The Seithikathir®
14.6K subscribers
10 photos
3 videos
1 file
54 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றம்- 600 பேர் கைது.

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்களின் உணவகங்கள், மதுக்கூடங்கள், தேநீர் கடைகளில் குடியேற்ற அதிகாரிகள் சோதனை.

அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்திலும் சட்ட விரோத குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.63,520க்கு விற்பனை ஆகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7,940 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு ரூ.107க்கு விற்பனை செய்யப்படுகிறது.
💥 சிங்கப்பூரில் எந்த நேரத்திலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்

சிங்கப்பூரில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம்; தாக்குதலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அமைச்சர் சண்முகம் எச்சரிக்கை.
இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்- சென்னை உயர்நீதிமன்றம்.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க கோரிய மனு மீது நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முடிவு.
💥 அயோத்தி: ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் காலமானார்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ராம ஜென்ம பூமி அயோத்தி ஸ்ரீராமர் ஆலயத்தின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ் உடல்நலக் குறைவால் காலமானார்.

தன்னுடைய 20 வது வயதிலிருந்தே அயோத்தியில் ஸ்ரீராமபிரானுக்கு தொடர்ந்து பூஜைகள் செய்து வந்தவர்.

ராம ஜென்ம பூமி அயோத்தியில் ஸ்ரீராமர் ஆலயம் அமைவதற்காக தொடர்ந்து பணியாற்றியவர்.

ஸ்ரீராமர் ஆலய பிராண பிரதிஷ்டை வைபவம் உலகளவில் கொண்டாடப்படும் வகையில் அந்நிகழ்ச்சிக்காக முழுமையாக பணியாற்றியவர்.

பங்களாதேஷில் இஸ்கான் அமைப்பினர் மீதும் ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தின் மீதும் தாக்குதல் நடந்த போது அதை கண்டித்து பாரதத்தில் இருந்து முதல் கண்டனத்தை பதிவு செய்தவர் ஹிந்து சன்யாசி ஆச்சார்யா மகந்த் ஸ்ரீசத்யேந்திர தாஸ்.
📉 தொடரும் பங்குச் சந்தை சரிவு!

6வது நாளாக இன்றும் பங்குச் சந்தை கடும் சரிவு; 800 புள்ளிகள் சரிந்து தற்போது வர்த்தகம். உலக நாடுகளின் பல்வேறு நிலைபாடுகள் காரணமாக வரும் நாட்களிலும் இந்த சரிவு தொடரும் என பொருளாதார ஆலோசகர்கள் கருத்து.
"தமிழ்நாட்டில் 1000 இடங்களில் முதலமைச்சர் மருந்தகங்கள்"

தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் முதலமைச்சர் மருந்தகங்கள்.

சென்னையில் பிப்.24 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் மட்டும் 33 இடங்களில் முதலமைச்சர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.
இரட்டை இலை சின்னம் விவகாரம் குறித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு - அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் செய்தியாளர் சந்திப்பு

▪️ அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல. அதற்கு அதிகாரமும் இல்லை

▪️ மனு கொடுத்துள்ள நபர் அதிமுகவிலேயே இல்லை. இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரும் கையெழுத்திட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி இந்த வழக்கை தொடுத்துள்ளார்

▪️ தேர்தல் ஆணையம் இதை விசாரிக்கலாமா? என்று முதலில் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது

▪️ குமாஸ்தா வேலை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும். அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது
💥“வேலைக்காக இடம்பெயர கூட மறுக்கின்றனர்...”

“ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வேலைக்காக இடம்பெயர கூட கட்டட தொழிலாளர்கள் விரும்புவதில்லை; மாநிலங்களில் உள்ள அரசு நலத்திட்டங்கள், சௌகரியங்களால்கூட இப்படி இருக்கலாம் நாடு வளர்வதற்கு சாலைகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவது முக்கியமானது; ஆனால் தொழிலாளர் பற்றாக்குறையால் அது கடினமாக உள்ளது”

-L&T தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தமிழ்நாடு அரசு மீது சிபிஎம் கடும் குற்றச்சாட்டு

“அரசின் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் பட்டியலின மக்களின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் ஆட்சியாளர்களால் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகிறன; இப்போதுகூட பரந்தூர் விமான நிலையம் என அங்குள்ள பட்டியல் சாதி மக்களின் நிலங்களை பறிக்கக் கூடிய நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபடுகிறது நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து நிலங்களும் மீட்கப்பட்டு அம்மக்களிடம் வழங்கப்பட வேண்டும்"

-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமின் தீர்ப்பை திரும்ப பெற கோரிய வழக்கு - உச்சநீதிமன்றம் கேள்வி.

அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு
என்ன அவசரம்?

போக்குவரத்துத் துறையில் வேலைக்கு
லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு சொல்லுங்கள்

200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்?

அமைச்சராக தொடர்வதா, இல்லையா என்பதை செந்தில் பாலாஜி முடிவு செய்ய வேண்டும்.
📌பள்ளிகளில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல், அச்சுறுத்தல் குறித்து புகாரளிக்க உதவி மையம்

📞 14417 என்ற எண்ணில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
IND vs ENG update

சதம் கடந்து விளையாடி வந்த இந்திய வீரர் சுப்மன் கில் 112 ரன்களுக்கு அவுட்டானார்! 💔
💥 எல்லாம் பணக் கொழுப்பு: சீமான்

சமீபகாலமாக தேர்தல் வியூகம் என்ற நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும். பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் சீமான் -

காமராஜரோ, அறிஞர் அண்ணாவோ வியூக வகுப்பாளரை வைத்துக்கொள்ளவில்லை; எனக்கு மூளை இருக்கிறது

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மேலும் 5 பேருக்கு ஜிபிஎஸ் நோய்!

புணேவில் கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோயால் மேலும் 5 பேர் பாதிப்பு. இதனால் அங்கு ஜிபிஎஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 197 ஆக உயர்வு

பாக்டீரியா, வைரஸ் தொற்றுகள் காரணமாக உடலில் உருவாகும் ஜிபிஎஸ் பாதிப்பு, பல காலமாக சமூகத்தில் இருந்தாலும் அண்மையில் மகாராஷ்டிரம், மேற்கு வங்க மாநிலங்களில் இந்த பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இலவசங்கள்: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

இலவசமாக உணவுப் பொருட்களையும், பணத்தையும் பெறுவதால் மக்கள் சிலர் வேலைக்குச் செல்ல மாட்டார்கள்; நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டாமா?

தேர்தலையொட்டி இலவசங்கள் அறிவிக்கும் நடைமுறை பற்றி சுப்ரீம் கோர்ட் கடும் விமர்சனம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அடிக்கடி மாற்றக்கூடாது: ராமதாஸ்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை அடிக்கடி மாற்றி அரசு நிர்வாகத்தை முடக்கக் கூடாது: செயலர்களுக்கு 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் தேவை: பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கருத்து

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தர்மமே வெல்லும் - ஓ.பி.எஸ்.,

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்று நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு ஓ.பி.எஸ்., பதில்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி; இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது இந்தியா