Seithikathir - Tamil News
14.1K subscribers
193 photos
53 videos
896 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.

முதல் நாளே பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட விலையில்லா பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை.

பள்ளிகள் தூய்மைப்படுத்தப்பட்டு, மாணவர்களை வரவேற்பதற்கான அலங்காரங்களுடன் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் காலியாக உள்ள் 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜுன் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

வைகோ, வில்சன், சண்முகம், எம்எம் அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோர் பதவி ஜூலை 27-ம் தேதி நிறைவடைந்தது.

திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக வேட்பாளர்களாக வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் களமிறங்குகின்றனர். அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
❤️🏏 INTO THE FINALS

மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் சூப்பர் கிங்ஸ்

நாளை இறுதிப்போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றிடாத நிலையில், முதல்முறையாக வெற்றியை சுவைக்கப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.71,600க்கு விற்பனை.
🔴 BREAKING NEWS

இஸ்தான்புல்லில் திட்டமிடப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சற்று முன்னதாக, உக்ரைன், ரஷ்ய எல்லைக்குள் ஆழமாக 40 விமானங்களை அழித்துவிட்டது.

இதையடுத்து உக்ரைனின் தலைநகர் கீவ் மற்றும் உக்ரைன் முழுவதும் உள்ள பிற பகுதிகள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

தலைநகர் கீவ் உட்பட உக்ரைன் முழுவதும் தற்போது வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கின்றன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்-இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.

முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறிய வாழ்த்து செய்தியில் கூறியதாவது; நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை என அனைத்திலும் கரைகண்டவர். தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தங்களின் சிம்பொனி இசை தமிழ்நாட்டில் ஒலிக்கவுள்ள ஆக.2ஆம் நாளுக்காக காத்திருக்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
BREAKING: ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிப்பு.

சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது.

மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.
🔴 ஞானசேகரன் மீது நிரூபிக்கப்பட்ட 11 குற்றச்சாட்டு சட்டப்பிரிவுகளின் தண்டனை விவரம்:

329 - மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடந்து கொள்ளுதல் - 3 ஆண்டுகள் சிறை

126(2) - மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் - ஒரு மாதம் சிறை.

87 - வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் - 10ஆண்டுகள், ரூ.10,000 அபராதம்.

127(2) - உடலில் காயத்தை ஏற்படுத்துதல் - 1 ஆண்டு சிறை.

75(2) - விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமை செய்தல் - 3 ஆண்டுகள்

76 - கடுமையாக தாக்குதல் - 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

64(I) பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள்; ரூ.25,000 அபராதம்.

351(3) கொலை மிரட்டல் விடுத்தல் - 7 ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

238(B) பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அழித்தல்; 3ஆண்டுகள் சிறை, ரூ.10,000 அபராதம்.

66(E) தகவல் சட்டப்பிரிவு: தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறுதல் - 3 ஆண்டுகள் சிறை, ரூ.25,000 அபராதம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 It is time to bring out the writer in you!

👉🏼 A request to Seithikathir friends: This is a wonderful opportunity to showcase your writing skills. Everyone is encouraged to participate!

Participate in the Ministry Of Defence and MyGov essay competition and win a chance to witness the 78th Independence Day celebrations at Red Fort, Delhi on August 15, 2025.

The topic is ‘Operation Sindoor: Redefining India’s policy against terrorism’.

Top three winners can win a cash prize of Rs.10,000/- each. The entries will be bilingual in Hindi & English, and an individual can participate only once. The competition is from June 01 to 30. 🇮🇳

For more details: https://mygov.in.

• The Seithikathir • WhatsApp!
https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
Happy Birthday to our beloved Maestro! We cherish your music every day, and today we specially celebrate you as you are celebrating your Birthday Today

Wishing you great health, strength, and many more years of creating magic for us to enjoy. May the Almighty bless you with happiness and longevity! 🙏

- Team Seithikathir
🏏 மேக்ஸ்வெல் ஓய்வு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 'ஆல்-ரவுண்டர்’ கிளென் மேக்ஸ்வெல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔥 தரமான இன்னிங்ஸ்!

“பும்ராவுக்கு எதிராக ஸ்ரேயஸ் விளையாடிய அதிரடி ஆட்டம்தான் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் மிகச் சிறந்த ஆட்டம்!”

-ஏபி டிவில்லியர்ஸ், தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு - சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தல்.
ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்ப பெறப்பட்டன.

ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்ப பெறப்பட்டுள்ளன; மே 19 2023ல் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

ஜூன் 2, 2025 நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன; ரூ.2,000 நோட்டுகள் சட்டப்படி செல்லும் - ரிசர்வ் வங்கி.
ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்வு.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1120 உயர்ந்தது.

காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.880 உயர்ந்தது.

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔴 பேட்டியும் விமர்சனமும்... புரிந்து கொள்வது எப்படி?

ப்ளூம்பெர்க் ஊடகத்துக்கு chief of defense staff / பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் அனில் சௌஹான் கொடுத்த பேட்டியை பாராட்டியும் விமரிசித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

முன்னாள் இராணுவ வீரர் Col அஜய் ரைனா தன் பதிவில், "CDS சௌஹான் தன் பேட்டியில் 'தந்திரோபாய தவறுகள் (tactical mistakes) செய்தோம் முதலில். பிறகு அதை சரி செய்தோம்' என்று குறிப்பிட்டது எதனால் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக, எந்த ஆப்பரேஷனையும் மேற்கொள்ளுமுன், எதிரி நிலைகளை SEAD (Suppression of Enemy Air Defenses) and DEAD (Destruction of Enemy Air Defenses) செய்த பிறகு மேற்கொள்வது பாதுகாப்பானது. நம்மவர்மள் SEAD / DEAD செய்யாமல் முதலில் பயங்கரவாத டிரெயினிங் நிலைகளைத் தாக்க முயற்சித்து அதில் சில பின்னடைவுகளை / தாக்குதல்களை சந்தித்திருப்பார்கள்.

அந்த தந்திரோபாய தவறுகள் (tactical mistakes) சரி செய்ய, எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளான (Enemy Air Defenses) ரேடார் உள்ளிட்டவற்றை தகர்த்த பிறகு மீண்டும் தாக்குதல் நடத்தி தகர்த்தெறிந்து, அதன் பின் ஆப் சிந்தூர் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருக்கிறது. (எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை. எந்த விமானியும் உயிரிழக்கவில்லை). இந்த ஆப்பரேஷனைப் பாராட்ட வேண்டும். இந்த ஆப்பரேஷனை வெற்றிகரமாக நிறைவேற்றிய விமானிகளின் தாய்மாரைப் போற்றுவோம்".

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 மஸ்க் ஏன் வங்கதேசத்துக்கு ஸ்டார்லிங்க் கொடுத்தார்??

பல ஆண்டுகளாக மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் பாரதத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டெஸ்லாவுக்கு இந்தியாவில் உற்பத்தி செய்ய விருப்பமில்லை - சீனாவில் உற்பத்தி செய்கிறது.

பாரதம் அத்தனை வாகன நிறுவனங்களுக்கும் ஒரே கொள்கை தான் வைத்திருக்கிறது என்பதால் - சீனாவிலிருந்து இங்கே 0% வரியில் இறக்குமதி செய்ய - டெஸ்லாவுக்கு பிரத்தியேக சலுகை தர பாரதம் மறுத்து விட்டது.

எனவே, டெஸ்லா இங்கே வரப்போவதில்லை.

தனக்கு சலுகை தராத பாரதத்தைச் சீண்டத் தான் வங்கதேசத்துக்கு உதவ தன் ஸ்டார்லிங்க் இணைப்பு கொடுத்திருக்கிறாரா மஸ்க்?

*** வங்க தேசத்தில் பல அமெரிக்கர்கள் வந்து போகிறார்கள் சமீப காலமாக. இரு தினங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சர் ஹெக்செத் வந்ததும் கவனிக்க வேண்டியது. வாலாட்டப் போகிறதா அமெரிக்கா?

ஆனால், மாஸ்டர் பிளான் வேற மாதிரி இருக்கு! https://youtu.be/n1cX1RA6P3c

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பெரிதாக வெடிக்கப் போகிறது பிரச்சினை!

அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே ரஷ்யாவில் யுக்ரைன் அத்துமீறல். பெரிதாக வெடிக்கப் போகிறது பிரச்சினை!

நேற்று ரஷ்யாவின் விமான தளங்களில் இருந்த விமானங்கள் திடீரென டுரோன் தாக்குதலுக்கு உள்ளாயின. பல விமானங்கள் சேதம். (யுக்ரைன் 40 விமானங்களை சேதமடையச் செய்தோம் என்கிறது. ரஷ்யா 8 விமானங்கள் சேதமாயிருக்கின்றன என்கிறது).

ரஷ்ய இராணுவ கண்காணிப்பைத் தாண்டி எப்படி உள்ளே நுழைந்தன அந்த டுரோன்கள் என்றால்...

1, யுக்ரைன் - ரஷ்யாவுக்கிடையே போர் என்றாலும் இரு நாடுகளும் வர்த்தகத்தை நிறுத்தவில்லை. (பாரதம் நிறுத்திவிட்டது பாகிஸ்தானுடனான வர்த்தகத்தை என்பதை கவனிக்கவும்).

2, யுக்ரைன் ரஷ்யாவுக்கு அனுப்பிய wooden cabinகளுக்குள் ரகசியமாக FPV (first-person view) டுரோன்களை மறைத்து வைத்திருந்தது ரஷ்யாவின் சோதனைகளில் சிக்கவில்லை. கேமராக்கள் பொறுத்தப்பட்டு ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த FPV டுரோன்கள் மிகச் சிறியவை. வெடிபொருளை எடுத்துச் சென்று வெடிக்கச் செய்பவை. மலிவானவை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

3, ரஷ்யாவுக்குள் wooden cabinகள் வாயிலாக நுழைந்தன இந்த FPV டுரோன்கள். நேற்று அந்த cabinகளின் மூடியை / கூரையை ரிமோட் மூலம் திறந்திருக்கிறது யுக்ரைன். திறந்ததும், FPV டுரோன்களை ரிமோட் மூலம் பறக்கச் செய்து, ரஷ்ய விமான தளங்களில் இருந்த விமானங்களைத் தாக்கியிருக்கிறது யுக்ரைன்.

ரஷ்யாவுக்கு பெரிய இழப்பு.

ஒரு புறம் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் செலன்ஸ்கி இப்போது இப்படித் தாக்குதல் நடத்தியிருப்பது அமைதிப் பேச்சை குப்பையில் போடும் வேலை.

ஐரோப்பிய - அமெரிக்க இராணுவ தளவாட நிறுவனங்களால் இயக்கப்படும் ப்ப்பெட் இந்த செலன்ஸ்கி . ரஷ்யா மீது இம்மாதிரி திருட்டுத் தனமான தாக்குதல்களை செலன்ஸ்கி நடத்துவது இது முதல் முறை அல்ல.

இந்த தாக்குதலுக்கான பதிலை ரஷ்யா கொடுக்கும். அமைதிப் பேச்சுவார்த்தை குப்பையில் போடப்படும்.

யுக்ரைன் - ரஷ்ய விவகாரத்தை பாரத - பாக் விவகாரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கவும்.

1, பாரதம் பாக்கில் இருந்து இயங்கும் பயங்கரவாத கூட்டத்தை தாக்கியது.

2, பதிலுக்கு பாக் இராணுவம் தாக்கியதால், பாக் இராணுவ தளங்களை அழித்தது பாரதம்.

3, இப்போது தற்காலிக நிறுத்தத்தில் இருக்கிறது ஆப் சிந்தூர்.

4, பாரதத்தைப் பொறுத்தவரை இது ஒரு 'பயங்கரவாத அழிப்பு' செயல்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆனால், புட்டின் செய்ததென்ன??

1, யுக்ரைனின் கிழக்கு மாகாணங்கள் 3 வாக்கெடுப்பு நடத்தி, தங்களை தனி நாடாக அறிவித்தன (2014இல் ?). ஆனால் அதை ஏற்காத யுக்ரைன் அந்த 3 மாகாண மக்களையும் கொடுமைப் படுத்தியது.

2, அந்த 3 மாகாணங்களும் (2021 - 22இல்) மாஸ்கோ வந்து ரஷ்ய அரசிடம், 'எங்களை ரஷ்யாவின் பகுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள்' என்றன.

3, ரஷ்ய அரசு அந்தக் கோரிக்கையை ஏற்றது. அந்த 3 பகுதிகளையும் ரஷ்யாவின் பகுதிகளாக அறிவித்தது. அதோடு யுக்ரைனிடம், 'எங்கள் பகுதியான அந்த 3 மாகாணங்களிலிலும் இருந்து வெளியேற்றுங்கள் உங்கள் இராணுவத்தை' என்றது.

4, அமெரிக்க - ஐரோப்பிய கைக்கூலி யுக்ரைன் (செலன்ஸ்கி) இசையவில்லை.

5, யுக்ரைன் இராணுவத்தை வெளியேற்ற, தன் இராணுவத்தை அனுப்பியது ரஷ்யா. இரு நாடுகளுக்குமிடையே 'போர்' மூண்டது. யுக்ரைனில் இது வரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவிலும் 2 லட்சம் பேர் இறந்திருப்பதாக செய்தி.

6, அந்த 3 மாகாணங்களிலும் இருந்த யுக்ரைன் இராணுவத்தை 'பயங்கரவாதி' என்று ரஷ்யா அறிவித்திருந்தால், பாரதத்தைப் போல, 'பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில்' இறங்கியிருக்கலாம் ரஷ்யா. அந்த 3 மாகாணங்களிலிருந்தும் 'யுக்ரைன் இராணுவ பயங்கரவாதிகளை' விரட்டும் நடவடிக்கைக்கு பெரிதாக எதிர்ப்பு வந்திருக்காது.

7, மாறாக... யுக்ரைனுடன் போர் அறிவித்ததால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஐரோப்பா - அமெரிக்கா நேரடியாக பண உதவி மற்றும் ஆயுத உதவி கொடுத்து போரைப் பெரிதாக்கின.

8, பயங்கரவாத ஒழிப்பு என்று எடுத்துச் சென்றிருந்தால், செலன்ஸ்கி முதல் அவர் அமைச்சரவையில் இருக்கும் பயங்கரவாதிகளை முடித்துப் போயிருக்கலாம் புட்டின்....

செலன்ஸ்கி ஒரு பயங்கரவாதி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அதனால் தான் பிரதமர் மோதி ஜி, 'இது போருக்கான காலமில்லை' என்றார். 'பயங்கரவாத ஒழிப்புக்கான காலம்' இது.