Seithikathir - Tamil News
14.1K subscribers
171 photos
49 videos
792 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
🔴 பா.ம.க. குடும்ப அரசியல்: கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியா?

- ஜி.எஸ். பாலமுருகன்.
- கருத்துகளை பகிர:- https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/

"அன்புமணியை 2026இல் முதலமைச்சராக்க பாடுபடுவோம்" என்று பா.ம.க. சமூக ஊடகப் பேரவையின் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய ராமதாஸ், ஓர் இரவுக்குப் பின் அவரது 'குற்றச்சாட்டுகள்', குடும்ப உறவுகள் மீது அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.

பா.ம.க.வில் தந்தை - மகன் இடையேயான மோதல் கட்சியின் எதிர்காலத்தையும், அதன் அடிப்படை மதிப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. “வளர்த்த கிடா மார்பில் உதைத்துவிட்டது”, “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்”, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை”, “எடுத்தேன், கவிழ்த்தேன்”, “அனைத்திலும் மருமகள் தலையீடு” - இவை அனைத்தும் கட்சியின் நிலையை பொது மக்கள் முன் சிக்கலாக்கும் வகையில் வெளிப்படையாகவே பேசிவிட்டார் ராமதாஸ்.

"வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எனது குடும்பத்தினரின் நெருக்கடியால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன். ஒரு நாள் இரவு தூங்காமல், சுகாதாரத் துறையை பெற்று கொடுத்தேன்" என்று ராமதாஸ் சொல்கிறார். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். "அன்புமணி போன்று திறமையானவர் எவரும் இல்லை. அவரை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்!" என்று 2020 ஜுலையில் ஒரு கடிதம் எழுதினார் ராமதாஸ்.

தலைமைப் பண்பு இல்லாதவர் என்று விமர்சித்த ராமதாஸ்-க்கு, அவரது கடிதத்தில் இருந்து ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது இப்போது பொருத்தமாக இருக்கும். "சுகாதாரத் துறையில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்து முடித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டி கவுரவித்தனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

“நான்கு சுவரில் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார் அன்புமணி” என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார். ஆனால் அதே அவர், பத்திரிகையாளர்களை கூட்டி, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை” "தாயார் மீது பாட்டிலை வீசினார்" "காடுவெட்டி குருவை அவமதித்தார்" என்று பேசுவது, கட்சி தொண்டர்கள் மனதில் குழப்பத்தையும் அன்புமணி மீது மக்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் சிதைக்கும் என்பது ராமதாஸ்-க்கு தெரியாமல் போய்விட்டதா? உண்மைகள் எவ்வாறிருந்தாலும், அதை சுவற்றுக்குள்ளும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியில் பேசுவதற்கும் இடையே ஒரு நேர்மையான சமநிலை தேவைப்படுகிறது.

“பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் எனக்கு கொள்ளி வைக்க நேரிடும்” என கூறி என் காலைப் பிடித்து அன்புமணி அழுததாக ராமதாஸ் கூறியிருப்பது, வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதில் பா.ஜ.க. தந்திர அரசியலின் பின்புலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளதாக பலரும் பேசுகிறார்கள் அல்லது அப்படி ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படுகிறது.

பா.ஜ.க. நாடு முழுவதும் கட்சிகளை உடைத்து, புதிய கூட்டணிகளை உருவாக்கும் கதை, பா.ம.க. மீதும் அதே அழுத்தம் இருக்கக் கூடும் என்ற அரசியல் வட்டாரங்களின் ஊகங்களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டியதும் அல்ல! பா.ஜ.க. மீதான இந்த சந்தேகம், இந்திய அரசியல் சூழலில் அனைத்து கட்சிகளும் உணர வேண்டிய ஒரு சூழலைதான் பா.ம.க. விஷயத்தில் இருந்து நாம் எடுத்து கொள்ள வேண்டியது.

அதேசமயம், இது முற்றிலும் தந்தை - மகன் இடையிலான அரசியல் மோதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியை அன்புமணி விரும்பியதற்கும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கும் பின்னணி இருக்கிறது.

சேலத்தில் (23/03/2024) பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். அது போலத்தான் பா.ம.க." என பேசினார். இதன் பிறகே அதிமுக - பாமக கூட்டணி ஏற்படாமல் முறிந்து போனது. இதை பழனிசாமியும் பின்னாளில் உணர்ந்து பேசியிருக்கிறார்.

“இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற அன்புமணியின் வார்த்தைக்குப் பிறகு, என் கண்களில் இருந்து 2 சொட்டு கண்ணீர் விழுந்தது என ராமதாஸ் சொன்னது, குடும்ப அரசியல் சிக்கலைவிட கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையாகவே கட்சியினர் பார்க்கின்றனர்.
இப்போது கட்சி இருக்கும் செல்வாக்கையும் எதிர்காலத்தையும் நினைத்து ராமதாஸ் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வாரிசு அரசியல் சிக்கல்கள் இந்திய அரசியலில் பொதுவானவை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கருணாநிதி இருந்தபோது திமுகவில் ஸ்டாலின் - அழகிரி மோதல், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் - அவை அனைத்தும் அதற்கான சான்றுகள். ஆனால், அந்த குடும்ப அரசியல் சிக்கல்களை கடந்தே மக்களுக்கு சேவை செய்யும் நிலையை கட்சிகள் அடைய வேண்டும் என்பதை உணர வேண்டும்.

பேருந்து பயணங்கள் மூலமே 95 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்த ராமதாஸின் கால்கள் கட்சியை உற்சாகமாக கட்டியெழுப்பியது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து அரசியல் களத்தை எதிர்கொண்டவர். பாமகவின் கூட்டணிக்காக இரு தலைவர்களையும் ஏங்க வைத்தவர். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆளுமைக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அதை வளர்த்தெடுக்கும் வகையில், "அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை" என்று கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார் அன்புமணி.

அன்புமணி - தந்தையின் பாரம்பரியத்தை தொடரும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவரது தலைமையின் திறனை அரசியலில் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் மிக முக்கியமான சவாலாக உள்ளது. அதை அன்புமணியும் நன்கு உணர்ந்திருப்பார் என்பதே அவரது சொல்லில் தெரிகிறது. அதற்கு அவர் முதுகில் தட்டிக் கொடுத்து உறுதுணையாகவே இருக்க வேண்டும்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் தருணத்தில், இப்படி வெளிப்படும் குடும்ப அரசியல் மோதல், பாமக கூட்டணி பேச்சுகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பலவீனப்படுத்தும் அபாயம் உறுதியாக இருக்கிறது.
கண்ணாடி உடைந்தாலும், ஒட்டிவைத்தும் பயன்படுத்தலாம்; அதற்கான முயற்சியை இருவரும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது வரும் தேர்தலை மட்டுமல்ல - கட்சியின் எதிர்கால நம்பிக்கைக்கும் பெரும் சவாலாக மாறும்.

பா.ம.க. குடும்ப அரசியல் மேடையா? அல்லது பா.ஜ.க. அழுத்தத்தின் வெளிப்பாடா? அல்லது தலைமைச் சவாலின் வெளிப்பாடா? - இவை அனைத்தும் நுணுக்கமான அரசியல் சிக்கல்கள். ஆனால் கடைசியில், தமிழக அரசியல் வரைபடத்தில் தனி அடையாளம் கொண்ட பா.ம.க. போன்ற கட்சிகள் மக்களுக்கு, சமூக நலனுக்காக உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.

ராமதாஸ் மற்றும் பாட்டாளிகளின் கடின உழைப்பால் தனித்த அடையாளம் கொண்ட பா.ம.க.வின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் தாக்கத்தில் அல்ல; மக்களின் நம்பிக்கையில் தான் உறுதியடையும். இதற்கான பதிலை வரலாறே எழுதப்போகிறது!

எழுத்து: ஜி.எஸ். பாலமுருகன்.

30/05/2025

#PMK #AnbumaniRamadoss #Ramadoss
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புடைய, 5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். கடத்தல்காரரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.

சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல்.
குறள் எண் : ௨௫௨(252)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்

குறள் :
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.


உரை :
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.

English :
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௬)
தமிழ் வாழ்க
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
இன்றைய புத்தக மொழி
30/05/25
📚📚📚🌹📚📚📚

உண்மையான செல்வாக்கை
நாம் தேடிக்கொள்ளக் கூடாது.
அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.

- மான்ஸ்பீல்டு -

📚📚📚🌹📚📚📚
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு.

ஒரு கிராம் தங்கம் ரூ.8920த்கு விற்பனையாகிறது; ஒரு சவரன் நகை ரூ. 71,360 விற்பனையாகிறது.
நகைக்கடன் புதிய விதிகள்-ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை

நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை.

ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.

புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம்.

மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை - மத்திய நிதியமைச்சகம்.
🔴 ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க - விஜய்

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநில, மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களை கௌரவிக்கிறார் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்.

மூன்று கட்டமாக நடைபெறவுள்ள இந்த கல்வி விருது விழாவில், இன்று முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்கள் பங்கேற்று உள்ளனர்.

3 ஆம் ஆண்டு கல்வி விருது வழங்கும் விழாவில் தவெக தலைவர் விஜய் பேச்சு:

மை டியர் யங் லீடர்ஸ் & பேரன்ஸ், படிக்கும் போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்ல, நீட் மட்டுமே உலகம் இல்லை, பெற்றோரிடம் ஊழல் இல்லாதவர்களை தேர்வு செய்ய சொல்லுங்க - விஜய்.

நீட் மட்டும் தான் உலகமா? படிப்புல சாதிக்கணும் ஆனா ஒரே ஒரு படிப்பில் மட்டும் சாதிக்கணும்னு நினைக்காதீங்க, Stress ஆகாதீங்க நீட் மட்டும் தான் உலகமா? நீட்ட தாண்டி சாதிக்க பல விஷயங்கள் இருக்கு - விஜய்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

"வெயிலிலும், மழையிலும் சாதி இருக்கா?" பெரியாருக்கே சாதி சாயம் பூசுகிறார்கள், சாதி, மதத்தை ஒத்திவைக்க வேண்டும், சாதியை எவ்வளவு தூரமாக ஒதுக்க முடியுமோ ஒதுக்கி விடுங்கள் - விஜய்

தேர்தலின்போது யாரும் காசு வாங்கி ஓட்டு போட வேண்டாம்; உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு தேர்தலின்போது வண்டி வண்டியாக கொட்டுவார்கள்; ஓட்டுக்கு பணத்தை கொட்டும்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்றும் எனக்கு தெரியும் - விஜய்

ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்பது பெரிய விஷயமல்ல, சாதாரண விஷயம்தான்; நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யாரென பார்த்து தேர்ந்தெடுக்குமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள் - மாணவர்களிடம் தவெக தலைவர் விஜய் பேச்சு.

> பா.ம.க.வின் எதிர்காலம் என்ன? Read: https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
8 பேர் மரணம்: பல் மருத்துவமனையில் ஆய்வு.

பல் சிகிச்சையால் மூளையில் பாக்டீரியா தொற்று: 8 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வாணியம்பாடி வி.டி.எஸ் பல் மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு.

2023ஆம் ஆண்டில் சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு, ஒரே கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தியதால் தொற்று பரவியது தற்போது தெரிய வந்துள்ளது.
💥 நீக்கும் ராமதாஸ் - பதிலடி தரும் அன்புமணி!

பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் நடவடிக்கை.

புதிய பொருளாளராக சையது மன்சூர் என்பவரை நியமித்துள்ளர் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி. திலகபாமா அவர்கள் அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். - அன்புமணி அறிவிப்பு.

> பாமகவின் எதிர்காலம் என்ன? - Read: https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பா.ம.க. யாருடைய தனிச்சொத்தும் இல்லை; அடிமட்ட தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.

பொறுப்புகள் வரும், போகும். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக் கூடாது-அன்புமணி ராமதாஸ்.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் நான். பொதுக்குழுவால் உங்களால் தலைவன் தேர்வு செய்யப்பட்டேன்.

அது நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டோம்.

பாட்டாளி மக்கள் கட்சி என்றால் நீங்கள்தான். இது யாருடைய தனிப்பட்ட சொத்து கிடையாது.

என்னுடைய கடமை உங்களுடன் சேர்ந்து அடிமட்ட தொண்டனாக வேலைசெய்வேன்.

பொறுப்புகள் வரும்; போகும். உங்கள் அன்புதான் நிரந்தரம்- சோழிங்கநல்லூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் அன்புமணி பேச்சு.
தமிழ்நாட்டில் ஜூன் 9 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு என வெளியாகும் செய்தி வதந்தி.

திட்டமிட்ட படி ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

ஜூன் 2இல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்.
💥 கேள்வியால் ஆவேசம்! - கமல் 4 வார்த்தையில் நறுக் பதில்!

கேள்வி: திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள்? இப்போது வந்திருக்கிறீர்களே?

பதில்: https://www.facebook.com/share/v/16ZMUsiTrR/
💥 JUST IN:

கடந்த கல்வியாண்டில் அளிக்கப்பட்ட பேருந்து பயண அட்டை (அ) புகைப்படத்துடன் கூடிய பள்ளி அடையாள அட்டை (அ) பள்ளி சீருடையில் மாணவர்கள் தங்கள் பகுதியிலிருந்து பள்ளி வரை கட்டணமின்றி அரசுப் பேருந்துகளில் பயணிக்கலாம்

- போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிப்பு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 முறியடிப்போம்!

“திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள், எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியில் இருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

-திமுக பொதுக்குழுவை முன்னிட்டு தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 உள்ளூர் விடுமுறை

திருச்செந்தூர் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஜூன் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஜூன் 14ம் தேதி வேலை நாளாகச் செயல்படும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING முகக்கவசம் அவசியம்!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிய மக்களுக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 சூடானில் கை மீறிச் சென்ற காலரா பரவல்

சூடானில் காலரா நோய் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் 172-க்கும் மேற்பட்டோர் பலி. குறிப்பாக கடந்த 2 நாள்களில் கார்ட்டூமில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்

காலரா நோய் பரவல் கை மீறிச் சென்றுள்ள நிலையில், அங்கு சுமார் 10 லட்சம் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக யுனிசெஃப் எச்சரித்துள்ளது

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29