Seithikathir - Tamil News
14.1K subscribers
185 photos
50 videos
867 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
லல்லு பிரசாத் யாதவின் மகன்கள் மகள்கள் மற்றும் ராம் விலாஸ் பஸ் வானுடைய சகோதரர்கள் மகன்கள்
மகாராஷ்டிராவில் சரத் பவார் மகன் மகள்கள் மற்றும் குடும்பத்தினர்
சிவசேனா சிவசேனா முழுவதும் குடும்பம் தான். கர்நாடகாவில் தேவகவுடா குமாரசாமி பிள்ளைகள் ஆந்திராவில் என் டி ஆர் சந்திரபாபு நாயுடு ஒய் எஸ் ஆர் ராஜசேகர ரெட்டி அவரது மகள் காங்கிரஸ் தலைவர் மகன் ஜெகநாத ரெட்டி
கேரளாவில் பினராய் விஜயன் அவரது மருமகள்

இங்கே தமிழ்நாட்டைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஸ்டாலின் கனிமொழி உதயநிதி மகன் மகள் சகோதரி பேரன் என மூன்று தலைமுறைக் கன்னுக் குட்டிகள். போதாதற்கு முரசொலி மாறன் குடும்பததின் தயாநிதி கலாநிதி பிள்ளைகள். பாமக ராமதாஸ். ராமதாஸ் மகன் மருமகள் மகள். தமிழ் மாநில காங்கிரஸ் மூப்பனார் மகன் வாசன். சிதம்பரம் அவரது மகன் கார்த்திக்.
இப்படியான வாரிசுகளாகவும் குடும்பங்களாகவும் இந்தியா முழுக்க அரசியல் களத்தில் வேலை செய்வது இவர்களுக்குள் அதிகாரப் போட்டி அரசியல் சூழ்ச்சிகள் தந்தை பேச்சை மகன் கேட்பதில்லை மகன் பேச்சை சகோதரன் கேட்பதில்லை. ஒவ்வொரு ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த ஆதரவாளர்கள்.

இப்படி மொத்த இந்தியாவே வாரிசுகளால் சூழப்பட்டிருக்கிறது. தேச நலன்களுக்காக வாங்கும் அந்நியக் கடன்களையும் நாட்டு வருமானங்களையும் இவர்கள் தங்கள் குடும்பச் சொத்தாக ஊழல் முறையில் மடைமாற்றிக் கொள்கிறார்கள். இவையெல்லாம் நெடுநாள் நீடிக்காது

ஏனெனில்
சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வித அரசியல் பின்புலமும் இல்லாத இளைஞர்கள் தான் தீவிரமாகச் செயல்பட்டு நாட்டுக்கு விடுதலை பெற்று தந்தார்கள்! எனவே அப்போது தேச விடுதலை குறித்து இளைஞர்களுக்கு ஏற்பட்ட உத்வேகம் இப்போது தேச வளர்ச்சிக்காக மீண்டும் எழ வேண்டும்! ஜாதிய வாதம் குடும்ப வாரிசு அரசியல்த் தொடர்பு இல்லாத ஒரு லட்சம் இளைஞர்கள் பொது வாழ்விற்கு வரவேண்டும்! தாங்கள் விரும்பும் எந்த கட்சியிலும் அவர்கள் இணையலாம்! உள்ளாட்சி முதல் மக்களவைப் பிரதிகளாக உருவெடுக்கும் வகையில் அரசியலில் பாய்ச்சப்படும் இந்த புதிய ரத்தம் புதிய மனநிலையையும் ஜனநாயகத்தையும் பெரிதும் வளப்படுத்தும்! என்று சுதந்திர தினத்தன்று இளைஞர்களுக்கு பிரதமர் விடுத்த அழைப்பானது மிக முக்கியமான ஒன்று. இத்தகைய முடிவுகள் நாடு முழுவதும் இளைஞர்களுக்கிடையே உற்சாகமான எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு நாட்டுக்குச் சேவையாற்றத் தாங்கள் தயாராக இருப்பதையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்களை அரசியலுக்குக் கொண்டு வருவதன் மூலம்தான் இப்படியான சமூக நோய் பிடித்திருக்கும் வாரிசு அரசியலுக்கு நல்லதொரு முடிவு கட்ட முடியும் என்பதுதான் இன்றைய புதிய பார்வை என்றும் சொல்லலாம்.

- எழுத்து: கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர் - எழுத்தாளர்.
குறள் எண் : ௨௫௯(259)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்

குறள் :
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.


உரை :
நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.

English :
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௨௪)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
07/06/25
📚📚📚🌹📚📚📚.

கடவுளுக்கு கொடுக்கும்
காணிக்கையை விட,
ஏழைகளுக்கு கொடுக்கும்
கல்வி மேலானது.

- அம்பேத்கர் -

📚📚📚🌹📚📚📚
சாம்பியன் பட்டத்தை நூலிழையில் தவறவிட்ட குகேஷ்!

நார்வே செஸ் 2025 தொடரில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடம் பிடித்தார் தமிழ்நாட்டின் குகேஷ்.

16 புள்ளிகள் பெற்ற உலகின் நம்பர் 1 செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் முதலிடம் பிடித்தார். 15.5 புள்ளிகளுடன் ஃபாபியானோ 2வது இடம்.

கடைசி போட்டியில் ஃபாபியனுடன் தோல்வியை சந்தித்ததால் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்தை பிடித்தார். வெற்றி பெற்றிருந்தால் 3 புள்ளிகள் பெற்று 17.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருப்பார்.
பக்ரீத் பண்டிகை தொழுகையில் அன்பைப் பகிர்ந்துகொண்ட இஸ்லாமியர்கள்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை.

டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
💥 தங்கம் விலை அதிரடி குறைவு

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1200 குறைந்தது.

1 சவரன் - ரூ.71,840
1 கிராம் - ரூ.8,980

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெய்ராம் ராஜினாமா!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கில், KSCA நிர்வாகிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தாமாக முன் வந்து பதவியை ராஜினாமா செய்துள்ளனர்!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஹமாஸ் அட்டூழியம்! ஒரு பிஸ்கட் பாக்கெட் ரூ.2,500க்கு விற்பனை

போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில், ஒரு பிஸ்கட் பாக்கெட் சுமார் ரூ.2,500க்கு விற்பனை செய்யப்படும் துயரம். உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிப்பு.

காஸாவுக்கு இந்தியாவால் இலவசமாக வழங்கப்பட்ட பிஸ்கட் பாக்கெட்டுகளை பறித்து, ஹமாஸ் அமைப்பினர் இதுபோன்று விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 அன்புமணி - ராமதாஸ் சமாதானம்?

WATCH: https://youtu.be/L99aG9Qz_3U

தைலாபுரத்தில் பேசப்பட்டது என்ன?

***
💥 "குற்றவாளி ஞானசேகரனுக்கும், எனக்கும் எவ்வித தோடர்பு கிடையாது;

இதுவரை ஒரு முறை கூட ஞானசேகரன் என்னுடன் தொலைபேசியில் பேசியது கிடையாது. மழை வெள்ள காலத்தில், ஞானசேகரன் வீட்டு வாசலில் வட்டச் செயலர் சண்முகம் சிற்றுண்டி தந்தார்; சிற்றுண்டி சாப்பிடும்போது, ஞானசேகரன் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்; இதை தவிர ஞானசேகரனுக்கும், எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது"

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“பூமித்தாயின் மார்பை அறுத்து..”

“தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள்”-சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி வேதனை.

கோவையில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக ரூ.32 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து, குவாரி உரிமையாளர் செந்தாமரை தொடர்ந்த வழக்கில் கருத்து.
💥 சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த திராணியற்ற திமுகவின் மடைமாற்றும் அரசியல்...

மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை

நாடுமுழுவதும் 2027-ல் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி விவரங்களும் சேகரிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடைபெறும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஜி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு அறிவித்துவிட்டது.

மத்திய அரசின் முயற்சியால் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்து, பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் விகிதாச்சாரங்களுக்கு ஏற்ப இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகையைப் பெறவுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மத்திய பாஜக அரசின் சமூகநீதி சிந்தனைத் திட்டம்.

பீகார் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்போது, தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலினுக்கு மனமில்லை. இதுதொடர்பாக நான் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளேன்.

அப்போதெல்லாம் தங்களால் ஆகாது என்று திரு.ஸ்டாலின் கை விரித்து விட்டார். தற்போது, மத்திய அரசே அதனை செய்வதால், மீண்டும் தனது பூச்சாண்டி கதையை அவிழ்த்து விடத் தொடங்கி இருக்கிறார், தமிழக முதலமைச்சர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

மக்கள் தொகைக் கணக்கெடுப்பை 2027-ம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க பாஜக சதி செய்வதாக திரு.ஸ்டாலின் மீண்டும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்.

2027-ம் ஆண்டு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுவதால் தொகுதி மறுவரையறையில் தமிழகத்துக்கு எப்படி பிரதிநிதித்துவம் குறையும்?

இது என்ன பூச்சாண்டி?
பொய் சொல்வதிலும் ஒரு பொருத்தம் வேண்டாமா?

தமிழகத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைக்கப்படாது என்பதை மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் தமிழகம் வந்தபோதே தெளிவுபடுத்தி விட்டார். மத்திய அரசின் சார்பிலும் பாஜக சார்பிலும் பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டு விட்டது.

இல்லாத ஒன்றை, அறிவிக்காத ஒன்றை வைத்து விஷம பிரசாரத்தை திமுக செய்வது ஏன்?
கொடூர திமுக ஆட்சியில் தமிழக மக்கள் படும் துயரம் ஒன்றல்ல இரண்டல்ல.

சட்டம்- ஒழுங்கு சீர்கேடு, போதைக் கலாச்சாரம், பெண்கள் தெருக்களில் நடமாட முடியாத நிலை, மதுவிற்பனையில் சாதனை, நாள் தவறாமல் நடைபெறும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் என்று தமிழக மக்களின் துயரங்கள் தொடர்கின்றன.

மது ஆலைகள் நடத்தும் திமுகவினர் தமிழக மக்களின் பணத்தைச் சுரண்டி, உடல்நலத்தைக் கெடுத்து, கொளுத்து வாழ்கின்றனர். உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என்று ஒவ்வொரு தரப்பு மக்களும் படும் துயரங்கள் ஏராளம். இந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் பட்டியலின மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகள் எண்ணற்றவை.

தொகுதி மறுவரையறை என்று பூச்சாண்டி காட்டி பாஜகவுக்கு எதிராக அரசியல் செய்ய முடியமா என்று, தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவையும், மத்திய அரசையும் கண்டித்தால் தனது ஆட்சியில் நடக்கும் அவலங்களையும், ஊழல்களையும் மக்கள் மறந்து விடுவார்கள் என்று மனக்கணக்கு போடுகிறார் மு.க.ஸ்டாலின். அவரது விஷம்ப் பிரசாரத்தை நம்ப தமிழக மக்கள் தயாரில்லை. தமிழகத்தை குட்டிச்சுவராக்கும் திமுக ஆட்சி எப்போது அகலும் என்பது தான் தமிழக மக்களின் தற்போதைய எண்ணமும் எதிர்பார்ப்பும்.
💥 ஜி7 @ கனடா!!!

"இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை நடத்தும் கனடா, பாரத பிரதமர் மோதி ஜிக்கு அழைப்பு கொடுக்காமல் அசிங்கப்படுத்தியது" என்று காங்கிரஸ் ஒரு புறம் புரளி கிளப்ப, மறுபுறம், "இந்த ஆண்டு ஜி7 கூட்டத்தை கனடா நடத்துவதால் அதை பாரத பிரதமர் மோதி ஜி புறக்கணிப்பு" என 'தேசியவாதிகள்' கிளப்ப...

நேற்று பாரதப் பிரதமர் தன் எக்ஸ் பக்கத்தில், "கனடா பிரதமர் அழைப்பை ஏற்று ஜி7இல் கலந்து கொள்கிறேன்" என பதிந்தார்.

இதற்கிடையில் கனடாவில் இடதுசாரி ஊடகங்கள் கனடாவின் புது பிரதமராக அமர்த்தப்பட்டிருக்கும் டீப் ஸ்டேட்டின் கையாளிடம், "மோதி ஜி இங்கே நிஜ்ஜர் உள்ளிட்டோரைப் போட்டுத் தள்ளியதாக குற்றச்சாட்டு இருக்கும் போது ஏன் அழைக்கிறீர்கள்?" என்று கேட்க...

கனடா பிரதமர், "சட்டப்படி விசாரணை நடந்து கொண்டிருப்பதால் அது பற்றி நான் பேச மாட்டேன். மேலும் பாரதம் உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம். அதை புறக்கணித்து ஜி7 நடத்த முடியாது" என்றார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

தொடர்ந்து கேள்விகள் எழுந்ததால், 'In my capacity as G7 chair, in consultations with some others, make those determinations' என்று முடித்திருக்கிறார் கனடா பிரதமர். அதாவது, 'இது என் முடிவில்லை. இது ஜி7இன் பிற உறுப்பு நாடுகளின் முடிவு. (புரிஞ்சுக்கோங்கம்மா. என்னை பாடாய் படுத்தாதீர்கள்)' என்று முடித்தார் பத்திரிக்கையாளர் சந்திப்பை...

இதில் பங்கெடுப்பதால் பாரதத்துக்கு ஏதேனும் பிரயோஜனம் இல்லை என்றால் பிரதமர் இதை புறக்கணித்திருப்பார்.
💥 “நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி” - இபிஎஸ்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திட்டமிடல் இன்றி திறந்து, மக்களை கஷ்டப்படுத்தியது இந்த திமுக அரசு; சரி, முறையாக நிர்வாகம் செய்து பேருந்து வசதிகளை உறுதி செய்தார்களா என்றால், அதுவும் இல்லை; சொந்த ஊருக்கு செல்லக் கூட மக்களை பரிதவிக்க வைக்கும் திமுக அரசுக்கு கடும் கண்டனம்”

பேருந்து நிலையம் திறக்கப்பட்டது முதல் இன்று வரை கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை

கடந்த 3 நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் பெரும் அவதி; பக்ரீத், முகூர்த்த நாள் நிறைந்த வார இறுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பது அரசுக்கு தெரியாதா?

- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன் - முதல்வர் ஸ்டாலின்.

2026 தேர்தல் பரப்புரையை இப்போதே தொடங்கும் விதமாக மக்களைச் சந்திக்கப் புறப்படும் திமுக தோழர்களின் ஒவ்வொரு நகர்வும் வெற்றிபெறத் தலைமைத் தொண்டனாக வாழ்த்துகிறேன்-காணொளி வாயிலாக நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இனி நகைக்கான
ரசீது தேவையில்லை - தங்க நகை கடனுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி.

தங்க நகைக்கான உடமைக்கு கடன்தாரரின் சுய அறிவிப்பு மட்டுமே போதும்; நகைக்கான ரசீது தேவையில்லை.

ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு (Loan to Value) விகிதம் 85% ஆக உயர்த்தப்படும்.

ரூ.2.5 லட்சம் வரை கடன்களுக்கு கடன் தகுதி மதிப்பீடு தேவையில்லை.

முன்னுரிமைத் துறை கடன் நிபந்தனைகளின் நன்மையை பெறாதவர்களுக்கு தங்கக் கடனின் இறுதிப் பயன்பாட்டைப் பற்றி கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்காணிக்க தேவையில்லை.
குறள் எண் : ௨௬௦(260)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்

குறள் :
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.


உரை :
எந்த உயிரையும் கொல்லாமல், புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை, எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

English :
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௨௫)
தமிழ் வாழ்க
🔴 கேஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்!

என்ன செய்யனும்?: https://youtu.be/y9lHu40YIFM

பதிவு செய்யவில்லை என்றால் கேஸ் கிடைக்காதா?

***
🌦️ தமிழ்நாட்டில் ஜூன் 10 முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

கர்நாடகா, கேரள மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ள. மணிப்பூரில் மீண்டும் போராட்டம் வெடித்ததால் பதற்றம்.

5 நாட்கள் இணைய சேவைக்கு தடை

இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபல், பிஷ்ணுபூர், காக்சிங் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவைக்கு தடை.

மெய்தேய் இன தலைவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதால் மாநிலம் முழுவதும் போராட்டம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29