Seithikathir - Tamil News
14.1K subscribers
165 photos
49 videos
755 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுளதை அடுத்து, முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் பேரிடர் மேலாண்மை துறை ஆலோசனை.

தீயணைப்புதுறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.

ஊட்டி, வால்பாறைக்கு தலா ஒரு தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு.

கோவை, நீலகிரிக்கு 3 மாநில பேரிடர் மீட்பு படை அனுப்பி வைப்பு.

கண்காணிப்பு அலுவலர்களான மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு செல்ல உத்தரவு.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தாண்டு பங்கேற்கிறார்.

அதன்படி, நாளை டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

டெல்லி சென்றடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்து பேசினார்.
புதிய கல்விக் கொள்கை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் தமிழ்நாடு அரசுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.

ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என்பது மத்திய அரசின் பெரியண்ணன் மனப்பான்மை காட்டுகிறது - தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பின்தங்கிய மாணவர்களுக்கான 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்கக் கோரி மனு.
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இன்று பயன்பாட்டுக்கு வந்த 23 அதிநவீன குளிர்சாதன பேருந்துகள் - போக்குவரத்துத்துறை.
💥 பிரதமரை தனியே சந்திக்க நேரம் கேட்ட முதலமைச்சர்

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை தனியே சந்திக்க நேரம் கேட்டுள்ளார்

நாளை (மே.23) நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவேளையின் போது பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் முதலமைச்சர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 "IT ஊழியர்களே உஷார்! இனி அதிக சம்பளம் வாங்குவது RISK!"

இனி அதிக சம்பளம் வாங்குவதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்; உங்கள் வேலையை AI பறிக்கலாம்; AI இப்போது Code எழுதுகிறது, Deploy செய்கிறது, Debug செய்கிறது, அனைத்தும் முன்பை விட வேகமாகவும் சிறப்பாகவும் AI மூலம் செய்யப்படுகிறது; இது பயமுறுத்தல் அல்ல, ஒரு விழிப்புணர்வு! - ஸ்ரீதர் வேம்பு, தொழிலதிபர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
மைசூர் 'பாக்’ மைசூர் ‘ஸ்ரீ’

ஜெய்ப்பூர்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்கள் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என மாற்றம்!
💥 செய்திகள் சில வரிகளில்...

1. பிரேசில், அர்ஜென்டினா, சவுதி அரேபியா போன்ற நாடுகள் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.

2. அகமாதாபாத் - மும்பை இடையிலான புல்லட் ரயிலுக்கான 300 கிலோமீட்டர் தூரத்திற்கான ரயில்வே மேம்பால பாதை கட்டுமானபணி முடிவடைந்தது.

3. அடுத்த 5 வருடங்களில் 50 விமான நிலையங்களை அமைக்க திட்டமிடுகிறது இந்திய அரசு.

4. மற்ற நாட்டு கப்பல்களை சார்ந்து இருப்பதை தவிர்க்க, 85,000 கோடி மதிப்பில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களை சொந்தமாக வாங்க முடிவு செய்துள்ளது இந்தியா.

5. இந்தியாவில் உள்ள மொத்த வாகனங்களில் 52 % வாகனங்களுக்கு தான் காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் அருண்ராஜ் ராஜினாமா ஏற்பு.

தவெக தலைவர் விஜயின் ஆலோசகராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் தனது வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவரது ராஜினாமாவை ஏற்றது மத்திய நிதியமைச்சகம்.

அரசு பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜூக்கு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு என தகவல்.
சென்னையில் விமானங்கள் தரையிறங்காமல் வட்டமடிப்பு.

சென்னையில் இடியுடன் மழை பெய்யும் நிலையில் விமானங்கள் தரையிறங்க முடியாமல் தவிப்பு மோசமான வானிலையால் -திருச்சியில் இருந்து சென்னை வந்த விமானம் வானிலேயே வட்டமடித்து வருகிறது.

சிங்கப்பூர், அகமதாபாத், புவனேஸ்வர், விஜயவாடாவில் இருந்து வந்த விமானங்களும் தரையிறங்க முடியாமல் தவிப்பு.
சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

சங்ககிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் நரேஷ்குமாரை போலீசசார் சுட்டுப் பிடித்தனர்.

கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் எஸ்ஐ விஜயராகவன் காவலர் செல்வகுமார் பலத்த காயம் ஏற்பட்டது.
குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.

தென்காசி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு இல்லாதபோதிலும், மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக் கருதி நடவடிக்கை.
இன்றே கடைசி நாள்….

TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (மே 24) கடைசி நாள்.

வி.ஏ.ஓ., வனக் காப்பாளர் உள்ளிட்ட 3,935 காலிப் பணியிடங்களுக்கான இத்தேர்வு ஜூலை 12ல் நடக்கவுள்ளது.

www.tnpsc.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இன்று பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.

10ஆவது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.

2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் இலக்கில் மாநிலங்களின் பங்கு குறித்து ஆலோசனை.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் முதல்முறையாக நிதி ஆயோக் கூடுவதால் கவனம் பெறுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கம் ரூ.8990க்கு விற்பனையாகிறது.
தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியது.

கேரளாவில் 8 நாட்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.

கேரளாவில் தொடங்கி நாடு முழுவதிலும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவக்கூடும்.

நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமங்களில் சொத்துவரி உயர்வு - ஈபிஎஸ் கண்டனம்.

கிராமங்களில் உள்ள ஒலைக் குடிசை, ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் வீடுகளுக்கும் சொத்துவரி உயர்வு.

அனைத்து வீடுகளுக்கும் பல மடங்கு சொத்து வரியை உயர்த்தியுள்ள அரசுக்கு கண்டனம்.

கிராமங்களில் வீட்டு வரி, தண்ணீர் வரிகளை உயர்த்தி இருப்பதை கண்டிக்கிறேன்.

கிராமப் பகுதிகளில் உயர்த்தப்பட்ட வீட்டு வரிகளை திரும்பப் பெற வேண்டும் - அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
Seithikathir - Tamil News pinned «🔴 வங்கதேசத்தில் மீண்டும் அரசியல் குழப்பம்! WATCH NOW: https://youtu.be/ra9T_IsDJCo ராணுவத்தால் கைதாகும் முகமது யூனுஸ்? - பரபரப்பு»
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக சுப்மன் கில் நியமனம்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம்; துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.