Seithikathir - Tamil News
14.1K subscribers
185 photos
50 videos
865 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 அதிர்ச்சி தகவல்

"நூர் கான் விமானப்படை தளம் அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ளது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூட தலையிட அனுமதிக்கப்படுவதில்லை" என்று பாகிஸ்தான் பாதுகாப்பு நிபுணர் இம்தியாஸ் குல் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.

RUMINT இன் கூற்றுப்படி, இந்தியா நூர் கான் தளத்தையும் கிரானா மலைகளையும் தாக்கியபோது (இந்திய அதிகாரிகளின் கூற்றுப்படி நாம் அதைச் செய்யவில்லை), பாகிஸ்தான் மட்டுமல்ல, அமெரிக்காவும் பீதியடைந்தது.

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களில் அமெரிக்காவிற்கும் பங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானிடம் சொந்தமாக அணு ஆயுதங்கள் இல்லை; அவை அமெரிக்காவிற்கு சொந்தமானவை. பாகிஸ்தான் போரில் தோற்க இது தான் காரணம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பெங்களூர்:ஆர் சி பி வெற்றி பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

10-கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்துள்ளனர்.

கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியாத அவலம்
பெங்களூரு திரும்பிய RCB வீரர்களை வரவேற்ற அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
BREAKING: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 7 பேர் உயிரிழப்பு.

ஐபிஎல் தொடர் கோப்பையை முதல் முறையாக வென்ற ஆர்சிபியை வரவேற்க பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் திரண்ட கூட்டம்; நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு.

சின்னசாமி மைதானம் கேட்-6ல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 7 ரசிகர்கள் உயிரிழப்பு.

15க்கும் மேற்பட்டோர் காயம்; 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி.

கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்தது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.

ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலரிடம் மனுதாரர் ரூ.25,000 செலுத்த வேண்டும்.

14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய வழக்கில் உத்தரவு.
🔴 BREAKING NEWS

RCB பேரணி - கூட்ட நெரிசலில் 7 பேர் பலி

ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி. அணி
பெங்களூருவில் வெற்றிப்பேரணியில் ஈடுபடும் நிலையில் ரசிகர்கள் குவிந்துள்ளதால் கடும் நெரிசல்
RCB கிரிக்கெட் வீரர்களை வரவேற்க பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், நெரிசலுக்கு மன்னிப்பு கோரினார் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
பெங்களூருவில் ஆர் சி பி வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ரசிகர்கள் உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு
ஆர்சிபி வெற்றிக் கொண்டாத்தில் அதிகரிக்கும் உயிரிழப்பு.

ஆர்.சி.பி வெற்றிப் பேரணியைப் பார்க்க வந்த 11 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கி சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் கவலைக்கிடம்.

கூட்ட நெரிசல் காரணமாக மயங்கி விழுந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - டி.கே.சிவக்குமார்.

ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

பெங்களூரு மற்றும் கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

கூட்ட நெரிசல் ஏற்படும் என்றுதான் திறந்தவெளி வாகன உலாவை ரத்து செய்தோம் - கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்.
பண்டிகை கால முன்பணம் உயர்வு.

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்வு.

C, D பிரிவு ஓய்வூதியதாரர்கள், தனி ஓய்வூதியதாரர்கள் மற்றும் அனைத்துக் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்
பொங்கல் பரிசுத்தொகை உயர்வு.

முதலமைச்சரின் சட்டப்பேரவை அறிவிப்பை
செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியீடு.
உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு.

RCB வெற்றி விழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் -கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா.

விதான் சௌதா முன்பு 1 லட்சம் பேரும், சின்னசாமி மைதானத்தின் முன்பு 3 லட்சம் பேரும் கூடி இருந்தனர்.

மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே இருக்க முடியும்.
💥 டிரம்ப்புக்கு டாட்டா சொல்கிறாரா மஸ்க்??

சென்ற வாரம் டிரம்ப்பின் DOGE அமைப்பிலிருந்து 'ஓய்வு' பெறுவதாக மஸ்க் அறிவித்தார்.

அதற்கு, '130 நாட்கள் தான் அந்த வேலை. 130 நாட்கள் ஆனதால், அதிலிருந்து ஓய்வு பெற்றார் மஸ்க். என்றாலும் அவர் என்னுடன் தொடர்ந்து செயலாற்றுவார்" என்றார் டிரம்ப்.

இதற்கிடையில் டிரம்ப் கொண்டு வந்த 'பட்ஜெட் (Big Beautiful Bill) அரசின் செலவினங்களை 3 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும். ஏற்கனவே 37 டிரில்லியன் கடனில் தத்தளிக்கும் அமெரிக்காவை இது இன்னும் கடனைக் கூட்டும்" என்று கருத்து தெரித்திருக்கிறார் மஸ்க். டிரம்ப்புடனான உறவில் மேலும் விரிசல்...

டிரம்ப்பின் Use and Throw கொள்கை தான் இம்மாதிரி மஸ்க் போன்றோர் விலகக் காரணம் என்கிறார்கள். டிரம்ப் சென்ற முறை ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள், உதவியர்கள் எவரும் இப்போது டிரம்ப்புடன் இல்லை. ஏனென்றால், அவர்களது 'பயன்' முடிந்து விட்டதால், அவர்களை விட்டு புதிய அணியை உருவாக்கினார் டிரம்ப். மீண்டும் தேர்தலில் ஜெயித்தார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

என்றாலும், முதலில் விவேக் ராமஸ்வாமி டிரம்ப் அணியிலிருந்து விலகி தன் வேலையைப் பார்க்கத் துவங்கினார்.

சென்ற முறை வெள்ளை மாளிகையில் வலம் வந்த டிரம்ப் குடும்பம் இப்போது ஆளையே காணோம்.

இப்போது மஸ்க் விலகல்.

துளசி கப்பார்டு, பேம் பாண்டி, காஷ்யப் பட்டேல் என பலரும் டிரம்ப் அணியை விட்டு விலக வாய்ப்பு என்கிறார்கள்.

இதற்குக் காரணம்: தேர்தலின் போது அவர் சொன்னவையும் இப்போது அவர் செய்பவையும் முரணானவை. எந்த டீப் ஸ்டேட்டை ஒழிப்பேன் என்று கிளம்பினாரோ, அதே டீப் ஸ்டேட்டில் டிரம்ப் ஐக்கியமாகிவிட்டதாக பலரும் கூறுகிறார்கள். அதோடு பாகிஸ்தானுடன் சேர்ந்து கிரிப்டோ கரன்ஸி / பயங்கரவாதத்தில் இறங்கியிருப்பது டிரம்ப் பெயரை பெரிதும் பாதிக்கும்..
💥 கிழக்கிந்திய கம்பெனி விவகாரம் இன்னும் முடியவில்லை!

படம் 1: அமெரிக்க வர்த்தக அமைச்சர் லட்னிக் (US Secretary of Commerce Howard Lutnick) பாரதம் வந்திருக்கிறார். ஒரே அட்வைஸ்... "நீங்கள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதம் வாங்கக் கூடாது. அது எங்களை நோகச் செய்கிறது. பிரிக்ஸிலும் நீங்கள் இருக்கக் கூடாது. டாலரை ஒழிக்கும் வேலையை நீங்கள் செய்யக் கூடாது" என்றெல்லாம் பாரதத்துக்கு அறிவுரையை வாரி வழங்கியிருக்கிறார் லட்னிக்.

படம் 2: லட்னிக்கோடு பாரதம் வந்திருக்கும் மற்றொரு அமெரிக்கர் ஆஷா மோட்வானி நேற்று இரவு விருந்தில் லட்னிக் பேசியதை பட்டியலிட்டிருக்கிறார். மேற்சொன்ன அறிவுரைகளோடு கூடுதலாக, "Send us a minister of commerce that can get things done in days." என்று சொல்லியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால், அமைச்சர் பியூஷ் கோயல் தற்சமயம் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார் பாரத - அமெரிக்க Free Trade Agreement பற்றி. பியூஷ் கோயல் மீது என்ன பிரச்சினை இந்த லட்னிக்குக்கு?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

படம் 3: இன்று நம்மை, 'ரஷ்யாவை விட்டு எங்களிடமிருந்து வாங்கு' என்று கூவும் அமெரிக்கா, பல தசாப்தங்களாக நமக்கு ஆயுதம் தர முன்வரவில்லை. பாகிஸ்தானுக்குக் கொடுத்தது என்ற விவரத்தை பல ஆண்டுகளாக குறிப்பிட்டு வருகிறார் அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர்.

*** என்று முடிவுக்கு வரும் இந்த வெள்ளையர்களின் கிழக்கிந்திய கம்பெனித்தனம்???
🔴 மக்கள்தொகை கணக்கெடுப்பு அடுத்த மார்ச் 1 முதல் தொடங்கும் எனவும், ஜாதிவாரி கணக்கெடுப்பும் அதனுடன் சேர்த்து நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

பனியால் பாதிக்கப்படும் லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சல், உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் அக்டோபரிலேயே செயல்பாடுகள் தொடங்கிவிடும்.

நாடு முழுவதும் 2 கட்டங்களாக கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021-ல் நடக்கவேண்டிய கணக்கெடுப்பு கொரோனாவால் தள்ளிப்போனது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29