Seithikathir - Tamil News
14.1K subscribers
186 photos
50 videos
877 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
குறள் எண் : ௨௫௭(257)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்

குறள் :
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.


உரை :
புலால் உண்ணாமலிருக்க வேண்டும், ஆராய்ந்துப் பார்த்தால், அப் புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம். 

English :
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௨௨)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
05/06/25
📚📚📚🌹📚📚📚

உங்களை மகிழ்விப்பவர்களை
உங்களைச் சுற்றி
இருக்கச் செய்யுங்கள்.
உங்களை சிரிக்க வைப்பவர்கள்,
உண்மையாக அக்கறை
கொண்டவர்கள்.
இவர்களே உங்கள்
வாழ்வில் தக்கவைக்கப்பட
வேண்டியவர்கள்..
மற்ற அனைவரும்
வெறுமனே உங்களை
கடந்து செல்பவர் மட்டுமே.

- கார்ல் மார்க்ஸ் -

📚📚📚🌹📚📚📚
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏற்பாடு.

தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு என விளக்கம்.
💥 நடிகர் கமலஹாசன் - கன்னடம் - எப்படி கையாள்வது?

திராவிட மொழிகளின் ஒப்பீடுகளில் தமிழே இவற்றுக்கெல்லாம் மூல மொழியாக இருக்க வேண்டும் என்று ஆய்ந்து கூறிய மொழியியல் அறிஞர் கால்டுவெல் அவர்களைப் பின்பற்றி நடிகர் கமலஹாசன் தனது கருத்தைச் சொல்லி இருக்கின்றார் என்று நினைக்கிறேன். அது கர்நாடகா நீதிமன்றம் வரையிலும் சென்று கமலஹாசனை மன்னிப்புக் கேட்கும் படிச் சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது.

அவரவர் மொழி அவரவர்க்குப் பெரிது என்றாலும் கூட ஒரு ஆய்வைப் பின்பற்றி அது ஏற்கனவே தென்னிந்திய மொழிகள் குறித்த ஆய்வுகளாகவும் குறிப்பாக மொழி ஆய்வாளர்கள்பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அது ஒரு பொதுக் கருத்து போல இருப்பதாலும் கூட அதைச் சொல்லுவதில் பெரிய தவறு ஒன்றும் இல்லை. சொன்னவர் ஒரு பிரபலமானவர் என்பது தான் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது.

அது ஒரு புறம் இருக்க இது மாதிரி விஷயங்களில் எப்பொழுதும் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக பேசிக் கொள்கிற திமுகவின் அல்லது ஸ்டாலினின் முன் களப்பணியாளர்கள், பத்திரிக்கையாளர் ள் நடிகர்கள் சித்தார்த் பிரகாஷ்ராஜ் மற்றும் தத்துவவாதிகள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மற்றும் பல நடிக நடிகையர்கள் மற்றும் சிபிஎம் கட்சி தோழர்களும் இது பற்றி தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அல்லது ஏன் வாயைத் திறக்க மறுக்கிறார்கள்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இதுவரை இவர்கள்காவிரி, முல்லைபெரியாறு, கண்ணகி கோட்டம் பிரச்சனைக்காக எந்த ஒரு தீவிரமான குரலையும் கொடுப்பதில்லை! ஆனால் தமிழ்நாட்டில் வந்து மட்டும் கருத்துக் கந்தசாமிகளாக மாறி விடுகிறார்கள். கமல் மன்னிப்பு கேட்பதால் மட்டும் இப்பிரச்சனை தீர்ந்து விடுமா? இது விவகாரத்தில் மேற்சொன்னவர்கள் பலரும் குரல் கொடுக்காததால் கமலைத் தனிமைப்படுத்துகிறார்கள் என்று தானே எண்ண வேண்டியிருக்கிறது?

மொழியியல் ஆய்வுகளை படித்து அதன் பிரகாரம் ஒருவர் தன் கருத்தைச்சொல்வதற்கு உரிமை உண்டு தானே. அதை மறுப்பவர்கள் தங்கள் மொழியை உயர்த்தி பிடிப்பதற்கும் இருக்கும் உரிமை போல அதுவும் ஒன்றுதான்.

இது கவனமாக கையாள வேண்டிய ஒரு விடயம்.

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்
💥 மொழியின் தன்மை வேறுபட்டு உருவனதா கன்னடம்?

சிலப்பதிகாரம் குறிப்பிடும் "தண்டமிழ் நாடு" என்பது, தெற்கில் குமரிமுனை முதல் வடக்கில் வேங்கடமலை வரையிலும், கிழக்கு மற்றும் மேற்கில் கடல்கள் எல்லையாகவும் கொண்ட பரந்த நிலப்பரப்பாகும். இந்த தண்டமிழ் நாடு, செந்தமிழ் நாடு மற்றும் கொடுந்தமிழ் நாடு என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

"குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டிணி மருங்கிற் றண்டமிழ் வரைப்பிற்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொரு ளின்பம்"

இந்த இரு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள், ஐவகை நிலப்பகுதிகளான குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் ஆகியவற்றில் தங்களது வாழ்வியல் நெறிகளை, அறம், பொருள், இன்பம் என்ற மூன்று அடிப்படைகளில், மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் பொதுவான ஒழுக்க மரபுகளுடன் அமைத்துக் கொண்டனர் என்கிறது சிலப்பதிகாரம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் மொழியின் திரிபு மொழிகள் பேசப்பட்ட பகுதிகளை "கொடுந்தமிழ் வழங்கும் நாடுகள்" என வரையறுத்துள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

செந்தமிழ் மற்றும் கொடுந்தமிழ் நாடுகள்

18ஆம் நூற்றாண்டு இலக்கண நூல்களும் செந்தமிழ் பகுதி மற்றும் கொடுந்தமிழ் பகுதி என வரையறுக்கின்றன. கீழ்க்கண்ட பன்னிரண்டு நாடுகள் கொடுந்தமிழ் வழங்கும் நாடுகள் என அடையாளம் காணப்படுகின்றன, இவை மொழித் திரிபு (வட்டார வழக்கு) கொண்ட நாடுகளாகும்:

தென்பாண்டி நாடு (திருநெல்வேலிப் பகுதி)
குட்ட நாடு (கேரளத்திலுள்ள கோட்டயம், கொல்லம் மாவட்டங்கள்)
குட நாடு (வடமலபார்)
கற்கா நாடு (கோயம்புத்தூர் சார்ந்த மலைப் பகுதிகள்)
வேணாடு (திருவாங்கூரின் தென்பகுதி - கன்னியாகுமரி மாவட்டம்)
பூழி நாடு (கோழிக்கோடு)
பன்றி நாடு (பழனி மலை சூழ்ந்த பகுதி)
அருவா நாடு (வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு)
அருவா வடதலை நாடு (சித்தூர், நெல்லூர்)
சீத நாடு (நீலகிரி)
மலையமான் நாடு (திருக்கோவலூர் சூழ்ந்த பகுதி)
புனல் நாடு (சோழ நாடு)

செந்தமிழ் நாடு என்பது தமிழ் வளர்த்த மதுரையைச் சுற்றி வழங்கப்பட்ட தமிழைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. "செந்தமிழ் நிலமாவது வையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் ஆகும்" என்று அதன் புவியியல் எல்லை வரையறுக்கப்பட்டுள்ளது.

நன்னூல் (நூற்பா 271 உரை) "சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியும், சுந்தர பாண்டியன் எனும் தமிழ் நாடனும், சங்கப் புலவரும் தழைத்து இனிது இருக்கும் மங்கலப் பாண்டி வளநாடு" என்று செந்தமிழ் நாட்டின் சிறப்பைப் பேசுகிறது.

தமிழ் மொழியில் இருந்து திரிந்ததாகக் கூறப்படும் கொடுந்தமிழ் பகுதிகளின் பட்டியலில் வடுக நாடோ (ஆந்திரப் பகுதி) அல்லது எருமை நாடோ (மைசூர் - கர்நாடகா) தமிழ் புலவர்களால் சேர்க்கப்படவில்லை. மாறாக, "வடுகர் முனை" என்பது "மொழிபெயர் தேசம்" என்றே குறிப்பிடப்படுகிறது, அதாவது மொழி மாறுபட்ட பகுதி என்று பொருள். இவ்விடத்தில் புரிந்து கொள்ளவேண்டியது வேறு ஏதோ மொழி என்று கூறாமல் மொழியின் தன்மை வேறுபட்டு (மொழிப் பெயர்ந்து) காணப்படுகிறது என்கிறது. அச்சொல் ஆய்வுக்கு உரியது.

சங்க காலத்தில் இப் பகுதிகளில் தமிழ் பேசப்பட்டிருந்தால், இலக்கியங்கள் அதை நேரடியாகச் சுட்டியிருக்கும். மாறாக,

"குல்லைக் கண்ணி வடுகர் முனையது
பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே"

இங்கு, வடுகர்கள் மொழியால் வேறுபட்டவர்களாக இருந்தாலும், அவர்கள் நாட்டை பற்றி பதிவு செய்துள்ளது.

- கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அரசியலாளர்
பாமக நிறுவனர் ராமதாஸுடன்
ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித் ஷா வரும் 8ஆம் தேதி தமிழ்நாடு வரும் சூழலில் ராமதாசை சந்திக்கும் ஆடிட்டர் குருமூர்த்தி
தைலாபுரத்தில் ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு
டி.என்.பி.எல் 9வது சீசன் - இன்று துவக்கம்

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரின்
9வது சீசன் இன்று தொடக்கம்

முதலாவது லீக் போட்டியில் திண்டுக்கல்,
கோவை பலப்பரீட்சை
வந்தார். சந்தித்தார்.. சென்றார்..

தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்துவிட்டு புறப்பட்டார் அன்புமணி

ராமதாசுடன் அன்புமணி அரை மணி நேரத்திற்கு மேலாக சந்தித்து பேசி உள்ளார்.

வழக்கமாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஒவ்வொரு வியாழக்கிழமையும் நிருபர்களை சந்திப்பார்.

இதனால் இன்றைய தினம் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 உயர்ந்து சவரனுக்கு ரூ.73,040க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் ரூ.9130க்கு விற்பனை ஆகிறது.
சென்னை: காயிதே மில்லத்-ன் 130வது பிறந்த நாளை ஒட்டி, வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
சிந்தூர் மரக்கன்றுகளை நட்ட பிரதமர் மோடி

1971 இந்தியா - பாகிஸ்தான் போரில் ஈடுபட்டோரின் தாய்மார்களும் சகோதரிகளும் எனது குஜராத் பயணத்தின்போது சிந்தூர் மரக்கன்றுகளை என்னிடம் கொடுத்தனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, டெல்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் அவற்றை இன்று நட்டு வைத்துள்ளேன்.

இவை, நம் தேசத்தின் பெண் சக்தியின் வீரம் மற்றும் உத்வேகத்தின் அடையாளமாக இருக்கும்-பிரதமர் மோடி.
விஷால் ரூ.21 கோடியை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.

லைகா நிறுவனத்திற்கு ரூ.21 கோடியை 30% வட்டியுடன் நடிகர் விஷால் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தனது படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் பெற்ற ரூ.21.29 கோடி கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

விஷால் திருப்பி செலுத்தாததால் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
நாளை மறுநாள் (ஜூன் 7) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

நாளை மறுநாள் ஜூன் 7ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் - பொதுச்செயலாளர் துரைமுருகன்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் திமுக எம்.பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்களுக்கும் அழைப்பு.

கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
💥 இயற்கையுடன் நேரம் செலவிடும் போது...

முதுகு வலி குறைவதாக பிரிட்டனின் Plymouth பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல்!

நீண்ட கால முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் பூங்கா போன்ற இடங்களில் வாக்கிங் செல்லும்போது, தங்களின் வலிகளை மறந்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 தயாராகும் இங்கிலாந்து அணி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்களின் பட்டியல் வெளியானது.

பென் ஸ்டோக்ஸ், பஷீர், பெத்தல், ப்ரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், வோக்ஸ், ஜோஸ் டங்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 தட்கல் ரயில் டிக்கெட் வேணுமா? இனி ஆதார் கட்டாயம்!

விவரம்: https://youtu.be/bChcYm_jsKE?si=I6CfD1hWg39BeEnC

என்ன செய்ய வேண்டும்? ஏன் திடீர் மாற்றம்?

***
🐘 குட்டி யானையின் நன்றி காட்சி ❤️

வீடியோ: https://www.facebook.com/share/v/1AJVAonXKE/

சத்தீஸ்கரில் வனத்துறை அதிகாரிகளால் சேற்று குழியில் இருந்து மீட்கப்பட்ட குட்டி யானை, நன்றி தெரிவிக்கும் விதமாக ஜேசிபியைத் தொட்டது ❤️

50 மணி நேரத்திற்குப் பிறகு அது மீட்கப்பட்டது.

ராய்காட்டில் தண்ணீர் குடிக்கவும் குளிக்கவும் ஒரு பெரிய யானைக் கூட்டம் கூடியிருந்தது.

ஆனால் ஒரு யானைக்குட்டி தவறி ஆழமான, சேற்று குழியில் விழுந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

அது அழுதபோது, ​​அதன் துயர அழைப்புகள் அடர்ந்த காட்டில் எதிரொலித்தன, அருகிலுள்ள கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தன.

கிராம மக்கள் வன அதிகாரிகளுக்கு விரைவாகத் தகவல் தெரிவித்தனர்.

காட்டுக்குத் திரும்புவதற்கு முன்பு குட்டி யானை தன்னை காப்பாற்றியவருக்கு நன்றி தெரிவிக்கிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 மற்றும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1ஏ பதவிகளுக்கான பொதுவான முதல்நிலை தேர்வு 15.06.2025 முற்பகல் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவுதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இன்றே கடைசி….

நடப்பு கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள்.

மே 7ம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 2.9 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.

www.tneaonline.org தளத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.