Seithikathir - Tamil News
14.1K subscribers
186 photos
50 videos
877 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
வந்தார். சந்தித்தார்.. சென்றார்..

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டு புறப்பட்டார் அன்புமணி

ராமதாசுடன் அன்புமணி அரை மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசி உள்ளார்.

வழக்கமாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நிருபர்களை சந்திப்பார்.

இதனால் இன்றைய தினம் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் ரூ.9130க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: காயிதே மில்லத்-ன் 130வது பிறந்த நாளை ஒட்டி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சிந்தூர் மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி

1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டோரின் தாய்மார்களும் சகோதரிகளும் எனது குஜராத் பயணத்தின்போது சிந்தூர் மரக்கன்றுகளை என்னிடம் கொடுத்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் அவற்றை இன்று நட்டு வைத்துள்ளேன்.

இவை, நம் தேசத்தின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருக்கும்-பிரதமர் மோடி.
விஷால் ரூ.21 கோடியை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தனது படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

விஷால் திருப்பி செலுத்தாததால் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
நாளை மறுநாள் (ஜூன் 7) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் - பொதுச்செயலாளர் துரைமுருகன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுக்கும் அழைப்பு.

கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
💥 இயற்கையுடன் நேரம் செலவிடும் போது...

முதுகு வலி குறைவதாக பிரிட்டனின் Plymouth பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல்!

நீண்ட கால முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் பூங்கா போன்ற இடங்களில் வாக்கிங் செல்லும்போது, தங்களின் வலிகளை மறந்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 தயாராகும் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்களின் பட்டியல் வெளியானது.

பென் ஸ்டோக்ஸ், பஷீர், பெத்தல், ப்ரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், வோக்ஸ், ஜோஸ் டங்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 தட்கல் ரயில் டிக்கெட் வேணுமா? இனி ஆதார் கட்டாயம்!

விவரம்: https://youtu.be/bChcYm_jsKE?si=I6CfD1hWg39BeEnC

என்ன செய்ய வேண்டும்? ஏன் திடீர் மாற்றம்?

***
🐘 குட்டி யானையின் நன்றி காட்சி ❤️

வீடியோ: https://www.facebook.com/share/v/1AJVAonXKE/

சத்தீஸ்கரில் வனத்துறை அதிகாரிகளால் சேற்று குழியில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை, நன்றி தெரிவிக்கும் விதமாக ஜேசிபியைத் தொட்டது ❤️

50 மணி நேரத்திற்குப் பிறகு அது மீட்கப்பட்டது.

ராய்காட்டில் தண்ணீர் குடிக்கவும் குளிக்கவும் ஒரு பெரிய யானைக் கூட்டம் கூடியிருந்தது.

ஆனால் ஒரு யானைக்குட்டி தவறி ஆழமான, சேற்று குழியில் விழுந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

அது அழுதபோது, ​​அதன் துயர அழைப்புகள் அடர்ந்த காட்டில் எதிரொலித்தன, அருகிலுள்ள கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தன.

கிராம மக்கள் வன அதிகாரிகளுக்கு விரைவாகத் தகவல் தெரிவித்தனர்.

காட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு குட்டி யானை தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி தெரிவிக்கிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்றே கடைசி….

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள்.

மே 7ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 2.9 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

www.tneaonline.org தளத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.
குறள் எண் : ௨௫௮(258)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்

குறள் :
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.


உரை :
பிழையற்ற அறிவினை உடையவர், உயிர் பிரிந்த இறைச்சியை உண்ணமாட்டார்.

English :
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௨௩)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
06/06/25
📚📚📚🌹📚📚📚

அறிவுத் தேவையைவிட
கவனக்குறைவுதான்
அதிக கஷ்டத்தை
உண்டாக்கிவிடுகிறது.

- சர்ச்சில் -

📚📚📚🌹📚📚📚
ட்ரம்ப் நன்றி கெட்டவர்: எலான் மஸ்க் விமர்சனம்.

அமெரிக்காவில் புதிய வரிக்குறைப்பு மசோதா விவகாரத்தில் அதிபர் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல்.

தான் இருந்திருக்காவிட்டால் ட்ரம்பால் அதிபர் தேர்தலில் வென்றிருக்க முடியாது; ட்ரம்பிடம் நன்றி உணர்வே இல்லை.

சிறார் பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் ட்ரம்பின் பெயர் இருப்பதாலயே, அவர் அதனை வெளியிடவில்லை - எலான் மஸ்க்

எம்.பி.க்கள் மசோதாவை படித்துவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக நிறைவேற்றப்பட்டதாக எலான் மஸ்க் கருத்து.

மசோதாவைப் பற்றி எலான் மஸ்க் முழுமையாக அறிந்திருந்தார் என ட்ரம்ப் பதில்.

எலானின் விமர்சனத்தால் தான் ஏமாற்றம் எனவும் அவர் கருத்து
💥 “கோலி செய்ததை மறக்க மாட்டார்கள்.. 100 கோடி கேட்டு ஆர்சிபி மீது வழக்கு போடுங்க” மதன் லால் ஆவேசம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஐபிஎல் கோப்பை வெற்றி விழாவில் நடந்த கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த நிலையில், முன்னாள் உலகக் கோப்பை வென்ற வீரர் மதன் லால் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். "விராட் கோலி செய்ததை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்" எனவும், "ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மீது வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க வேண்டும்" எனவும் அவர் கூறியிருக்கிறார்.

2025 ஐபிஎல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஜூன் மூன்றாம் தேதி வென்றது. அதற்கு மறுநாளே பெங்களூரில் வெற்றி விழாவுக்கு அவசரகதியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்று கூடினார்கள். அதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் இறந்தனர்; 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்த சம்பவம் குறித்துப் பேசிய மதன் லால், "மக்கள் விராட் கோலி செய்ததை மறக்க மாட்டார்கள். மக்கள் வெளியே இறந்து கொண்டே இருக்கும் போது உள்ளே கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இது அதிர்ச்சி அளிப்பதாகவும், மனதை நோகடிப்பதாகவும் இருந்தது. இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கர்நாடக மாநில அரசு மீது வழக்கு தொடர்ந்து 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்க வேண்டும்."

"இது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. 11 பேர் இறந்திருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கவே கூடாது; இது நடக்காமல் தடுத்திருக்கலாம். அகமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நீங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டீர்கள். அடுத்த நாளே பெங்களூரில் கொண்டாட்டத்தை நடத்த வேண்டும் என என்ன அவசரம்?"

"இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த கொண்டாட்டத்தைத் திட்டமிட்டிருக்கலாம். அப்போதும் ஆர்சிபி ரசிகர்கள் இதில் உற்சாகத்துடன் பங்கேற்று இருப்பார்கள். நீங்கள் சரியான கால அவகாசத்தை அளித்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தப் போட்டி நடந்திருந்தாலும் ரசிகர்கள் அதைப் பார்க்க வந்திருப்பார்கள். இதுபோன்ற சம்பவம் நடக்காமல் தடுத்திருக்கலாம்."

"இதில் யாரை நாம் குற்றம் சொல்வது? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அல்லது மாநில அரசா? அரசு இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்காமல் இருந்திருந்தால் இந்த கொண்டாட்டங்கள் நடந்திருக்காது. எனவே, அரசுக்கும் இதில் பங்கு உள்ளது. அதே சமயம், ஆர்சிபி அணிக்கும் இதில் பங்கு உள்ளது. விமானத்தில் வந்து இறங்கிய நான்கு மணி நேரத்தில் பொதுவெளியில் வீரர்களை கொண்டாட்டத்தில் ஈடுபட வைக்க வேண்டும் என என்ன அவசரம்?"

"ஐபிஎல் அணிகளுக்கு இன்றைய காலகட்டத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அந்த அணியின் உரிமையாளர் அதை தவறாகக் கணித்திருக்கிறார்; மிகப்பெரிய தவறை செய்திருக்கிறார். பிசிசிஐ-ஐ இதில் குற்றம் சுமத்த முடியாது. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பொறுப்பு. அவர்கள்தான் மாநில அரசுடன் இணைந்து இதை செய்திருக்க வேண்டும்"

" இறந்தவர்களின் குடும்பத்தை யார் பார்த்துக் கொள்வார்கள்? அனைத்து கொண்டாட்டமும் மகிழ்ச்சியும் இப்போது நாசமாகிவிட்டது. மிகப்பெரிய தகவல் தொடர்பு இடைவெளி இருந்துள்ளது. இதில் சோகம் என்னவென்றால், நமது நாட்டில் மனித உயிருக்கான மதிப்பு குறைவாகவே பார்க்கப்படுகிறது," என்றார் மதன் லால்.
💥 வெங்காயம்: அண்ணாமலை கடும் விமர்சனம்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ்.

கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது.

எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா?

இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?

தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம்.

- கே.அண்ணாமலை, பாஜக
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு இன்று (ஜூன் 6) முதல் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

மாணவர்களின் சிரமத்தை குறைப்பதற்காக நீட் தேர்வு முடிவுக்கு முன்பே விண்ணப்பப்பதிவு தொடக்கம்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் https://tnmedicalselection.net இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
🤪 தக் லைஃப் மொக்கையாம்...

வீடியோ: https://www.facebook.com/share/v/1FsFCuzHj6/

படம் பாத்தவங்க சொல்றாங்க...
ரெபோ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.

வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெபோ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆக குறைக்கப்படுவதாக அறிவிப்பு.

ஏற்கனவே இரு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் குறைப்பு.

பிப், ஏப்ரல், ஜூன் மாதங்களை சேர்த்து 1% குறைப்பு.

இதன்மூலம் வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.