Seithikathir - Tamil News
14.1K subscribers
167 photos
49 videos
770 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது-இந்திய வானிலை ஆய்வு மையம்.

இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும்.
விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்க காவல்துறை தடை.

சென்னையில் விஜிபி பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு தற்காலிமாக தடை விதித்தது காவல்துறை.

ராட்டின விபத்து தொடர்பாக விளக்கம் கேட்டு விஜிபி பொதுமேலாளருக்கு நீலாங்கரை போலீஸ் நோட்டீஸ்.

விளக்கம் அளித்து ஆவணங்களை சமர்ப்பித்த பின் பொழுதுபோக்கு பூங்காவை திறக்க காவல்துறை அறிவுறுத்தல்.

நேற்று ராட்டினத்தில் ஏற்பட்ட கோளாறால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் தவித்தனர் மக்கள்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480க்கு விற்பனையாகிறது.
💥 JUST NOW:

திமுக சார்பில் போட்டியிடும் ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.

திமுக அணியில் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராகிறார் - மக்கள் நீதி மய்யம் அதிகார பூர்வ அறிவிப்பு.
BREAKING:ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு.

மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன்

அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - காவல்துறை தரப்பு கோரிக்கை
அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்-தமிழக அரசு

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.

எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்-ஞானசேகரன் கோரிக்கை.
🔴 BREAKING: ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு.

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் குற்றவாளி எனத் தீர்ப்பு.

மாணவி புகாரளித்து ஐந்தே மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்ட நிலையில், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி தீர்ப்பு.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து காட்டு மிராண்டி தனமான குற்றம் புரிந்துள்ளார் ஞானசேகரன்

அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - காவல்துறை தரப்பு கோரிக்கை

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் - தமிழக அரசு

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த ஒரு இரக்கம், கருணை காட்டாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என மகளிர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்.

எனக்கு வயதான, உடல்நலன் சரி இல்லாத தாயார் உள்ளார். அப்பா இல்லை. குடும்ப சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் - ஞானசேகரன் கோரிக்கை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஜூன் 2-ல் தண்டனை விவரம்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.

தண்டனை விவரம் ஜூன் 2ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவிப்பு.
திருவொற்றியூரில் மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் திறந்தார்.

சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பு மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

12 மீன்பிடித் துறைமுக கட்டமைப்பு வசதி, ரூ.170 கோடியில் 2 மீன் இறங்குதளங்கள் மேம்படுத்தப்பட்டன.

ரூ.241 கோடியில் மீனவ மகளிர் நுண்கடன், பாக் வளைகுடா மீனவர்களுக்கு வாழ்வாதார திட்டம் தொடக்கம்.

புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
பங்களாதேஷில் என்ன நடக்கிறது?

WATCH: https://youtu.be/n1cX1RA6P3c?si=s2g8TnLZTJ8-5dgI

ராணுவ புரட்சி ஏற்படுமா? - விரிவான தகவல்கள்!
💥 ட்ரம்ப் பற்றி உங்கள் கருத்து என்ன?

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நான் இந்த நாட்டின் குடிமகனில்லை, இந்த நாட்டில் வரிகட்டப் போவதில்லை, குடிமகனாக விண்ணப்பிக்கும் எண்ணமுமில்லை. எங்கள் நாட்டின் நிலையை சொல்ல வந்த பிரதிநிதி மட்டுமே. இந்த நாட்டின் அரசியல் தலைவரை பற்றி கருத்து சொல்வது நாகரீகமல்ல.

ஆனாலும் நீங்கள் கேட்பதால், ஒரு சாதாரண அரசியல் பார்வையாளனாக நான் சொல்வது என்னவென்றால், என்னுடைய வாழ்க்கையில் 4 அமெரிக்க பிரசிடென்டுகளை சந்தித்து, உரையாடும் வாய்ப்பு பெற்றுள்ளேன்.

அவர்கள் மிகச் சிறந்த அரசியல்வாதிகள், சரியான இலக்கை நோக்கி, திட்டமிட்டு, கட்டுப்பாடோடு பயணிப்பவர்களாக எனக்கு புரிந்தது.

ஆனால் இந்த மாமனிதனிடம் அது போன்ற அரசியல் ஞானம், அறிவு, கட்டுபாடு, தெளிவையெல்லாம் எதிர்பார்க்க கூடாது என்பது மட்டும் புரிகிறது.

- இந்திய பிரதிநிதியாக அமெரிக்கா சென்றுள்ள சசிதரூர் பேச்சு.

> பங்களாதேஷில் ராணுவ புரட்சி! WATCH: https://youtu.be/n1cX1RA6P3c?si=s2g8TnLZTJ8-5dgI
💥 இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சருக்கு இதுவரை 76 கடிதங்களை எழுதியுள்ளேன்.

தொடர் வலியுறுத்தல் காரணமாக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

எஞ்சியுள்ள 23 மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மீனவர்களின் இன்னல்களை போக்க கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி - சூரை மீன்பிடித் துறைமுகம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

> கச்சத்தீவு தாரை வார்த்தது யார்? https://youtu.be/m18uC-JbG_Y

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கோயில் உபரி நிதியில் வணிக வளாகம்: உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி

‘‘அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி கோயில் உபரி நிதியை வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. சட்டவிரோதமானது. வணிக வளாகங்கள் தேவையற்ற பிரச்சினைகளுக்குத்தான் வழிவகுக்கும். எனவே, பாதியில் நிற்கும் வணிக வளாகத்தை முழுமையாக கட்டி முடித்து பக்தர்களுக்கான அன்னதானக் கூடமாகவோ அல்லது ஏழைகளுக்கான திருமண மண்டபமாகவோ அதை மாற்ற வேண்டும். அதற்காக எல்லா கோயில் உபரி நிதியையும் இவ்வாறு செலவழிக்கலாம் என கருத்தில் கொள்ளக்கூடாது’’ என கூறி வணிக வளாகத்துக்கான டெண்டர் நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து அறநிலையத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் தலையிட முடியாது என மறுப்பு தெரிவித்து, அறநிலையத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீ்ட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு.

புதுச்சேரியில் ஒரு லிட்டருக்கு குறைந்தது ரூ.50 முதல் ரூ.325 வரை மதுவின் விலையை உயர்த்தி கலால்துறை அறிவிப்பு.

மது விலை உயர்வு உடனடியாக அமல்படுத்தப்படுவதாக புதுச்சேரி கலால்துறை அறிவிப்பு.
🔴 BREAKING | SEITHIKATHIR

பாகிஸ்தானை ஒட்டியுள்ள 4 மாநிலங்களில் நாளை பாதுகாப்பு ஒத்திகை!

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒட்டியுள்ள நான்கு மாநிலங்களில், மே 29-ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெறவிருக்கிறது. இதில் குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அடங்கும்.

ஏப்ரல் 22-ஆம் தேதி, பஹல்‌கம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையை மேற்கொண்டது.
❤️ சிறுவனின் தைரியம் - ராணுவம் பாராட்டு

பஞ்சாப் எல்லை கிராமமான தாராவலி-யில், ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்ற வேளையில், ராணுவத்தினர் அந்த கிராமத்தில் பாதுகாப்பிற்காக முகாமிட்டிருந்தனர்.

அவர்களை கண்ட 10 வயது மட்டுமே நிரம்பிய ஷ்ரவன் சிங், கையில் தண்ணீர், லஸ்ஸி, ஐஸ்க்ரீம் எடுத்துக்கொண்டு வெயிலில் நின்றுக் கொண்டிருந்த வீரர்களுக்கு விநியோகித்தான். 

சிறுவனின் தைரியம் மற்றும்  சேவையை பாராட்டி, ராணுவ அதிகாரிகள் பரிசளித்தனர். வளர்ந்த பிறகு ராணுவத்தில் சேர விரும்புகிறான் ஷ்ரவன்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்ய RBI-க்கு அறிவுறுத்துக!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்.

தங்கத்தைப் பிணையாகப் பெற்று வழங்கப்பெறும் கடன்கள் குறுகிய காலப் பயிர்க்கடன்களுக்கான முதன்மை ஆதாரமாக விளங்குகிறது.

பெரும்பாலும் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு முறையான நில உரிமைகள் அல்லது வருமான ஆவணங்கள் இல்லை. அத்தகைய விவசாயிகள் வங்கிக் கடன்களைப் பெறுவதற்கான ஒரு சாத்தியமான மற்றும் கண்ணியமான வழியாக நகைக்கடன் உள்ளது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள நெறிமுறைகளால் கிராமப்புறக் கடன் வாங்குபவர்கள் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத கடன் வழங்கும் நிறுவனங்களை நோக்கிச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

இது அவர்களை சுரண்டல் நடைமுறைகளுக்கு ஆளாக்குவதுடன் கடனை அதிகரிக்கும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

எனவே, இந்திய ரிசர்வ் வங்கி (தங்க பிணையத்திற்கு எதிராகக் கடன் வழங்குதல்) வழிகாட்டுதல்கள் 2025-இல் முன்மொழியப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்திட RBI-க்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விவசாயச் சமூகத்திற்கும் கிராமப்புறப் பொருளாதாரத்திற்கும் அத்தியாவசியமான இந்த விவகாரத்தில் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் கவனம் செலுத்தித் தீர்வுகாண வேண்டும்.