Seithikathir - Tamil News
14.2K subscribers
128 photos
41 videos
563 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண ஆணை.

ஆகம கோயில்கள் மற்றும் ஆகமம் இல்லாத கோயில்களை 3 மாதத்துக்குள் அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஆகம விதிகளுக்கு உட்படாத கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு.
💥 கோயில் திருவிழாவில் புறக்கணிக்கப்பட்ட பட்டியலின மக்களின் பகுதி - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை சரமாரிக் கேள்விகள்.

கரூர் ஸ்ரீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக ரமேஷ் என்பவரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு தேர் வருவதில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு” என நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு காட்டமாக தெரிவித்தனர்.

அப்போது எதிர் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

அப்போது நீதிபதிகள், “பட்டியலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள்? பதில் மனுத் தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப்பில் போடுவீர்கள். அதுவரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பினர்.

கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்கள் நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சீன பிரச்சார ஊதுகுழல் சீனா Xinhua செய்திகளை (X) இந்தியா தடை செய்தது.

சீனா சின்ஹுவா செய்தி பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக தவறான தகவல்கள், போலி செய்திகள் மற்றும் பிரச்சாரங்களைப் பரப்புவதில் ஈடுபட்டுள்ளது.

குளோபல் டைம்ஸுக்குப் பிறகு இரண்டாவது பெரிய சீன CCP ஊடகம் தடுக்கப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம்

பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3985 கோடி மதிப்பீட்டில் மூன்றாவது ராக்கெட் ஏவுதளம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அரிய கனிம வளத்திட்டங்களை செயல்படுத்த ரூ.16,300 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் ரூ.3,000 கோடியில் செமிகண்டக்டர் ஆலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இன்றைய புத்தக மொழி
14/05/25
📚📚📚🌹📚📚📚

நாம் ஒருவரை எப்போது
நினைத்துக் கொள்கிறோம்
என்பது முக்கியமானது.
நினைவில் சிலர்
குறிப்பிட்ட வயதில்,
குறிப்பிட்ட தோற்றத்தில்
உறைந்து விடுகிறார்கள்.
காலம் அவர்களுக்கு
நரையும், நோவும் தந்து
முதுமையின் பள்ளத்தாக்கில்
உலவச் செய்யக்கூடும்.
ஆனால், அவர்கள் எவர் மனதிலோ
அழியா இளமையுடன் இருக்கிறார்கள்.

- எஸ். ராமகிருஷ்ணன் -

📚📚📚🌹📚📚📚
ℹ️ பொதுமக்கள் வசதிக்காக புதிய முன்னெடுப்பு..!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் மற்றும் புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க eservices.tn.gov.in என்ற இணையதளம் அல்லது இ - சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்!

இதுகுறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகளை வெளியிடவும், இணையதளம் மூலம் பெற்றப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கவும் வட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு நில நிர்வாக ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🌧️ மழை வருது மழை வருது ...

கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு!

- சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 A+ பிரிவில் தொடர்வார்கள்

டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் A+ பிரிவிலேயே தொடர்வார்கள் - தேவஜித் சாகியா, பிசிசிஐ செயலாளர்

ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார்கள் என்பதால் அவர்கள் இன்னும் இந்திய அணியின் ஓர் அங்கம்தான் என விளக்கம். A+ வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 இந்தியா மறுத்த பிறகும், ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“இந்தியா - பாக். போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால்தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு

இந்தியா - பாக். தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத் துறை விளக்கமளித்த பிறகும், வர்த்தகத்தை முன்னிறுத்தி போரை நிறுத்தியதாக சவுதி முதலீட்டாளர் மாநாட்டில் மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
🔴 ஆபரேஷன் சிந்தூர் எப்படிப்பட்ட வெற்றி? - போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் விளக்கம்!

நன்றி: தினமணி

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதிகளில் இயங்கி வந்த பயங்கரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர், மிகப்பெரிய வெற்றியை அடைந்திருப்பதாக, போர் நிபுணர் ஜான் ஸ்பென்ஸர் தெரிவித்துள்ளார்.

மாடர்ன் வார் இன்ஸ்டிடியூட்டில் நகர்ப்புற போர் ஆய்வுகளின் தலைவராகப் பணியாற்றி வருகிறார் ஜான் ஸ்பென்ஸர். நகர்ப்புற போர்த் திட்டத்தின் இணை இணையக்குநராகவும் உள்ளார்.

உலகம் முழுவதும் நடைபெறும் போர்களைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறார்.

இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து நிறுத்தப்பட்டுள்ள சண்டை குறித்தும், சிந்தூர் தாக்குதல் குறித்தும் துல்லியமாக எடுத்துரைத்திருக்கிறார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

அதில் குறிப்பிடத்தக்க விஷயம் இதுதான், அதாவது இந்தியாவின் தற்காப்பு நடவடிக்கை என்பது, அதன் பலவீனம் அல்ல - அது முதிர்ச்சியின் வெளிப்பாடு, அது செலவுகளை கணக்கிட்டது, எல்லைகளை மறுவரையறை செய்து, தனது எல்லையில் தங்களுக்கான ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியா ஒரே ஒரு தாக்குதலுக்கு மட்டும் பதிலளிக்கவில்லை. அது, இதுநாள்வரை இருந்த பயங்கரவாதத்தின் அடிப்படை சமன்பாட்டையே மாற்றியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

மேலும் அவர் ஆபரேஷன் சிந்தூர் பற்றி பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார். இவை அப்பட்டமாக இருந்தாலும் அதிகாரப்பூர்வமானது இல்லை என்று கூறப்படுகிறது.

இனி.. ஜான் ஸ்பென்ஸர் கூறியதிலிருந்து..

இந்தியா இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முழுவதுமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கவில்லை. தற்போது சண்டை நிறுத்தப்பட்டிருப்பது என்பது மிக முக்கியமான நடவடிக்கை. சிலர் இதை ஒரு போர் நிறுத்தம் என்று கூறுகிறார்கள். ஆனால் இராணுவ உயர் அதிகாரிகள் மிகக் கவனத்துடன் அந்த வார்த்தையைத் தவிர்த்துவிட்டனர். போர்க்களக் கண்ணோட்டத்தில் பார்த்தால், இது வெறும் போர் இடைநிறுத்தம் மட்டுமல்ல; இது ஒரு அரிய மற்றும் தெளிவற்ற ராணுவ நடவடிக்கையினால் கிடைத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் நிலைப்பாடு.

இந்திய ராணுவத்தின் நடவடிக்கை எடுக்கப்பட்டு நான்கு நாள்களுக்குப் பிறகான இந்த நிலைப்பாடானது, வெளியிலிருந்து வந்த காரணிகளால் எடுக்கப்பட்ட முடிவு. இந்தியா ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் அதன் அடிப்படையான நோக்கங்களை அடைந்துவிட்டது, அது மட்டுமல்ல அதையும் தாண்டி சாதித்துவிட்டது. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத உள்கட்டமைப்பை அழித்து, நாட்டின் ராணுவ மேம்பாட்டை நிரூபித்து, ஆக்ரமிப்புகளை மீட்டெடுத்து, ஒரு புதிய தேசிய பாதுகாப்பு கோட்பாட்டையே உருவாக்கியிருக்கிறது.

ராணுவப் படையின் அடையாளம் மட்டுமல்ல. இது ராணுவ சக்தியின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடு. அது துல்லியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆபரேஷன் சிந்தூர் திட்டமிட்டு சில கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது:

மே 7: பாகிஸ்தான் எல்லைக்குள் ஒன்பது துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பஹாவல்பூர், முரிட்கே, முசாபராபாத் மற்றும் பிற இடங்களில் உள்ள முக்கிய பயங்கரவாத பயிற்சி முகாம்கள் மற்றும் தளவாட கிடங்குகள் இலக்குகளாக அமைந்தன.

மே 8: பாகிஸ்தான் இதற்கு பதிலடியாக, இந்தியாவின் மேற்கு மாநிலங்கள் மீது பெரிய ட்ரோன் கூட்டத்தை அனுப்பியது. ஆனால் இந்தியாவின் பல அடுக்கு வான் பாதுகாப்பு வலையமைப்பானது - இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய அமைப்புகளின் உதவியோடு உள்நாட்டில் உருவாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டவை -கிட்டத்தட்ட அனைத்தை ட்ரோன்களையும் முறியடித்தது.

மே 9: இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானின் ஆறு ராணுவ விமான ஏவு தளங்கள் மற்றும் வான் பாதுகாப்பு ரேடார்களின் ஒருங்கிணைப்பு மையங்கள் மீது அதிரடித் தாக்குதல்களை நடத்தியது.

மே 10: இருதரப்புக்கு இடையே சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்தியா இதை ஒரு போர் நிறுத்தம் என்று ஒருபோதும் குறிப்பிடவில்லை. இந்திய ராணுவம் இதை "துப்பாக்கிச் சூடு நிறுத்தம்" என்றுதான் அடையாளப்படுத்தியது. அப்போதிருந்த சூழ்நிலையின் மீதான இந்திய நாட்டின் கட்டுப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு சொல் அது என்றாலும், வேண்டுமென்றே போர் நிறுத்தம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை இந்தியா.

இது வெறும் தந்திரோபாய வெற்றி மட்டுமல்ல. துப்பாக்கிச் சண்டை என்ற பெயரில் இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலின் கோட்பாடு என்று விவரித்துள்ளார்.
🔴 BREAKING NEWS COMING AT 8:15PM
Seithikathir - Tamil News
🔴 BREAKING NEWS COMING AT 8:15PM
🔴 BREAKING | SEITHIKATHIR

23 நிமிடங்களில் முடிவான மிஷன்: பாகிஸ்தானின் சீனா ஏர்டெபென்ஸ் முறியடிப்பு!

ஆப்பரேஷன் சிந்தூரில் இந்திய அரசு சாதித்தவை பற்றி விரிவான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.!

அதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியதை செய்திக்கதிர் பிரேக்கிங் தகவலாக வழங்குகிறது.

அரசின் அறிக்கையில், "Indian Air Force bypassed and jammed Pakistan’s Chinese-supplied air defence systems, completing the mission in just 23 minutes, demonstrating India’s technological edge."

அதாவது, "பாகிஸ்தானுக்கு சீனாவால் வழங்கப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டியும், அவற்றை தடுத்து நிறுத்தியும், வெறும் 23 நிமிடங்களில் பணியை இந்திய விமானப்படை வெற்றிகரமாக முடித்தது. இது, இந்தியாவின் தொழில்நுட்பத் திறனையும் நுண்ணறிவையும் உலகிற்கு நிரூபித்தது."

என்ன முக்கியத்துவம் - செய்திக்கதிர் பார்வை: இந்திய விமானப்படை பாகிஸ்தானின் பாதுகாப்பு வலையை வெல்லும் அளவுக்கு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி இருப்பதை இது உறுதிப்படுத்துகிறது.

குறிப்பு: இதை யாரேனும் எந்த வகையில் பயன்படுத்தினாலும் செய்திக்கதிர் பெயருடன் பயன்படுத்துங்கள். நன்றி.

விரிவான தகவல் விரைவில்...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பரிசோதனை வெற்றி!

ஒடிசா, கோபால்பூரில் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடத்தப்பட்ட பார்கவஸ்திரா எனப்படும் ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

💥 மூவர்ணக்கொடி ஏந்தி பா.ஜ., யாத்திரை!

ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில், முப்படைகளின் மகத்தான வெற்றியைக் கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பா.ஜ., சார்பில் மூவர்ணக்கொடி ஏந்திய யாத்திரை நடக்கிறது. சென்னையில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடந்த யாத்திரையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

💥 ‘டாஸ்மாக்’ வழக்கு: கோர்ட் உத்தரவு

ஆயிரம் கோடி ரூபாய் ‘டாஸ்மாக்’ முறைகேடு தொடர்பாக பதியப்பட்ட வழக்குகளை சி.பி.ஐ.,க்கு மாற்ற கோரிய மனு; மத்திய - மாநில அரசுகள், சி.பி.ஐ., அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

🏏 ஜடேஜா புதிய சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட நாட்களாக நம்பர் 1 ஆல்ரவுண்டராக இருக்கும் வீரர் என்ற சாதனையை படைத்தார் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 தி.மு.க., அரசுக்கு என்ன பங்கு?

பொள்ளாச்சி வழக்கில் கைது செய்ததும், வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றியதும் அ.தி.மு.க., அரசு

வழக்கை விசாரித்தது சி.பி.ஐ., மற்றும் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம்; இதில் தி.மு.க., அரசுக்கோ, முதல்வருக்கோ என்ன பங்கு இருக்கிறது?

கொடநாடு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது அ.தி.மு.க., அரசு

மாநில திட்டங்களுக்கு நிதியை கேட்டுப் பெற முடியுமா என கேட்ட முதல்வர், நிதியை பெற்றுத் தந்தபின் ஏற்க மறுக்கிறார்

- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பலூச் விடுதலை அறிவிப்பு... பாகிஸ்தானுக்கு 'செக்'... அரசியல் பின்னணி...

இன்று பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுவது "பலூஜி" (பலுசிஸ்தான்) தனிநாடாக அறிவிக்கப்பட்டது என்ற தகவல் தான்.

இத்தனை ஆண்டுகள் போராடி வந்த அந்த பகுதி மக்கள், சில நாட்கள் முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தானை அடித்த அடியில் நிலைகுலைந்து இருக்கும் வேளையில்!

பலூஜ் விடுதலை இயக்கம் இந்த அறிவிப்பு செய்துள்ளது. அடுத்தடுத்த அதன் முன்னெடுப்புகள் ஆச்சரியம் தான்.

ஐநாவில் தனி நாடு அங்கீகாரம் கேட்பது, இந்தியாவிடம் தனக்கு தூதரகம் அமைக்க அனுமதி கோருவது, நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டி நடத்துவது என்று!

இத்தனை காலம் பாகிஸ்தான் அணுஆயுத நாடு என்று பூச்சாண்டி காட்டியது என்பது இப்போது அம்பலமானது.

பொதுவாக அணு ஆயுதம் வைத்திருக்கும் நாட்டில் இப்படி பிரிவினை செய்து தனியாக பிரிந்து செல்வது அவ்வளவு சாதாரண விஷயமல்ல.

உண்மையில் பாகிஸ்தானில் அணு ஆயுதம் இருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதெல்லாம் அவர்களுடையதா என்ற சந்தேகம் தான் இப்போது?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நம்ம ராணுவம் அடித்த அடியில்
அமெரிக்க பதறுகிறது, சீனா தவிக்கிறது. இதெல்லாம் பார்க்க, அணு ஆயுதங்களை சேமித்து வைக்க பாகிஸ்தானின் குடோன் பயன்படுத்தப் பட்டிருக்குமோ என்ற சந்தேகம் தான் எழுகிறது.

நமக்கு தெரிந்த இந்த விஷயம் பலூஜ் போராளிகளுக்கு தெரியாதா? "மாப்பிள்ளை நீதான், சட்டை அமெரிக்கா சீனா" உடையது என்று தெரிந்ததால்?

அணுஆயுத பூச்சாண்டி நம்மகிட்ட வேகாது என்று தனிநாடாக பிரகடனம் செய்யும் அளவுக்கு சென்றது.

இதெல்லாம் மோடிக்கு தெரியாதா? இந்த பூச்சாண்டி எல்லாம் இந்தியாவிடம் நடக்காது. மீண்டும் சீண்டினால்
அடி பலமாக இருக்கும் என்று சொல்கிறார்.

மொத்தத்தில் வாடகைக்கு அடுத்த நாட்டு அணு ஆயுதங்களை பதுக்கி வைத்து
இத்தனை காலம் ஏமாற்றி வந்துள்ளது தெளிவாகிறது.

இதில் துருக்கி பங்கும் இருக்கலாம். ஆக மீண்டும் நம்மிடம் சீண்டினால் நம் அடி எங்க விழும் என்பது பதுக்கல் நாடுகளுக்கு தெரியும். அவர்கள் தான் இனிமேல் பாகிஸ்தானை கண்ட்ரோல் செய்ய வேண்டும். நஷ்டம் அவர்களுக்கு தானே?

ஒரே அடி பல சமாச்சாரங்கள் சந்திக்கு வந்துவிட்டது. பலூஜ் சரியான முறையில் தன்னுடைய ஆட்டத்தை ஆடுகிறது. இந்த நேரத்தில் பாகிஸ்தானுக்கு கடன் ஏன் அளிக்கப்பட்டது என்பதும் இப்போது தெரிகிறதா?

கண்ணிவெடியில் கால் வைத்தால் என்ன நடக்கும்! கால் எடுத்தால் வெடித்து சிதறும் தானே?

அந்த நிலைக்கு பாகிஸ்தானை
கண்ணிவெடி மீது கொண்டு வந்து நிறுத்திவிட்டார் பிரதமர் மோடி.
🔴 துருக்கியுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU).

காரணம்: தேசிய பாதுகாப்பு கருதி ரத்து!

பாகிஸ்தானுக்கு ஆதரவாக துருக்கி செயல்படுவதால் இந்த நடவடிக்கை! போட்டுத் தாக்கு!

#BREAKING: India’s prestigious Jawaharlal Nehru University (JNU) cancels agreement with Turkish University after Turkey helped Pakistan with defence equipment to attack India.

“Due to National Security considerations, the MoU between JNU and Inonu University, Türkiye stands suspended until further notice. JNU stands with the Nation.”

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கோவை- நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் மீது துப்பாக்கிச்சூடு.

கோவை: கோவில்பாளையம் அருகே சட்டவிரோதமாக நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஹரிஸ்ரீ மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

சக்திவேல் அளித்த புகாரில் விசாரணை செய்ய போலீசார் சென்றபோது, தப்பிக்க ஹரிஸ்ரீ துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்கு போலீஸ் துப்பாக்கிச்சூடு என தகவல்.

சக்திவேல் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் ஹரிஸ்ரீ தனது துப்பாக்கியை மேலே சுட்டு மிரட்டியுள்ளார்.
இன்றைய சிந்தனை: தவறான புரிதல்!

ஒரு நகை வியாபாரியின் மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் மிகவும் மோசமான துன்பத்திற்கு உள்ளானது. சாப்பிடுவதற்கும் கூட போதுமான அளவுக்கு பணம் இல்லாத நிலைமையை அடைந்து விட்டார்கள்.

ஒரு நாள்
அந்த நகை வியாபாரியின் மனைவி
தன் மகனை அழைத்து,
ஒரு நீலக்கல் பதித்த நெக்லசை அவனது கையில், கொடுத்துக் கூறினாள்...,
மகனே, இதை எடுத்துக் கொண்டு, உன் மாமாவின் கடைக்குச் செல். அவரிடம் இதை விற்று நமக்குக் கொஞ்சம் பணம் தரும்படி கேள் என்றாள்.

மகன் அந்த நெக்லசை எடுத்துக் கொண்டு,
அவனது மாமாவின் கடையை அடைந்தான்.
அவனது மாமா
அந்த நெக்லசை
முற்றிலுமாகப் பார்த்தார்.
அவனிடம் கூறினார்... என் அன்பு மருமகனே, உன் அம்மாவிடம் கூறு..!

அதாவது இப்போது மார்க்கெட் மிகவும் மோசமாக இருக்கிறது. கொஞ்ச நாள் கழித்து இதை விற்றால், அவளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்று...

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

பின் குடும்ப செலவுக்காக
அவர் அவனிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்தார்.
மேலும் நாளை முதல் கடைக்கு வந்து என்னுடன் உட்கார்ந்து வேலையை கற்றுக் கொள் என்றார்.

எனவே,
அடுத்த நாள் முதல், அந்தப் பையனும் தினமும் கடைக்குப் போகத் தொடங்கினான். அங்கே கற்றுக் கொள்ளத் தொடங்கினான். எப்படி வைரம் மற்றும் கற்களை பரிசோதிக்க வேண்டும்? என்பதையும் தெரிந்து கொண்டான்.

விரைவிலேயே, அவன் ஒரு சிறந்த அறிவாளியாக என்று மாறினான். வைரத்தைப் பற்றி பகுத்தாய்வு செய்து கூறுவதில் ஒரு வல்லுநராக மாறினான்.

நெடுந்தொலைவில் இருந்தும் கூட, மக்கள், இவனிடம் வைரத்தைப் பரிசோதிப்பதற்காக வந்தார்கள்.
ஒரு நாள் அவனது மாமா கூறினார்... மருமகனே, அந்த நெக்லசை
உன் அம்மாவிடம் இருந்து இப்போது வாங்கி வா!
அவளிடம் கூறு... அதாவது மார்க்கெட் நிலைமை இப்போது நன்றாக இருக்கிறது. உனக்கு நல்லதொரு விலை கிடைக்கும்.

அவன் அம்மாவிடம் இருந்து நெக்லசை பெற்றவுடன்,
அந்த வாலிபன், அவனாகவே அதனைப் பரிசோதித்தான்.

அது ஒரு போலி என்பதைக் கண்டு பிடித்தான். அவனுடைய மாமா, ஒரு சிறந்த வல்லுநராக இருந்தும், இதை ஏன் நம்மிடம் தெரிவிக்கவில்லை? என்று அவன் ஆச்சரியம் அடையத் தொடங்கினான்.

நெக்லசை வீட்டில் விட்டு, விட்டு அவன் கடைக்குத் திரும்பினான்.
மாமா கேட்டார், நெக்லசை கொண்டு வரவில்லையா?

அவன் கூறினான், மாமா இது போலியானது. ஆனால், இதை என்னிடமிருந்து நீங்கள் ஏன் மறைத்தீர்கள்..?

பிறகு அவன் மாமா கூறினார்...
நீ முதன் முதலில் நெக்லசை என்னிடம் கொண்டு வந்த போது,
அது போலியானது என்று நான் உன்னிடம் கூறியிருந்தால்,
நான் வேண்டுமென்றே இதைக் கூறுவதாக
நீ நினைத்துக் கொள்ளக் கூடும். ஏனென்றால், அப்போது
நீ ஒரு துன்பமான சூழ்நிலையில் இருந்தாய்.
இன்று நீ,
நீயாகவே இதைப் பற்றிய அறிவை பெற்றிருப்பதால், இந்த நெக்லசு , உண்மையிலேயே போலியானது என்பதை நீ உறுதியாக அறிந்திருப்பாய்.

அந்த நேரத்தில், உண்மையைக் கூறியாக வேண்டும் என்பதை விட... உறவு இழையை அறுந்து விடாமல் காப்பது மேலானது மற்றும் முக்கியமானதாக எனக்கு தோன்றியது.

எந்த வித பட்டறிவும் இல்லாமல்,
நாம் இந்த உலகில் பார்ப்பது,
நினைப்பது,
தெரிந்து கொள்வது
எல்லாமே
தவறு என்று கூறுகின்றோம்.

தவறான புரிதல்களால் நம்முடைய உறவு முறைக்கு, பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிறகு முறிவுக்கு இட்டுச் செல்கிறது.

நம்முடைய வாழ்க்கையும் தனியாக நின்று வீழ்ச்சியும் அடைகின்றது.

நம் உறவின் இழைகளை அறுந்து விடாதவாறு பாதுகாத்து வாழ்வோம்...!
பொள்ளாச்சி - பாதித்த பெண்களுக்கு கூடுதல் நிவாரணம்.

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் நிவாரணம் அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

நீதிமன்றம் மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிட்ட நிலையில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 லட்சம் கூடுதலாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.