கனவுகளுக்குப் பதிலாக அறிவியலையும் கண்ணீருக்குப் பதிலாக புரட்சியையும் முன்வைத்த புரட்சியாளர் தத்துவமேதை தோழர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்! #KarlMarx #Communism #Socialism
Media is too big
VIEW IN TELEGRAM
மானுட விடுதலைக்கு வித்திட்ட பேராசான் தோழர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினம்! #KarlMarx #Communism #Socialism More : https://youtu.be/LS2EgBMtKlc?si=I6pa1its7XeE0pa-
சோசலிசத்தின் உண்மையான நோக்கம், துல்லியமான மனிதகுல வளர்ச்சி - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் #AlbertEinstein # ஆல்பர்ட்ஐன்ஸ்டீன் #Socialism
கிரீஸ் நாடு ஏதென்ஸில் சோசலிச கியூபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியால் சின்டாக்மா சதுக்கத்தில் (Syntagma Square) கியூபா தனித்து விடப்படவில்லை, ஏகாதிபத்திய அச்சுறுத்தல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது என்பதை ஆயிரக்கணக்கானோர் ஒன்றிணைந்து உரக்க முழங்கிய பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. #KKE #SolidarityWithCuba #CubaIsNotAlone #AntiImperialism #HandsOffCuba
பாஜக அரசியலை எதிர்கொள்வது எங்களுக்கு புதிதல்ல.
மதுரை விமான நிலையத்தை ‘சர்வதேச விமான நிலையம்’ என்று தரம் உயர்த்த கடந்த ஏழு ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடினோம்.
அதனை முறைப்படி அறிவிக்கும் இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழில் எனது பெயரும், விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பெயரும் இடம் பெறவில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை எவ்வாறு நடத்தினாலும், அதைவிட மக்களின் நலனும், மதுரையின் நலனுமே எங்களுக்கு முக்கியம். நிகழ்வில் நாங்கள் பங்கெடுப்போம்.
பாஜக அரசியலை எதிர்கொள்வது எங்களுக்கு புதிதல்ல. உரிமை மீறலை சந்திக்க அதிகாரிகள் தயாராகி கொள்ளுங்கள்.
தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி.,
மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #MaduraiInternationalAirport #MaduraiAirport #NeverGiveUp #BJPAntiTamil
மதுரை விமான நிலையத்தை ‘சர்வதேச விமான நிலையம்’ என்று தரம் உயர்த்த கடந்த ஏழு ஆண்டுகளாக விடாப்பிடியாக போராடினோம்.
அதனை முறைப்படி அறிவிக்கும் இன்றைய நிகழ்வுக்கான அழைப்பிதழில் எனது பெயரும், விருதுநகர் எம் பி மாணிக்கம் தாகூர் பெயரும் இடம் பெறவில்லை. மக்கள் பிரதிநிதிகளான எங்களை எவ்வாறு நடத்தினாலும், அதைவிட மக்களின் நலனும், மதுரையின் நலனுமே எங்களுக்கு முக்கியம். நிகழ்வில் நாங்கள் பங்கெடுப்போம்.
பாஜக அரசியலை எதிர்கொள்வது எங்களுக்கு புதிதல்ல. உரிமை மீறலை சந்திக்க அதிகாரிகள் தயாராகி கொள்ளுங்கள்.
தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி.,
மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #MaduraiInternationalAirport #MaduraiAirport #NeverGiveUp #BJPAntiTamil
தேமுதிகவின் மாநிலப் பொருளாளரும் மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே. சுதீஷ் அவர்கள், மரியாதை நிமித்தமாக சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், எஸ்.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், ஆகியோரை நேரில் சந்தித்தார்.
Media is too big
VIEW IN TELEGRAM
"முதலாளித்துவம் வளங்களைக் கைப்பற்றவும், புதிய சந்தைகளை உருவாக்கவும் கையாளும் ஒரு கொடிய ஆயுதமே 'போர்'!"
மாபெரும் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் நினைவு நாளில், அவரது வரிகளை நினைவு கூர்வோம்.
உலகில் எந்த மூலையிலும் போர் நடந்தாலும், அநீதிக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் ஒலிக்கின்ற முதல் குரல் கம்யூனிஸ்ட்களின் குரலாகவே இருக்கும்! - தோழர் உ. வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #KarlMarx #Communism #Socialism #stopthewar More: https://youtube.com/shorts/TEgU8NpIQDs
மாபெரும் சிந்தனையாளர் கார்ல் மார்க்ஸ் அவர்களின் நினைவு நாளில், அவரது வரிகளை நினைவு கூர்வோம்.
உலகில் எந்த மூலையிலும் போர் நடந்தாலும், அநீதிக்கு எதிராகவும் அமைதிக்கு ஆதரவாகவும் ஒலிக்கின்ற முதல் குரல் கம்யூனிஸ்ட்களின் குரலாகவே இருக்கும்! - தோழர் உ. வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #KarlMarx #Communism #Socialism #stopthewar More: https://youtube.com/shorts/TEgU8NpIQDs
Media is too big
VIEW IN TELEGRAM
எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க ஒன்றிய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்; அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுத்திருக்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கவும், போரை உடனடியாக நிறுத்த இந்தியா தனது சர்வதேச அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாளை தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டம். - தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #stopthewar #ModiGovernment More: https://youtube.com/shorts/7degOEiFXcw
CPIM Tamilnadu
Photo
மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையும் எரிபொருள் நெருக்கடியும்!
இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைத் தட்டிப்பறிக்க, போர் தொடங்குவதற்குச் சற்று முன்பாக அங்கு சென்றபோது மோடி இவ்வளவு எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நெதன்யாகு மோடியிடம் "அதிகபட்சம் 48 மணிநேரப் போர்" என்றுதான் சொல்லியிருப்பார் போல. ஆனால் இன்று போர் இரண்டு வாரங்களைத் தாண்டப் போகிறது. போரின் பாதிப்புகள் நம்மையும் பிடித்துக் கொண்டன.
சமையல் எரிவாயுவிற்கு (LPG) அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. சமையல் எரிவாயு நுகர்வில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 60 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம்.
வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குத் தேவையான எரிவாயுவை மட்டுமே சேமித்து வைக்கும் வசதி உள்ளது. நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளின் (Underground caverns) கொள்ளளவோ வெறும் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.
இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை, சில மாதங்களுக்காவது சேமித்து வைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இறக்குமதி செய்வதை அன்றன்றே விநியோகம் செய்யும் ஒரு ஏற்பாடுதான் நடக்கிறது. ஆனால் 56 இன்ச் மார்பளவாயிற்றே? அந்தத் துணிச்சலில்தான் போருக்குக் கைதட்டப் போனார்கள். இப்போது நாட்டுக்கு வினை வந்துவிட்டது.
ஹார்முஸ் நீர்சந்தியும் ஈரான் மோதலும்
இந்தியாவின் 85 சதவீத சமையல் எரிவாயு இறக்குமதி ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) வழியாகத்தான் வருகிறது. அந்த நீர் வழியை ஈரான் மூடிவிட்டது. வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல அவர்கள் அனுமதிக்கிறார்கள். அதைப் பார்த்து இந்தியாவுக்கு வர முயன்ற சரக்குக் கப்பலை ஈரான் தாக்கியது. அதற்காக அவர்களைக் குற்றம் சொல்ல முடியுமா? அமைதிப் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அதிபர் வஞ்சகமாகக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு இரங்கல் செய்தி வெளியிட இந்திய அரசுக்கு இரண்டு நாட்கள் ஆனது. ஈரான் நமக்கு ஒரு பாடம் புகட்டத் தீர்மானித்திருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு கப்பல் வருகிறதாம். ஆனால் அது இங்கு வந்து சேர 45 நாட்கள் ஆகும். அதனால் அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து வாங்க அனுமதி அளித்துள்ளது. இரண்டு ரஷ்யக் கப்பல்கள் வந்து கொண்டிருப்பதாக பியூஷ் கோயல் கூறியுள்ளார். டிரம்பின் கட்டளைப்படி ரஷ்யாவின் எண்ணெயை வாங்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்திருந்தது அல்லவா? அதனால் ரஷ்யாவிற்கு நம்மிடம் பழைய நெருக்கம் இல்லை. பழையபடி விலையைக் குறைத்துத் தரமாட்டோம் என்று ரஷ்யா கூறிவிட்டது. சந்தை விலையைத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு விலை உயர்வு இன்னும் இருக்கும் என்பது உறுதி.
பொருளாதாரப் பாதிப்புகள்
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. 2026-ல் ஒரு பேரல் 58 முதல் 68 டாலருக்குள் இருக்கும் என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. போர் தொடர்ந்தால் இது 120 முதல் 150 டாலராக உயரக்கூடும். இங்கு பெட்ரோல் விலை 105 ரூபாய் அல்லவா? அது கச்சா எண்ணெய் விலை 65 டாலராக இருந்தபோது நிர்ணயிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் 150 டாலராகும்போது பெட்ரோல் விலை என்னவாகும்?
உலகின் மிகக் குறைந்த வருமானம் கொண்ட 50 சதவீத மக்களில், 85 முதல் 95 சதவீதத்தினர் ஏழை நாடுகளிலும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளிலும் (இந்தியா, பிற தெற்காசிய நாடுகள், இந்தோனேசியா போன்றவை) உள்ளனர்.
எண்ணெய் விலை உயர்வின் சுமை இவர்களின் தோள்களில்தான் விழப்போகிறது. இந்த நாடுகளுக்குச் சொந்தமாக எண்ணெய் கிடையாது. அதனால் கடுமையான விலைவாசி உயர்வையும் உற்பத்தி வீழ்ச்சியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்ன செய்வதென்று தெரியாத கையறு நிலையில் மோடி இருக்கிறார்.
இலங்கை காட்டும் பாடம் மோடி இலங்கையைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையை ஒப்பிடும்போது இந்தியா எவ்வளவு பெரிய நாடு? வெறும் 2.2 கோடி மக்கள் தொகை. அங்குள்ள அதிபர் என்ன செய்தார் தெரியுமா? அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 34 பேர் உட்பட 236 ஈரானிய மாலுமிகளுக்குத் தற்காலிக தஞ்சம் அளித்தார். பின்னர் இலங்கை அதிபர் திஸாநாயக்க கூறினார்: "நாங்கள் நடுநிலையானவர்கள், ஆனால் மனிதாபிமானம் உள்ளவர்கள். இலங்கை ஒரு சுதந்திரமான அணிசேரா நாடு. நாங்கள் ஈரானியர்களாக இருந்தாலும், அமெரிக்கர்களாக இருந்தாலும், இஸ்ரேலியர்களாக இருந்தாலும் அனைவரையும் சமமான மனிதர்களாகவே கருதுகிறோம். எங்கள் அணிசேராக் கொள்கையை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்."
இலங்கையைப் போலத் தலைநிமிர்ந்து பேச மோடி தயாரா? பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பேரம் பேசத் தயாரா?
இஸ்ரேலுக்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைத் தட்டிப்பறிக்க, போர் தொடங்குவதற்குச் சற்று முன்பாக அங்கு சென்றபோது மோடி இவ்வளவு எதிர்பார்த்திருக்க மாட்டார்.
நெதன்யாகு மோடியிடம் "அதிகபட்சம் 48 மணிநேரப் போர்" என்றுதான் சொல்லியிருப்பார் போல. ஆனால் இன்று போர் இரண்டு வாரங்களைத் தாண்டப் போகிறது. போரின் பாதிப்புகள் நம்மையும் பிடித்துக் கொண்டன.
சமையல் எரிவாயுவிற்கு (LPG) அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காது என்ற நிலை உருவாகியுள்ளது. சமையல் எரிவாயு நுகர்வில் இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 60 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம்.
வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் அதிகபட்சமாக 15 நாட்களுக்குத் தேவையான எரிவாயுவை மட்டுமே சேமித்து வைக்கும் வசதி உள்ளது. நிலத்தடி சேமிப்புக் கிடங்குகளின் (Underground caverns) கொள்ளளவோ வெறும் 2 நாட்களுக்கு மட்டுமே போதுமானது.
இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை, சில மாதங்களுக்காவது சேமித்து வைப்பதற்கான எந்த நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இறக்குமதி செய்வதை அன்றன்றே விநியோகம் செய்யும் ஒரு ஏற்பாடுதான் நடக்கிறது. ஆனால் 56 இன்ச் மார்பளவாயிற்றே? அந்தத் துணிச்சலில்தான் போருக்குக் கைதட்டப் போனார்கள். இப்போது நாட்டுக்கு வினை வந்துவிட்டது.
ஹார்முஸ் நீர்சந்தியும் ஈரான் மோதலும்
இந்தியாவின் 85 சதவீத சமையல் எரிவாயு இறக்குமதி ஹார்முஸ் நீர்சந்தி (Strait of Hormuz) வழியாகத்தான் வருகிறது. அந்த நீர் வழியை ஈரான் மூடிவிட்டது. வங்கதேசம் போன்ற ஏழை நாடுகளின் கப்பல்கள் கடந்து செல்ல அவர்கள் அனுமதிக்கிறார்கள். அதைப் பார்த்து இந்தியாவுக்கு வர முயன்ற சரக்குக் கப்பலை ஈரான் தாக்கியது. அதற்காக அவர்களைக் குற்றம் சொல்ல முடியுமா? அமைதிப் பேச்சுவார்த்தையின் போது அவர்களின் அதிபர் வஞ்சகமாகக் கொல்லப்பட்ட நிலையில், ஒரு இரங்கல் செய்தி வெளியிட இந்திய அரசுக்கு இரண்டு நாட்கள் ஆனது. ஈரான் நமக்கு ஒரு பாடம் புகட்டத் தீர்மானித்திருக்கிறது.
அமெரிக்காவிலிருந்து சமையல் எரிவாயு கப்பல் வருகிறதாம். ஆனால் அது இங்கு வந்து சேர 45 நாட்கள் ஆகும். அதனால் அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து வாங்க அனுமதி அளித்துள்ளது. இரண்டு ரஷ்யக் கப்பல்கள் வந்து கொண்டிருப்பதாக பியூஷ் கோயல் கூறியுள்ளார். டிரம்பின் கட்டளைப்படி ரஷ்யாவின் எண்ணெயை வாங்க மாட்டோம் என்று இந்தியா அறிவித்திருந்தது அல்லவா? அதனால் ரஷ்யாவிற்கு நம்மிடம் பழைய நெருக்கம் இல்லை. பழையபடி விலையைக் குறைத்துத் தரமாட்டோம் என்று ரஷ்யா கூறிவிட்டது. சந்தை விலையைத் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சமையல் எரிவாயு விலை உயர்வு இன்னும் இருக்கும் என்பது உறுதி.
பொருளாதாரப் பாதிப்புகள்
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. 2026-ல் ஒரு பேரல் 58 முதல் 68 டாலருக்குள் இருக்கும் என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. போர் தொடர்ந்தால் இது 120 முதல் 150 டாலராக உயரக்கூடும். இங்கு பெட்ரோல் விலை 105 ரூபாய் அல்லவா? அது கச்சா எண்ணெய் விலை 65 டாலராக இருந்தபோது நிர்ணயிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் 150 டாலராகும்போது பெட்ரோல் விலை என்னவாகும்?
உலகின் மிகக் குறைந்த வருமானம் கொண்ட 50 சதவீத மக்களில், 85 முதல் 95 சதவீதத்தினர் ஏழை நாடுகளிலும் குறைந்த நடுத்தர வருமான நாடுகளிலும் (இந்தியா, பிற தெற்காசிய நாடுகள், இந்தோனேசியா போன்றவை) உள்ளனர்.
எண்ணெய் விலை உயர்வின் சுமை இவர்களின் தோள்களில்தான் விழப்போகிறது. இந்த நாடுகளுக்குச் சொந்தமாக எண்ணெய் கிடையாது. அதனால் கடுமையான விலைவாசி உயர்வையும் உற்பத்தி வீழ்ச்சியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்ன செய்வதென்று தெரியாத கையறு நிலையில் மோடி இருக்கிறார்.
இலங்கை காட்டும் பாடம் மோடி இலங்கையைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். இலங்கையை ஒப்பிடும்போது இந்தியா எவ்வளவு பெரிய நாடு? வெறும் 2.2 கோடி மக்கள் தொகை. அங்குள்ள அதிபர் என்ன செய்தார் தெரியுமா? அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 34 பேர் உட்பட 236 ஈரானிய மாலுமிகளுக்குத் தற்காலிக தஞ்சம் அளித்தார். பின்னர் இலங்கை அதிபர் திஸாநாயக்க கூறினார்: "நாங்கள் நடுநிலையானவர்கள், ஆனால் மனிதாபிமானம் உள்ளவர்கள். இலங்கை ஒரு சுதந்திரமான அணிசேரா நாடு. நாங்கள் ஈரானியர்களாக இருந்தாலும், அமெரிக்கர்களாக இருந்தாலும், இஸ்ரேலியர்களாக இருந்தாலும் அனைவரையும் சமமான மனிதர்களாகவே கருதுகிறோம். எங்கள் அணிசேராக் கொள்கையை நாங்கள் உயர்த்திப் பிடிக்கிறோம்."
இலங்கையைப் போலத் தலைநிமிர்ந்து பேச மோடி தயாரா? பிரேசில் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பேரம் பேசத் தயாரா?
CPIM Tamilnadu
Photo
அமெரிக்காவின் முன்னால் மண்டியிடும் மோடியின் கொள்கை கொண்டு வந்த வினைதான் இந்தச் சமையல் எரிவாயு தட்டுப்பாடு. இனி இது பெட்ரோல் மற்றும் டீசலுக்கும் பரவப்போகிறது. மோடியின் வெளியுறவுக் கொள்கையைத் திருத்துவதற்கு மக்கள் ஓரணியாகத் தெருவில் இறங்கியே தீர வேண்டும்.
டாக்டர் தாமஸ் ஐசக் மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #LPGShortage #PetrolPriceHike #FuelCrisis2026 #ModiForeignPolicy #56InchExposed #SaveIndianEconomy #WakeUpIndia
டாக்டர் தாமஸ் ஐசக் மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #LPGShortage #PetrolPriceHike #FuelCrisis2026 #ModiForeignPolicy #56InchExposed #SaveIndianEconomy #WakeUpIndia
ஒன்றிய அரசே எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கு! அமெரிக்கா & இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போரை நிறுத்த தலையிட வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை போராட்டம். #எரிவாயுதட்டுப்பாடு #GasCylinderShortage #StopTheWar#ModiFailedIndia #IRAN #TamilNaduProtests #CPIM #Tamilnadu
ஒன்றிய அரசே எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்கு! அமெரிக்கா & இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது போரை நிறுத்த தலையிட வலியுறுத்தியும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை போராட்டம்.
எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க ஒன்றிய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்; அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுத்திருக்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கவும், போரை உடனடியாக நிறுத்த இந்தியா தனது சர்வதேச அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாளை தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
#CPIM தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
- தோழர் பெ.சண்முகம்,மாநிலச் செயலாளர் #CPIM #LPGShortage #PetrolPriceHike #FuelCrisis2026 #ModiForeignPolicy #march15protest #SaveIndianEconomy #WakeUpIndia
எரிவாயு தட்டுப்பாட்டைப் போக்க ஒன்றிய பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும்; அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது தொடுத்திருக்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாக்கவும், போரை உடனடியாக நிறுத்த இந்தியா தனது சர்வதேச அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாளை தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.
#CPIM தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்.
- தோழர் பெ.சண்முகம்,மாநிலச் செயலாளர் #CPIM #LPGShortage #PetrolPriceHike #FuelCrisis2026 #ModiForeignPolicy #march15protest #SaveIndianEconomy #WakeUpIndia
மாமேதை தோழர் காரல் மார்க்ஸின் 143ஆவது நினைவு தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள சிபிஐ(எம்) மத்தியக்குழு அலுவலகமான ஏ.கே. கோபாலன் பவனில் அனுசரிக்கப்பட்டது. #CPIM பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் நிலோத்பல் பாசு, அருண் குமார் மற்றும் விஜூ கிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் ராஜேந்திர சர்மா மற்றும் வி.முரளிதரன் உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்று மார்க்ஸிற்கு அஞ்சலி செலுத்தினர். #KarlMarx #Communism #Socialism
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 2026 சட்டமன்ற தேர்தல் சமூக நீதி சாசனம் உருவாக்குவதற்கான கூட்டம் இன்றைய தினம் (14.03.2026) சமத்துவம், சமூகநீதி மற்றும் ஜனநாயக அமைப்புகள் பங்கேற்போடு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு தலைமையில் சென்னை, அடையாறு - அம்பேத்கர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.
மாநிலத் துணை பொதுச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் கோரிக்கை சாசனத்தை முன் வைத்தார். பல்வேறு தலித் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை சாசனத்தின் மீது தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி நிறைவு செய்து பேசினார்.
மாநிலத் துணை பொதுச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன் கோரிக்கை சாசனத்தை முன் வைத்தார். பல்வேறு தலித் மற்றும் ஜனநாயக அமைப்புகள் கோரிக்கை சாசனத்தின் மீது தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி நிறைவு செய்து பேசினார்.