Seithikathir - Tamil News
14.1K subscribers
179 photos
49 videos
807 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

திமுக அணியில் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகிறார் - மக்கள் நீதி மய்யம் அதிகார பூர்வ அறிவிப்பு.
BREAKING:ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு.

மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன்

அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - காவல்துறை தரப்பு கோரிக்கை
அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்-தமிழக அரசு

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.

எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்-ஞானசேகரன் கோரிக்கை.
🔴 BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு.

மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன்

அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - காவல்துறை தரப்பு கோரிக்கை

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - தமிழக அரசு

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.

எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் - ஞானசேகரன் கோரிக்கை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஜூன் 2-ல் தண்டனை விவரம்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவிப்பு.
திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் திறந்தார்.

சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பு மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

12 மீன்பிடித் துறைமுக கட்டமைப்பு வசதி, ரூ.170 கோடியில் 2 மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டன.

ரூ.241 கோடியில் மீனவ மகளிர் நுண்கடன், பாக் வளைகுடா மீனவர்களுக்கு வாழ்வாதார திட்டம் தொடக்கம்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
பங்களாதேஷில் என்ன நடக்கிறது?

WATCH: https://youtu.be/n1cX1RA6P3c?si=s2g8TnLZTJ8-5dgI

ராணுவ புரட்சி ஏற்படுமா? - விரிவான தகவல்கள்!
💥 ட்ரம்ப் பற்றி உங்கள் கருத்து என்ன?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நான் இந்த நாட்டின் குடிமகனில்லை, இந்த நாட்டில் வரிகட்டப் போவதில்லை, குடிமகனாக விண்ணப்பிக்கும் எண்ணமுமில்லை. எங்கள் நாட்டின் நிலையை சொல்ல வந்த பிரதிநிதி மட்டுமே. இந்த நாட்டின் அரசியல் தலைவரை பற்றி கருத்து சொல்வது நாகரீகமல்ல.

ஆனாலும் நீங்கள் கேட்பதால், ஒரு சாதாரண அரசியல் பார்வையாளனாக நான் சொல்வது என்னவென்றால், என்னுடைய வாழ்க்கையில் 4 அமெரிக்க பிரசிடென்டுகளை சந்தித்து, உரையாடும் வாய்ப்பு பெற்றுள்ளேன்.

அவர்கள் மிகச் சிறந்த அரசியல்வாதிகள், சரியான இலக்கை நோக்கி, திட்டமிட்டு, கட்டுப்பாடோடு பயணிப்பவர்களாக எனக்கு புரிந்தது.

ஆனால் இந்த மாமனிதனிடம் அது போன்ற அரசியல் ஞானம், அறிவு, கட்டுபாடு, தெளிவையெல்லாம் எதிர்பார்க்க கூடாது என்பது மட்டும் புரிகிறது.

- இந்திய பிரதிநிதியாக அமெரிக்கா சென்றுள்ள சசிதரூர் பேச்சு.

> பங்களாதேஷில் ராணுவ புரட்சி! WATCH: https://youtu.be/n1cX1RA6P3c?si=s2g8TnLZTJ8-5dgI
💥 இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சருக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன்.

தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி - சூரை மீன்பிடித் துறைமுகம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

> கச்சத்தீவு தாரை வார்த்தது யார்? https://youtu.be/m18uC-JbG_Y

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கோயில் உபரி நிதியில் வணிக வளாகம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

‘‘அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி கோயில் உபரி நிதியை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. சட்டவிரோதமானது. வணிக வளாகங்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்குத்தான் வழிவகுக்கும். எனவே, பாதியில் நிற்கும் வணிக வளாகத்தை முழுமையாக கட்டி முடித்து பக்தர்களுக்கான அன்னதானக் கூடமாகவோ அல்லது ஏழைகளுக்கான திருமண மண்டபமாகவோ அதை மாற்ற வேண்டும். அதற்காக எல்லா கோயில் உபரி நிதியையும் இவ்வாறு செலவழிக்கலாம் என கருத்தில் கொள்ளக்கூடாது’’ என கூறி வணிக வளாகத்துக்கான டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்து, அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீ்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு.

புதுச்சேரியில் ஒரு லிட்டருக்கு குறைந்தது ரூ.50 முதல் ரூ.325 வரை மதுவின் விலையை உயர்த்தி கலால்துறை அறிவிப்பு.

மது விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி கலால்துறை அறிவிப்பு.
🔴 BREAKING | SEITHIKATHIR

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 4 மாநிலங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒட்டியுள்ள நான்கு மாநிலங்களில், மே 29-ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவிருக்கிறது. இதில் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.

ஏப்ரல் 22-ஆம் தேதி, பஹல்‌கம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
❤️ சிறுவனின் தைரியம் - ராணுவம் பாராட்டு

பஞ்சாப் எல்லை கிராமமான தாராவலி-யில், ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்ற வேளையில், ராணுவத்தினர் அந்த கிராமத்தில் பாதுகாப்பிற்காக முகாமிட்டிருந்தனர்.

அவர்களை கண்ட 10 வயது மட்டுமே நிரம்பிய ஷ்ரவன் சிங், கையில் தண்ணீர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் எடுத்துக்கொண்டு வெயிலில் நின்றுக் கொண்டிருந்த வீரர்களுக்கு விநியோகித்தான். 

சிறுவனின் தைரியம் மற்றும்  சேவையை பாராட்டி, ராணுவ அதிகாரிகள் பரிசளித்தனர். வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர விரும்புகிறான் ஷ்ரவன்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய RBI-க்கு அறிவுறுத்துக!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.

தங்கத்தைப் பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் குறுகிய காலப் பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.

பெரும்பாலும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் கிராமப்புறக் கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

எனவே, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராகக் கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-இல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட RBI-க்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயச் சமூகத்திற்கும் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் கவனம் செலுத்தித் தீர்வுகாண வேண்டும்.
🔴 அடமானம் இல்லாமல் கடன்.

காரிஃப் பருவ பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்தது மத்திய அரசு.

விவசாயத்துக்கு ரூ.2.07 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்.

விவசாயிகளுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.15,642 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவு.

விவசாயிகளுக்கு அடமானம் எதுவும் இல்லாமல் ரூ.2 லட்சம் வரை கடன் வழங்கவும் மத்திய அரசின் அமைச்சரவையில் முடிவு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 "அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள்” - கமல்

எனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாற்றையே நான் சொன்னேன். இந்த பிரச்னையையும் தக் லைஃப்பையும் மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அரசியல்வாதிகள் மொழியை பற்றி பேச தகுதியற்றவர்கள் ஏனெனில் அவர்களுக்கு இதுபற்றிய போதிய படிப்பினை இல்லை; இது எனக்கும் பொருந்தும்.

எனவே இப்பிரச்னை பற்றிய ஆழமான கருத்துகளை வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள், தொல்லியல் நிபுணர்களிடம் விட்டுவிடுவோம்.

இது என் பதில் அல்ல, விளக்கம். அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது - கேரளாவில் நடக்கும் தக் லைஃப் ப்ரொமோஷனில் கன்னட - தமிழ் மொழி விவகாரம் குறித்து நடிகர் கமல்ஹாசன் பேச்சு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 வங்காள தேசத்தில் RAW vs CIA – ஆடு புலி ஆட்டம்

வங்காள தேசத்தில் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருக்கிறது. இந்த முறை ஆட்சி மாற்றத்தை நடத்த இருப்பது இந்தியா. நடத்தி காட்ட இருப்பது இந்தியாவின் ரா அமைப்பு. ராவின் கட்டளையை நிறைவேற்ற இருப்பவர் இப்போதைய வங்காளதேச ராணுவ தளபதி வேக்கர்ஸ் உஸ் ஜமான்.

வங்காள தேசத்தில் இந்தியாவின் ரா அமைப்பும் அமெரிக்காவின் சிஐஏ அமைப்பும் இடையே சுமார் 50 ஆண்டுகளாக ஆடு புலி ஆட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இப்பொழுது நடைபெறும் RAW vs CIA ஆன புலி ஆட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் ராவின் கையே ஓங்கி இருக்கிறது என்பதற்கு அங்கு இப்பொழுது நடைபெற்று வரும் சம்பவங்களே சாட்சி.

வங்காள தேசத்தின் ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்ஸ் உஸ் ஜமான், வங்காள தேசத்தின் இடைக்கால ஆட்சியாளராக இருக்கும் அமெரிக்க அடிமை முகம்மது யூனிஸை “தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வாருங்கள், அல்லது ராஜினாமா செய்யுங்கள்” என்று கூறியதால் வங்காள தேச அரசியலில் மாற்றங்களுக்கான அறிகுறிகள் ஆரம்பித்து விட்டன.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

வங்காள தேசத்தின் சட்ட ஒழுங்கு ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது. ராணுவம் முகம்மது யூனிஸை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்கிற செய்திகள் வருகின்றன. வங்காள தேச அரசியலில் வேக்கர்ஸ் உஸ் ஜமான் இன்னொரு காலித் முசராப் மாதிரி வங்காள தேச ஆட்சியை கவிழ்த்த இன்னொரு ராணுவ தளபதி ஆக உருவாகலாம்.

இப்போதைய வங்காள தேச ராணுவ தளபதியான வேக்கர்ஸ் உஸ் ஜமான் யார் தெரியுமா?

> ராணுவ புரட்சி ஏற்படுமா? Watch: https://youtu.be/n1cX1RA6P3c

ஷேக் ஹசீனாவின் மருமகன் மாதிரியான உறவைக்கொண்டவர். ஷேக் ஹசீனாவின் முதல் ஆட்சியில் அதாவது 1996-ல் வங்காள தேசத்தின் ராணுவ தலைவராக இருந்த முஸ்தாபி சுர் ரஹ்மானின் மருமகன். அதாவது முஸ்தாபி சுர் ரஹ்மானின் மகள் சரக்னாஸ் கமலிகா ரஹ்மானின் கணவர் தான் வேக்கர்ஸ் உஸ் ஜமான்.

ஷேக் ஹசீனா யார் தெரியுமா? வேக்கர்ஸ் உஸ் ஜமானின் மாமனாரான முஸ்தாபி சுர் ரஹ்மானுக்கு மருமகள் உறவை கொண்டவர். ஆக, இப்போதைய வங்காள தேச ராணுவ தளபதி முன்னாள் வங்காள தேச பிரதமரும் இந்தியாவின் நெருங்கிய நண்பரான ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினர். இதனால் தான் கடந்த ஆண்டு ஜூன் 23ம் தேதி வேக்கர்ஸ் உஸ் ஜமானை ராணுவ தளபதியாக நியமித்தார்.

ஷேக் ஹசீனாவிற்கு எதிராக கடந்த ஆண்டு ஜூன் இறுதியில் ராணுவ புரட்சி நடைபெறலாம் என்று இந்தியாவின் ரா அளித்த அறிவுரையை கேட்டுக்கொண்டு அவருடைய நெருங்கிய உறவினரான வேக்கர்ஸ் உஸ் ஜமானை ராணுவ தளபதியாக கொண்டு வந்த ஷேக் ஹசீனா, அடுத்து ரா கூறிய “மாணவர் போராட்டங்களை மென்மையாக கையாளுங்கள்” என்பதையும் காதில் வாங்கவில்லை.

அதனால் தான் ஆட்சியை இழந்து விட்டு, உயிர் பிழைக்க இந்தியாவிற்கு வந்து விட்டார். அவரை இந்தியாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது இப்போதைய ராணுவ தளபதி வேக்கர்ஸ் உஸ் ஜமான் தான். ஷேக் ஹசீனா, அவரது தந்தை முஜிபுர் ரஹ்மான் மாதிரியே, ராவின் சில அறிவுரைகளை காதில் வாங்கவில்லை என்பதால் தான் ஆட்சியை இழந்தார்.

ஷேக் ஹசீனா கூட பரவாயில்லை – ராவின் அறிவுரையை கேட்காமல் ஆட்சியைத்தான் இழந்தார். ஆனால் அவருடைய தந்தை முஜிபுர் ரஹ்மான், ராவின் அறிவுரையை கேட்காமல் உயிரையே இழந்தார்.

வங்காள தேசத்தில் RAW vs CIA மோதல் இப்பொழுது ஆரம்பமாகவில்லை. அது 1971-ல் வங்காள தேசம் தனி நாடாக உருவானபொழுதே ஆரம்பித்துவிட்டது.

வங்காள தேசத்தின் முதல் ஆட்சியாளரான பங்கபந்து முஜிபுர் ரஹ்மானை – அதாவது ஷேக் ஹசீனாவின் தந்தையை – அமெரிக்காவின் சிஐஏ ராணுவ புரட்சி மூலம் கொல்ல நினைத்தது. இதற்காக உங்களுடைய அமைச்சர் முஸ்டாக் அகம்மதுவும் துணை போகிறார் என்று ராவின் தலைவர் ராமேஸ்வர் நாத் காவ் 1975 மே மாதம் டாக்காவிற்கு சென்று முஜிபுர் ரஹ்மானை நேரில் சந்தித்து “உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அறிவுரை கூறியிருந்தார்.

ஆனால் முஜிபுர் ரஹ்மான் அதை கேட்கவில்லை. “என் மக்கள், என் ராணுவம், இவர்கள் எப்படி என்னை கொல்ல நினைப்பார்கள்?” என்று ராவின் தலைவர் ஆர் என் காவ் அவர்களின் ஆலோசனையை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

அதன் விளைவு? 1975 ஆகஸ்டு 15 – இந்திய சுதந்திர தினம்! அன்றே வங்காள தேசத்தில் ராணுவ புரட்சி நடைபெற்றது. ஜியா உர் ரஹ்மான் பின்னால் இருந்து இயக்கம் நடத்தினார். இரண்டாம் நிலை ராணுவ தளபதிகள் மூலமாக, முஜிபுர் ரஹ்மான் மற்றும் அவரது குடும்பத்தில் இருந்த 10 பேர் கொல்லப்பட்டார்கள். ஷேக் ஹசீனாவும் அவரது தங்கை ஷேக் ரஹானாவும் மேற்கு ஜெர்மனியில் இருந்ததால் தப்பித்தனர்.
பங்கபந்து குடும்பம் அழிக்கப்பட்ட பிறகு, அமெரிக்க ஆதரவுடன் முஜிபுர் ரஹ்மானுக்கு கீழ் வர்த்தக அமைச்சராக இருந்த கண்டகர் முஸ்டாக் அகம்மது ஜனாதிபதியாக ஆனார். ஆனால் ராவின் உதவியுடன் பிரிகேடியர் காலித் முஸ்ரப் தலைமையில் 1975 நவம்பர் 3ம் தேதி முஸ்டாக் அகம்மதுவின் ஆட்சியை வீழ்த்தினார்கள்.

ஜியாவுர் ரஹ்மான் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அபு தாகிர் தலைமையில் ஒரு குழு காலித் முஸ்டாகை படுகொலை செய்து, ஜியா உர் ரஹ்மானின் கீழ் வங்காள தேசத்தை கொண்டு வந்தது.

ஜியாவுர் ரஹ்மான் 4 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருந்தார். 1981 மே 30-ல் அவரும் முஜிபுர் ஆதரவு ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் முகம்மது அபுல் மன்சூரின் தலைமையில் உருவான ராணுவ புரட்சியில் சிட்டகாங் சர்க்யூட் ஹவுஸில் படுகொலை செய்யப்பட்டார்.

பின்னர் முகம்மது எர்ஷாத் ஆட்சியை கைப்பற்றி “மக்கள் ஆட்சி” என்ற பெயரில் ஷேக் ஹசீனா மற்றும் கலிதா ஜியா ஆட்சியை மாறி மாறி கவனித்தனர். இதனால் ராணுவ புரட்சி முடிந்தது. CIA வேலைகள் ஓய்ந்தன.

2009-ல் ஷேக் ஹசீனா பிரதமரான சில நாட்களில் CIA ராணுவ புரட்சியை உருவாக்க முயன்றது. பில்கானா படுகொலைகள் அதற்குக் குறிக்கோள். BDR ரைபில்ஸ் படை கலகத்தில் 56 ராணுவ அதிகாரிகள் மற்றும் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். CIA ஆதரவு… ஆனால் ராவின் உதவியுடன் ஷேக் ஹசீனா அதை முறியடித்தார்.

பில்கானா கலகம் பின் ரா ஆதரவுடன் வணக்கம் சொல்லி மறைந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா ராவின் சில அறிவுரைகளை கேட்கவில்லை. அதனால் மக்கள் புரட்சி மூலமாக ஆட்சியை இழந்தார். ஆனால் வேக்கர்ஸ் உஸ் ஜமான் அவரை பாதுகாப்பாக இந்தியாவிற்கு அனுப்பினார்.

2009 பில்கானா கலகத்தில் கைது செய்யப்பட்ட 300 பேரை முகம்மது யூனிஸ் விடுவிக்க உத்தரவு போட்டுள்ளார். இது வேக்கர்ஸ் உஸ் ஜமானுக்கு கோபத்தை உண்டாக்கி, அவரை எதிர்த்துப் போராட வைக்கிறது.

மேலும், முகம்மது யூனிஸ் ராணுவ ஆலோசகர் கம்ருல் ஹாசனை ராணுவ தளபதியாக கொண்டு வர CIA திட்டமிட்டிருக்கிறது. அதற்கு எதிராகவே வேக்கர்ஸ் உஸ் ஜமான் சில வேலைகளை செய்து வருகிறார்.

வங்காள தேசம் மீண்டும் ஒரு ராணுவ புரட்சி நடைப்பெறும் வாய்ப்பு இருக்கிறது. அந்த புரட்சி RAW vs CIA-வின் ஆடுபுலி ஆட்டத்தின் வெளிப்பாடாக இருக்கிறது. ரா ஆதரவுடன் இயங்கும் வேக்கர்ஸ் உஸ் ஜமான், சிஐஏ ஆதரவு உடன் இயங்கும் முகம்மது யூனிஸை வீழ்த்தி காட்டுவார்.

நன்றி: Vijayakumar Arunagiri