The Seithikathir®
14.6K subscribers
10 photos
4 videos
1 file
48 links
WELCOME! SUPPORT OUR JOURNALISM!

• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.

WE THANK YOU FOR YOUR TRUST IN US.
Download Telegram
💥 51 பேர் பலி!

குவாத்தமாலா என்ற நாட்டில் பாலத்தின் மீது சென்ற பேருந்து தடுப்பு கம்பியை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்த விபத்தில் 51 பேர் உயிரிழப்பு!

காயமடைந்த 10 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி.
💥 Exclusive Breaking News In 10:10PM
JUSTIN

✈️ 3 நாள் சுற்றுப் பயணமாக பிரான்ஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

AI உச்சிமாநாட்டை தலைமை தாங்குவதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார்.
The Seithikathir®
💥 Exclusive Breaking News In 10:10PM
🔴 BREAKING | THE SEITHIKATHIR

🎯 தலைநகர் முதல்வர் யார்? - செய்திக்கதிர் பிரத்யேக தகவல்

டெல்லி முதல்வராகிறார் பிரவேஷ் வர்மா!

புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜகவின் பிரவேஷ் வர்மா, முதலமைச்சராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு.

செய்திக்கதிருக்கு கிடைத்த தகவலின்படி, பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்.

பிரவேஷ் வர்மாவின் பெயர் குறித்து ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும், டெல்லி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௧௪௮(148)
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : பிறனில் விழையாமை

குறள் :
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.


உரை :
அடுத்தவன் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.

English :
That noble manliness which looks not at the wife of another is the virtue and dignity of the great.

தி ஆ ௨௦௫௬ சுறவம் (தை -௨௯)
தமிழ் வாழ்க
வடலூர் சத்தியஞான சபையில் 154 வது தைப்பூச ஜோதி தரிசன விழா.

கடலூர்: வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

6 மணிக்கு முதல் ஜோதி தரிசனத்தை கண்டு அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற கோஷத்துடன் பக்தர்கள் பரவசம்.

இன்று காலை 10 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணி, இரவு 10 மணி நாளை காலை 5:30 மணி என 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இரவு முதல் குவிந்து தரிசனத்தை கண்டு களித்தனர்.
பழனியில் தைப்பூசத் திருவிழா.

திண்டுக்கல்: தைப்பூசத்தையொட்டி பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.

வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமரவேல் வெள்ளி தேரில் எழுந்தருளி அருள் பாலித்தார்.
இன்றைய புத்தக மொழி
11/02/25
📚📚📚🌹📚📚📚

தெளிந்த உள்ளம்,
கடும் உழைப்பு,
பிறருக்காக பாடுபடும் பண்பு.
இவைதான் மகிழ்ச்சிக்கான
நிலைக்களன்கள்.

- ஹெலன் கெல்லர் -

📚📚📚🌹📚📚📚
தொடர்ந்து உச்சம் தொடும் தங்கம் விலை.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து ரூ.64,480க்கும், ஒருகிராம் ரூ.8,060க்கும் விற்பனை.

முதல்முறையாக தங்கம் விலை கிராமுக்கு ரூ.8 ஆயிரத்தை கடந்தது.
The Seithikathir® pinned «🔴 இபிஎஸ் - செங்கோட்டையன் மோதலின் ரகசிய பின்னணி என்ன? WATCH: https://youtu.be/dzWR3zoVqPA யார் அந்த நபர்? பின்னணியில் டெல்லி? - பரபரப்பு தகவல்... ***»
சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3ஆம் இடம்- பிரதமர் மோடி.

3ஆவது பெரிய சூரிய மின் உற்பத்தி நாடாக இந்தியா உள்ளது; சூரிய சக்தி உற்பத்தித் திறன் 32 மடங்கு அதிகரிப்பு.

இந்தியாவின் புதைபடிவமற்ற எரிபொருள் ஆற்றல் திறன் 3 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் புவியியல் எரிசக்தி வர்த்தகத்தை எளிதாகவும், கவர்ச்சிகரமாகவும் மாற்றுகிறது.

எரிசக்தி துறையில் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கும் நிலைக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இந்தியாவிடம் 500 மில்லியன் மெட்ரிக் டன் நிலையான மூலப்பொருள் உள்ளது.

மேக் இன் இந்தியா மூலம் உள்ளூர் விநியோகம், உற்பத்தியை வலுப்படுத்த இந்தியா கவனம்- பிரதமர் மோடி காணொளியில் உரை.

செங்கோட்டையன் மோதல் பின்னணி: https://youtu.be/dzWR3zoVqPA

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
விஜயின் தவெக கட்சி நிர்வாகிகளுடன் அரசியல் வியூக வகுப்பாளர்
பிரசாந்த் கிஷோர் 2ஆம் நாளாக ஆலோசனை
ரூ.7,375 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கு அனுமதி.

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ரூ.7,375 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு அனுமதி.

தமிழ்நாடு அமைச்சரவையின் ஒப்புதல் மூலம் சுமார் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

உலகளாவிய திறன் மையங்கள், லெதர் அல்லாத காலணி, உணவுபடுத்தல் உள்ளிட்ட துறைகளில் தொழில்களுக்கு அனுமதி.
💥 “ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது”

பாதுகாப்பான முறையில் ஏஐ தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டுசெல்ல வேண்டும்; உலகின் தென்பகுதி மக்களுக்கும் ஏஐ தொழில்நுட்ப பலன்கள் சென்று சேர வேண்டும்

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலையிழப்பு ஏற்படாது; அதன் இயல்பு மட்டுமே மாறும் - பிரதமர் மோடி
பாடகர் SPB பெயர் சூட்டல் - பெயர் பலகையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர்.

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்தார் நகர் முதன்மை சாலைக்கு SPB பெயர் சூட்டல்.

சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.

ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வில் 14 பேர் 100% பெற்றுள்ளனர்.

ஜே.இ.இ. மெயின் முதற்கட்ட தேர்வு ஜன.22, 23, 24, 28, 29ம் தேதிகளில் நடைபெற்றது.
*குறள் எண் : ௧௪௯(149)
*பால் : அறத்துப்பால்
*அதிகாரம் : பிறனில் விழையாமை

*குறள் :
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.


*உரை :
கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் எல்லா நன்மைகளும் அடைவதற்கு உரியவர் எவர் என்றால், அடுத்தவனுக்கு உரியவளின் தோளைச் சேராதவரே ஆவார்.

*English :
Is it asked, “who are those who shall obtain good in this world surrounded by the terror-producing sea ?” Those who touch not the shoulder of her who belongs to another.

தி ஆ ௨௦௫௬ சுறவம் (தை -௩௦)
தமிழ் வாழ்க