Seithikathir - Tamil News
14.1K subscribers
179 photos
49 videos
807 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 BREAKING ஹமாஸ் தலைவரை கொன்று விட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் முகமது சின்வர் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ஜூன் 7ம் தேதி பக்ரீத் கொண்டாட்டம் - தலைமை காஜி அறிவிப்பு.

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை, அடுத்த மாதம் ஜூன் 7 (சனிக் கிழமை) கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவிப்பு.
10ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை.

ராணிப்பேட்டை: வீடு புகுந்து 10ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை - மற்றொரு மாணவி படுகாயம்.

சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் வீடு புகுந்த நபர் ஜனனி, அவரது உறவுக்கார சிறுமி லக்சயா மீது கத்தியால் தாக்குதல்; ஜனனி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு - லக்சயா படுகாயம்.

கத்தியால் குத்திய நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்த மக்கள்.
💥 ரதிக்கு அவமானம்: அஸ்வின் கருத்து

“மன்கட் முறையில் செய்த ரன் அவுட் முறையீட்டை ரிஷப் பண்ட் திரும்பப் பெற்றது திக்வேஷ் ரதிக்கு அவமானம். அவர் கூனிக் குறுகிப் போயிருப்பார். இனி இதுபோல ரன் அவுட் செய்ய முயற்சிக்கமாட்டார்.

ஒரு கேப்டனின் வேலை உண்மையில் ஒரு வீரரை ஆதரிப்பது. ஆனால் அந்த பவுலரின் முடிவை கோடிக் கணக்கானோர் முன்னிலையில் விமர்சித்துள்ளார்”

- அஷ்வின், இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௫௧(251)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :புலால் மறுத்தல்

குறள் :
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.


உரை :
தன் உடம்பை வளர்ப்பதற்காக, இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?

English :
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௫)
தமிழ் வாழ்க
*இன்றைய புத்தக மொழி*
29/05/25
📚📚📚🌹📚📚📚

தன்னை அதிக புத்திசாலியாக
எண்ணுவதே மனிதனிடம்
உள்ள மிகப் பெரிய பலவீனம்.

- சிம்மன்ஸ் -

📚📚📚🌹📚📚📚
11 நகராட்சிகளின் தரம் உயர்வு.

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு.

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி சிறப்புநிலை நகராட்சிகளாகவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, ராமேஸ்வரம் பல்லடம் தேர்வுநிலை நகராட்சிகளாவும், மாங்காடு, குன்றத்தூர், வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகியவை முதல்நிலை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் எஸ்கேப்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் விலகினார்.

‘DOGE’ அமைப்பில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,895 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.71,160க்கு விற்பனையாகிறது.
💥 பிரபல திரைப்பட நடிகர் ராஜேஷ் (75) உடல் நலக்குறைவால் காலமானார்

ஏற்கனவே மூச்சுத் திணறல் இருந்த நிலையில், இன்று காலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்தது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கையும்..

பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றவும் அறிவுறுத்தல்.
“சீட் தருவது அதிமுகவின் கடமை”

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தருவது அதிமுவின் கடமை.

மாநிலங்களவை சீட் கொடுக்கவில்லையென்றால் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள், நாங்கள் பதற்றமின்றி தெளிவாக உள்ளோம்- தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
🔴 நான் செய்த தவறு அன்புமணியை 35 வயதில் மத்திய கேபினட் அமைச்சராக்கியது தான் - ராமதாஸ் பேட்டி.

நான் என்ன தவறு செய்தேன் என அன்புமணி பேசியது, முற்றிலும் திசைதிருப்பும் முயற்சி

நான் என்ன தவறு செய்தேன். கட்சிப் பதவியிலிருந்து என்னை ஏன் பதவி இறக்கம் செய்ய வேண்டும்? என அன்புமணி ராமதாஸ் கேட்டிருக்கிறார். இது முழுக்க முழுக்க மக்களையும், கட்சியினரையும் திசை திருப்பும் செயல். தான் செய்த தவறுகளை மறைத்து கட்சிக்காரர்களிடம் அனுதாபம் தேட முயற்சிக்கிறார் - ராமதாஸ்.

சொல்லப்போனால் தவறு செய்தது அன்புமணி அல்ல. அன்புமணியை என்னுடைய சத்தியத்தையும் மீறி 35 வயதிலேயே மத்திய கேபினட் அமைச்சராக்கியதுதான் நான் செய்த தவறு.

என்னை குற்றவாளியாக அடையாளப்படுத்தி கட்சியினரிடம் அனுதாபம் தேட முயற்சிக்கும் அன்புமணிக்கு, நான் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

அன்புமணி மீது ஒளிவு மறைவின்றி குற்றச்சாட்டுகளை உங்கள் முன் வைக்கிறேன் - தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.

அன்புமணி தான் தவறு செய்தவர். தவறான ஆட்டத்தை ஆட துவங்கி முதலில் அடித்து ஆடியதும் அன்புமணி தான்.

நான் போகிற போக்கில் எதையும் சொல்லவில்லை ஆதாரபூர்வமாக தான் அனைத்தையும் சொல்கிறேன்.

பாண்டிச்சேரி பொதுக்குழுவில் மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என நடந்து கொண்டது யார்?

வீட்டில் எனக்கு உதவியாகவும், கட்சியில் அன்புமணிக்கு உதவியாகவும் இளைஞர் அணி தலைவராக முகுந்தனை நியமித்து அறிவிப்பு வெளியிட்டேன். சுவற்றில் வீசிய பந்து போல உடனே மேடையிலேயே எதிர்ப்பு தெரிவித்தது சரியான செயலா?

மேடை நாகரிகம் சிறிதுமின்றி அனைவரின் முன்பும் காலை ஆட்டிக் கொண்டிருந்ததும், மைக்கை தூக்கி என் தலையில் போடாத குறையாக டேபிளில் வீசியது சரியான செயலா? - பாமக நிறுவனர் ராமதாஸ்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 ராமதாஸ் - அன்புமணி இடையே வெடித்த மோதல்!

பனையூரில் அலுவலகம் திறந்து இருக்கிறேன் என தொலைபேசி எண்ணை தந்து, நீங்கள் இனி என்னை அங்கு வந்து பார்க்கலாம் என அன்புமணி சொன்னது சரியான செயலா? - பாமக நிறுவனர் ராமதாஸ்.

நான்கு சுவற்றுக்குள் பேசி முடிக்க வேண்டியதை நடுவீதிக்கு கொண்டு வந்தது யார்?

கடந்த 45 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை அண்ணா சொன்னது போல கடமை கண்ணியம் கட்டுப்பாட்டோடு நடத்தி வந்தேன். அதற்கு அன்புமணி களங்கம் ஏற்படுத்தி விட்டார். எதிர்மறையாளர்களால் எத்தனையோ விதி சொற்களையும் ஏளனங்களையும் இந்த ஊமை ஜனங்களுக்காக தாங்கிக் கொண்டவன் நான்.

ஆனால் வளர்த்த கடாவே மார்பில் வீறுகொண்டு பாய்ந்ததில் நான் நிலைகுலைந்து போய்விட்டேன் - ராமதாஸ்.

அன்புமணி தொடர்ந்து கட்சி வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை செய்து வந்தார்.

பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ் குமரனை இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள சொன்னேன். தமிழ் குமரனுக்கு நியமன கடிதம் வழங்கினேன். அதை உடனே கிழித்து போட்டுவிட்டு, பதவியை ராஜினாமா செய் என அன்புமணி தொலைபேசியில் கூறியுள்ளார்.

கட்சியின் பொது குழுவில் பங்கேற்க மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்த தமிழ் குமரனை, அந்த கூட்டத்தில் பங்கேற்க கூடாது என காலை எனக்கு அலைபேசியில் கூப்பிட்டு அன்புமணி பேசினார். இதை கேட்டு அந்த குடும்பம் எவ்வளவு கலங்கி அவமானப்பட்டு இருக்கும்?

மேடையில் அல்ல, எதிர் வரிசையில் ஒரு ஓரமாக தமிழ் குமரனை அமர வைக்க கூட அன்புமணி அனுமதிக்கவில்லை - ராமதாஸ்.

தமிழ் குமரனுக்கு நடந்த அதே செயல், முகுந்தனுக்கு பொதுக்குழு மேடையிலேயே நடந்தது - பாமக நிறுவனர் ராமதாஸ்.

அனைவரும் பெற்ற தாயை கடவுள் என்போம். இந்தாண்டு பொங்கல் சமயத்தில் குடும்பத்துடன் அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது உனது இரண்டாவது மகளை இளைஞர் அணி தலைவராக்கி இருந்தால் நீ சும்மா தானே இருந்திருப்பாய்? என அன்புமணியின் தாயார் கேட்டபோது, அமர்ந்திருந்த இடத்தில் இருந்த பாட்டிலை தூக்கி பெற்ற தாயின் மீது வீசியவர் அன்புமணி. நல்ல வேலையாக அது அவரின் மேல் படாது சுவற்றில் பட்டது.

இதெல்லாம் வெறும் சேம்பிள் தான். கட்சியின் நிர்வாக குழுவில் 19 பேர் உள்ளனர். அன்புமணி, அவர்களது கருத்தை கேட்பதும் இல்லை. கருத்தை வெளிப்படுத்தவும் அனுமதிப்பதில்லை.

அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு கூறி பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமி இடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர் - பாமக நிறுவனர் ராமதாஸ்.

இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.

அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இது அமைந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்க கூடும்.

பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார்.

பாமக தலைவராக இருந்த ஜி.கே.மணியை கூட நீக்க வேண்டும் என்று சௌமியா அன்புமணி வந்து சொன்னார். இதை ஜி.கே.மணியிடம் சொன்னேன். பின்னர் ஒன்றரை மாதம் கழித்து அன்புமணிக்கு பட்டாபிஷேகம் நடத்தினேன்.

பாமக மூத்த நிர்வாகிகளை அன்புமணி மரியாதை குறைவாகவே நடத்தி வந்தார். குறிப்பாக மறைந்த காடுவெட்டி குருவை கூட அவர் உரிய மரியாதை உடன் நடத்தவில்லை - பாமக நிறுவனர் ராமதாசு.
பாமக இளைஞரணி சங்கத் தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்தார் முகுந்தன்.

அன்புமணி ராமதாஸ் எங்கள் எதிர்காலம் என குறிப்பிட்டு, ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
💥 கீழடி விவகாரம்! மத்திய அரசு மறுப்பு!

கீழடி அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதாக வெளியான தகவலை மத்திய கலாச்சார அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், கீழடி அறிக்கையை ASI வெளியிட ஆர்வம் காட்டவில்லை என கூறுவது ASI மோசமாக சித்தரிக்கும் நோக்கம் என விளக்கம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 நாளை முதல் பனையூரில் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளையும் சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

ஏற்கனவே மாவட்ட செயலாளர்களை தினமும் பனையூர் அலுவலகத்தில் அன்புமணி சந்தித்து, கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.

அன்புமணி மீது, அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை தெரிவித்த நிலையில், நாளை முதல் நிர்வாகிகளை, மாவட்ட செயலாளர்களை சந்திப்பதால் தொண்டர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 கீழடி அறிக்கையை வெளியிடுவதில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது கற்பனைக் கதை: மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் விளக்கம்

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கை வெளியீடு குறித்து ஊடகங்களின் ஒரு பகுதியினரால் சமீபத்தில் வெளியிடப்பட்ட செய்திக் கட்டுரைக்கு எதிராக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட ஊடகம் செய்தியாக உடனடியாக வெளியிடலாம்.

இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையானது தலைமை இயக்குநரின் பெயரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடங்களின் அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு அகழ்வாராய்ச்சிப் பணியிலும் அதிக நேரம், ஆற்றல் மற்றும் பணம் செலவிடப்படுவதால், இந்த அம்சத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இல்லையெனில் அகழ்வாராய்ச்சிப் பணியின் அடிப்படை நோக்கம் நிறைவேற்றப்படாமலேயே இருக்கும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டில், அகழ்வாராய்ச்சியாளர்களால் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, அவை பல்வேறு துறை நிபுணர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் அறிக்கைகளை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். துறை வல்லுநர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் அகழ்வாராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக வெளியீட்டிற்காக மீண்டும் சமர்ப்பிக்கப்படுகின்றன. பின்னர் இவை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் நினைவுக் குறிப்புகளாக வெளியிடப்படுகின்றன.

கீழடி அறிக்கையிலும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது. அதில் அறிக்கை நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. அதன்படி, கீழடியின் அகழ்வாராய்ச்சியாளரால் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் தற்போதுவரை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை.

ஊடகங்களின் ஒரு பகுதியில் பரப்பப்படும் செய்தி தவறாக வழிநடத்துகிறது. இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் முற்றிலும், கடுமையாக மறுக்கப்படுகிறது. ஒரு அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட இடத்தின் முக்கியத்துவத்தை தலைமை இயக்குநரும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவன அதிகாரிகளும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அனைத்து அறிக்கைகளும் வெளியீட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு முறையான ஆய்வு, திருத்தம், சான்று வாசிப்பு மற்றும் வடிவமைப்பு தேவையாக உள்ளது. கீழடி அறிக்கையை வெளியிடுவதில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அக்கறை காட்டவில்லை என்பது ஒரு கற்பனைக் கதையாகும். இது வேண்டுமென்றே துறையை தவறாக சித்தரிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது ஊடகங்கள் ஒரு விஷயத்தின் நுணுக்கங்களைப் புரிந்துகொண்டு, அதிலும் தொல்லியல் போன்ற தொழில்நுட்ப விஷயத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்ந்து, வெளியிடுவதற்கு முன் முழுமையான புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
பல் கிளீனிக்கில் 8 பேர் பலி:
வெளியான அதிர்ச்சி தகவல்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 2023ஆம் ஆண்டில் தனியார் பல் கிளினிக்கில் ஏற்பட்ட பாக்டீரியா தொற்றால் 8 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பல் சிகிச்சைக்கு பயன்படுத்தும் கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமல், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியதால் 10 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 8 பேர் பலி.

தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம், வேலூர் சிஎம்சி மருத்துவர்களை கொண்ட குழு நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்.