CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

ஈரானில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்கள் சுமார் 3000 பேரின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. தெஹ்ரானில் இருந்த மாணவர்கள் பாதுகாப்பாக இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர்.

இஸ்ஃபஹான் மற்றும் உருமியா நகரங்களில் உள்ள மாணவர்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கிடையே தவித்து வருகின்றனர். அவர்களுக்கான மீட்பு திட்டத்தை ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

- தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #IndianStudentsInIran #WarAlert #Emergency #ProtectIndianStudents #IndiansInIran
Media is too big
VIEW IN TELEGRAM
1945ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்கா 287 போர்களை நடத்தியுள்ளது. இவற்றின் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளாலும், பொருளாதாரத் தடைகளாலும் ஆண்டுதோறும் சுமார் 5,50,000 பேர் உயிரிழக்கின்றனர்.
இத்தகையக் கொடுமைகளை அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்துவதற்குக் காரணம் அதன் ஏகாதிபத்தியக் குணமே ஆகும். - தோழர். கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #USImperialism #StopWar #USWars #iran #america #HumanRights More : https://youtu.be/z52KvpeSax8
CPIM Tamilnadu
Photo
தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் இடங்களில் குடியிருந்து வரும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்த வாடகை குறைப்பை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் தற்போதுள்ள வாடகையை 50 சதவீதம் குறைக்கவும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 75 சதவீதம் வரை குறைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு 1.7.2016 முதல் முன் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விவசாய நிலங்களுக்கு அதன் விளைச்சலில் நான்கில் ஒரு பங்கை பெறவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அரசாணை எண் 85 வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றி இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், தலைவர் வ.செல்வம், பொருளாளர் எஸ்.துரைராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் இரா.முத்தரசன், வை.சிவபுண்ணியம், நா.பெரியசாமி, பி.எஸ்.மாசிலாமணி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், வன்னியரசு உள்ளிட்டோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

மேலும், இதற்கு உறுதுணையாக இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.
ஏகாதிபத்திய குண்டுவீச்சை நிறுத்து! ஈரானிய மக்களுடன் துணைநிற்போம்!

'அணு ஆயுதம்' என்ற பெயரில் பல தசாப்தங்களாகப் பரப்பப்படும் பொய்களை நிராகரிக்கிறோம். அமைதிப் பேச்சுவார்த்தையைச் சீர்குலைப்பதே அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலின் உண்மையான நோக்கம்.

மத்திய கிழக்கைச் சுரண்டி, அமெரிக்க உலகளாவிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் முதலாளித்துவ வெறியே இந்தப் போரின் பின்னணி.

அடக்குமுறைகளாலும், அமெரிக்கக் குண்டுகளாலும் பாதிக்கப்பட்டுள்ள ஈரானிய உழைக்கும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் எங்கள் முழு ஆதரவு! கோடீஸ்வரர்களுக்கான இந்தப் போரால் அமெரிக்க உழைக்கும் வர்க்கத்திற்கு எந்தப் பயனுமில்லை.

ஏகாதிபத்திய அட்டூழியத்தை நிறுத்தவும், போருக்கான நிதியைத் தடுக்கவும் வீதிகளில் இறங்கிப் போர் எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுப்போம்!

அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி (CPUSA) #USIsraelAggression #CPUSA #StandWithIran #AntiImperialism #StopWar #NoWarOnIran #WorkingClassSolidarity #MiddleEastPeace
உலகத்தையே சுடுகாடாக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம்!

1945ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்கா 287 போர்களை நடத்தியுள்ளது. இவற்றின் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளாலும், பொருளாதாரத் தடைகளாலும் ஆண்டுதோறும் சுமார் 5,50,000 பேர் உயிரிழக்கின்றனர்.

இத்தகையக் கொடுமைகளை அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்துவதற்குக் காரணம் அதன் ஏகாதிபத்தியக் குணமே ஆகும்.

- தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #CPIM #USImperialism #StopWar #USWars #iran #america #HumanRights
எப்ஸ்டைன் கோப்புகளைப் புதைத்தல்... #EpsteinFiles #JeffreyEpstein #iran #israel #america #modi
நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை #CPIM சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.சுகந்தி ஆகியோர் அடங்கிய குழு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது. #CPIM #Nanguneri #NanguneriViolence #JusticeForVictims #நாங்குநேரி_தாக்குதல்
Media is too big
VIEW IN TELEGRAM
பிரதமர் மோடி இஸ்ரேலை கண்டிக்கத் தயாரில்லை. - தோழர் எஸ். கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Iran #israel #StopWar #HandsOffIran #AyatollahKhamenei #Lebanon More : https://youtu.be/w3baNVc6KJQ
Media is too big
VIEW IN TELEGRAM
"ஒன்றிய பாஜக அரசு, அமெரிக்காவுடன் ரகசியமாக வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளத் துடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement), இந்திய வேளாண்மையையும் விவசாயிகளையும் கடுமையாகப் பாதிக்கும்.
இதனால் இந்திய விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படுவார்கள்." - தோழர் சாமி நடராஜன், மாநிலப் பொதுச்செயலாளர் #CPIM #FreeTradeAgreement #ProtectFarmers #FarmersRights #indiausdeal More : https://youtu.be/MpKZXXqftJs
Media is too big
VIEW IN TELEGRAM
நாங்குநேரி இரட்டைக் கொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை #CPIM சார்பில் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.ஜி.பாஸ்கரன், பி.சுகந்தி ஆகியோர் அடங்கிய குழு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தது. #CPIM #Nanguneri #NanguneriViolence #JusticeForVictims #நாங்குநேரி_தாக்குதல் More : https://youtube.com/shorts/oE-Omia3N2Y
Media is too big
VIEW IN TELEGRAM
கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஒன்றரை லட்சம் விவசாயிகள் உட்பட மொத்தம் ஐந்து லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 'விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்' என்று வாக்குறுதி அளித்தார், ஆனால் 11 ஆண்டுகளாக அது அமல்படுத்தப்படவில்லை. 'விவசாயிகளைக் கடன் வலையிலிருந்து விடுவிப்போம்' என்று சொன்னதும் நடக்கவில்லை. - தோழர் டி.ரவீந்திரன் மாநில தலைவர் #CPIM #FreeTradeAgreement #ProtectFarmers #FarmersRights #indiausdeal More: https://youtu.be/_USEyAQzhSI
இறையாண்மை மீதான தாக்குதலை ஏற்க முடியாது! அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்பு!

இறையாண்மை கொண்ட ஈரான் மீது ராணுவ பலத்தைப் பயன்படுத்துவதையும், மக்கள் மீதான தாக்குதல்களையும் வியட்நாம் வன்மையாக எதிர்க்கிறது.

சம்பந்தப்பட்ட நாடுகள் ஐ.நா. சாசனத்தையும், பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் முழுமையாக மதிக்க வேண்டும்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைவது குறித்து ஆழ்ந்த கவலை அளிக்கின்றன. நிலைமையை மேலும் மோசமாக்கும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள்.

உலகளாவிய அமைதி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்ய, நாடுகள் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்.

இந்தப் போர் அப்பாவிப் பொது மக்களுக்கும், உலகளாவிய அமைதிக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

வீர வியட்நாம் #Vietnam #StandWithIran #StopWar #RespectSovereignty #USIsraelAggression #MiddleEastPeace #AntiImperialism
Media is too big
VIEW IN TELEGRAM
1945ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமெரிக்கா 287 போர்களை நடத்தியுள்ளது. இவற்றின் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அமெரிக்காவின் வர்த்தகத் தடைகளாலும், பொருளாதாரத் தடைகளாலும் ஆண்டுதோறும் சுமார் 5,50,000 பேர் உயிரிழக்கின்றனர். இத்தகையக் கொடுமைகளை அமெரிக்கா தொடர்ந்து நிகழ்த்துவதற்குக் காரணம் அதன் ஏகாதிபத்தியக் குணமே ஆகும். - தோழர் கே.சாமுவேல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WarKills #20MillionKilled #USImperialism #StopWar #iran #america More : https://youtu.be/z52KvpeSax8
இந்திய விவசாயத்தை அடகு வைக்கும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்!

மார்ச் 9: சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) & மத்திய தொழிற்சங்கங்களின் பிரம்மாண்ட கண்டனப் போராட்டம்!

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமான மக்கள் விரோதச் சட்டங்களான மின்சாரத் திருத்தச் சட்டம் விதை மசோதா

நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்

100 நாள் வேலைத் திட்டத்தை (MNREGA) முடக்கும் 'கிராம்-ஜி' (Gram-G) திட்டம் ஆகியவற்றை உடனே ரத்து செய்!

அனைத்துப் பயிர்களுக்கும் லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டும்.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் முறையான பயிர் காப்பீட்டுத் திட்டம் வேண்டும்.

விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு ஓய்வூதியம் அளிக்க வேண்டும். #SaveFarmers #SKM #DelhiChalo #FarmersProtest2026
அதிபர் டிரம்பின் எரிசக்தி கொள்கையானது, எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை இதுவரை இல்லாத உச்ச நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் எண்ணெய் விநியோகம் தடையின்றி தொடர்வதை உறுதி செய்வதற்காக, இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு, அமெரிக்க நிதி அமைச்சகம் 30 நாட்கள் கால அவகாசம் கொண்ட தற்காலிக விலக்கை வழங்குகிறது.

கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய்க்கான பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது அனுமதி அளிப்பதால், திட்டமிட்டே எடுக்கப்பட்ட இந்த குறுகிய கால நடவடிக்கை, ரஷ்ய அரசாங்கத்திற்கு எந்தவிதமான பெரிய நிதிப் பயன்களையும் ஏற்படுத்தாது.

இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கியமான பங்காளியாகும். எனவே, புதுதில்லி தனது அமெரிக்க எண்ணெய் கொள்முதலை அதிகரிக்கும் என்று நாங்கள் முழுமையாக எதிர்பார்க்கிறோம்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தை ஈரான் பணயக் கைதியாக மாற்ற முயற்சிப்பதால் ஏற்படும் நெருக்கடியை, இந்த இடைக்கால நடவடிக்கை தணிக்கும்.

- தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #Trump #RussiaOil #IndiaUSRelations #OilAndGas #IranCrisis