CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
உத்தரகண்ட் மாநிலத்தில் #CPIM சார்பில் நடத்தி வரும் 'ஜன ஆக்ரோஷ் ஜதா' (மக்கள் எழுச்சிப் பயணம்), கடந்த மார்ச் 8-ஆம் தேதி டேராடூனில் தொடங்கியது. இந்தப் பயணம் புதன்கிழமை அன்று சாமோலி மாவட்டத்தில் உள்ள சுமார் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ள தராலி மற்றும் சுமார் 2500 அடி உயரத்தில் உள்ள கர்ணபிரயாக் ஆகிய இடங்களைச் சென்றடைந்தது.

இந்த எழுச்சிப் பயணத்திற்கு தொழிலாளர்கள், விவசாயிகள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், சத்துணவு ஊழியர்கள், ஆஷா (ASHA) பணியாளர்கள், அங்கன்வாடி மற்றும் திட்டப் பணியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தராலி மற்றும் கர்ணபிரயாக் ஆகிய இரு இடங்களிலும் நடைபெற்ற கூட்டங்களில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் ராஜேந்தர் நேகி, உத்தரகண்ட் மாநிலச் செயலாளர் ராஜேந்திர புரோகித் மற்றும் மூத்த தலைவர்கள் உரையாற்றினர். இந்தப் பயணம் மார்ச் 15-ஆம் தேதியன்று நிறைவடைகிறது.
உஜ்வாலா: வெற்று விளம்பரமும்... எரியும் அடுப்பும்!

அடுப்படியைப் புகையில்லாமால் மாற்றுவோம் என்று கூறி அதிகாரத்திற்கு வந்தவர்கள், இன்று ஒட்டுமொத்த சமையலறையையும் முடக்கி வைத்துள்ளனர்.

விலைவாசி உயர்வால் நடுத்தர வர்க்கமும், ஏழை மக்களும் அன்றாட வாழ்வாதாரத்திற்கே போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விளம்பரங்களுக்காகக் கோடிக்கணக்கில் செலவிடும் ஒன்றிய அரசு, மக்களின் வயிற்றுப் பசியைப் பற்றி அக்கறை கொள்வதில்லை. அடுப்படிப் புகையை விடக் கொடியது இந்த அரசின் மக்கள் விரோதப் போக்கு.

உழைக்கும் மக்களின் வாழ்வைச் சீரழிக்கும், கார்ப்பரேட்டுகளுக்குக் காவடி தூக்கும் இந்த ஆட்சியை வீழ்த்த வேண்டிய தருணம் இதுவே! #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #PriceRise #ModiGovernment
தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!! #AgainstSexualViolence More: https://shorturl.at/fao1G
CPIM Tamilnadu
Photo
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர்களைத் தொடர்ந்து நாட்டில் சமையல் எரிவாயு கிடைப்பதில் கடுமையான நெருக்கடிகள் எழுந்துள்ளது. சமையல் எரிவாயு விலை உயர்வு சாதாரண குடும்பங்கள் மீது நிதிச் சுமையை அதிகரித்துள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வீட்டு இணைப்புகளுக்கான முன்பதிவு இடைவெளி 25 நாட்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இது நிலைமையை மேலும் கடினமாக்குகிறது.

சமையல் எரிவாயு கிடைப்பதில் உள்ள நிச்சயமற்ற தன்மை, மாநிலத்தில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட சேவைத் துறையை பாதிக்கும். பிற மாவட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த விருந்தினர் தொழிலாளர்களும் உணவுக்காக ஹோட்டல்களையே நம்பியுள்ளனர். எரிவாயு கிடைப்பதில் இடையூறு தொடர்ந்தால், பல நிறுவனங்கள் மூடப்பட வேண்டியிருக்கும் என்று வர்த்தகத்துறை எச்சரித்துள்ளது. ரமலான் மாதம் என்பதால் குடும்பங்களால் சமையல் எரிவாயு தேவை அதிகரிக்கும் நேரமும் இதுவாகும்.

சாதாரண மக்களின் வாழ்க்கையையும் வணிகத் துறையையும் பாதிக்கும் இந்த சூழ்நிலையில், போதுமான அளவு கேஸ் சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைப்பதற்கும் ஒன்றிய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

உள்நாட்டு நுகர்வோர் மற்றும் ஹோட்டல்களுக்கு போதுமான அளவு கேஸ் விநியோகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், தேவைப்பட்டால், பட்ஜெட்டிலிருந்து மானியம் வழங்குவதற்கான பாதுகாப்பு செயல்முறையை அமைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

தோழர் பினராயி விஜயன்
கேரள முதல்வர்

#LPGCrisis #GasPriceHike #UnionGovernment #Kerala #PublicIssue
Media is too big
VIEW IN TELEGRAM
காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு மனித உரிமைகள் குறித்த முறையான பயிற்சியை தமிழக அரசு வழங்க வேண்டும். மனித உரிமைகளை மீறினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்கிற அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டியது அவசியம். — தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Vachathicase #PoliceReform #CustodialDeath #LockupDeath More : https://youtube.com/shorts/naz8SBQtYJg
போர் இப்போது நமது சமையலறைகளை வந்தடைந்துள்ளது.

இது வெறும் சிலிண்டர் (LPG) விலை உயர்வு பற்றியது மட்டுமல்ல,சராசரி இந்தியனின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தின் மீதும் நடத்தப்படும் நேரடித் தாக்குதலாகும்.

இந்த நெருக்கடி இனி எங்கோ ‘தொலைவில்’ இல்லை; அது நமது வாசற்படிக்கே வந்துவிட்டது.

- தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #PriceRise #ModiGovernment
CPIM Tamilnadu
Photo
தேசிய நெடுஞ்சாலை 66 (NH 66) வளர்ச்சித் திட்டத் தொடக்க விழாவில், கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் புறக்கணிக்கப்பட்டது, கேரள மக்கள் மற்றும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பா.ஜ.க காட்டும் வஞ்சகப் போக்கின் மற்றொரு வெளிப்பாடாகும்.

கேரள மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பா.ஜ.க தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

NH 66 திட்டத்திற்கான முழுச் செலவையும் ஏற்க மத்திய அரசு மறுத்தபோது, இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) அரசு முன்வந்து, நிலம் கையகப்படுத்துவதற்காக ₹5,600 கோடிக்கும் அதிகமான தொகையைச் செலவிட்டது. இதுவரை வேறு எந்த மாநிலமும் இத்தகைய பங்களிப்பை வழங்கியதில்லை. ஆனால், இதற்காக KIIFB மூலம் கேரளா நிதி திரட்டியதைக் காரணம் காட்டி, மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பைக் குறைத்து மத்திய அரசு கேரளாவைத் தண்டித்தது.

இப்போது மாநில அமைச்சரை அதிகாரப்பூர்வ விழாவிலிருந்து புறக்கணிப்பதன் மூலம், பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு கேரள மக்களை எள்ளி நகையாடுவதோடு, தனது அதிகாரத் திமிரைக் காட்டுகிறது. பா.ஜ.க-வின் இத்தகைய தரம் தாழ்ந்த அரசியலுக்கு கேரளாவின் வரலாற்றில் இடமில்லை; கேரளா மீது அவர்கள் காட்டும் இந்தப் பகைமைக்காக, மக்கள் அவர்களுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள்.

- தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #NH66 #Kerala #LDFGovernment #StateRights
CPIM Tamilnadu
Photo
பிரதமர் நரேந்திர மோடி & அவரது வெளியுறவுக் கொள்கைகளை விமர்சிக்கும் ஜனநாயகக் குரல்களை சமூக ஊடகப் பதிவுகளைத் தீவிரமாகத் தேடித் தேடி தணிக்கை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT Act) சர்ச்சைக்குரிய பிரிவான 69A ஐப் பயன் படுத்தி, பாஜக அரசு மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்த பல்வேறு முக்கிய அரசியல்வாதி கள், சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இணையப் பயனர்களின் பதிவுகள் முடக்கப் பட்டுள்ளன. ரகசியமாக நடக்கும் தணிக்கை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பிறப்பிக்கும் இந்த உத்தரவுகள் ‘கடுமையான ரகசியத்தன்மை’ விதிகளின் கீழ் வருவதால், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற புள்ளிவிவரங்களை அரசு வெளியிடுவதில்லை. இருப்பினும், எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருந்து தங்களுக்கு வந்த ‘பதிவு நீக்க அறிவிப்புகளை’ (Takedown Notices) பயனர்கள் பொதுவெளியில் பகிர்ந்ததன் மூலம் பாஜகவின் இந்த பேச்சுரிமை தணிக்கை அம்பலமாகியுள்ளது. மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அரசு உத்தரவின் பேரில் நீக்கப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என தெரிய வந்துள்ளது. இந்த நடவடிக்கைகளின் பிரபல கார்ட்டூ னிஸ்ட் சதீஷ் ஆச்சார்யா, இந்தியா-ஈரான் உறவுகள் மற்றும் அமெரிக்காவின் தலையீடு குறித்து வரைந்த இரண்டு கார்ட்டூன்கள் எக்ஸ் தளத்தில் முடக்கப்பட்டுள்ளன. ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிக்குத் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பேசிய செய்திகளைப் பகிர்ந்ததற்காக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் ஆகியோரின் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வதை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டிய ‘Honest Cricket Lover’ போன்ற அரசியல் விமர்சனக் கணக்குகளின் பதிவுகள் முடக்கப் பட்டுள்ளன.

சட்ட வல்லுநர்களின் கவலை இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ‘இண்டர்நெட் அண்ட் சொசைட்டி’ மையத்தின் இணை நிறுவனர் பிரனேஷ் பிரகாஷ், இந்தத் தணிக்கை நடவடிக்கைகள் “அரசியல மைப்பிற்கு விரோதமானது” என்று சாடியுள்ளார். அரசாங்கம் எதன் அடிப்படையில் ஒரு பதிவை நீக்குகிறது என்ற காரணத்தை வெளியிடுவதில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகி முறையிடக் கூட முடிவதில்லை. இது ஒரு ‘மறைமுகத் தணிக்கை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு பதிவை நீக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது 2-3 மணிநேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் சட்ட ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள நேரமின்றி, நிறுவனங்கள் அரசின் உத்தரவுக்கு அடிபணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #CPIM #FreedomOfSpeech #ModiGovernment #ITAct69A #SocialMediaCensorship
Media is too big
VIEW IN TELEGRAM
வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் பேக்கரி, உணவகம், தொழில்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை வலியுறுத்தி கோவையில் #CPIM வர்த்தகர்கள் கிளையின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #PriceRise #ModiGovernment More : https://youtube.com/shorts/moa4IV6nuBU
தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை #CPIM #DYFI தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவி கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். #CPIM # Thoothukudiissue
Media is too big
VIEW IN TELEGRAM
"ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டு வந்த சிலிண்டருக்கான மானியம் பாஜக அரசால் நிறுத்தப்பட்டிருக்கிறது. அந்த பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் அதிமுக, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் இதை நம்ப மாட்டார்கள்" – தோழர் கே.பாலபாரதி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #PriceRise #ModiGovernment More : https://youtu.be/5U-hleAZJUs
Media is too big
VIEW IN TELEGRAM
தாஜ்மகால் பெயர் மாற்ற திட்டமா? – தோழர் ஜான் பிரிட்டாஸ் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்! #CPIM #TajMahal #ParliamentOfIndia #IndiaPolitics More : https://youtube.com/shorts/Wh93rc-EDYQ
ஈரான் மீதான தாக்குதல்: இந்திய அடுப்பங்கரைகளில் எதிரொலிக்கும் போர்.

வீடுகளில் அடுப்பு அணைந்தால், அது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும். இந்த இக்கட்டான நிலையிலாவது இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திய மக்களின் அடுப்பு எரிவதையும், பசியால் வயிறு எரியாமல் இருப்பதையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய ஆட்சியாளர்களிடமே இருக்கிறது.

- தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #PriceRise #ModiGovernment
Media is too big
VIEW IN TELEGRAM
வீடுகளில் அடுப்பு அணைந்தால், அது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக உருவெடுக்கும். இந்த இக்கட்டான நிலையிலாவது இந்திய அரசு தனது வெளியுறவுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்திய மக்களின் அடுப்பு எரிவதையும், பசியால் வயிறு எரியாமல் இருப்பதையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய ஆட்சியாளர்களிடமே இருக்கிறது. - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #PriceRise #ModiGovernment More : https://youtu.be/nKD8e0XHu5A
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும், சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்; தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை அமைந்தகரையில் #DYFI #SFI சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #CPIM #LPGShortage #LPGCrisis #LPGPriceHike #stopthewar #ModiGovernment