💥 நாளை முதல் பனையூரில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்.
ஏற்கனவே மாவட்ட செயலாளர்களை தினமும் பனையூர் அலுவலகத்தில் அன்புமணி சந்தித்து, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.
அன்புமணி மீது, அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்த நிலையில், நாளை முதல் நிர்வாகிகளை, மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஏற்கனவே மாவட்ட செயலாளர்களை தினமும் பனையூர் அலுவலகத்தில் அன்புமணி சந்தித்து, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.
அன்புமணி மீது, அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்த நிலையில், நாளை முதல் நிர்வாகிகளை, மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 கீழடி அறிக்கையை வெளியிடுவதில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனைக் கதை: மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் விளக்கம்
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட ஊடகம் செய்தியாக உடனடியாக வெளியிடலாம்.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.
ஊடகங்களின் ஒரு பகுதியில் பரப்பப்படும் செய்தி தவறாக வழிநடத்துகிறது. இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் முற்றிலும், கடுமையாக மறுக்கப்படுகிறது. ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட ஊடகம் செய்தியாக உடனடியாக வெளியிடலாம்.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.
கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.
ஊடகங்களின் ஒரு பகுதியில் பரப்பப்படும் செய்தி தவறாக வழிநடத்துகிறது. இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் முற்றிலும், கடுமையாக மறுக்கப்படுகிறது. ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பல் கிளீனிக்கில் 8 பேர் பலி:
வெளியான அதிர்ச்சி தகவல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் பலி.
தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்.
வெளியான அதிர்ச்சி தகவல்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் பலி.
தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்.
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள்.
என். வி.அஞ்சாரியா, விஜய் பிஸ்னோய், ஏ.எஸ்.சந்த்ருகரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு.
என். வி.அஞ்சாரியா, விஜய் பிஸ்னோய், ஏ.எஸ்.சந்த்ருகரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு.
கப்பல் மூழ்கி விபத்து - பேரிடராக அறிவித்தது கேரளா.
கொச்சி அருகே கடலில் கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் மூழ்கிய விபத்தை பேரிடராக அறிவித்தது கேரள அரசு.
கண்டெய்னரில் இருந்து ரசாயனப் பொருட்கள் கடலில் பரவிய நிலையில் பேரிடராக அறிவிப்பு.
கொச்சி அருகே கடலில் கண்டெய்னர்களுடன் சென்ற கப்பல் மூழ்கிய விபத்தை பேரிடராக அறிவித்தது கேரள அரசு.
கண்டெய்னரில் இருந்து ரசாயனப் பொருட்கள் கடலில் பரவிய நிலையில் பேரிடராக அறிவிப்பு.
மாணவிகளை செருப்பால் தாக்கிய விவகாரம்: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு பள்ளியில் ஆசிரியர் செருப்பால் மாணவிகளை தாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆசிரியர் சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அரசு பள்ளியில் ஆசிரியர் செருப்பால் மாணவிகளை தாக்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளுக்கும் தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆசிரியர் சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை.
7ஆவது மாநில நிதி ஆணையத்தை அமைத்தது தமிழக அரசு.
ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைப்பு.
நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை ஆய்வு செய்து நிதி பகிர்வு குறித்து குழு பரிந்துரைக்கும்.
ஏழாவது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைப்பு.
நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலையை ஆய்வு செய்து நிதி பகிர்வு குறித்து குழு பரிந்துரைக்கும்.
💥 அமெரிக்க செய்திகள்...
1.. டிரம்ப்பின் Department of Government Efficiency DOGEஇல் திட்டமிட்டபடி தன் 130 நாட்கள் பணியை முடித்துக் கொண்டு அந்தப் பணியிலிருந்து மஸ்க் விலகினார். தேவைப் பட்டால் மீண்டும் வருவார்.
DOGE கைங்கரியத்தால் உலகெங்கும் கலவரம் உண்டு பண்ணிய யு.எஸ்.எய்டு மூடப்பட்டது. சோஷியல் செக்யூரிட்டியிலிருந்து பணம் பெற்று வந்த '300 வயது' நபர்கள் எல்லாம் நீக்கப்பட்டார்கள்.
மஸ்க் எதிர்பார்த்தது 1 டிரில்லியன் டாலர் சேமிப்பு. பல பில்லியன்கள் இது வரை சேமிக்கப் பட்டிருக்கிறது. 'அரசிலிருந்து பில்லியன்கள் திருடிய அரசியல்வாதிகள் விவரம் வரும்' என்கிறார்கள்.
2.. டிரம்ப் விதித்த 'வரி' செல்லாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. டிரம்ப்புக்குப் பின்னடைவு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
1.. டிரம்ப்பின் Department of Government Efficiency DOGEஇல் திட்டமிட்டபடி தன் 130 நாட்கள் பணியை முடித்துக் கொண்டு அந்தப் பணியிலிருந்து மஸ்க் விலகினார். தேவைப் பட்டால் மீண்டும் வருவார்.
DOGE கைங்கரியத்தால் உலகெங்கும் கலவரம் உண்டு பண்ணிய யு.எஸ்.எய்டு மூடப்பட்டது. சோஷியல் செக்யூரிட்டியிலிருந்து பணம் பெற்று வந்த '300 வயது' நபர்கள் எல்லாம் நீக்கப்பட்டார்கள்.
மஸ்க் எதிர்பார்த்தது 1 டிரில்லியன் டாலர் சேமிப்பு. பல பில்லியன்கள் இது வரை சேமிக்கப் பட்டிருக்கிறது. 'அரசிலிருந்து பில்லியன்கள் திருடிய அரசியல்வாதிகள் விவரம் வரும்' என்கிறார்கள்.
2.. டிரம்ப் விதித்த 'வரி' செல்லாது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. டிரம்ப்புக்குப் பின்னடைவு.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்; ஒன்பதாவது முயற்சியும் தோல்வி..!!
உலக பெரும் பணகாரர்களில் ஒருவரான அமெரிக்க எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக எரிபொருள் கசிவே காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய ஏழாவது (ஜனவரி மாதம்) மற்றும் எட்டாவது (மார்ச் 6) முயற்சிகளும் வெற்றியடையவில்லை.
இந்த தொடர்ச்சியான தோல்விகள் ஸ்பேஸ்எக்ஸின் முன்னெச்சரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29*💥 எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்; ஒன்பதாவது முயற்சியும் தோல்வி..!!*
உலக பெரும் பணகாரர்களில் ஒருவரான அமெரிக்க எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக எரிபொருள் கசிவே காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய ஏழாவது (ஜனவரி மாதம்) மற்றும் எட்டாவது (மார்ச் 6) முயற்சிகளும் வெற்றியடையவில்லை.
இந்த தொடர்ச்சியான தோல்விகள் ஸ்பேஸ்எக்ஸின் முன்னெச்சரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
உலக பெரும் பணகாரர்களில் ஒருவரான அமெரிக்க எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக எரிபொருள் கசிவே காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய ஏழாவது (ஜனவரி மாதம்) மற்றும் எட்டாவது (மார்ச் 6) முயற்சிகளும் வெற்றியடையவில்லை.
இந்த தொடர்ச்சியான தோல்விகள் ஸ்பேஸ்எக்ஸின் முன்னெச்சரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29*💥 எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்; ஒன்பதாவது முயற்சியும் தோல்வி..!!*
உலக பெரும் பணகாரர்களில் ஒருவரான அமெரிக்க எலான் மஸ்க் நடத்தும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒன்பதாவது முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 30 நிமிடங்களுக்குள் நுழைவுத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
பின், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக எரிபொருள் கசிவே காரணம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவன செய்தித்துறை அதிகாரி டான் ஹவுட் உறுதிப்படுத்தியுள்ளார். அதேவேளை இது முதல் முறையல்ல. இதற்கு முந்தைய ஏழாவது (ஜனவரி மாதம்) மற்றும் எட்டாவது (மார்ச் 6) முயற்சிகளும் வெற்றியடையவில்லை.
இந்த தொடர்ச்சியான தோல்விகள் ஸ்பேஸ்எக்ஸின் முன்னெச்சரிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றும், எதிர்கால விண்வெளி பயணங்களை துல்லியமாக திட்டமிட உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 JUST NOW:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட இந்த பேச்சுவார்த்தையில் 64 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 14 மற்றும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
6% ஊதிய உயர்வு, சலவைப்படி 160 ரூபாயாக உயர்வு, இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெறுவர்.
4 தவணையாக நிலுவைத்தொகை வழங்கப்படும்.
2021 மே மாதம் முதல் இன்றுவரை ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.2,894.23 கோடி பணப்பலன்கள் வழங்கியுள்ளோம்.
பணியில் இறந்த பணியாளர்களின் 1,016 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை இன்றுவரை வழங்கியுள்ளோம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் 15-வது ஊதிய ஒப்பந்த 3-ம் கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது - போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
86 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்ட இந்த பேச்சுவார்த்தையில் 64 தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 14 மற்றும் 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.
6% ஊதிய உயர்வு, சலவைப்படி 160 ரூபாயாக உயர்வு, இரவு பணிப்படி 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஊழியர்கள் குறைந்தபட்சம் 1420 முதல் அதிகபட்சம் 6460 ரூபாய் கூடுதலாக ஊதியம் பெறுவர்.
4 தவணையாக நிலுவைத்தொகை வழங்கப்படும்.
2021 மே மாதம் முதல் இன்றுவரை ஓய்வுபெற்ற போக்குவரத்து பணியாளர்களுக்கு ரூ.2,894.23 கோடி பணப்பலன்கள் வழங்கியுள்ளோம்.
பணியில் இறந்த பணியாளர்களின் 1,016 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை இன்றுவரை வழங்கியுள்ளோம் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 பா.ம.க. குடும்ப அரசியல்: கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியா?
- ஜி.எஸ். பாலமுருகன்.
- கருத்துகளை பகிர:- https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
"அன்புமணியை 2026இல் முதலமைச்சராக்க பாடுபடுவோம்" என்று பா.ம.க. சமூக ஊடகப் பேரவையின் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய ராமதாஸ், ஓர் இரவுக்குப் பின் அவரது 'குற்றச்சாட்டுகள்', குடும்ப உறவுகள் மீது அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.
பா.ம.க.வில் தந்தை - மகன் இடையேயான மோதல் கட்சியின் எதிர்காலத்தையும், அதன் அடிப்படை மதிப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. “வளர்த்த கிடா மார்பில் உதைத்துவிட்டது”, “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்”, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை”, “எடுத்தேன், கவிழ்த்தேன்”, “அனைத்திலும் மருமகள் தலையீடு” - இவை அனைத்தும் கட்சியின் நிலையை பொது மக்கள் முன் சிக்கலாக்கும் வகையில் வெளிப்படையாகவே பேசிவிட்டார் ராமதாஸ்.
"வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எனது குடும்பத்தினரின் நெருக்கடியால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன். ஒரு நாள் இரவு தூங்காமல், சுகாதாரத் துறையை பெற்று கொடுத்தேன்" என்று ராமதாஸ் சொல்கிறார். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். "அன்புமணி போன்று திறமையானவர் எவரும் இல்லை. அவரை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்!" என்று 2020 ஜுலையில் ஒரு கடிதம் எழுதினார் ராமதாஸ்.
தலைமைப் பண்பு இல்லாதவர் என்று விமர்சித்த ராமதாஸ்-க்கு, அவரது கடிதத்தில் இருந்து ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது இப்போது பொருத்தமாக இருக்கும். "சுகாதாரத் துறையில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்து முடித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டி கவுரவித்தனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“நான்கு சுவரில் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார் அன்புமணி” என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார். ஆனால் அதே அவர், பத்திரிகையாளர்களை கூட்டி, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை” "தாயார் மீது பாட்டிலை வீசினார்" "காடுவெட்டி குருவை அவமதித்தார்" என்று பேசுவது, கட்சி தொண்டர்கள் மனதில் குழப்பத்தையும் அன்புமணி மீது மக்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் சிதைக்கும் என்பது ராமதாஸ்-க்கு தெரியாமல் போய்விட்டதா? உண்மைகள் எவ்வாறிருந்தாலும், அதை சுவற்றுக்குள்ளும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியில் பேசுவதற்கும் இடையே ஒரு நேர்மையான சமநிலை தேவைப்படுகிறது.
“பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் எனக்கு கொள்ளி வைக்க நேரிடும்” என கூறி என் காலைப் பிடித்து அன்புமணி அழுததாக ராமதாஸ் கூறியிருப்பது, வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதில் பா.ஜ.க. தந்திர அரசியலின் பின்புலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளதாக பலரும் பேசுகிறார்கள் அல்லது அப்படி ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படுகிறது.
பா.ஜ.க. நாடு முழுவதும் கட்சிகளை உடைத்து, புதிய கூட்டணிகளை உருவாக்கும் கதை, பா.ம.க. மீதும் அதே அழுத்தம் இருக்கக் கூடும் என்ற அரசியல் வட்டாரங்களின் ஊகங்களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டியதும் அல்ல! பா.ஜ.க. மீதான இந்த சந்தேகம், இந்திய அரசியல் சூழலில் அனைத்து கட்சிகளும் உணர வேண்டிய ஒரு சூழலைதான் பா.ம.க. விஷயத்தில் இருந்து நாம் எடுத்து கொள்ள வேண்டியது.
அதேசமயம், இது முற்றிலும் தந்தை - மகன் இடையிலான அரசியல் மோதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியை அன்புமணி விரும்பியதற்கும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கும் பின்னணி இருக்கிறது.
சேலத்தில் (23/03/2024) பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். அது போலத்தான் பா.ம.க." என பேசினார். இதன் பிறகே அதிமுக - பாமக கூட்டணி ஏற்படாமல் முறிந்து போனது. இதை பழனிசாமியும் பின்னாளில் உணர்ந்து பேசியிருக்கிறார்.
“இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற அன்புமணியின் வார்த்தைக்குப் பிறகு, என் கண்களில் இருந்து 2 சொட்டு கண்ணீர் விழுந்தது என ராமதாஸ் சொன்னது, குடும்ப அரசியல் சிக்கலைவிட கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையாகவே கட்சியினர் பார்க்கின்றனர்.
- ஜி.எஸ். பாலமுருகன்.
- கருத்துகளை பகிர:- https://www.facebook.com/share/p/16HuBDTvZ5/
"அன்புமணியை 2026இல் முதலமைச்சராக்க பாடுபடுவோம்" என்று பா.ம.க. சமூக ஊடகப் பேரவையின் கூட்டத்தில் புதன்கிழமை பேசிய ராமதாஸ், ஓர் இரவுக்குப் பின் அவரது 'குற்றச்சாட்டுகள்', குடும்ப உறவுகள் மீது அரசியல் அதிகாரத்தின் தாக்கத்தை வெளிப்படுத்தின.
பா.ம.க.வில் தந்தை - மகன் இடையேயான மோதல் கட்சியின் எதிர்காலத்தையும், அதன் அடிப்படை மதிப்புகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. “வளர்த்த கிடா மார்பில் உதைத்துவிட்டது”, “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்தேன்”, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை”, “எடுத்தேன், கவிழ்த்தேன்”, “அனைத்திலும் மருமகள் தலையீடு” - இவை அனைத்தும் கட்சியின் நிலையை பொது மக்கள் முன் சிக்கலாக்கும் வகையில் வெளிப்படையாகவே பேசிவிட்டார் ராமதாஸ்.
"வன்னியர்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறி, எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், எனது குடும்பத்தினரின் நெருக்கடியால் 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி, நான்தான் தவறு செய்துவிட்டேன். ஒரு நாள் இரவு தூங்காமல், சுகாதாரத் துறையை பெற்று கொடுத்தேன்" என்று ராமதாஸ் சொல்கிறார். இந்த இடத்தில் ஒன்று குறிப்பிட்டாக வேண்டும். "அன்புமணி போன்று திறமையானவர் எவரும் இல்லை. அவரை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும்!" என்று 2020 ஜுலையில் ஒரு கடிதம் எழுதினார் ராமதாஸ்.
தலைமைப் பண்பு இல்லாதவர் என்று விமர்சித்த ராமதாஸ்-க்கு, அவரது கடிதத்தில் இருந்து ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டுவது இப்போது பொருத்தமாக இருக்கும். "சுகாதாரத் துறையில் கடந்த 50 ஆண்டுகளில் செய்ய முடியாத பணிகளை 5 ஆண்டுகளில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்து முடித்துள்ளார் என்று அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒரு நடமாடும் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்று அப்போதைய மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியும் பாராட்டி கவுரவித்தனர்" என்று குறிப்பிட்டிருந்தார்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
“நான்கு சுவரில் பேசி முடிக்க வேண்டியதை, நடுவீதிக்கு கொண்டு வந்துவிட்டார் அன்புமணி” என்று ராமதாஸ் குற்றம்சாட்டினார். ஆனால் அதே அவர், பத்திரிகையாளர்களை கூட்டி, “அன்புமணிக்கு தலைமைத் திறன் இல்லை” "தாயார் மீது பாட்டிலை வீசினார்" "காடுவெட்டி குருவை அவமதித்தார்" என்று பேசுவது, கட்சி தொண்டர்கள் மனதில் குழப்பத்தையும் அன்புமணி மீது மக்கள் கொண்டிருக்கும் நன்மதிப்பையும் சிதைக்கும் என்பது ராமதாஸ்-க்கு தெரியாமல் போய்விட்டதா? உண்மைகள் எவ்வாறிருந்தாலும், அதை சுவற்றுக்குள்ளும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியில் பேசுவதற்கும் இடையே ஒரு நேர்மையான சமநிலை தேவைப்படுகிறது.
“பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காவிட்டால் எனக்கு கொள்ளி வைக்க நேரிடும்” என கூறி என் காலைப் பிடித்து அன்புமணி அழுததாக ராமதாஸ் கூறியிருப்பது, வெறும் வாயில் அவல் மெல்பவர்களுக்கு வசதியாக போய்விட்டது. இதில் பா.ஜ.க. தந்திர அரசியலின் பின்புலம் குறித்து சிந்திக்க வைத்துள்ளதாக பலரும் பேசுகிறார்கள் அல்லது அப்படி ஒரு கருத்துருவாக்கம் ஏற்படுத்தப்படுகிறது.
பா.ஜ.க. நாடு முழுவதும் கட்சிகளை உடைத்து, புதிய கூட்டணிகளை உருவாக்கும் கதை, பா.ம.க. மீதும் அதே அழுத்தம் இருக்கக் கூடும் என்ற அரசியல் வட்டாரங்களின் ஊகங்களை ஒரேயடியாக நிராகரிக்க வேண்டியதும் அல்ல! பா.ஜ.க. மீதான இந்த சந்தேகம், இந்திய அரசியல் சூழலில் அனைத்து கட்சிகளும் உணர வேண்டிய ஒரு சூழலைதான் பா.ம.க. விஷயத்தில் இருந்து நாம் எடுத்து கொள்ள வேண்டியது.
அதேசமயம், இது முற்றிலும் தந்தை - மகன் இடையிலான அரசியல் மோதலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க. கூட்டணியை அன்புமணி விரும்பியதற்கும், அ.தி.மு.க. கூட்டணி வேண்டாம் என்று சொன்னதற்கும் பின்னணி இருக்கிறது.
சேலத்தில் (23/03/2024) பேசிய எடப்பாடி பழனிசாமி, "பாட்டாளி மக்கள் கட்சி வேடந்தாங்கல் பறவைபோல் அடிக்கடி கூட்டணி மாற்றிக் கொண்டுள்ளனர். ஏரியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது பறவைகள் வரும். தண்ணீர் வற்றினால் சென்றுவிடும். அது போலத்தான் பா.ம.க." என பேசினார். இதன் பிறகே அதிமுக - பாமக கூட்டணி ஏற்படாமல் முறிந்து போனது. இதை பழனிசாமியும் பின்னாளில் உணர்ந்து பேசியிருக்கிறார்.
“இனி கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற அன்புமணியின் வார்த்தைக்குப் பிறகு, என் கண்களில் இருந்து 2 சொட்டு கண்ணீர் விழுந்தது என ராமதாஸ் சொன்னது, குடும்ப அரசியல் சிக்கலைவிட கட்சியின் எதிர்காலத்தைப் பற்றிய கவலையாகவே கட்சியினர் பார்க்கின்றனர்.
இப்போது கட்சி இருக்கும் செல்வாக்கையும் எதிர்காலத்தையும் நினைத்து ராமதாஸ் ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பது புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த வாரிசு அரசியல் சிக்கல்கள் இந்திய அரசியலில் பொதுவானவை. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், கருணாநிதி இருந்தபோது திமுகவில் ஸ்டாலின் - அழகிரி மோதல், மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் - அவை அனைத்தும் அதற்கான சான்றுகள். ஆனால், அந்த குடும்ப அரசியல் சிக்கல்களை கடந்தே மக்களுக்கு சேவை செய்யும் நிலையை கட்சிகள் அடைய வேண்டும் என்பதை உணர வேண்டும்.
பேருந்து பயணங்கள் மூலமே 95 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்த ராமதாஸின் கால்கள் கட்சியை உற்சாகமாக கட்டியெழுப்பியது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து அரசியல் களத்தை எதிர்கொண்டவர். பாமகவின் கூட்டணிக்காக இரு தலைவர்களையும் ஏங்க வைத்தவர். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆளுமைக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அதை வளர்த்தெடுக்கும் வகையில், "அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை" என்று கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார் அன்புமணி.
அன்புமணி - தந்தையின் பாரம்பரியத்தை தொடரும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவரது தலைமையின் திறனை அரசியலில் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் மிக முக்கியமான சவாலாக உள்ளது. அதை அன்புமணியும் நன்கு உணர்ந்திருப்பார் என்பதே அவரது சொல்லில் தெரிகிறது. அதற்கு அவர் முதுகில் தட்டிக் கொடுத்து உறுதுணையாகவே இருக்க வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் தருணத்தில், இப்படி வெளிப்படும் குடும்ப அரசியல் மோதல், பாமக கூட்டணி பேச்சுகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பலவீனப்படுத்தும் அபாயம் உறுதியாக இருக்கிறது.
கண்ணாடி உடைந்தாலும், ஒட்டிவைத்தும் பயன்படுத்தலாம்; அதற்கான முயற்சியை இருவரும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது வரும் தேர்தலை மட்டுமல்ல - கட்சியின் எதிர்கால நம்பிக்கைக்கும் பெரும் சவாலாக மாறும்.
பா.ம.க. குடும்ப அரசியல் மேடையா? அல்லது பா.ஜ.க. அழுத்தத்தின் வெளிப்பாடா? அல்லது தலைமைச் சவாலின் வெளிப்பாடா? - இவை அனைத்தும் நுணுக்கமான அரசியல் சிக்கல்கள். ஆனால் கடைசியில், தமிழக அரசியல் வரைபடத்தில் தனி அடையாளம் கொண்ட பா.ம.க. போன்ற கட்சிகள் மக்களுக்கு, சமூக நலனுக்காக உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.
ராமதாஸ் மற்றும் பாட்டாளிகளின் கடின உழைப்பால் தனித்த அடையாளம் கொண்ட பா.ம.க.வின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் தாக்கத்தில் அல்ல; மக்களின் நம்பிக்கையில் தான் உறுதியடையும். இதற்கான பதிலை வரலாறே எழுதப்போகிறது!
எழுத்து: ஜி.எஸ். பாலமுருகன்.
30/05/2025
#PMK #AnbumaniRamadoss #Ramadoss
பேருந்து பயணங்கள் மூலமே 95 ஆயிரம் கிராமங்களுக்கு நடந்த ராமதாஸின் கால்கள் கட்சியை உற்சாகமாக கட்டியெழுப்பியது. கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்களுடன் இணைந்து அரசியல் களத்தை எதிர்கொண்டவர். பாமகவின் கூட்டணிக்காக இரு தலைவர்களையும் ஏங்க வைத்தவர். இவை அனைத்தும் அவரது அரசியல் ஆளுமைக்கு நம்பிக்கை அளிக்கின்றன. அதை வளர்த்தெடுக்கும் வகையில், "அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை" என்று கடந்த மாதம் 12ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார் அன்புமணி.
அன்புமணி - தந்தையின் பாரம்பரியத்தை தொடரும் பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவரது தலைமையின் திறனை அரசியலில் இன்னும் நிரூபிக்க வேண்டிய அவசியம் மிக முக்கியமான சவாலாக உள்ளது. அதை அன்புமணியும் நன்கு உணர்ந்திருப்பார் என்பதே அவரது சொல்லில் தெரிகிறது. அதற்கு அவர் முதுகில் தட்டிக் கொடுத்து உறுதுணையாகவே இருக்க வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் தருணத்தில், இப்படி வெளிப்படும் குடும்ப அரசியல் மோதல், பாமக கூட்டணி பேச்சுகளையும், கட்சியின் எதிர்காலத்தையும் பலவீனப்படுத்தும் அபாயம் உறுதியாக இருக்கிறது.
கண்ணாடி உடைந்தாலும், ஒட்டிவைத்தும் பயன்படுத்தலாம்; அதற்கான முயற்சியை இருவரும் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், அது வரும் தேர்தலை மட்டுமல்ல - கட்சியின் எதிர்கால நம்பிக்கைக்கும் பெரும் சவாலாக மாறும்.
பா.ம.க. குடும்ப அரசியல் மேடையா? அல்லது பா.ஜ.க. அழுத்தத்தின் வெளிப்பாடா? அல்லது தலைமைச் சவாலின் வெளிப்பாடா? - இவை அனைத்தும் நுணுக்கமான அரசியல் சிக்கல்கள். ஆனால் கடைசியில், தமிழக அரசியல் வரைபடத்தில் தனி அடையாளம் கொண்ட பா.ம.க. போன்ற கட்சிகள் மக்களுக்கு, சமூக நலனுக்காக உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதே உண்மை.
ராமதாஸ் மற்றும் பாட்டாளிகளின் கடின உழைப்பால் தனித்த அடையாளம் கொண்ட பா.ம.க.வின் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் தாக்கத்தில் அல்ல; மக்களின் நம்பிக்கையில் தான் உறுதியடையும். இதற்கான பதிலை வரலாறே எழுதப்போகிறது!
எழுத்து: ஜி.எஸ். பாலமுருகன்.
30/05/2025
#PMK #AnbumaniRamadoss #Ramadoss
தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்புடைய, 5 கிலோ உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். கடத்தல்காரரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல்.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தினங்களில் ரூ.6 கோடி மதிப்புடைய 6 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப் பொருள் மோப்ப நாய் உதவியுடன் கண்டறியப்பட்டு பறிமுதல்.
குறள் எண் : ௨௫௨(252)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்
குறள் :
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
உரை :
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
English :
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௬)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்
குறள் :
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
உரை :
பொருளால் பயன் பெறுவது அதைப் பாதுகாக்காதவர்க்கு இல்லை; அது போல, இரக்கத்தால் பயன்பெறுவது இறைச்சி தின்பவர்க்கு இல்லை.
English :
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௬)
தமிழ் வாழ்க
4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
தமிழகத்தில் மேலும் 4 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
கிராமப்புற மாணவர்கள் அதிகம் உள்ள இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுவதாக அறிவிப்பு.
உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), கே. வி. குப்பம் (வேலூர்), துறையூர் (திருச்சி), செங்கம் (திருவண்ணாமலை) ஆகிய 4 இடங்களில் 2025-26 கல்வி ஆண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு.
இன்றைய புத்தக மொழி
30/05/25
📚📚📚🌹📚📚📚
உண்மையான செல்வாக்கை
நாம் தேடிக்கொள்ளக் கூடாது.
அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.
- மான்ஸ்பீல்டு -
📚📚📚🌹📚📚📚
30/05/25
📚📚📚🌹📚📚📚
உண்மையான செல்வாக்கை
நாம் தேடிக்கொள்ளக் கூடாது.
அது நம்மைத் தொடர்ந்து
வரவேண்டும்.
- மான்ஸ்பீல்டு -
📚📚📚🌹📚📚📚
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு.
ஒரு கிராம் தங்கம் ரூ.8920த்கு விற்பனையாகிறது; ஒரு சவரன் நகை ரூ. 71,360 விற்பனையாகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.8920த்கு விற்பனையாகிறது; ஒரு சவரன் நகை ரூ. 71,360 விற்பனையாகிறது.
நகைக்கடன் புதிய விதிகள்-ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை.
ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.
புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம்.
மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை - மத்திய நிதியமைச்சகம்.
நகைக்கடனுக்கான புதிய கட்டுப்பாடுகளை தளர்த்த ரிசர்வ் வங்கிக்கு நிதியமைச்சகம் பரிந்துரை.
ரூ.2 லட்சத்திற்கும் குறைவாக கடன் வாங்குவோருக்கு புதிய விதிகளில் இருந்து விலக்களிக்க ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை.
புதிய விதிமுறைகளை ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தலாம்.
மக்கள், பங்குதாரர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பரிந்துரை - மத்திய நிதியமைச்சகம்.