🔴 ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான்...
இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் ஒன்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கிடையே இருந்த பகைமை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும் என்பதால் சட்டசபைக்கே வராமல் கூட இருந்தவர் ஜெ. இவர் திட்டத்தை அவர் நிறுத்துவதும் அவர் திட்டத்தை இவர் நிறுத்துவதும் என்று மக்கள் வரிப்பணம் போர்டுகளை மாற்றி எழுதவே வீணடிக்கப்படுவது இங்கே நடந்தது. மருத்துவமனையாகவும் இல்லாமல் சட்டமன்ற வளாகமாகவும் இல்லாமல் பரிதாபமாக நிற்கும் ஓமந்தூரார் தோட்டமே இதற்கு சாட்சி.
கொள்கை அல்லது தனிப்பட்ட விரோதம் தாண்டி ஒருவருக்கு மக்கள் அளித்த பதவியை மதிக்க வேண்டும். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்போதே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிவாரணத்துக்காக காசோலை வழங்கியவர் ஸ்டாலின். அதற்காக நிறைய திட்டுகளையும் வாங்கினார். அவருடைய அரசியல் பாணி என்பது Reconciliation என்பதை முன்னெடுப்பதுதான்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள் டெல்லி அரசியல் பற்றி அறியாதவர்கள். அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் வீட்டு விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வார்கள். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அடித்துப் பிறாண்டிக் கொள்வார்கள். அது தனி டிபார்ட்மெண்ட்.
இரண்டு மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் இங்கே சந்திக்கிறார்கள். கட்சிகள், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான் மக்களுக்கும் அரசியலமைப்புக்கும் அவர்கள் செய்யும் மரியாதை.
நன்றி: ஷான் கருப்புசாமி, எழுத்தாளர்.
இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் ஒன்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கிடையே இருந்த பகைமை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும் என்பதால் சட்டசபைக்கே வராமல் கூட இருந்தவர் ஜெ. இவர் திட்டத்தை அவர் நிறுத்துவதும் அவர் திட்டத்தை இவர் நிறுத்துவதும் என்று மக்கள் வரிப்பணம் போர்டுகளை மாற்றி எழுதவே வீணடிக்கப்படுவது இங்கே நடந்தது. மருத்துவமனையாகவும் இல்லாமல் சட்டமன்ற வளாகமாகவும் இல்லாமல் பரிதாபமாக நிற்கும் ஓமந்தூரார் தோட்டமே இதற்கு சாட்சி.
கொள்கை அல்லது தனிப்பட்ட விரோதம் தாண்டி ஒருவருக்கு மக்கள் அளித்த பதவியை மதிக்க வேண்டும். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்போதே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிவாரணத்துக்காக காசோலை வழங்கியவர் ஸ்டாலின். அதற்காக நிறைய திட்டுகளையும் வாங்கினார். அவருடைய அரசியல் பாணி என்பது Reconciliation என்பதை முன்னெடுப்பதுதான்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள் டெல்லி அரசியல் பற்றி அறியாதவர்கள். அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் வீட்டு விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வார்கள். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அடித்துப் பிறாண்டிக் கொள்வார்கள். அது தனி டிபார்ட்மெண்ட்.
இரண்டு மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் இங்கே சந்திக்கிறார்கள். கட்சிகள், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான் மக்களுக்கும் அரசியலமைப்புக்கும் அவர்கள் செய்யும் மரியாதை.
நன்றி: ஷான் கருப்புசாமி, எழுத்தாளர்.
🏏 ஐபிஎல்: மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் Qualifier 1ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது பஞ்சாப் அணி
வரும் 29ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அல்லது குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது பஞ்சாப்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வரும் 29ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அல்லது குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது பஞ்சாப்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௪௯(249)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
உரை :
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
English :
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௩)
தமிழ் வாழ்க
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை
குறள் :
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
உரை :
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.
English :
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.
தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௩)
தமிழ் வாழ்க
பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் மாற்றம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.
தனியார் பள்ளி இயக்ககத்தின் இயக்குநர் பழனிச்சாமி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.
உஷாராணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு பணியிட மாற்றம்.
பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து குப்புசாமி தனியார் பள்ளி இயக்ககத்திற்கு மாற்றம்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.
தனியார் பள்ளி இயக்ககத்தின் இயக்குநர் பழனிச்சாமி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.
உஷாராணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு பணியிட மாற்றம்.
பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து குப்புசாமி தனியார் பள்ளி இயக்ககத்திற்கு மாற்றம்.
💥 போக்சோ வழக்கு முடித்துவைப்பு!
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்துவைப்பு.
ஜூனியர் மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2023ல் வழக்குப் பதியப்பட்டது. தற்போது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக தந்தையே வாக்குமூலம் அளித்துள்ளதாக டெல்லி போலீசார் அளித்த அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்துவைத்தது டெல்லி நீதிமன்றம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்துவைப்பு.
ஜூனியர் மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2023ல் வழக்குப் பதியப்பட்டது. தற்போது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக தந்தையே வாக்குமூலம் அளித்துள்ளதாக டெல்லி போலீசார் அளித்த அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்துவைத்தது டெல்லி நீதிமன்றம்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பு அறிமுகம்.
வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பை இந்திய வானிலை மையம் அறிமுகம் செய்தது.
தற்போதைய வானிலை அமைப்பால் 12 கிமீ கட்ட அளவுக்கே துல்லியமாக கணிக்க இயலும்.
புதிய வானிலை அமைப்பு மூலம் 6 கி.மீ. க்கு 6 கி.மீ. கட்ட அளவில் வானிலை தகவல்களை கணிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பை இந்திய வானிலை மையம் அறிமுகம் செய்தது.
தற்போதைய வானிலை அமைப்பால் 12 கிமீ கட்ட அளவுக்கே துல்லியமாக கணிக்க இயலும்.
புதிய வானிலை அமைப்பு மூலம் 6 கி.மீ. க்கு 6 கி.மீ. கட்ட அளவில் வானிலை தகவல்களை கணிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓடு ஓடு....
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்.
திருப்பதி மலை பாதையில் சாலையோர தடுப்பு சுவரின் மீது ஏறி ஓடிய சிறுத்தை.
திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்.
திருப்பதி மலை பாதையில் சாலையோர தடுப்பு சுவரின் மீது ஏறி ஓடிய சிறுத்தை.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு; ஒரு கிராம் தங்கம் ரூ.8995க்கு விற்பனை ஆகிறது.
"முகக்கவசம் கட்டாயம் இல்லை”
தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை; கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.
கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்-மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்.
தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை; கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.
கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்-மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்.
மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள்- முதல்வர் அடிக்கல்.
மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை, பழனி, நெல்லை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்ட அடிக்கல்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.22.62 கோடியில் கட்டுமானப் பணிக்கு முதல்வர் அடிக்கல்.
மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
சென்னை, பழனி, நெல்லை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்ட அடிக்கல்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.22.62 கோடியில் கட்டுமானப் பணிக்கு முதல்வர் அடிக்கல்.
கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது.
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே ஆயிரகணக்கான மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பபதிவும், அவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது.
www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே ஆயிரகணக்கான மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பபதிவும், அவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.
இன்று (மே 27) நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று (மே 27) நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும்.
இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அடுத்த 48 மணி நேரத்தில் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைய கூடும்.
இதனால் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
முறைகேடுகளை தடுக்க ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை.
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை அடிப்படையில் அமல்; விரைவில் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடைக்கு பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் POS கருவியுடன் மின்னணு தராசை இணைக்கும் நடைமுறை சென்னையில் ஒரு சில கடைகளில் சோதனை அடிப்படையில் அமல்; விரைவில் மாநிலம் முழுவதும் அமலுக்கு வரவுள்ளது.
இதனால் எந்த ஒரு முறைகேடும் நடக்காமல் சரியான எடைக்கு பொருட்கள் விற்கப்படுவது உறுதி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இபிஎஸ்க்கு பதில் சொல்ல விரும்பவில்லை-முதல்வர்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
அரசை குறை சொல்ல எதுவும் கிடைக்காததால் ஏதோ ஒரு குற்றச்சாட்டை இபிஎஸ் வைக்கிறார்.
டெல்லி பயண விவகாரத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்.
டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என ஏற்கெனவே கூறிவிட்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்து என் தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
அரசை குறை சொல்ல எதுவும் கிடைக்காததால் ஏதோ ஒரு குற்றச்சாட்டை இபிஎஸ் வைக்கிறார்.
டெல்லி பயண விவகாரத்தில் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார் இபிஎஸ்.
டெல்லிக்கு வெள்ளைக் கொடியோ, காவிக் கொடியோ கொண்டு செல்லவில்லை என ஏற்கெனவே கூறிவிட்டேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சிட்டி யூனியன் வங்கிக்கு அபராதம்.
சிட்டி யூனியன் வங்கியின் ரூபே டெபிட் கார்டு பயன்படுத்திவந்த பாண்டியன் சாலை விபத்தில் உயிரிழப்பு
விதிமுறைகளின்படி உரிமையாளர் விபத்தில் சிக்கி இறந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்.
இறப்பதற்கு 45 நாட்களுக்குள் டெபிட் கார்டை பயன்படுத்தியிருக்க வேண்டும் என நிபந்தனை.
45 நாட்கள் என்பது 30 நாட்களாக குறைக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் மறுப்பு.
திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் பாண்டியனின் மனைவி நிலா.
விதிமுறை மாற்றப்பட்டது வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படாததால் அபராதம் விதித்தது நுகர்வோர் ஆணையம்.
காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம், நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்க சிட்டி யூனியன் வங்கி, டாட்டா AIG இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.
சிட்டி யூனியன் வங்கியின் ரூபே டெபிட் கார்டு பயன்படுத்திவந்த பாண்டியன் சாலை விபத்தில் உயிரிழப்பு
விதிமுறைகளின்படி உரிமையாளர் விபத்தில் சிக்கி இறந்தால் ரூ.5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்.
இறப்பதற்கு 45 நாட்களுக்குள் டெபிட் கார்டை பயன்படுத்தியிருக்க வேண்டும் என நிபந்தனை.
45 நாட்கள் என்பது 30 நாட்களாக குறைக்கப்பட்டதால் இழப்பீடு வழங்க வங்கி நிர்வாகம் மறுப்பு.
திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார் பாண்டியனின் மனைவி நிலா.
விதிமுறை மாற்றப்பட்டது வாடிக்கையாளருக்கு தெரிவிக்கப்படாததால் அபராதம் விதித்தது நுகர்வோர் ஆணையம்.
காப்பீட்டு தொகையாக ரூ.2 லட்சம், நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம், வழக்கு செலவுக்காக ரூ.10,000 வழங்க சிட்டி யூனியன் வங்கி, டாட்டா AIG இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு.
🔴 வாகன சோதனையின் போது நடந்த துயரம்!
கர்நாடகா: ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியை காவலர்கள் வழிமறித்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அவர்களின் 3 வயது குழந்தை ரிதிக்ஷா, கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மருத்துவமனைக்கு சொல்லும் வழியில் உயிர் பிரிந்தது. போலீசாரே விபத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு.
செய்திக்கதிர் பார்வை: வாகனத்தில் செல்லும் போது போலீசார் நிறுத்த சொன்னால் / நிறுத்துவது போன்று தெரிந்தால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தாருங்கள். அதே நேரம், போலீசாரும் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்ளுங்கள். நடுசாலையில் செல்வோரை மறித்து ஓரம்கட்ட சொல்வது, வண்டியை நிறுத்துவதற்குள்ளேயே சாவியை பிடுங்குவது, நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றால் வாகனத்தைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உயிர் விலை மதிப்பில்லாதது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கர்நாடகா: ஹெல்மெட் அணியாமல் வந்த தம்பதியை காவலர்கள் வழிமறித்தபோது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அவர்களின் 3 வயது குழந்தை ரிதிக்ஷா, கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு!
தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் மருத்துவமனைக்கு சொல்லும் வழியில் உயிர் பிரிந்தது. போலீசாரே விபத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றச்சாட்டு.
செய்திக்கதிர் பார்வை: வாகனத்தில் செல்லும் போது போலீசார் நிறுத்த சொன்னால் / நிறுத்துவது போன்று தெரிந்தால், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தாருங்கள். அதே நேரம், போலீசாரும் கொஞ்சம் கருணையோடு நடந்து கொள்ளுங்கள். நடுசாலையில் செல்வோரை மறித்து ஓரம்கட்ட சொல்வது, வண்டியை நிறுத்துவதற்குள்ளேயே சாவியை பிடுங்குவது, நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்றால் வாகனத்தைப் பிடித்து இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். உயிர் விலை மதிப்பில்லாதது.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைப்பதா? - தவெக தலைவர் விஜய் வன்மையான கண்டனம்!
விஜய் அறிக்கை: சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்,
தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
கங்காவதி (வயது 45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த
தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா?
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா?
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?
மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.
விஜய் அறிக்கை: சென்னை, வியாசர்பாடி, முல்லை நகர்ப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் பல குடிசைகள் தீக்கிரையாகியுள்ளன. தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று செயல்பட்டதால், உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பல குடிசைகள் தப்பியுள்ளன. தீவிபத்தில் குடிசைகளை இழந்த மற்றும் முன்னெச்சரிக்கையாக அப்புறப்படுத்தப்பட்ட மக்கள்,
தற்காலிகமாக அருகில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்தத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத் தோழர்கள் சென்று அங்கிருந்தவர்களுக்கு மனிதநேய அடிப்படையில் உடை, போர்வை, பாய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் உணவும் வழங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களும் தாமாக முன்வந்து பெற்றுக்கொண்டனர்.
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
இதனைப் பார்த்த காவல் துறையினர், த.வெ.க. நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். காவல் துறையினர் வரம்பு மீறிப் பேசி, அத்துமீறிச் செயல்படுவதைப் பார்த்த கழகத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்
கங்காவதி (வயது 45), மக்களுக்கு உதவி செய்வதைத் தடுப்பது ஏன் என்று காவல் துறையினரை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது காவல் துறையினர் கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி, கழக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கங்காவதியின் வயிற்றில் எட்டி உதைத்து, கீழே தள்ளியுள்ளனர். மேலும், இதைத் தடுக்கச் சென்ற கழக மகளிரணியைச் சேர்ந்த
தமிழ்ச்செல்வியின் ஆடையைக் காவல் துறையினர் பிடித்து இழுத்துத் தள்ளி விட்டுள்ளனர். காயமடைந்த கழக உறுப்பினர்கள், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிபத்தில் பாதிக்கப்பட்டு, குடிசைகளை இழந்து, தங்களின் அத்தியாவசிய உடைமைகளை இழந்து, நிர்க்கதியாய் நிற்கும் மக்களுக்கு உதவுவது என்பது காவல் துறையால் தடுத்து நிறுத்தப்பட வேண்டிய மாபெரும் குற்றச் செயலா?
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்வதோ, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொடுத்து உதவுவதோ கூடாது என்று காவல் துறை சொல்கிறது என்றால், அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதைத் தடுத்து நிறுத்தியதற்காக, காவல் துறையினரைப் பார்த்து நியாயமான முறையில் கேள்வி கேட்ட த.வெ.க. பெண் நிர்வாகிகளை பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைப்பதையும், ஆடையைப் பிடித்து அந்த ஆடை கிழியும் அளவிற்கு அவர்களை இழுத்துத் தள்ளி விடும் காவல் துறையின் செயலை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பெண்களை பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும், அவர்களின் ஆடையைக் கிழித்தும் அராஜகமாக இழிவாகத்தான் நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளாரா?
தற்போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சி அல்ல, அதிகாரத் திமிர் பிடித்த உண்மையான பாசிச ஆட்சியே என்பதற்கு இதைவிட சாட்சி தேவையா என்ன?
மக்களுக்கான ஆட்சி நடத்துகிறோம் என்று வெற்று விளம்பரம் செய்யும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான அராஜகப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டு தவறிழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகளிருக்கு நாங்கள் தான் பாதுகாப்பு என்று சொல்லி, அவர்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த பின், அவர்களுக்கு உங்கள் கட்சிக்காரர்களிடமிருந்தே பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதைப் பல முறைகள் சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனாலும் காவல் துறை வாயிலாகவும் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிடும் இந்தப் போக்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காவல் துறை, ஆளுங்கட்சியின் ஏவல் துறையாக மாறி, அப்பாவிகள் மீது மிருகப் பலத்தைக் காட்டி, மக்களிடம் வெறுப்புகளைக் குவித்து வருகிறது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றி வரும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான விளம்பர மாடல் அரசு, பெண்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை வீதியில் போராட வைத்திருக்கிறது. இதே போன்று மகளிருக்கு எதிரான அராஜக நிலை தொடர்ந்தால், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மிகப் பெரிய மக்கள் போராட்டத்தையும் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுக்கத் தயங்க மாட்டோம் என்பதைத் தெரிவித்து கொள்கிறேன்.