Seithikathir - Tamil News
14.1K subscribers
179 photos
49 videos
807 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.

காவேரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நேற்று மாலை 5000 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 8 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
மதுரையில் சுவர் இடிந்து மூவர் உயிரிழப்பு.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழப்பு.

வலையன்குளம் கிராமத்தில் வீட்டின் வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்தது.

வெங்கட்டி என்ற பெண்(55), வீரமணி(10), வீரமணியின் பாட்டி அம்மா பிள்ளை(65) ஆகியோர் உயிரிழப்பு.

வீட்டின் சுவரில் பாதிப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்திருப்பது தெரியவந்துள்ளது.
3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாமென அறிவுறுத்தல்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கே.ஆர்.பி அணையின் நீர்வரத்து அதிகரிப்பு.
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து படிப்படியாக உயர்வு.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிப்பு.

ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையில்லை.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.69,610க்கு விற்பனையாகிறது.
இன்றைய புத்தக மொழி
20/05/25
📚📚📚🌹📚📚📚

மனிதனின் குற்றங்களில்
பெரும்பாலானவை அவனது
நாவிலிருந்துதான் பிறக்கின்றன.

- நபிகள் நாயகம் -

📚📚📚🌹📚📚📚
பெங்களூருவில் மீண்டும் மழை - இயல்பு வாழ்க்கை முடக்கம்.

கர்நாடகா: பெங்களூருவில் மீண்டும் மழை பெய்து வரும் நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்.

ஏற்கெனவே பெய்த மழையால் பெங்களூரு சாலைகளில் நீர் தேங்கி இருக்கும் நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
கோயில் திருவிழா - இளைஞருக்கு நேர்ந்த சோகம்.

மதுராந்தகம்: திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டத்தின்போது, உயர் மின்னழுத்த கம்பியில் தேர் உரசியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ராம்குமார் (24) என்பவர் உயிரிழப்பு. 5 பேர் படுகாயம்.

இந்த விபத்தில் தேர் முழுவதும் தீயில் எரிந்து நாசம்; விபத்து குறித்து போலீசார் விசாரணை.
காரைக்கால்-பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்.

காரைக்கால்-பேரளம் இடையேயான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.

காரைக்கால் - பேரளம் இடையிலான 23 கி.மீ.தூரம் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று சோதனை ஓட்டம்.

அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் நிலையில் ரயில் பாதையில் இருந்து மக்கள் விலகி இருக்க அறிவுரை.
கல்லூரி கட்டடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

அரசு கல்லூரிகளில் ரூ.120 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, ஆய்வகக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.

ரூ.207.82 கோடியில் உயர்கல்வித் துறை சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
"சிவில் நீதிபதியாக 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி கட்டாயம்"- உச்சநீதிமன்றம்.

சிவில் நீதிபதிகள் தேர்வுக்கு ஆஜராக குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு.

இந்த தீர்ப்பு ஏற்கனவே தொடங்கி தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது.

அடுத்த முறை தொடங்கப்படும் நியமன நடைமுறையில் இருந்து இந்த தீர்ப்பு பொருந்தும் - உச்சநீதிமன்றம்.
🪙 தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்:

தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.

அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.

தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.

வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.

தனிநபர் ஒரு கிலோ தங்கம் வரையில் மட்டுமே அடமானம் வைக்க முடியும்.

அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.

கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.

அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும்.

தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 BREAKING மின் கட்டணம் உயர்வில்லை!

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் தற்போது இல்லை. அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் - மின்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை.

கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார் - அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
கல்குவாரியில் விபத்து - 5 பேர் உயிரிழப்பு.

சிங்கம்புணரி அருகே கல்குவாரியில்
நிகழ்ந்த விபத்தில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழப்பு.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் இருவருக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
Seithikathir - Tamil News pinned «🔴 உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உயிருக்கு ஆபத்து? WATCH NOW: https://youtu.be/imtmbPr9H-s?si=bhuSL0VHoJrN_36V ட்ரம்ப் பேச்சை புடின் கண்டு கொள்ளவில்லையா? ***»
அரசுப் பேருந்தில் ஊர் திரும்பிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

சென்னையில் நேற்று தனது வழக்கமான அலுவல்களை முடித்துக் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைப் பேருந்து மூலம் ஊர் திரும்பியுள்ளார் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்.

முதலில் பயணிகளிடம் பேருந்து சேவையில் ஏதும் குறைபாடு உள்ளதா? எனக் கேட்டறிந்தவர், பின்னர் ஓட்டுநரின் இருக்கைக்கு பின்னுள்ள இருக்கையில் அமர்ந்துபடியே தனது பயணத்தை தொடர்ந்துள்ளார்.

மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அவர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
குறள் எண் : ௨௪௬(246)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை

குறள் :
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.


உரை :
அருள் இல்லாமல் தீமைகளைச் செய்து வாழ்பவர்களே, உறுதிப் பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர்.

English :
(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௭)
தமிழ் வாழ்க
இன்றைய புத்தக மொழி
21/05/25
📚📚📚🌹📚📚📚

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி
இல்லாவிட்டால் வாழ்க்கை
சுமக்க முடியாத பெரிய
சுமையாகிவிடும்.

- பெர்னார்ட்ஷா -

📚📚📚🌹📚📚📚