*நபி ﷺ அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள்*
01) முஸ்லிம்களில் யார் சிறந்தவர்?
"அல்லாஹ்வின் தூதர் அவர்களே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரே சிறந்தவராவார்"
⛳அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி : 11.
01) முஸ்லிம்களில் யார் சிறந்தவர்?
"அல்லாஹ்வின் தூதர் அவர்களே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?" என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரே சிறந்தவராவார்"
⛳அபூ மூஸா(ரலி) அறிவித்தார்
ஸஹீஹ் புகாரி : 11.
*நபி ﷺ அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள்*
02) ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளை நாம் எவ்வாறு சம்பாதித்துக் கொள்ளலாம்?
(( "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,
(( "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) தஸ்பீஹ் செய்வார், அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" )) என்று பதிலளித்தார்கள்.
⛳அறிவிப்பாளர்: ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹூ)
நூல்: முஸ்லிம் : 5230
02) ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளை நாம் எவ்வாறு சம்பாதித்துக் கொள்ளலாம்?
(( "எங்களில் ஒருவர் (ஒவ்வொரு நாளும்) ஆயிரம் நன்மைகளை எவ்வாறு சம்பாதிக்க முடியும்?" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் ஒருவர் கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,
(( "அவர் (ஒவ்வொரு நாளும்) நூறு முறை ("சுப்ஹானல்லாஹ்" என்று கூறித்) தஸ்பீஹ் செய்வார், அவருக்கு ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன" )) என்று பதிலளித்தார்கள்.
⛳அறிவிப்பாளர்: ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு அன்ஹூ)
நூல்: முஸ்லிம் : 5230
*நபி ﷺ அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள்*
03) அதிக நன்மைகளை பெற்றுத் தரும் தர்மம் எது?
((ஒருவர் நபி ﷺ அவர்களிடம் வந்து,
"இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?" எனக் கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,
(( நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும்.
எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். )) என்று பதிலளித்தார்கள்.
⛳அறிவிப்பாளர்: அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹூ)
நூல்: புஹாரி : 1419
03) அதிக நன்மைகளை பெற்றுத் தரும் தர்மம் எது?
((ஒருவர் நபி ﷺ அவர்களிடம் வந்து,
"இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?" எனக் கேட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,
(( நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும்.
எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். )) என்று பதிலளித்தார்கள்.
⛳அறிவிப்பாளர்: அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரழியல்லாஹு அன்ஹூ)
நூல்: புஹாரி : 1419
*நபி ﷺ அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள்*
04) அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய உரிமையும், அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய உரிமையும் என்ன?
(( "முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னிடம் வினவினார்கள்.
நான் "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள்" என்று கூறினேன்.
*அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,*
மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும் ))
என்று பதில் கூறினார்கள்.
⛳அறிவிப்பாளர்: முஆத் (◌ؓ)
நூல்: புஹாரி : 2856
04) அடியார்கள் அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய உரிமையும், அடியார்களுக்கு அல்லாஹ் செய்ய வேண்டிய உரிமையும் என்ன?
(( "முஆதே! அல்லாஹ்வுக்கு மக்களின் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் என்னிடம் வினவினார்கள்.
நான் "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிந்தவர்கள்" என்று கூறினேன்.
*அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,*
மக்களின் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும் ))
என்று பதில் கூறினார்கள்.
⛳அறிவிப்பாளர்: முஆத் (◌ؓ)
நூல்: புஹாரி : 2856
*நபி ﷺ அவர்கள் பதிலளித்த நாற்பது கேள்விகள்*
05) நம்மில் யாராவது தமது செல்வத்தை விட வாரிசுகளின் செல்வத்தை விரும்புவோமா?
"உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அவர்களது தோழர்களிடம் வினவினார்கள்.
அதற்கவர்கள்:-
"இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்" என்று பதிலளித்தார்கள்.
*அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,*
(( அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அல்லாஹ்வின் பாதையில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும் ))
என்று பதில் கூறினார்கள்.
⛳அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (◌ؓ)
நூல்: புஹாரி : 6442
05) நம்மில் யாராவது தமது செல்வத்தை விட வாரிசுகளின் செல்வத்தை விரும்புவோமா?
"உங்களில் யாருக்காவது தம் செல்வத்தை விடத் தம் வாரிசுகளின் செல்வம் விருப்பமானதாக இருக்குமா?" என்று அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் அவர்களது தோழர்களிடம் வினவினார்கள்.
அதற்கவர்கள்:-
"இறைத்தூதர் அவர்களே! எங்கள் அனைவருக்குமே (வாரிசுகளின் செல்வத்தை விட) எங்களின் செல்வமே விருப்பமானதாகும்" என்று பதிலளித்தார்கள்.
*அதற்கு அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள்,*
(( அவ்வாறாயின், ஒருவர் (இறப்பதற்கு முன் அல்லாஹ்வின் பாதையில்) செலவிட்டதே அவரின் செல்வமாகும். (இறக்கும் போது) விட்டுச் செல்வது அவரின் வாரிசுகளின் செல்வமாகும் ))
என்று பதில் கூறினார்கள்.
⛳அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (◌ؓ)
நூல்: புஹாரி : 6442
அல்குர்ஆனில்_இடம்பெறும்_சிறப்புமிக்க_அத்தியாயங்கள்_01.pdf
464.6 KB
Document from azharabbasy