CPIM Tamilnadu
881 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
"முஸ்லீம் சிறுபான்மையினரைக் குறி வைத்து அழிக்க வேண்டும் என்ற வெளிப்படையான அச்சுறுத்தலை இந்திய உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொண்டு, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்."

- தோழர் எம்.ஏ.பேபி பொதுச் செயலாளர் #CPIM #Assam #ProtectMinorities #HimantaBiswaSarma #MuslimLivesMatter
கடந்த மாதம் அமெரிக்க துணைத்தூதரகம் இருக்கும் சாலையில் கூட கூட்டம் சேர்க்கக்கூடாது என்று கைது செய்து அலைக்கழித்தது சென்னை மாநகர காவல்துறை.

இன்று சாம்சங் தொழிலாளர்களின் பிரச்சனைகள் குறித்து தென்கொரிய தூதரக அதிகாரிகளைச் சந்திக்கச் சென்ற #CITU தலைவர்களை அராஜகமாக கைது செய்திருக்கிறது.

வியன்னா உடன்படிக்கையின்படி, தூதரகங்கள் சர்வதேச சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த உடன்படிக்கையின் படி தூதரகசாலைகளும், சென்னை மாநகர காவல்துறையும் இந்திய சட்டங்களுக்கு அப்பாற்பட்டதாக மாறின?

- தோழர் சு.வெங்கடேசன்,எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SamsungWorkers #WorkersRights #ChennaiPolice #PoliceExcess #CivilLiberties
Media is too big
VIEW IN TELEGRAM
அனைத்து விதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கும், சுரண்டல்களுக்கும் எதிராக நின்று, உலக மக்களின் விடுதலைக்காகப் பாடுபட்டவர் கார்ல் மார்க்ஸ். மனிதகுலத்தின் விடுதலையே தனது வாழ்நாள் முழுவதும் ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்ட அந்தத் தலைவருக்காக, தமிழ்நாடு அரசு சிலை நிறுவியிருப்பது ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும். - தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் #CPIM #KarlMarx #MarxStatue #Marxism #TamilNadu #Socialism #காரல்மார்க்ஸ் #RSSReject #CPIMMarxStatue #LeftPolitics #TamilNaduPolitics More: https://youtube.com/shorts/k2cMWQMx2Ik
கார்ப்பரேட் நண்பர்களுக்கு மோடி அரசின் சலுகை மழை; சாமானிய மக்கள் தலையில் வரிச்சுமை!

மோடி அரசின் 10 ஆண்டு கால 'கார்ப்பரேட் ஆதரவு' அரசியலை அம்பலப்படுத்தும் அதிர்ச்சித் தகவல்கள்:

கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் பெருநிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வரிச் சலுகைகளால் அரசுக்கு ₹7.41 லட்சம் கோடிவருவாய் இழப்பு. 2014 இல் 61.65% ஆக இருந்த கார்ப்பரேட் வரியின் பங்கு, தற்போது 44.32% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

சாமானியர்களின் அத்தியாவசியப் பொருட்கள் மீது GST விதிக்கும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30% லிருந்து 15-22% ஆகக் குறைத்துள்ளது. "மக்களின் கல்விக்கும், சுகாதாரத்திற்கும் பயன்பட வேண்டிய ₹7.41 லட்சம் கோடி மக்கள் பணம், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது."

- தோழர் ஆர்.சச்சிதானந்தம், எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #TaxInjustice #ModiGovernment #GSTBurden #CorporateTaxCuts
பிரதமர் அலுவலகத்தின் ஏமாற்று வேலை!

PM_Cares தனியார் நிதியமாம் நாடாளுமனறம் அதை விவாதிக்க முடியாதாம். அப்போ,ஒன்றிய அரசின் PIB ஏன் 28/3/21 இல் விளம்பரம் வெளியிட்டது?

தனியாரின் வங்கி கணக்கு விபரங்களை ஏன் PIB விளம்பரப்படுத்தியது? தனியார் நிதியத்திற்கு பிரதமர் பெயரை வைக்கலாமா?

- தோழர் க.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் #CPIM #PMCARES #PublicFunds #QuestionPMCARES #AnswerInParliament
விழுப்புரம் மாவட்டம், சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தில் சாதி மறுப்பு காதல் திருமணம் செய்த தலித் கிறிஸ்தவர் சமூகத்தைச் சேர்ந்த தேவ ஜெசிபிரியா ஆணவப் படுகொலையைக் கண்டித்தும், சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக விரைந்து சட்டம் இயற்ற வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் எனவும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் #TNUEF சார்பில் விழுப்புரம் நகராட்சி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, துணைப் பொதுச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் எம்.கே.முருகன், தலைவர் எஸ்.முத்துக்குமரன் மற்றும் #DYFI மாவட்ட செயலாளர் எஸ்.அறிவழகன், #AIDWA மாவட்ட செயலாளர் இலக்கிய பாரதி உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.
Media is too big
VIEW IN TELEGRAM
"திருப்பியடித்த வரலாற்றை இப்போது சொல்கிறோம்" – பகுதி 3 விரைவில்… #CommunistMovement #Kilvenmani #ClassStruggle #CommunistLeader #Tamilselvan #GRamakrishnan #திருப்பியடித்தவரலாறு
More: https://youtu.be/4NLGRLybXBU
பகுதி 1 : https://youtu.be/W1vWw3dCESI
பகுதி 2 : https://youtu.be/3XQgNd3u2lY
"திருப்பியடித்த வரலாற்றை இப்போது சொல்கிறோம்" #CommunistMovement #Kilvenmani #ClassStruggle #CommunistLeader #Tamilselvan #GRamakrishnan #திருப்பியடித்தவரலாறு

More: https://youtu.be/4Jz8WG74Ihc

பகுதி 1 : https://youtu.be/W1vWw3dCESI
பகுதி 2 : https://youtu.be/3XQgNd3u2lY
அங்கன்வாடி, ஆஷா பணியாளர்கள், விவசாயக் கூலிகள் போன்ற கோடிக்கணக்கான உழைப்பாளர்களுக்கு பாதுகாப்பில்லாத பாஜக அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை தூக்கி எறிவோம்!

பிப்ரவரி 12 அகில இந்திய வேலை நிறுத்தம் #LabourRightsMatter #SaveWorkersRights #WorkersUnity #StopLabourExploitation #AntiWorkerBJP #RemoveNewLabourCode #February12GeneralStrike #AllIndiaStrike #WorkersStrikeFeb12
1
உதவித் தொகையை உயர்த்தக் கோரி செவ்வாயன்று சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதில் ஊனமுற்றோர் உரிமைக்கான தேசிய மேடையின் அகில இந்திய தலைவர் எஸ்.நம்புராஜன், மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தியர்களை நாடு கடத்தியது முதல் வர்த்தக வரி விதிப்பு வரை அனைத்தையும் சகித்துக் கொள்ளும் பிரதமர், நாட்டின் இறையாண்மையைக் காக்க விளக்கம் அளிப்பாரா?. இது தனிநபர் விவகாரமல்ல; தேசத்தின் இறையாண்மை! பிரதமர் மவுனம் கலைப்பது எப்போது?. More: https://2cm.es/1ovTr
#StopTrumpIntervention #SaveIndianSovereignty #ModiAnswerable #Theekkathir #CPIM
பாசிசத்திற்கு இடமில்லை! போர்ச்சுக்கலில் மலர்ந்தது இடது வசந்தம்!

ஜனாதிபதியாகிறார் அன்டோனியோ செகுரோ!

66.82% வாக்குகள் பெற்று அன்டோனியோ செகுரோ அபார வெற்றி. வலதுசாரி வேட்பாளர் வென்சுரா 33.18% வாக்குகளுடன் படுதோல்வி.

ஐரோப்பாவில் தீவிர வலதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், போர்ச்சுக்கலில் இடதுசாரிகள் பெற்றுள்ள இந்த வெற்றி உலக அரசியலில் மிக முக்கியமானது.

போர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி சக்திகளின் ஒருங்கிணைந்த ஆதரவுடன் இந்த இமாலய வெற்றி சாத்தியமானது. மொத்தமுள்ள 308 நகராட்சிகளில் 303 இடங்களை செகுரோ கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

2025 நாடாளுமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்த சோசலிஸ்ட் கட்சி, இப்போது ஜனாதிபதி தேர்தலில் கம்பீரமாக மீண்டெழுந்துள்ளது. #PortugalElection #LeftVictory #AntonioSeguro #SocialismWins
கொச்சியில் ரூ 449 கோடியில் அதிநவீன புற்றுநோய் ஆராய்ச்சி மையம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்!

கேரள மாநிலம் கொச்சியில் ரூ. 449 கோடி செலவில் கட்டப்பட்ட உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் (CCRC) புதிய கட்டடத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் திறந்து வைத்தார். எர்ணாகுளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 12.63 ஏக்கர் பரப்பளவில், 9 அடுக்குகளுடன் இந்த பிரம்மாண்ட மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

6.35 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இக்கட்டடத்தில், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக 12 சிறப்பு அரங்குகள் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புற்றுநோய் குறித்த மேம்பட்ட ஆராய்ச்சிகளுக்காக 10,000 சதுர அடி பரப்பளவில் தனிப்பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 360 படுக்கைகள் கொண்ட இந்த மையத்தில், முதற்கட்டமாக 100 படுக்கைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. சிறந்த சூழலியல் வடிவமைப்பிற்காக ‘எட்ஜ்’ (EDGE) சான்றிதழைப் பெற்ற கேரளத்தின் முதல் மருத்துவமனைக் கட்டடம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. #CochinCancerCentre #PublicHealthcare #HealthcareForAll #CancerResearch #LDFGovernment