CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
சிவப்புத் துண்டின் தோளில் போடுவதற்கு பின்னால் ஒரு போராட்ட வரலாறே இருக்கிறது! - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #GenZwithps #PShanmugam #lockupdeath #Communism #TamilNaduPolitics More : https://youtu.be/NUjjm_so_M0
Media is too big
VIEW IN TELEGRAM
பாஜகவை எதிர்த்துப் பேசமாட்டேன் என்பது விஜயின் கொள்கையா? - பேரா. அருணன் #CPIM #TVK #vijay #modi #bjp More : https://youtube.com/shorts/hLkS7DUTQIk
வியாபாரம் படு ஜோர்! அதற்குத்தானே போர்!

போரினால் பாதிக்கப்பட்டுள்ள வளைகுடா நாடுகளுக்கு 1600 கோடி டாலருக்கான ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

1600 கோடி டாலர்...

தோழர் ஏ.கே.பத்மநாபன் மூத்த தலைவர் #CPIM #16BillionDeal #ArmsDeal #ArmsTrade #StopWar #Geopolitics
மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.21 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகள் கடந்த வாரம் துவக்கிவைக்கப்பட்டன.

68ஆவது வார்டு பொன்மேனி பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை, 46ஆவது வார்டில் தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆர்.ஓ. குடிநீர் தொட்டி, 43ஆவது வார்டு கணேஷ் தியேட்டர் அருகில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சலவைக் கூடம் மற்றும் கழிப்பறை ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. #CPIM #Madurai #MPFunds
மறைந்த பின்பும் மானுட மேம்பாட்டுக்காக மார்க்சிஸ்டுகள்!

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 19 பேர் உடல் தானம் செய்தனர். அதற்கான படிவத்தை மாநிலகுழு உறுப்பினர் எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். ஜெயலால் அவர்களிடம் வழங்கினர்.
ஒன்றிய அரசு நிதி உதவிகளை வஞ்சித்த போதிலும், கேரளத்தின் எந்தவொரு மக்கள் நலத்திட்டமும் நிறுத்தப்படவில்லை.

தீவிர வறுமையை ஒழிக்கும் நோக்கில் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இது வெறும் பண உதவி மட்டுமல்ல, பெண்களின் அதிகாரமளித்தலுக்கான ஒரு முக்கிய அங்கமாகும்.

வளர்ந்த நாடுகளுக்கு இணையான வாழ்க்கைச் சூழலைக் கேரள சமூகத்தில் உருவாக்குவதே இடதுசாரி முன்னணியின் ஒரே நோக்கம்.

- தோழர் எம். வி.கோவிந்தன், கேரள மாநிலச் செயலாளர் #CPIM #LDF #KeralaModel #LeftPolitics #KeralaDevelopment
சேலத்தில் அரசுப்பேருந்து மோதி 8 பேர் பலி! #CPIM வேதனை! More : https://shorturl.at/npaf8
CPIM Tamilnadu
Photo
பாஜக அரசின் தவறான சாலைப் போக்கு வரத்து கொள்கைகளால் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரித்து, மக்களின் பாக்கெட்டுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் சுரண்டும் ஒன்றிய அரசு.

சுங்கச்சாவடிகளின் வசூல் வேட்டை நாடாளுமன்றத்தில் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய கேள்விக்கு (கேள்வி எண்: 3440), ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 2014 முதல் 2026 வரையிலான 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்தில் மட்டும் புதிதாக 48 சுங்கச் சாவடிகள் திறக்கப் பட்டுள்ளன. அரசு தாக்கல் செய்துள்ள தரவுகளின்படி:

* 2014 முதல் 2019 வரையிலான ஆண்டு களில் 818 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டு, 10 சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 2,401.59 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

* 2019 முதல் 2024 வரையிலான ஆண்டு களில் 537 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டு, 20 சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 937.69 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

* 2024 முதல் 2026 பிப்ரவரி வரையி லான காலத்தில் 442 கி.மீ சாலைகள் அமைக்கப் பட்டு, 18 சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 421.19 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 12 ஆண்டுகளில் ரூ. 55 ஆயிரத்து 136 கோடி மதிப்பீட்டில் சாலை கள் அமைக்கப்பட்டு, 48 சுங்கச்சாவடிகள் மூலம் சுமார் 3,760 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வசூல் குறைவாக உள்ள 10 சுங்கச்சாவடிகள் மட்டுமே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) ஒப்படைக்கப்பட்டுள்ளன. புள்ளிவிவர முரண்பாடுகளும் மறைக்கப்படும் உண்மைகளும் ஒவ்வொரு நெடுஞ்சாலை வாரியாகவும் விரிவான தரவுகள் வேண்டும் என ஆர். சச்சி தானந்தம் எம்.பி. கேட்டிருந்த நிலையில், அமைச்சர் மொட்டையாக மொத்தப் புள்ளி விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளார். எந்தெந்த சாலைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற வெளிப்படைத்தன் மையை (Transparency) அமைச்சகம் திட்ட மிட்டு மறைத்துள்ளது.

2014-19இல் இருந்த வசூலை விட, சாலைகளின் நீளம் மற்றும் சுங்கச்சாவடி கள் அதிகரித்த பிறகு அடுத்தடுத்த ஆண்டு களில் வசூல் குறைவாகக் காட்டப்படுவது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. இது சுங்க வசூல் புள்ளிவிவரங்களில் முறைகேடு நடந்துள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதேபோல், சுங்கச்சாவடிகளின் துல்லியமான கட்டணப் பட்டியலைக் கேட்டதற்கு, பொதுவாக “தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி (2008) வசூலிக்கப்படுகிறது” என்று கூறி அமைச்சர் மழுப்பியுள்ளார். இது தரமான சாலைகளை அமைப்பதை விட, சுங்கக் கட்டணம் வசூலிப்பதிலேயே பாஜக அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது.

முடங்கிக் கிடக்கும் திண்டுக்கல் - சபரிமலைத் திட்டம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிக முக்கியமான திட்டங்களான திண்டுக்கல் - காரைக்குடி, திண்டுக்கல் - செம்மடைப்பட்டி மற்றும் ஆன்மீக முக்கியத்து வம் வாய்ந்த திண்டுக்கல் - சபரிமலை தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் நிலை குறித்தும் ஆர். சச்சிதானந்தம் கேள்வி எழுப்பி னார். இதற்கு அமைச்சர் அளித்துள்ள பதில் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. அதாவது, இத்தனை ஆண்டுகளாகியும் இத்திட்டங்கள் இன்னும் “திட்ட அறிக்கை” (DPR) தயாரிக்கும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக, ஆர். சச்சிதானந்தம் எம்.பி.க்கு அளித்த பதிலில் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆர். சச்சிதானந்தம் எம்.பி. மோடி அரசுக்கு கண்டனம்!

“தமிழக மக்களைச் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் பாஜக அரசு கடந்த 12 ஆண்டுகளாகச் சுரண்டி வருகிறது. சாலைகளின் நீளத்தை விடச் சுங்கச் சாவடிகளின் எண்ணிக் கையை உயர்த்துவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் சாலைகளை அமைத்துவிட்டு, மீண்டும் மக்களிடமே வசூல் வேட்டை நடத்துவது அநீதியானது. குறிப்பாக, திண்டுக்கல் - சபரிமலை போன்ற வாழ்வாதாரத் திட்டங்களை வெறும் காகித அளவிலேயே முடக்கி வைத்துவிட்டு, சுங்கச்சாவடிகளை மட்டும் வரிசையாகத் திறப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகம். விரிவான தரவு களைத் தராமல் மழுப்பும் அமைச்சரின் செயல் நாடாளுமன்றத்தையே ஏமாற்றும் செயலாகும்”.

“தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், சுங்கக் கட்டணச் சுரண்டலுக்கு எதிராகவும் எங்களது போராட்டம் தொடரும்”.

- தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #BJPScamin tamilnadu #TollGateScam #BJPFailedIndia #TollTaxBurden #TaxPayersRights
நாம் நாகரிக சமூகமா!

நவீன இந்தியாவின் டிஜிட்டல் சாதனைகளையும், விண்வெளிப் பாய்ச்சல்களையும் நாம் தம்பட்டம் அடித்துக் கொண்டாடினாலும், பாதாளச் சாக்கடைகளிலும் கழிவுநீர்த் தொட்டிகளிலும் மனித உயிர்கள் பலியாவது ஒரு தீராத வேதனையாகத் தொடர்கிறது.

சமீபத்தில் மக்களவையில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள புள்ளிவிவரங்களின்படி 2017 முதல் இந்தியா முழுவதும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது 622 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் இதயத்தை உலுக்குகிறது. இதில் உத்தரப்பிரதேசம் (86), மகாராஷ்டிரா (82), தமிழ்நாடு (77), ஹரியானா (76) என உயிரிழப்புகளின் பட்டியல் நீள்கிறது.

துப்புரவுப்பணி என்பது சாதி சார்ந்தது அல்ல, அது தொழில் சார்ந்தது என்று ஆட்சியாளர்கள் கூறினாலும், கள யதார்த்தம் முற்றிலும் வேறாகவே உள்ளது.

அறிவியல் யுகத்தில் வாழ்ந்துகொண்டு மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் இந்த மனிதாபிமானமற்ற அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்காத வரை, நாம் ஒரு நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ளவே தகுதி யற்றவர்கள். #CPIM #StopSewerDeaths #ManualScavenging #SanitationWorkers #CasteDiscrimination More: https://shorturl.at/E6e9Q
Media is too big
VIEW IN TELEGRAM
ஈரான் மீதான போர்; பொட்ரோடாலருக்கு முடிவுரை எழுதிய டிரம்ப் #CPIM #Trump #USDDollardown #Petrodollar #IranWar #MiddleEastCrisis #OilPolitics More : https://youtube.com/shorts/tyivNXy3-jA
தடை செய்! #gascylindercrisis #ITact #democracy
#CPIM மத்தியக்குழு உறுப்பினர்களான கே.கே. ஷைலஜா, பி. ராஜீவ், கே.என். பாலகோபால் மற்றும் டி.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கேரள சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.