Seithikathir - Tamil News
14.1K subscribers
170 photos
49 videos
775 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
மைசூர் 'பாக்’ மைசூர் ‘ஸ்ரீ’

ஜெய்ப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றம்!
💥 செய்திகள் சில வரிகளில்...

1. பிரேசில், அர்ஜென்டினா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.

2. அகமாதாபாத் - மும்பை இடையிலான புல்லட் ரயிலுக்கான 300 கிலோமீட்டர் தூரத்திற்கான ரயில்வே மேம்பால பாதை கட்டுமானபணி முடிவடைந்தது.

3. அடுத்த 5 வருடங்களில் 50 விமான நிலையங்களை அமைக்க திட்டமிடுகிறது இந்திய அரசு.

4. மற்ற நாட்டு கப்பல்களை சார்ந்து இருப்பதை தவிர்க்க, 85,000 கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளது இந்தியா.

5. இந்தியாவில் உள்ள மொத்த வாகனங்களில் 52 % வாகனங்களுக்கு தான் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அருண்ராஜ் ராஜினாமா ஏற்பு.

தவெக தலைவர் விஜயின் ஆலோசகராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் தனது வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது ராஜினாமாவை ஏற்றது மத்திய நிதியமைச்சகம்.

அரசு பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜூக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு என தகவல்.
சென்னையில் விமானங்கள் தரையிறங்காமல் வட்டமடிப்பு.

சென்னையில் இடியுடன் மழை பெய்யும் நிலையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு மோசமான வானிலையால் -திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானம் வானிலேயே வட்டமடித்து வருகிறது.

சிங்கப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், விஜயவாடாவில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் தவிப்பு.
சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நரேஷ்குமாரை போலீசசார் சுட்டுப் பிடித்தனர்.

கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் எஸ்ஐ விஜயராகவன் காவலர் செல்வகுமார் பலத்த காயம் ஏற்பட்டது.
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை.
இன்றே கடைசி நாள்….

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 24) கடைசி நாள்.

வி.ஏ.ஓ., வனக் காப்பாளர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான இத்தேர்வு ஜூலை 12ல் நடக்கவுள்ளது.

www.tnpsc.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.

10ஆவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கில் மாநிலங்களின் பங்கு குறித்து ஆலோசனை.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் முதல்முறையாக நிதி ஆயோக் கூடுவதால் கவனம் பெறுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் ரூ.8990க்கு விற்பனையாகிறது.
தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியது.

கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கேரளாவில் தொடங்கி நாடு முழுவதிலும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவக்கூடும்.

நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமங்களில் சொத்துவரி உயர்வு - ஈபிஎஸ் கண்டனம்.

கிராமங்களில் உள்ள ஒலைக் குடிசை, ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகளுக்கும் சொத்துவரி உயர்வு.

அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அரசுக்கு கண்டனம்.

கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை கண்டிக்கிறேன்.

கிராமப் பகுதிகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Seithikathir - Tamil News pinned «🔴 வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்! WATCH NOW: https://youtu.be/ra9T_IsDJCo ராணுவத்தால் கைதாகும் முகமது யூனுஸ்? - பரபரப்பு»
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்; துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு:

சுப்மன் கில் (C)

ரிஷப் பண்ட் (VC & WK)

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

கே.எல்.ராகுல்

சாய் சுதர்சன்

அபிமன்யூ ஈஸ்வரன்

கருண் நாயர்

நிதிஷ் குமார் ரெட்டி

ரவீந்திர ஜடேஜா

துருவ் ஜூரெல் (WK)

வாஷிங்டன் சுந்தர்

ஷர்துல் தாக்கூர்

ஜஸ்பிரித் பும்ரா

முகமது சிராஜ்

பிரசித் கிருஷ்ணா

குல்தீப்

அர்ஷ்தீப்

ஆகாஷ் தீப்
💥 “கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும்”

ஒருதலைப்பட்சமான நிபந்தனைகளை வலியுறுத்தாமல் SSA திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தாமதமின்றி விடுவிக்க வேண்டும்.

PM SHRI திட்டத்தில் கையெழுத்து போடாததால் நிதியை நிறுத்தி வைத்ததை சுட்டிக் காட்டி, நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 8 ஆண்டுகளுக்கு பிறகு, இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்புகிறார் கருண் நாயர்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு.

உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பைக்கு எதிராக 40 பந்துகளில் 89 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியிருந்தார் DC வீரர் கருண்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 ஆச்சரியமூட்டிய இந்திய ஆயுதங்கள்!

ஆபரேஷன் சிந்தூர் என்னவோ முடிஞ்சிடிச்சு. ஆனால் அது ஏற்படுத்திய தாக்கங்கள் உலகில் மூலை முடுக்குகளில் ஆயுத வல்லுனர்களாலும், விற்பன்னர்களாலும் சுவாரசியத்தோடு விவாதிக்கப்படுகிறது. அதில் ஒன்று பற்றி இங்கே பார்க்கலாம்.

நமது போர் விமானத்திலிருந்து ஆயுதங்களை வீச பல யுக்திகள் உண்டு. பெரும்பாலும் அவை எஞ்சின்களை கொண்டு வேகமாக இயங்கக் கூடியவையாகவும், குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியதாக மிஸைல்களாக இருக்கும். ஆனால் அதற்கான செலவுகள் மிக அதிகம் என்பதால் செலவு குறைவான ஏவுகணைகள் பயன்படுத்துவதும் உண்டு.

அப்படிப்பட்ட ஒரு ஏவுகணை கிளைடர் ரக ஏவுகணை. அது நாம் பேப்பரில் ஏரோப்ளேன் செய்துவிட்டால் ஈர்ர்ப்பு விசையாலும், காற்றிற்கு ஏற்பவும் பறந்து சென்று இலக்கை தாக்கக்கூடியவை. அதற்கு எந்த பவரும் இல்லததால், அதன் இலக்கு துல்லியமாக இருக்காது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆனால் இதில் உள்ள சூட்சுமங்கள் என்னவென்றால் அதற்கு எந்த எஞ்சினும் இல்லாததால் அது ரேடார்களால் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இதை பரவலாக பயனப்டுத்துகிறார்கள். குறிப்பாக ஒரு பெரிய ராணுவ கண்டோன்மெண்ட் மீது எங்காவது ஒரு இடத்தில் தாக்க வேண்டும் என்றால் இது ஒரு நல்ல, விலை குறைவான தாக்குதல் யுக்தி!

அப்படியொரு கிளைடர் வகை ஏவுகணையை இந்தியா சிறு
மாற்றம் செய்து பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தி சோதனை செய்ததை பரபரப்பாக உலகம் முழுவதும் பேசுகிறார்கள். குறிப்பாக தீவிரவாதிகளின் மறைவிடங்களை தாக்க பயன்படுத்தி இருக்கிறார்கள்.

அட சூப்பர் ஐடியாவா இருக்குதே இது நமக்கு தோணலையே என்று வல்லரசுகள் கூட விவாதிக்கிறார்கள். அப்படி என்னதான் அதில் சிறப்பு உள்ளது?

ஏற்கனவே நாம் சொன்னதுபோல காற்றின் திசைக்கும், அதன் வேத்துக்கும் ஏற்ப அதன் இலக்கு மாறலாம். அதில் ஒரு பேட்டரியும் சின்ன மோட்டாரும் வைத்து அதன் திசையை துல்லியமாக்கி இருக்கிறார்கள். அதனால் அதன் அக்யூரசியில் மிகப்பெரிய மேம்பாடு கண்டுள்ளது.

இதை ஒரு ஓய்வுபெற்ற ஏர்ஃபோர்ஸ் எக்ஸ்-சர்வீஸ் மேன், ஒரு இந்திய ஸ்டார்ட்டப் நிறுவனத்துடன் சேர்ந்து இதை உறுவாக்கி இருகிறார். அதில் இருக்கும் எரிபொருல் பயன்படுதாமல் பேட்டரியால் 🔋 இயக்கப்படும் மோட்டார் பயன்படுத்தப்படுவதால், அதன் சிக்னேச்சர் ரேடாரில் சிக்கவில்லை!

இதைப்பார்த்து அமெரிக்க வல்லுனர் ஒருவர் சொன்ன கமெண்ட், இந்தியர்களின் ஃப்ரெஸ் ப்ரைனோடு, ப்ரைன் ட்ரெய்ன் ஆன அமெரிக்காவால் வருங்காலத்தில் போட்டி போட முடியுமா என்பது கேள்விக்குறியாகி விட்டது என்பதுதான்!

அதற்கு காரணம் எங்கே ஏழ்மை இருக்கிறதோ, அங்கே சாதிக்க வேண்டும் என்ற தீ அவர்களுக்குள் இருக்கும். இன்று அமெரிககவில் இருக்கும் எந்த முக்கிய கண்டு பிடிப்புகளிலும் ஒரு இந்தியன் அல்லது ஏழை நாடுகளில் இருந்து வந்த ஒருவரின் ஈடுபாடு இருப்பதும், அவருடைய ஆரம்ப காலத்தில் அடிப்படை தேவைகள் கூட பெற முடியாத வறுமை இருந்ததும் அதற்கான வேட்கையின் ஆரம்பபுள்ளி!

அமெரிக்காவில் அந்த அடிப்படை தேவைகளுக்கான பிரச்சினை இல்லை என்பதால் அங்கே Brain Drain ஏற்பட்டுவிட்டது. அதானால்தான் அவர்கள் ஏழை நாட்டில் இருந்து அறிவாளிகளை அங்கே இருக்கும் பணத்தையும், மேம்பட்ட வாழ்க்கையையும் தூண்டிலாக்கி கொத்தி செல்கிறார்கள்.

அங்கே எல்லாம் போக வேண்டாம், பள்ளிகளில் டாப் மார்க் வாங்கும் குழந்தைகள் யாரென்று பாருங்கள் புரியும்! ஆட்டோக்காரர் மகள், கூலி வேலை செய்பவரின் மகன் என்று பார்க்கமுடியும்!

எனவே எந்த நாட்டில் வறுமை இருக்கிறதோ அங்கே அறிவும் புதையலாய் மறைந்திருக்கிறது.

இதுபோல பல அரிய கண்டுபிடிப்புகள் இந்த போரில் வெளிவந்துள்ளது. வெளிவராத ஒரு விஷயம், ஐந்தாம் தலைமுறை விமானத்தை கண்டுபிடிக்கும் ரேடார் ஒன்றை இந்தியா உறுவாக்கியுள்ளது. அப்போ அத வெச்சுக்கிட்டு படம்.
காட்டிய வல்லரசுகளின் கதி?

ஒவ்வொன்றாக பார்ப்போம். இதுபோன்ற கண்டுபிடிப்புகள் குழந்தைகளுக்கான ஒரு தூண்டலாக அமையும் என்பதால் அவர்கள் அறியச்செய்யுங்கள்!

நன்றி: தெய்வசிகாமணி
நிதி ஆயோக் கூட்டத்தில் வைத்த கோரிக்கைகள் என்ன?-முதல்வர்.

தமிழ்நாட்டுக்கு என்ன தேவை என்பதை பட்டியலிட்டு பேசினேன்.

தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி நிலுவை குறித்து பேசினேன்.

கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்கள், விமான நிலையங்கள் விரிவாக்கம் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மெட்ரோவிடம் ஒப்படைக்க கோரிக்கை வைத்தோம்.

செங்கல்பட்டு - திண்டிவனம் சாலையை எட்டுவழி சாலையாக மாற்ற வலியுறுத்தினேன்.

கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கோரிக்கை வைத்தோம்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்க கோரினோம்-நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பேட்டி.
4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்று: பணிகளுக்கு அனுமதி

சென்னை மெரினா கடற்கரை, கடலூர் வெள்ளி கடற்கரை, நாகை காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைகளில் நீலக்கொடி சான்றிதழுக்கான பணிகளை மேற்கொள்ள அனுமதி

ரூ.18 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி