்துரைகளை வழங்கத் தமிழக அரசு அமைத்துள்ள நீதியரசர் கே.என். பாஷா ஆணையம் முன்பு, #CPIM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கட்சியின் கருத்துக்கள் அடங்கிய மனுவை அளித்துப் பேசினார். #CPIMமாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் உடன் இருந்தனர்.
Media is too big
VIEW IN TELEGRAM
பாஜக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மதச்சார்பின்மை பேச உங்களுக்கு எப்படி முடிகிறது எடப்பாடி அவர்களே? - தோழர் ஆதவன் தீட்சண்யா, மாநில துணைத் தலைவர், தமுஎகச #LeftPolitics #LeftUnity #DefeatBJP #RejectHindutva #DefeatManuvaad More: https://youtube.com/shorts/ppBfoKYFmWo
மத்திய கிழக்கில் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர், அவர்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் மலையாளிகள் ஆவர்.

இந்தப் பகுதி தான் இந்தியாவிற்கு அந்நியச் செலாவணி வருவாய் வருவதற்கான முதன்மை ஆதாரமாகவும் உள்ளது.

தாயகம் திரும்பியவர்களுக்கும், இனி திரும்பக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுபவர்களுக்கும் ஒன்றிய அரசு மறுவாழ்வுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். - தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #IndianDiaspora #GulfWorkers #MiddleEast #Malayali #NRIWelfare
பாஜகவின் மிகப்பெரிய எதிரி இடதுசாரிகள் தான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ அல்லது இடது ஜனநாயக முன்னணியோ எந்தவொரு கட்டத்திலும் பாஜகவுடன் சமரசம் செய்து கொண்டது கிடையாது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய எதிரிகளாக முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் உள்ளனர். எனவே பாஜகவின் மிகப்பெரிய எதிரி இடதுசாரிகள் தான்.

- தோழர் பினராயி விஜயன் கேரள முதல்வர் #CPIM #PinarayiVijayan #CPIM #Left #LDF #KeralaModel #Marxism #Socialism #RedFlag #LeftAlternative #LeftForPeople #LeftMovement #RejectBJP #RejectRSS
இந்தியாவில் செங்கொடி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக மோடியும், அமித் ஷாவும் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

மோடி, அமித் ஷா மற்றும் மோகன் பகவத் ஆகியோர் நேரில் வந்து, இன்று ராம்லீலா மைதானத்தில் திரண்டுள்ள செங்கொடிப் பெருங்கடலைப் பார்வையிடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். தோழர் எம்.ஏ.பேபி, பொதுச் செயலாளர் #CPIM #CPIM #JanAakrosh #JanAakroshRally #WorkersRights #CPIMRally #CPIMJanAakrosh2026
விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் ஒன்றிய அரசின் பரிசீலனையில் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் கூறியுள்ளார்.

பாஜக அரசைப் பொறுத்தவரை நேற்றொரு பேச்சு, இன்றொரு பேச்சு என்பதே இல்லை. அவர்களது வாய், விவசாயிகளை அன்னதாதா என்று புகழ்ந்துரைக்கும். ஆனால் அவர்களது உள்ளமோ விவசாயிகளுக்கு விரோதமாகவே சிந்திக்கும்.

மோடி தலைமையில் ஆட்சி அமைந்ததிலிருந்து விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களையும் மின்சாரத் திருத்த மசோதாவையும் கொண்டு வந்தது.

அதை எதிர்த்து ஏர்முனை பலராமர்கள் ஓராண்டுக்கு மேலாக நடத்திய முற்றுகைப் போர் முனை அழுத்தத்தால் அந்தச் சட்டங்களை முற்றாகக் கைவிடுவதாகக் கூறி மன்னிப்பும் கேட்டார் மோடி.

பயிர் வளர்க்கும் விவசாயிகள், உலக மக்களின் உயிர் வளர்க்கும் அன்னதாதாக்கள், விளை பொருள்களுக்கு கட்டுபடியான விலை இல்லாததாலும் இடுபொருள்களின் விலை உயர்வாலும் கடன் தொல்லையாலும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை இன்னும் தொடரவே செய்கிறது. ஆனாலும் பாஜக ஆட்சியாளர்களின் உள்ளம்தான் இரங்கவில்லை.

More: https://shorturl.at/aaG2o
"எங்களுக்கு இடங்களின் எண்ணிக்கையை விட சித்தாந்தமே முக்கியம்"!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும், பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க சிபிஐ(எம்) தீவிரமாகப் போராடும்.

#CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலின் தமிழாக்கம் #CPM #PShanmugam #TamilNaduElection #Politics #Secularism #LeftFront
"எங்களுக்கு இடங்களின் எண்ணிக்கையை விட சித்தாந்தமே முக்கியம்"!

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் குறைந்த இடங்களில் போட்டியிட்டாலும், பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க சிபிஐ(எம்) தீவிரமாகப் போராடும்.

#CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் அவர்களின் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்காணலின் தமிழாக்கம் #CPM #PShanmugam #TamilNaduElection #Politics #Secularism #LeftFront
மூன்று சக்திகளிடம் சரணடைந்த மோடி!

நரேந்திர மோடி அரசு மூன்று சக்திகளிடம் பணிந்துள்ளது:

பெரும் முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்கள், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து மகாசபை, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப். நரேந்திர மோடி இந்தச் சக்திகளிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டார்.

- தோழர் அசோக் தாவ்லே அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #ModiGovernment #DonaldTrump #Netanyahu #RSS #Hindutva