CPIM Tamilnadu
874 subscribers
16.2K photos
735 videos
321 files
5.81K links
Official Telegram Channel of Communist Party of India (Marxist) - TamilNadu State Committee.
Download Telegram
வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP - Minimum Support Prices) தொடர்பான கொள்கை இருந்தாலும், சட்டப்பூர்வமாக அதை உறுதிப்படுத்த திட்டம் எதுவும் ஒன்றிய அரசிடம் இல்லையென ஆர்.சச்சிதானந்தம்.எம்.பி. கேள்விக்கு மோடி அரசு மழுப்பல் பதில்! #CPIM #Farmers #MSP #ModiFailed #Parliament #WinterSession2025
சங்கபரிவார் கும்பலுக்கு ஆன்மிகத்திலோ, இந்துக்களின் நலனிலோ ஒரு போதும் நம்பிக்கை கிடையாது. இந்துத்துவத்திற்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் கிடையாது! இந்துத்துவம் வேறு இந்து மதம் வேறு! இந்துத்துவம் என்பது அரசியல் திரட்டலுக்கான ஏற்பாடு. எந்த இந்துக்களுக்காக சங்கபரிவார் கும்பல் போராடுகிறது? நிலமற்ற இந்துக்களுக்காவா? வீடற்ற இந்துக்களுக்காவா? வேலையற்ற இந்துக்களுக்காவா? இந்து இந்து என்று சொல்லி இந்துக்களை ஏமாற்றுவதை வேலையாக பாஜக, சங்கபரிவார் செய்து வருகிறது. இவர்களின் நோக்கம் கலவரம், வெறுப்பை தூண்டி காலூன்றுவது, ஆட்சியைப் பிடிப்பது, இறுதியாக மக்களை மிக மோசமாக அடிமைப்படுத்துவது. இவர்கள் உண்மையில் பக்தர்கள் இல்லை, பக்தியை வியாபாரம் செய்கிறவர்கள், அதில் அரசியல் ஆதாயம் தேடுகிறவர்கள் - தோழர் க.கனகராஜ், மாநில செயற்குழு #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam #RSS More: https://youtu.be/sCBVDlWzxtw
மதவாத சக்திகளுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், கலவரத்தை தூண்ட நினைக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராக #SFI #DYFI #AIDWA புதுக்கோட்டை மாவட்ட குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.
Media is too big
VIEW IN TELEGRAM
மதவாத சக்திகளுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும், கலவரத்தை தூண்ட நினைக்கும் மதவாத சக்திகளுக்கு எதிராக #SFI #DYFI #AIDWA புதுக்கோட்டை மாவட்ட குழுக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அண்ணாசிலை அருகில் நடைபெற்றது.
"கார்த்திகை தீபம்" நேற்றே முடிந்து விட்டது. இன்று நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு என்ன பெயர். எதற்கெடுத்தாலும் "ஆகம விதி என்று கொந்தளிக்கும் இந்து மத காவலர்கள் இப்போது என்ன சொல்வார்கள் என்பதை அறிய தமிழக மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனென்றால் குறிப்பிட்ட நட்சத்திரம், குறித்த நேரத்தில்தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று இவ்வளவு காலமும் கூறி வந்தார்கள் எது உண்மை? தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam #RSS
Media is too big
VIEW IN TELEGRAM
புகையிலை, பான் மசாலா, சார்த்து, சாராயம், போன்றவற்றிற்கு அதிகமான வரி விதிப்பதின் மூலம் அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க முடியாது. இதன் மீது தடை விதிக்க வேண்டும்.

தேச பாதுகாப்பு தலைநகரிலேயே கேள்விக்குள்ளாகி இருக்கிறது. சிந்தூர் ஆபரேஷன் மூலம் தீவிரவாதத்தை முற்றிலும் ஒழித்து விட்டதாக உள்துறை அமைச்சர் சொன்ன பின்புதான் இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது. கலவரத்தை தூண்டும் தீர்ப்புகளை வழங்கும் நீதிபதிகளின் மீது ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? - தோழர் ஆர்.சச்சிதானந்தம், எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam #Parliament #WinterSession2025 #Judge More: https://youtu.be/rNc2I5MEGCU
Media is too big
VIEW IN TELEGRAM
திருப்பரங்குன்றத்தில் திரண்டு இருந்தவர்கள் முருக பக்தர்கள் அல்ல சங்பரிவார் பயங்கரவாதிகள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கியிருக்கும் தீர்ப்பு சட்டவிரோதமானது. அதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாது. - தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam #RSS More: https://youtu.be/1I7rubak2sc
மிகப் பெரும்பான்மையான அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை மேற்படி 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களும் நிராகரிக்கிறது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டத்தைக் கண்டித்து டிசம்பர் 8 தமிழ்நாடு முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம் எல்) கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய சமூகத்தின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே ஆளும் வர்க்கத்தின் இத்தகைய தாக்குதலை முறியடிக்க முடியும்.

பொது மக்களும், தொழிலாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட கேட்டுக் கொள்கிறோம். #LaboursLaw #WorkersStrike #WorkersRights
திருப்பரங்குன்றம் பிரச்சனை தொடர்பாக #CPIM எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம்! #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam #Parliament #WinterSession2025
நவீன இயந்திரமயமாக்கல் காலத்தில் வேலை நேரத்தை குறைத்து, கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக வேலைநேர வரம்பை 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மூலம் தளர்த்துகிறது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டத்தைக் கண்டித்து

டிசம்பர் 8 தமிழ்நாடு முழுவதும் சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ(எம் எல்) கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்திய சமூகத்தின் பெரும்பான்மையான உழைக்கும் வர்க்கம் ஒன்றினைந்து போராடுவதன் மூலமே ஆளும் வர்க்கத்தின் இத்தகைய தாக்குதலை முறியடிக்க முடியும்.

பொது மக்களும், தொழிலாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கண்டனக் குரலெழுப்பிட கேட்டுக் கொள்கிறோம். #LaboursLaw #WorkersStrike #WorkersRights
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கவும், கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் எதிரே #CPIN மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
எடப்பாடி அவர்களே பிஜேபி எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது தான் உங்கள் கொள்கையா?

எடப்பாடி அண்ணே! நீதிமன்ற தீர்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். திருப்பரங்குன்றம் மலையில் புதிதாக ஒரு இடத்தில் ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தையும், அதன் நோக்கம் முருக பக்தி மட்டும் தானா என்பதையும் நீங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும், அதற்கு தயாரா?

பிஜேபி எதைச் செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது தான் உங்கள் கொள்கையா?

தோழர் பெ. சண்முகம், மாநிலச் செயலாளர் #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam
Media is too big
VIEW IN TELEGRAM
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நடவடிக்கை எடுக்கவும், கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்றிய சங்பரிவார் கும்பல் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் எதிரே #CPIM சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #Thirupparankundram #KarthigaiDeepam More: https://youtube.com/shorts/MoC7q8FOVZQ
திருப்பரங்குன்றம் விவகாரம்; இது இந்து - முஸ்லிம் பிரச்சனை கிடையாது. இது இந்துத்துவக் கலவரக்காரர்களுக்கும், இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்று நினைக்கும் மக்களுக்குமான பிரச்சனை. நீங்கள் ஏமாற்றுக்காரர்கள், அயோத்தி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள் நீங்கள். இறைநம்பிக்கைகளில் ஒளிந்துகொண்டு கலவரம் செய்வதுதான் பாஜக சங்பரிவாரின் வேலை. சங்பரிவாரின் வேலையை நீதிபதியாக ஜி.ஆர்.சுவாமிநாதன் செய்கிறார் - தோழர் க. கனகராஜ், மாநில செயற்குழு, #CPIM #Thirupparankundram #KarthigaiDeepam #RSS More: https://youtu.be/N2eETUm2NJc
எண்களின் விளையாட்டு! More: https://shorturl.at/5HlWO
ஊரக வேலையில் முன்மாதிரியாக கேரளம் 55.41 கோடி வேலை நாட்கள் வழங்கி அசத்தல்

ஒன்றிய அரசின் நிதி தொடர்ந்து குறைக்கப்பட்ட போதிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆளும் கேரளம் திகழ்கிறது.

தற்போது 19.44 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உள்ளன. 2020-21 முதல், 53.5 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு ரூ.17,216.57 கோடி ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

முழுமையாக மாநில அரசால் செயல்படுத்தப்படும் அய்யன்காளி நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில், ஐந்து ஆண்டுகளில் 1.91 கோடி வேலை நாட்கள் உருவாக்கப் பட்டுள்ளன. நகராட்சிகள் ரூ.634.01 கோடியை செலவிட்டுள்ளன. 3.25 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளன. #FutureReady #LDF #LDFGovt #Kerala More: https://shorturl.at/Tp7oF
வடகிழக்கு பருவமழை மற்றும் டித்வா புயல் தொடர் மழையில் வேளாண் பயிர்கள் பாதிப்பிற்கு நிவாரணத் தொகையை உயர்த்தி உடனடியாக வழங்கக் கோரி, தலைமை செயலாளர் மற்றும் வேளாண்மை துறை செயலாளர் அவர்களையும் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் டி.ரவீந்திரன், மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில பொருளாளர் கே.பி.பெருமாள், மாநில செயலாளர் பி.பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி, மாநில துணைத் தலைவர் கே.உலகநாதன் Ex.MLA உள்ளிட்டோர் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.