வீர வியட்நாம், ஈரானுக்கு அரிசி, மாவு, உடனடி நூடுல்ஸ், மீன் சாறு, சர்க்கரை, மசாலா பொருட்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான ஆடைகள் உள்ளிட்ட 60 டன் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
இந்த உதவிப் பொருட்களை ஏற்றிய விமானம் வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து பாதுகாப்பாக புறப்பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் ஈரானில் தரையிறங்கியது. இது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. #Vietnam #Iran #VietnamToIran #StandWithIran
இந்த உதவிப் பொருட்களை ஏற்றிய விமானம் வியட்நாம் தலைநகர் ஹனோயிலிருந்து பாதுகாப்பாக புறப்பட்டு எந்த சிக்கலும் இல்லாமல் ஈரானில் தரையிறங்கியது. இது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது. #Vietnam #Iran #VietnamToIran #StandWithIran
❤1
மதவெறிக்கும் ஊழலுக்கும் ஒரே மாற்று: இடதுசாரிகள்!
பிரிகேட் மைதானத்தில் நின்று கொண்டு வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் பிரதமர், வடவங்காளத்தின் எரியும் பிரச்சனைகள் குறித்து ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?
நலிவடைந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலம், மூடிக்கிடக்கும் ஆலைகள் மற்றும் எல்லைப்பகுதி மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்துப் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?
“மக்களின் பசிக்குச் சோறு போடத் தெரியாதவர்கள், மதவெறியைத் தீயாகப் பரப்பிப் பிழைப்பு நடத்து கிறார்கள்”
இடதுசாரிகளின் மாற்று அரசியல் மதவெறிக்கும் ஊழலுக்கும் ஒரே மாற்று இடதுசாரிகள் மட்டுமே.
வங்காள மண் மறுமலர்ச்சியின் மண்; இது வகுப்புவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியாது.
மக்களின் ஒற்றுமையைச் சீர் குலைக்க நினைக்கும் சக்திகளை இடதுசாரி முன்னணியின் கீழ் திரண்டுள்ள உழைக்கும் மக்கள் வரும் தேர்தலில் வேரோடு வீழ்த்துவார்கள்.
- தோழர் முகமது சலீம், மேற்கு வங்க மாநிலச் செயலாளர் #CPIM #LeftPolitics #WestBengalPolitics #WorkersUnity
பிரிகேட் மைதானத்தில் நின்று கொண்டு வகுப்புவாத வெறுப்பைப் பரப்பும் பிரதமர், வடவங்காளத்தின் எரியும் பிரச்சனைகள் குறித்து ஏன் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை?
நலிவடைந்து வரும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலம், மூடிக்கிடக்கும் ஆலைகள் மற்றும் எல்லைப்பகுதி மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்துப் பிரதமர் மௌனம் காப்பது ஏன்?
“மக்களின் பசிக்குச் சோறு போடத் தெரியாதவர்கள், மதவெறியைத் தீயாகப் பரப்பிப் பிழைப்பு நடத்து கிறார்கள்”
இடதுசாரிகளின் மாற்று அரசியல் மதவெறிக்கும் ஊழலுக்கும் ஒரே மாற்று இடதுசாரிகள் மட்டுமே.
வங்காள மண் மறுமலர்ச்சியின் மண்; இது வகுப்புவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியாது.
மக்களின் ஒற்றுமையைச் சீர் குலைக்க நினைக்கும் சக்திகளை இடதுசாரி முன்னணியின் கீழ் திரண்டுள்ள உழைக்கும் மக்கள் வரும் தேர்தலில் வேரோடு வீழ்த்துவார்கள்.
- தோழர் முகமது சலீம், மேற்கு வங்க மாநிலச் செயலாளர் #CPIM #LeftPolitics #WestBengalPolitics #WorkersUnity
2025 ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெறும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!
தனது எழுத்தில் எப்போதும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்தில், அழகியல் குறையாமல் தொடர்ந்து எழுதி வரும் ச.தமிழ்ச்செல்வன், தற்போது விருது பெற்றுள்ள "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" நூலையும் அதே கண்ணோட்டத்தில் எழுதி விருது பெற்றுள்ளார். #SahityaAkademiAward #STamilselvan #TamilLiterature #WriterSTamilselvan #LeftWriters
தனது எழுத்தில் எப்போதும் உழைக்கும் வர்க்கக் கண்ணோட்டத்தில், அழகியல் குறையாமல் தொடர்ந்து எழுதி வரும் ச.தமிழ்ச்செல்வன், தற்போது விருது பெற்றுள்ள "தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்" நூலையும் அதே கண்ணோட்டத்தில் எழுதி விருது பெற்றுள்ளார். #SahityaAkademiAward #STamilselvan #TamilLiterature #WriterSTamilselvan #LeftWriters
கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி!! #CPIM #BharathiarUniversityCoimbatore #LandRights #LandCompensation More: https://shorturl.at/LhTk3
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி!! #CPIM #BharathiarUniversityCoimbatore #LandRights #LandCompensation More: https://shorturl.at/LhTk3
உலகையே அழிக்கிறது டிரம்ப் – நெதன்யாகு மோடி களவாணி கும்பல்
டிரம்ப், நெதன்யாகு, மோடியைக் கொண்ட களவாணிக் கும்பல் உலகையே அழிக்கிறது.
ஏற்கெனவே டிரம்ப் (அமெரிக்க ஜனாதிபதி) மற்றும் நெதன் யாகுவைக் (இஸ்ரேல் பிரதமர்) கொண்ட களாவணிக் கும்பலில் இப்போது பிரதமர் மோடி இணைந்துள்ளார். அத்தகைய கும்பலை அங்கீகரிப்பதில் கேரளத்தின் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. அது எப்போதும் என்னைப் பாதித்துள்ளது.
நானும் கேரளத்தின் வளர்ப்பு மகன். உண்மையான கேரளக் கதை என்ன என்பதை நாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். பிரகாஷ் ராஜ் ஆகிய நான் அதிக நேரம் கேரளாவில் இருப்பேன்.
கலை மூலம் அதிக அரசியல் பேசுவேன்.
- பிரகாஷ் ராஜ் , திரைக்கலைஞர் #CPIM #NarendraModi #StopWar #DonaldTrump #BenjaminNetanyahu #PrakashRaj
டிரம்ப், நெதன்யாகு, மோடியைக் கொண்ட களவாணிக் கும்பல் உலகையே அழிக்கிறது.
ஏற்கெனவே டிரம்ப் (அமெரிக்க ஜனாதிபதி) மற்றும் நெதன் யாகுவைக் (இஸ்ரேல் பிரதமர்) கொண்ட களாவணிக் கும்பலில் இப்போது பிரதமர் மோடி இணைந்துள்ளார். அத்தகைய கும்பலை அங்கீகரிப்பதில் கேரளத்தின் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. அது எப்போதும் என்னைப் பாதித்துள்ளது.
நானும் கேரளத்தின் வளர்ப்பு மகன். உண்மையான கேரளக் கதை என்ன என்பதை நாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். பிரகாஷ் ராஜ் ஆகிய நான் அதிக நேரம் கேரளாவில் இருப்பேன்.
கலை மூலம் அதிக அரசியல் பேசுவேன்.
- பிரகாஷ் ராஜ் , திரைக்கலைஞர் #CPIM #NarendraModi #StopWar #DonaldTrump #BenjaminNetanyahu #PrakashRaj
❤1
Media is too big
VIEW IN TELEGRAM
"கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது." - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #GenZwithps #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More : https://youtu.be/NUjjm_so_M0
Media is too big
VIEW IN TELEGRAM
ஐநா சபையில் அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இது ஈரானின் முதுகில் குத்தும் செயலாகும். இதுவரையிலும் இந்திய நாடு பின்பற்றி வந்த வெளியுறவுக் கொள்கைப் பாரம்பரியத்தைக் குப்பையில் வீசும் நடவடிக்கையை ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. - தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #UNVote #IndiaForeignPolicy #StandWithIran #Geopolitics #USIndiaRelations More : https://youtu.be/vQdPXdprDts
Media is too big
VIEW IN TELEGRAM
"போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களையும் இளைஞர்களையும் விடுவிக்க வேண்டும்." தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #PShanmugam #TVK #Communism #TamilNaduPolitics #CustodialDeath #Viduthalai More : https://youtu.be/NUjjm_so_M0
"இன்றைய நவீன இந்தியாவின் கருத்தாக்கம் என்பது, சாவர்க்கரின் கனவான 'இந்துத்துவா' சித்தாந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது கிடையாது. ஆனால், பாரதிய ஜனதா கட்சி இன்று அத்தகைய ஒரு பிம்பத்தை உருவாக்கிடத் துடிக்கிறது." - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #StopReligiousHate #RSS #BJP #AgainstHatePolitics #DownWithFascism More: https://youtu.be/ERi3zy5Amkc
YouTube
Full
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
Follow us on:
_________________________________________________________
▶️Youtube: https://www.youtube.com/c/TNCPIM/featured
▶️Website: https://cpimtn.org/
▶️Facebook: https://www.face…
தோழர் பினராயி விஜயனுக்கு வெற்றி அமைய வாழ்த்துகள்!
வரவிருக்கும் தேர்தலில் கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கேரளா என்ற மாநிலத்தை 'என் கேரளம்' என்றே நான் உணர்கிறேன். சிலர் தங்களின் ஒதுக்கும் மனப்பான்மையால் என்னை ஒரு வெளியாளாக முத்திரை குத்தினாலும், நான் கேரளத்துடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன்.
எனவே, அந்த மாநிலத்தின் பயனாளிகள் (என்னையும் உள்ளடக்கி) கடந்த பத்தாண்டுகளைச் சிந்தித்துப் பார்த்து, அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் சரியான முடிவை எடுப்போம்.
தோழர் விஜயன் வெற்றி பெறட்டும்! கேரளமும் வெற்றி பெறும்!
கமல்ஹாசன்.எம்.பி., திரைக்கலைஞர் #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM #KamalHaasan
வரவிருக்கும் தேர்தலில் கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாவற்றிற்கும் மேலாக, கேரளா என்ற மாநிலத்தை 'என் கேரளம்' என்றே நான் உணர்கிறேன். சிலர் தங்களின் ஒதுக்கும் மனப்பான்மையால் என்னை ஒரு வெளியாளாக முத்திரை குத்தினாலும், நான் கேரளத்துடன் உணர்வுபூர்வமாக இணைந்திருக்கிறேன்.
எனவே, அந்த மாநிலத்தின் பயனாளிகள் (என்னையும் உள்ளடக்கி) கடந்த பத்தாண்டுகளைச் சிந்தித்துப் பார்த்து, அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் சரியான முடிவை எடுப்போம்.
தோழர் விஜயன் வெற்றி பெறட்டும்! கேரளமும் வெற்றி பெறும்!
கமல்ஹாசன்.எம்.பி., திரைக்கலைஞர் #PinarayiVijayan #KeralaElection2026 #LDF #KeralaCM #KamalHaasan
போரினால் உண்மையில் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்களே!
"போர் மூலம் ஏகாதிபத்திய சக்திகளே பலன் அடைகின்றன; போரை ஆதரிக்கும் நாடுகளும் அதிலிருந்து ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
ஆனால், போரின் கொடூரமான விளைவுகளை நேரடியாக அனுபவிப்பவர்கள் உழைக்கும் மக்களே. நடுத்தர வர்க்கத்தினரும், அன்றாடம் உழைத்து வாழும் ஏழை மக்களுமே போரின் மிகப்பெரிய பாதிப்புகளைச் சுமக்கின்றனர்."
- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopTheWar #EndWarNow #AntiImperialism #CapitalismKills #WorldPeace
"போர் மூலம் ஏகாதிபத்திய சக்திகளே பலன் அடைகின்றன; போரை ஆதரிக்கும் நாடுகளும் அதிலிருந்து ஆதாயம் தேடிக்கொள்கின்றன.
ஆனால், போரின் கொடூரமான விளைவுகளை நேரடியாக அனுபவிப்பவர்கள் உழைக்கும் மக்களே. நடுத்தர வர்க்கத்தினரும், அன்றாடம் உழைத்து வாழும் ஏழை மக்களுமே போரின் மிகப்பெரிய பாதிப்புகளைச் சுமக்கின்றனர்."
- தோழர் எஸ்.கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #StopTheWar #EndWarNow #AntiImperialism #CapitalismKills #WorldPeace
Media is too big
VIEW IN TELEGRAM
இடைநீக்கத்தை எதிர்த்த எங்களின் போராட்டம் முடிவுக்கு வருகிறது. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் எங்களின் போராட்டம் மேலும் தீவிரத்தோடு தொடரும்
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Parliament #ParliamentProtest #ProtectConstitution #நாடாளுமன்றம் More : https://youtube.com/shorts/SsiB0ufuvnQ
- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Parliament #ParliamentProtest #ProtectConstitution #நாடாளுமன்றம் More : https://youtube.com/shorts/SsiB0ufuvnQ
CPIM Tamilnadu
Photo
ஏஐ மாநாட்டில் இந்தியாவுக்கு அவமானம்: சச்சிதானந்தம்.எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அரசு மழுப்பல் பதில்!
புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், போதிய வழிகாட்டுதல்களை பாஜக அரசு உருவாக்காததால்தான் பெரும் குழப்பம் உருவாகி இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
போலி கண்டுபிடிப்பால் நேர்ந்த அவமரியாதை கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடை பெற்ற ‘இந்தியா-ஏஏ இம்பாக்ட் சமிட் 2026’ கண்காட்சியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் (Galgotias) என்ற தனியார் பல்கலைக்கழகம் பங்கேற்றது. அந்தப் பல்கலைக்கழகம், சீன நாட்டின் ‘யூனிட்ரீ’ (Unitree) நிறுவனத் தயாரிப்பான ரோபோ நாயைத் தனது சொந்தக் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்தியது.
சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில், இந்தியாவின் சாதனை என ஒரு போலித் தயாரிப்பு முன்னிறுத்தப்பட்டது உலக அரங்கில் நமது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் நம்பகத்தன்மை மீது பெரும் கறையை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ‘விருப்பம் தெரிவித்தல்’ (EOI) அடிப்படையில் கோரப்பட்டதாகவும், இடவசதியைப் பொறுத்து ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் மழுப்பலான பதிலையே அளித்து உள்ளார்.
மிக முக்கியமாக, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் தரம் குறித்த முழுப் பொறுப்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதில் அரசுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பை பாஜக அரசு முற்றிலும் தட்டிக் கழித்துள்ளது. திட்டமிடல் இன்மையால் வீழ்ந்த நம்பகத்தன்மை தெற்குலக நாடுகளில் முதல் முறையாகத் தில்லியில் நடைபெற்ற இந்தச் சர்வதேச மாநாடு, நமது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியிருக்க வேண்டிய பொன்னான தருணம் ஆகும்.
ஆனால், பாஜக அரசின் போதிய திட்டமிடல் இன்மை காரணமாக, நமக்குச் சொந்தமில்லாத சீனாவின் தொழில்நுட்பத்தை இந்தியாவின் கண்டு பிடிப்பாகக் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு பெரும் இழுக்காக அமைந்துவிட்டது. சீனத் தொழில்நுட்பத்தைத் தனது கண்டு பிடிப்பாக ஒரு பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியதைக் கூடக் கண்டறிய முடியாத நிலையில் ஒன்றிய அரசு இருப்பது வேதனையளிக்கிறது.
காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அனைத்துப் பொறுப்பும் காட்சிப்படுத்துபவர்களுக்கே உரியது என்று கூறுவது, நடந்த தவறிலிருந்து அரசு நழுவி ஓடும் செயலாகும். “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற அடிப்படையில் இடங்களை ஒதுக்கிவிட்டு, இப்போது நடந்த தவறிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு பொறுப்பு உள்ள அரசுக்கு அழகல்ல, இதற்கான தார்மீகப் பொறுப்பை பாஜக அரசே ஏற்க வேண்டும்.
தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், #CPIM
#AI #IndiaAISummit2026 #DigitalIndia #TechnologyScam #SachithanandamMP #CPIM #FakeInnovation #Unitree #RobotDog #DelhiSummit #ScienceAndTechnology #IndiaNews
புதுதில்லியில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டில், போதிய வழிகாட்டுதல்களை பாஜக அரசு உருவாக்காததால்தான் பெரும் குழப்பம் உருவாகி இந்தியாவிற்கு சர்வதேச அளவில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
போலி கண்டுபிடிப்பால் நேர்ந்த அவமரியாதை கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடை பெற்ற ‘இந்தியா-ஏஏ இம்பாக்ட் சமிட் 2026’ கண்காட்சியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்கோட்டியாஸ் (Galgotias) என்ற தனியார் பல்கலைக்கழகம் பங்கேற்றது. அந்தப் பல்கலைக்கழகம், சீன நாட்டின் ‘யூனிட்ரீ’ (Unitree) நிறுவனத் தயாரிப்பான ரோபோ நாயைத் தனது சொந்தக் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்தியது.
சர்வதேசப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில், இந்தியாவின் சாதனை என ஒரு போலித் தயாரிப்பு முன்னிறுத்தப்பட்டது உலக அரங்கில் நமது நாட்டின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையின் நம்பகத்தன்மை மீது பெரும் கறையை ஏற்படுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன், மாநாட்டில் பங்கேற்பதற்கான வாய்ப்பு ‘விருப்பம் தெரிவித்தல்’ (EOI) அடிப்படையில் கோரப்பட்டதாகவும், இடவசதியைப் பொறுத்து ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்பட்டதாகவும் மழுப்பலான பதிலையே அளித்து உள்ளார்.
மிக முக்கியமாக, கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் தரம் குறித்த முழுப் பொறுப்பும் அந்தந்த நிறுவனங்களையே சாரும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதன் மூலம், ஒரு சர்வதேச மாநாட்டை நடத்துவதில் அரசுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பொறுப்பை பாஜக அரசு முற்றிலும் தட்டிக் கழித்துள்ளது. திட்டமிடல் இன்மையால் வீழ்ந்த நம்பகத்தன்மை தெற்குலக நாடுகளில் முதல் முறையாகத் தில்லியில் நடைபெற்ற இந்தச் சர்வதேச மாநாடு, நமது நாட்டின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்குப் பறைசாற்றியிருக்க வேண்டிய பொன்னான தருணம் ஆகும்.
ஆனால், பாஜக அரசின் போதிய திட்டமிடல் இன்மை காரணமாக, நமக்குச் சொந்தமில்லாத சீனாவின் தொழில்நுட்பத்தை இந்தியாவின் கண்டு பிடிப்பாகக் காட்டியது நாட்டின் நற்பெயருக்கு பெரும் இழுக்காக அமைந்துவிட்டது. சீனத் தொழில்நுட்பத்தைத் தனது கண்டு பிடிப்பாக ஒரு பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியதைக் கூடக் கண்டறிய முடியாத நிலையில் ஒன்றிய அரசு இருப்பது வேதனையளிக்கிறது.
காட்சிப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அனைத்துப் பொறுப்பும் காட்சிப்படுத்துபவர்களுக்கே உரியது என்று கூறுவது, நடந்த தவறிலிருந்து அரசு நழுவி ஓடும் செயலாகும். “முதலில் வருபவருக்கே முன்னுரிமை” என்ற அடிப்படையில் இடங்களை ஒதுக்கிவிட்டு, இப்போது நடந்த தவறிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பது ஒரு பொறுப்பு உள்ள அரசுக்கு அழகல்ல, இதற்கான தார்மீகப் பொறுப்பை பாஜக அரசே ஏற்க வேண்டும்.
தோழர் ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி.,
மாநிலக்குழு உறுப்பினர், #CPIM
#AI #IndiaAISummit2026 #DigitalIndia #TechnologyScam #SachithanandamMP #CPIM #FakeInnovation #Unitree #RobotDog #DelhiSummit #ScienceAndTechnology #IndiaNews
Media is too big
VIEW IN TELEGRAM
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் 2026–2027ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில், #CPIM மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் ஆர். சச்சிதானந்தம் அவர்கள் ஆற்றிய உரை... #ParliamentSpeech #IndianRailways #RailwayBudget #LokSabha #Dindigul More : https://youtu.be/iKOfY7W2kNo
சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுகளுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்!
கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராமமாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே வழங்கினார்.
‘சாமிக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார்.
- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CommunistParty #LeftPolitics #RedMovement #Communism
கம்யூனிஸ்டு கட்சிக்குச் சாதாரண வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள் என உழைக்கும் மக்கள் நிதி வழங்குகிறார்கள். கிராமம் கிராமமாக நாங்கள் நிதி திரட்டச் சென்றபோது, சிறுமி ஒருவர் தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை அப்படியே வழங்கினார்.
‘சாமிக்காகச் சேர்த்து வைத்த பணத்தை எங்களிடம் கொடுக்கிறாயே’ எனக் கேட்டபோது, ‘சாமிக்குக் கொடுப்பதும் கம்யூனிஸ்டுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான்; சாமி என்ன செய்கிறது என்று தெரியாது, ஆனால் கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்’ என அந்தச் சிறுமி பதிலளித்தார்.
- தோழர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #CommunistParty #LeftPolitics #RedMovement #Communism
Media is too big
VIEW IN TELEGRAM
கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, 45 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. #CPIM தொடர் போராட்டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி இது! - தோழர் பத்மநாபன், கோவை மாவட்ட செயலாளர் #CPIM #LeftMovement #BharathiarUniversity #Coimbatore #TNPolitics More : https://youtu.be/ZZ4oVpJ86Nk