Seithikathir - Tamil News
14.1K subscribers
163 photos
49 videos
743 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 “தமிழகம் பெரியாரின் மண் அல்ல பெரியாழ்வார் வாழும் மண்... தமிழகம் அண்ணா மண் அல்ல ஆண்டாளின் மண்...”

- தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 1,000-ஐத் தாண்டியது கரோனா பாதிப்பு

தெற்காசியாவில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது - மத்திய சுகாதாரத் துறை

மே 26 காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவில் 1,009 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் 430 பேருக்கும் தமிழ்நாட்டில் 69 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மீண்டும் பரவி வரும் கரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 “அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது”

தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது; வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்

ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்; அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது - சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பள்ளி திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

தமிழகத்தில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.
“அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது”- இபிஎஸ்.

தமிழகத்தில் குடும்ப ஆட்சி, வாரிசு ஆட்சி நடைபெறுகிறது.

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 அமையும்.

ஸ்டாலினின் கனவு கானல் நீராகவும் பகல் கனவாகவும்தான் இருக்கும்.

அதிமுக உள்ள வரை ஸ்டாலின் கனவு பலிக்காது.

எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம்; அதை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?

ஒரு கூட்டணி அமைந்ததற்கே உங்களுக்கு பொறுக்க முடியவில்லை; இன்னும் பல கட்சிகள் எங்களோடு இணைகின்றபோது நடு நடுங்கிப் போவீர்கள்-
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு.
💥 Vanakkam!

Updates posted in this Seithikathir group are mostly sourced from public messages posted by various Government departments, including Defence Ministry, External Affairs, Army, Navy, Press Information Bureau, DD, AIR, etc.

Additionally, we share updates from credible reporters and defence experts on the ground (who are correct 9 out of 10 times). None of them share classified information. We do not share updates from anonymous sources, nor do we post live updates of any military action.

Most of the original updates are in English. We only translate them to Tamil for better understanding.

---

💥 வணக்கம்!

செய்திக்கதிர் குழுவில் பகிரப்படும் முக்கியமான அப்டேட்கள், அரசு துறைகள் (பாதுகாப்பு துறை, வெளியுறவு துறை, கடற்படை, விமானப்படை, பத்திரிகைத் தகவல் பிரிவு, தூர்தர்சன், ஆல் இந்தியா ரேடியோ போன்றவை) அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் சமூக வலைதள கணக்குகளில் இருந்து பெறப்படுகின்றன.

இதனுடன், நம்பிக்கைக்குரிய செய்தியாளர்கள் மற்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் சமூக ஊடகங்களில் பகிரும் செய்திகள் (இவர்கள் பெரும்பாலும் 10-க்கு 9 முறை சரியானவை) மட்டுமே இங்கு இடம் பெறுகின்றன. இவை அனைத்தும் பொது தளங்களில் உள்ளவை; எந்த ரகசியத் தகவல்களும், யார் என்றே தெரியாத ‘Sources’ வழங்கும் தகவல்களும், நேரலை செய்திகளும் இங்கு இடம் பெறுவதில்லை.

முக்கியமாக, பெரும்பாலான செய்திகள் ஆங்கிலத்தில் இருந்து பெறப்பட்டவை. நாங்கள் தமிழில் மொழிபெயர்த்து பகிர்கிறோம், இதனால் உங்கள் புரிதல் சுலபமாகும்.

நன்றி.

நண்பர்களே, செய்திக்கதிர் செய்தி சேவையை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், சமூகத்தினருடன் பகிருங்கள்! நன்றி.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான்...

இந்தப் படத்தைப் பகிர்ந்து முதல்வர் ஸ்டாலின் பயந்துவிட்டார், பம்மி விட்டார் என்றெல்லாம் பகடிகள். தமிழக அரசியலில் இருந்த பெரிய பிரச்னைகளில் ஒன்று ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவருக்கிடையே இருந்த பகைமை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள நேரும் என்பதால் சட்டசபைக்கே வராமல் கூட இருந்தவர் ஜெ. இவர் திட்டத்தை அவர் நிறுத்துவதும் அவர் திட்டத்தை இவர் நிறுத்துவதும் என்று மக்கள் வரிப்பணம் போர்டுகளை மாற்றி எழுதவே வீணடிக்கப்படுவது இங்கே நடந்தது. மருத்துவமனையாகவும் இல்லாமல் சட்டமன்ற வளாகமாகவும் இல்லாமல் பரிதாபமாக நிற்கும் ஓமந்தூரார் தோட்டமே இதற்கு சாட்சி.

கொள்கை அல்லது தனிப்பட்ட விரோதம் தாண்டி ஒருவருக்கு மக்கள் அளித்த பதவியை மதிக்க வேண்டும். அது கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது. அப்போதே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிவாரணத்துக்காக காசோலை வழங்கியவர் ஸ்டாலின். அதற்காக நிறைய திட்டுகளையும் வாங்கினார். அவருடைய அரசியல் பாணி என்பது Reconciliation என்பதை முன்னெடுப்பதுதான்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தப் படத்தை வித்தியாசமாகப் பார்ப்பவர்கள் டெல்லி அரசியல் பற்றி அறியாதவர்கள். அங்கே பாஜக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு தலைவர்கள் வீட்டு விருந்துகளுக்கும் விழாக்களுக்கும் மாற்றி மாற்றி அழைத்துக் கொள்வார்கள். அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் அடித்துப் பிறாண்டிக் கொள்வார்கள். அது தனி டிபார்ட்மெண்ட்.

இரண்டு மாநில முதல்வர்களும் தேசத்தின் பிரதமரும் இங்கே சந்திக்கிறார்கள். கட்சிகள், கொள்கைகள் ஆகியவற்றைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதித்து நடப்பதுதான் மக்களுக்கும் அரசியலமைப்புக்கும் அவர்கள் செய்யும் மரியாதை.

நன்றி: ஷான் கருப்புசாமி, எழுத்தாளர்.
🏏 ஐபிஎல்: மும்பை அணியை வீழ்த்தியதன் மூலம் Qualifier 1ல் விளையாடும் வாய்ப்பை உறுதி செய்தது பஞ்சாப் அணி

வரும் 29ம் தேதி நடைபெற உள்ள போட்டியில் பெங்களூரு அல்லது குஜராத் அணியை எதிர்கொள்ள உள்ளது பஞ்சாப்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௪௯(249)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை

குறள் :
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.


உரை :
மனத்துள் அருள் இல்லாதவன் செய்யும் அறத்தை ஆராய்ந்து பார்த்தால், அறிவு இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல ஆகும்.

English :
f you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdom.

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௧௩)
தமிழ் வாழ்க
பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்கள் மாற்றம்.

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் 3 இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு.

தனியார் பள்ளி இயக்ககத்தின் இயக்குநர் பழனிச்சாமி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மாற்றம்.

உஷாராணி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு பணியிட மாற்றம்.

பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தில் இருந்து குப்புசாமி தனியார் பள்ளி இயக்ககத்திற்கு மாற்றம்.
💥 போக்சோ வழக்கு முடித்துவைப்பு!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் மீதான போக்சோ வழக்கு முடித்துவைப்பு.

ஜூனியர் மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் 2023ல் வழக்குப் பதியப்பட்டது. தற்போது மகள் பொய் புகார் அளித்துவிட்டதாக தந்தையே வாக்குமூலம் அளித்துள்ளதாக டெல்லி போலீசார் அளித்த அறிக்கையை ஏற்று, வழக்கை முடித்துவைத்தது டெல்லி நீதிமன்றம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பு அறிமுகம்.

வானிலை தகவலை துல்லியமாக கணிக்கும் புதிய வானிலை அமைப்பை இந்திய வானிலை மையம் அறிமுகம் செய்தது.

தற்போதைய வானிலை அமைப்பால் 12 கிமீ கட்ட அளவுக்கே துல்லியமாக கணிக்க இயலும்.

புதிய வானிலை அமைப்பு மூலம் 6 கி.மீ. க்கு 6 கி.மீ. கட்ட அளவில் வானிலை தகவல்களை கணிக்க முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஓடு ஓடு....

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - மக்கள் அச்சம்.

திருப்பதி மலை பாதையில் சாலையோர தடுப்பு சுவரின் மீது ஏறி ஓடிய சிறுத்தை.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு; ஒரு கிராம் தங்கம் ரூ.8995க்கு விற்பனை ஆகிறது.
"முகக்கவசம் கட்டாயம் இல்லை”

தற்போதைக்கு முகக்கவசம் கட்டாயம் இல்லை; கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கைகளை மத்திய அரசு செய்துள்ளது.

கொரோனா பரவலுக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்-மத்திய இணையமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ்.
மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள்- முதல்வர் அடிக்கல்.

மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்களின் கட்டுமானப் பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.

சென்னை, பழனி, நெல்லை ஆகிய இடங்களில் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் கட்ட அடிக்கல்.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.22.62 கோடியில் கட்டுமானப் பணிக்கு முதல்வர் அடிக்கல்.
கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்ப பதிவு இன்றுடன் நிறைவு.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 7ம் தேதி தொடங்கப்பட்டது.

www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்ப பதிவு தொடங்கிய நாள் முதலே ஆயிரகணக்கான மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

நேற்று மாலை நிலவரப்படி 2 லட்சத்து 15 ஆயிரத்து 809 பேர் விண்ணப்பபதிவும், அவர்களில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளனர்.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல்கள் தெரிவித்துள்ளனர்.