CPIM Tamilnadu
878 subscribers
16.2K photos
727 videos
321 files
5.8K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
Media is too big
VIEW IN TELEGRAM
பிப்- 06: மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களின் சிலை திறப்பு. தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள்! #KarlMarx #MarxStatue #Marxism #TamilNadu #Socialism #காரல்மார்க்ஸ் #Chennai More : https://youtu.be/gBlfioppR_I
Media is too big
VIEW IN TELEGRAM
மார்க்ஸ் சிலை திறப்புக்கு செயல் வடிவம் கொடுத்தது #CPIM. தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர்,CPIM #KarlMarx #MarxStatue #Marxism #TamilNadu #Socialism #காரல்மார்க்ஸ் #RSSReject #CPIMMarxStatue #LeftPolitics #TamilNaduPolitics More: https://youtu.be/fllLHLklfv8
ரஷயாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டதா என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் கேட்டபோது, "எனக்குத் தெரியாது, ஜெய்சங்கரிடம் கேளுங்கள்" என்கிறார்.

அதே கேள்வியை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கேட்டால், "எனக்குத் தெரியாது, பியூஷ் கோயலிடம் கேளுங்கள்" என்கிறார்.

எதிர்கட்சிகளின் கேள்விகளை அல்ல.. ஆளுங்கட்சியின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமலே ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறது மோடி அரசு. - தோழர் சு.வெங்கடேசன்,எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #வெளியுறவுத்துறைஅமைச்சகம் #MinistryOfExternalAffairs
சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்) விடுதலை கட்சிகள் சார்பிலான கூட்டறிக்கை

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து பிப்ரவரி 12 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்! தமிழகத்தில் வெற்றிகரமாக்கிட அனைத்துப் பகுதி மக்களுக்கும் வேண்டுகோள்!! More: https://shorturl.at/BG3Wy
நிர்வாக குளறுபடிகள் காரணமாக இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2,2a தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு தேர்வுக்கு தயாரான நிலையில் ரத்து என்பது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வை நடத்துவதில் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் தேர்வு எப்போது நடத்தப்படும் என்பதை உரிய அவகாசத்துடன் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிக்க வேண்டும். இனிமேல் இப்படியொரு தவறு நடக்காமல் அரசு பார்த்து கொள்ள வேண்டும். தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர் #cpim #TNPSC #TNPSCGroup2 #TNPSCGroup2A #TNPSCExam #ExamCancellation #TamilNaduGovernment #StudentsFuture
CPIM Tamilnadu
Photo
வன்முறை பற்றி பேசலாமா இந்து முன்னனணி? 1998 நினைவிருக்கா?

துப்பாக்சிச் சூட்டில் காயம்பட்டு சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு குற்றுயிராக கொண்டுவரப்பட்டவர்களை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற "அமைதிப் புறாக்கள்" யார்?

"எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர். அது விருப்பம் மட்டுமே! ஆதிக்க வர்க்கங்கள் பறித்துக்கொண்ட அனைவருக்குமான பொன்னுலகை அடைய தத்துவம் மூலம் வழிகாட்டியவன் மார்க்ஸ்.

செக்கெது சிவலிங்கமெது என்று தெரியாமல் பிதற்றுவது ஏன்? எமக்கு யாதும் ஊரே! யாவரும் கேளிர்.

வெறுப்பை விதைத்து வன்முறை விதைக்கும் கூட்டத்திற்கு மார்க்ஸ் என்றும் சிம்ம சொப்பனம்தான்.

அறிவில், தத்துவத்தில்,அன்பில் நல்லது கெட்டது சொல்லி மார்க்ஸ் மறுக்க முடியாதென்பதால் நாடு சொல்லி பழிக்க முயல்கிறீர்கள். அவன் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பவன். அதனால்தான் உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடச் சொன்னான். உள்ளூர் தொழிலாளர்களையே மதம் சொல்லி பிரிக்கும் உங்களுக்கு அவனருமை எப்படித் தெரியும்.
அவனை நாடு கடத்திக்கொண்டே இருந்தார்கள். அவனது தத்துவம் கண்டங்கள் தாண்டி பரவிக்கொண்டே இருந்தது.
நீங்கள் அவனை வசைபாடுங்கள். உழைக்கும் மக்கள் அவன் புகழ் பாடுவார்கள்.

தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு ஊறுப்பினர் #CPIM #Marxism #TamilNadu #Socialism #காரல்மார்க்ஸ் #RSSReject #CPIMMarxStatue #LeftPolitics #TamilNaduPolitics
சாகித்ய அகாடமி விருதுகள் நிறுத்தி வைக்கப்பட்டது குறித்த எனது கடிதத்திற்கு தேவையான நடவடிக்கைகளை விதிகளின் படி மேற்கொள்ள பரிந்துரைத்திருப்பதாக ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் பதிலளித்திருக்கிறார்.

கம்பிகட்டும் கதையெல்லாம் சொல்லும் கஜேந்திர சிங் அவர்களே உங்கள் அமைச்சகத்தின் தலையீடே விதிகளுக்கு எதிரானது தான். எனவே உங்களின் தலையீட்டை திரும்பப்பெறுக. நடுவர்குழு முடிவுகளை அறிவித்திடுக.


- தோழர் சு.வெங்கடேசன்,எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SahityaAkademiAwards #சாகித்யஅகாடமி_விருதுகள் #UnionMinistryOfCulture_Interference #ஒனறியகலாச்சாரத்துறை_தலையீடு
உத்தரகண்ட் மாநிலம் கோட்த்வாரில், குடியரசு தினத்தன்று பஜ்ரங் தள் குண்டர்கள் தலைமையிலான கும்பலால் மிரட்டலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளான துணிக்கடை உரிமையாளர் முஹம்மது பாபாவை, #CPIM மத்தியக்குழு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ்.எம்.பி., நேரில் சந்தித்தார். மேலும், முஹம்மது பாபாவை மீட்பதற்காக வீரத்துடன் முன்வந்து, அந்த வகுப்புவாத கும்பலை எதிர்கொண்டு விரட்டியடித்த ஜிம் பயிற்சியாளர் தீபக்கையும் தோழர் பிரிட்டாஸ் சந்தித்தார்.

வாழ்வாதாரத்திற்காக டீ விற்பனை செய்து வரும் தீபக்கின் தாயார் வழங்கிய தேநீரை அருந்திய அவர், தீபக்கின் குடும்பத்தினரைச் சந்தித்து உரையாடினார். வகுப்புவாத சக்திகளின் மிரட்டலால் தற்போது ஆள்நடமாட்டமின்றி இருக்கும் தீபக்கின் ஜிம்மிற்குச் சென்று, அங்கு அவர் உறுப்பினராகவும் சேர்ந்தார்.

கலவரக்காரர்களைப் பாதுகாத்துவிட்டு, தீபக் மீது வழக்குப் பதிவு செய்துள்ள கோட்த்வார் காவல் நிலையத்தில் தோழர் பிரிட்டாஸ் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். பாசிச குண்டர்களுக்கு எதிராகப் அச்சமின்றி நின்ற 'முஹம்மது' தீபக்கைப் பாராட்டிய அவர், இதுபோன்ற மனிதர்கள்தான் நாட்டின் உண்மையான நம்பிக்கையும் பலமும் என்று குறிப்பிட்டார்.
சாம்சங் கம்பெனி தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக, தென்கொரியத் துணைத் தூதரகத்தில் மனு கொடுக்க வந்த #CITU தலைவர்கள் அ. சவுந்தரராசன், இ. முத்துக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். #CPIM #SamsungWorkers #WorkersStrike #FightForRights #WorkersRights
"காகிதமில்லா அவை குறித்துப் பெருமிதம் கொள்ளும் சபாநாயகர், ஜனநாயகம் இல்லாத அவையாக நாடாளுமன்றம் மாறுவது குறித்துச் சிந்திக்கட்டும்!" #CPIM #OmBirla #EpsteinFiles #IndoUSTradeDeal #Parliament #TradeDeal More: https://shorturl.at/N4JCb
சாம்சங் தொழிலாளர் போராட்ட ஆவணப்பட திரையிடல்...

காம்ரேட் டாக்கீஸ் குழுவினர் தயாரித்துள்ள, சாம்சங் தொழிற்சங்கம் குறித்த "37 DAYS: THE RISE OF SAMSUNG UNION" என்ற ஆவணப்படம் நேற்று காஞ்சிபுரத்தில் சாம்சங் சங்க நிர்வாகிகள் மற்றும் சிஐடியு மாநில நிர்வாகிகள் திரையிடல் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் #CITU மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், மாநிலத் துணைத் தலைவர் அ. சவுந்தரராசன், மற்றும் சிபிஐ(எம்) மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே. சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். #CPIM #THERISE OFSAMSUNGUNION #SamsungWorkers #WorkersStrike #FightForRights #WorkersRights