Seithikathir - Tamil News
14.1K subscribers
169 photos
49 videos
775 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
🚨 இந்தியா-அமெரிக்கா ஸ்டேட்டர்ஜிக் எதிரிகளாக மாறுகிறதா?

உக்ரைன் போர் வந்தபோது உலக நாடுகளின் சமன்பாடுகள் பெருமளவில் மாறியது. அந்த போரின் நோக்கம் ஒரே கல்லுல பல மாங்காய்கள் என்று திட்டமிட்டது டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்கா. ஆரம்பத்தில் அதன் திட்டங்கள் பெருமளவில் திட்டமிட்டபடியே நடந்தது.

1) ரஷ்யாவை நீண்டகால போரில் சிக்கவைப்பது. போரின் மூலம் அதன் பொருளாதாரத்தை சிதைத்து, நாட்டை மேலும் பல சிறு நாடுகளா உடைப்பது என்பது அதன் நோக்கம். அதற்காக

அ) ஐரோப்பா எரிபொருளுக்காக ரஷ்யாவை சார்ந்திருந்தது, அதன் மறுபக்கம் ரஷ்யா ஐரோப்பாவின் வருமானதை நம்பி இருந்தது.

ஆ) ரஷ்யாவின் டெபாஸிட்டுகளை அமெரிக்காவில் முடக்கியது. அதே சமயம் அதன் டெபாஸிட்டுகளையும், டாலர் வர்த்தகத்தையும் தடைவிதித்தது.

2) ஐரோப்பாவின் எரிபொருள் தேவை ரஷ்யாவிற்கு மாறாக மற்ற நாடுகளை நாட வேண்டி வந்ததால் கச்சா எண்ணெய் விலை கண்டமேனிக்கு எகிரும். அது ஐரோப்பாவின் பொருளாதாரத்தை பாதிப்பதால் அமெரிக்க டாலருக்கு மாற்றாக இருந்த யூரோவின் € வீழ்ச்சி, டாலரை $ ஒரே உலக கரன்சியாக வைத்திருக்க உதவும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

3) எல்லா உலக நாடுகளுக்கும் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, ஏற்படும் பண வீக்கத்தால் டாலருக்கு மிகப்பெரிய டிமாண்ட் வளரும். அதனால் அது இஷ்டத்திற்கு டாலரை பிரிண்ட் செய்து கொள்ளலாம். அதன் எல்லைமீறிய கடனுக்கு அது ஒரு தற்காலிக தீர்வாகும்.

4) அமெரிக்காவின் பழைய ஆயுதங்களை உக்ரைனின் தலையில் கட்டி, மேலும் ஆயுத விற்பனையை பல மடங்கு உயர்த்தி, உக்ரைனை கடனாளியாக்கி, அடிமையாக்கி, அவனை வைத்து ரஷ்யாவை வீழ்த்துவது.

இப்படி டிஸைன் டிஸைனா திட்டமிட்ட அமெரிக்காவின் கனவு, இந்தியா, சீனா மற்ற சில நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணேய் வாங்கியதால் நசுங்கி நாசமாகிப்போனது. அது நினைத்த க்ரூட் ஆயில் விலை ஏறவில்லை. ஆனால் யூரோ யூனியன் பெரிய பொருளாதார பெரும் நாசத்தை சந்தித்தது.

மேலும் BRICS நாடுகள் இணைந்து கொண்டுவர முயன்ற டாலருக்கு மாற்றான உலக நாணயம், அமெரிக்க டாலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிட்டது.
அதன் முடிவில் ரஷ்யாவிற்கு விரித்ய வலையில் மாட்டி, அமெரிக்கா பெரிய பொருளாதார பிரச்சினையையும், கடனையும் சந்திக்க வேண்டியதாகிவிட்டது.

அதன் பின் ட்ரம்ப் வந்து டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவை உடைக்க, அமெரிக்க, ரஷ்ய உறவு முன்னேறியது ஆனால் அதன் உறவு யூரோ, சீனா உற்பட பல நாடுகளுடனும், கனடா, மெக்ஸிகோ போன்ற அண்டை நாட்டுடனும் மோசமாகியது. அதன் டாரிஃப் வார் உலக நாடுகளுடன் பெரிய உரசலை செய்தாலும் அதற்கு பொருளாதார ரீதியில் ஒரு நல்வாய்ப்பையே கொடுத்தது.

இஸ்ரேலின் தீவிராவாதத்துக்கு எதிரான போரினால் சமன்பாடுகளில் ஒன்றும் பெரிய மாற்றம் இல்லை.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்த நிலையில் அமெரிக்கா இந்தியாவை ஒரு ஸ்டேட்டர்ஜிக் பார்ட்னராக பார்த்தது. அதற்கு முக்கிய காரணம் சீனா தன்னை அடுத்த வல்லரசாக்க நினைக்க ஆரம்பித்ததால், அதை கட்டுப்படுத்த இந்தியாவின் உதவி மிக அவசியம் என்பதால்.

அதுமட்டுமல்ல அமெரிக்க, ரஷ்ய உறவில் இருந்த பெரிய விரிசலை. உரசலை ஓரளவு தீர்மானிக்க உதவியது. BRICS கரன்ஸி சீனாவின் யுவானை டாலருக்கு மாற்றாக கொண்டுவருவதை தடுத்ததால், அதற்கு இந்தியாவின் உதவி பெருமளவில் உதவியது.

இந்த நிலையில் இந்திய - பாகிஸ்தான் போர் அமெரிக்காவின் ஸ்டேட்டர்ஜிக் பாட்னர்ஷிப் மற்றும் உலக நாடுகளுக்கு இடையே ஒரு புதிய அத்தியாயத்தை தோற்றுவிக்கலாம். மாற்று அணியை இது உருவாக்கலாம். அதற்கு காரணமென்ன என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்!

1) இந்தியாவிற்கு பாகிஸ்தான் என்றுமே ஒரு தொண்டையில் சிக்கிய முள்ளாகி, அதன் வளர்ச்சியை, முன்னேற்றத்தை தடுக்க உதவும் என்பதால். ஏனெனில் சீனாவிற்கு அடுத்ததாக நீண்டகால எதிரியாக மாறும் வாய்ப்பு அதிகம் இந்தியா இருப்பது அதற்கு காரணம். பாகிஸ்தானை இந்த போரில் பஸ்பமாக்கிய பின்னர், இந்தியாவின் நீண்டகால பெரிய முட்டுக்கட்டை முடிவுக்கு வந்தது.

2) பாகிஸ்தான் போரில் சீனாவின் ஆயுதங்கள் முதன் முதலாக நேரடி போரில் பரிசோதிக்கப்பட்டு. அது வழக்கத்தைவிட மோசமான டுபாக்கூர் என்றாகிவிட்டது. இந்தியா அதன் HQ-9, Ly-80, HQ-16, PL-15 என்று அதிமுக்கிய ஆயுதங்களை அர்த்தமற்றதாகிவிட்டது. அதனால் இப்போது பலவீனமான சீனாவை அமெரிக்காவாலே ஈஸியாக சமாளிக்க முடியும் என்பது உறுதியாகிவிட்டது எனும்போது இந்தியாவின் தேவை இப்போது அவசியமற்றதாகிவிட்டது.

3) மாறாக இந்தியாவின் ஆயுத வலிமை உலகதரத்தில், பல விஷயங்களில் வல்லரசு நாடுகளுக்கு இணையாகவும், சில விஷயங்களில் அமெரிக்காவின் ஆதிக்கத்தையும், பாதுகாப்பையும் தகர்க்கக்கூடியதாகிவிட்டது.
குறிப்பாக அதன் வான் பாதுகாப்பு சிஸ்டம், அதன் உலகத்தரம் வாய்ந்த ஏவுகணைகள். ஆம், அதை பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்காவின் மிக பாதுகாப்பான அணு ஆயுத கிடங்கை தாக்கி அழித்தது என்றால், அதனால் அக்னியை வைத்து அதே செயலை அமெரிக்காவிலும் செய்ய முடியும் என்பதால் இப்போது அடுத்த வல்லரசுக்கான நாடு சீனாவல்ல இந்தியாவே.

4) இந்தியா ரஷ்யா, இஸ்ரேல், ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் என்று பல நாடுகளுடனும், ஆஃப்ரிக்க உலக நாடுகளின் நம்பிக்கையையும் இந்தியா பெற்றுவிட்டது. அதனால் முன்பு போல அதை தனிமைப்படுத்துவது அவ்வளவு எளிதில் முடியாது.

5) இந்தியாவின் ஆயுதங்களான பிரம்மோஸ், ஆகாஷ், இஸ்ரேலுடன் கூட்டு சேர்ந்து தயாரித்த பராக்-8 வான் பாதுகாப்பு, உலக தரம் வாய்ந்த ட்ரோன்கள், ரஷ்யாவின் S-400, அதன் வலிமையான கப்பற்படை, நீர்மூழ்கி கப்பல்கள், அண்ஜ் ஆயுத டிட்டரென்ஸ் என்று எல்லாமே டாப் கியரில் நிரூபித்துள்ளதால், இனிமேல் உலக நாடுகள் தங்கள் ஆயுதங்களுக்கு அமெரிக்காவை, சந்தி சிரித்த சீனாவை, டுமீல் டுருக்கியையும் மற்ற நாடுகளையும் சார்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.

மேலும் அதன் தேஜஸ் ரகபோர் விமானங்கள் அதன் போர் விமானங்களின் ஆதிக்கத்தையும் இன்னும் ஐந்தாண்டுகளில் கைப்பற்ற தொடங்கலாம். அது அடுத்த விமானந்தாங்கி கப்பலை கட்ட ஆரம்பித்துள்ளது. அடுத்து மற்ற நாடுகளுக்கும் கட்டித்தர சம்மதம் தெரிவித்துள்ளது.

இவையெல்லாம் 100 ஆண்டுகால அமெரிக்காவின் ஆயுத டாமினன்ஸை வெகுவாக வீழ்த்த வாய்ப்புள்ளது.

6) இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கைப்பிடியில் இருந்த மருத்துவ மாஃபியாக்களின் ஆதிக்கத்தை கோவிட்டின்போது வீழ்த்திவிட்டது. அதுமட்டுமல்ல, அதற்கு இருந்த ட்ரில்லியன் டாலர் பிஸினஸை தடுப்பூசியை தயாரித்து, ஏழை நாடுகளுக்கு இலவசமாக கொடுத்து, அதன் வாயில் மண் அள்ளிப்போட்டுவிட்டது. இன்று இந்தியாவின் டாமினன்ஸ்தன் மருத்துவ உலகில் கொடிகட்டி பறக்கிறது.

7) உலக நாடுகள் தடுமாறும்போது இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதன் கட்டமைப்புகள் பெருமளவில் மேம்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா போன்ற உற்பத்தி சார்ந்த வளர்ச்சியிலும், சர்வீஸ் செக்டாரிலும் அதன் ஆதிக்கம் உலகெங்கும் கொடிகட்டி பறக்கிறது. விவசாய உற்பத்தி, கச்சா எண்ணெய்க்காக சார்ந்திராமல் மிகப்பெரிய கிரீன் என்ர்ஜி உற்பத்தி என்று அது இரு சுயசார்பு நாடாக மாறிவருகிறது.

8) இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. மீதம் இருக்கும் கட்சிகள் குறிப்பாக காங்கிரஸும், திமுகவும், திரிணமுள் காங்கிரஸும் நாட்களை எண்ணிக்கொண்டு, முடிவுக்கு வந்துவிட்டது. அவர்கள் மீது இருக்கும் ஊழல் வழக்குகளை தாண்டி இனிமேல் தப்பிப்பது அபூர்வம்!

9) அதன் மிகப்பெரிய பிரச்சினையான காஷ்மீர், பாகிஸ்தானோடு பஸ்பமாகிவிட்டது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்த பிரச்சினை வேகமான வளர்ச்சி பாதை நோக்கிய மாற்றம் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாகி வருகிறது. ஆங்காங்கே இருந்த ஜாதி பிரச்சினைகள், இன பிரச்சனை எல்லாம் வீழ தொடங்கிவிட்டது. அதைவிட மிக முக்கியமாக மதமாற்றம், தீவிரவாதமும் வீழப்போகிறது.

அதையெல்லாம் வைத்து அசிங்க அரசியல் செய்து ஆடிவந்த அமெரிக்கா, டீஃப் ஸ்டேட் ஆஃப் அமெரிக்காவை வீழ்த்தியபின், இன்று தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக்கொண்டது என்ற நிலைக்கு போய்விட்டது. பற்றாகுறைக்கு, உலகெங்கும் எதிரிகள்.

குறிப்பாக பாகிஸ்தானில் இருந்த அமெரிக்காவின் அணு ஆயுதத்தை தாக்கி அழித்தபின்னர், பெரியண்ணன் மிரள ஆரம்பித்துள்ளது.

அதன் விளைவாக சீனாவும் அதன் ஆயுத பராக்கிரமம் சந்தி சிரித்ததால், அமெரிக்காவோடு சேர்ந்து மீண்டும் தனது சரியும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முயலும். அமெரிக்கா, இப்போது சீனாவை வைத்து, இந்தியாவின் பொருளாதாரத்தையும், எல்லை பிரச்சினையை இந்தியாவிற்கு எதிராக தீண்டலாம்.

ஆனால் அமெரிக்கா பெரியளவில், அல்லது வெளிப்படையாக அதை செய்யாது. அமெரிக்க நிறுவனங்கள் கொடுக்கும் டெக்னாலஜியை தடுக்கலாம் அல்லது தாமதபடுத்தலாம். இப்போது இருக்கும் பொருளாதார மந்த நிலையில் , அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களை, விசா போன்ற வகையில் பிரச்சினையை கொடுத்து வெளியேற்றலாம்.

குறிப்பாக Artificial Intelligence, Automation, Recession எனற மூன்றும் புதிய குடியேறரத்தை தடுத்து, Green Card விஷயத்தில் தாமதம் ஏற்படுத்தி, அவர்களை வெளியேற்ற வாய்ப்புண்டு. ஆம், இனிமேல் நிறைய வேலையாட்களுகு தேவை இருக்காது போகலாம்!

குறிப்பாக IT Field ல் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை சாதகமாக்கிக் கொண்டு, இந்தியர்களை வெளியேற்றி, அமெரிக்கர்களுக்கு வேலை கொடுப்பதன் மூலம், அவர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த வாய்ப்புண்டு. அதை நாம்.தவறென்றுசொல்ல முடியாது.

மேலும் Apple, GE, Boeing, TESLA போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் முதலீடுகளை தடுக்க வாய்ப்புகள் அதிகரிக்கும்.
ஆனால் அமெரிக்காவில் பல முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் இருப்பதால், அவர்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கைகளால், அவர்கள் சேமிப்பையும், அனுபவத்தையும் இந்தியாவிற்கு கொண்டுவந்தால் அது மேலும் அமெரிக்காவிற்கு சிக்கலை கொடுக்கும்.

அவையெல்லாம் ட்ரம்புக்கு இன்னொரு முறை ஜனாதிபதியாகும் (?) வாய்ப்பை தடுக்கலாம், அல்லது.எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எடுக்கும் அவசர முடிவுகள், அவருக்கும், நாட்டுக்கும் எதிராகலாம். அதனால் பண வீக்கம் அதிகரிக்கும். முன்பு போல டாலரை வைத்து வாழ்ந்த வாழ்க்கை கைகொடுக்காது போகலாம்.

ஆனாலும் இந்த பிரச்சினையை இந்தியா ஆயுத ரீதியில் தன்னை மேம்படுத்திக் கொண்டு, பொருளாதார ரீதியில் அதை ஆரோக்கியமான போட்டியாக எதிர்கொள்ளும்.

குறிப்பாக அமெரிக்கா, சீனாவால் பாதிக்கப்பட்ட ஏழை ஆஃப்ரிக்க நாடுகள், ரஷ்யா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் இணைந்த இந்தியா பொருளாதார ரீதியில் அமெரிக்க, சீன கூட்டணியை வலுவாக எதிர்கொள்ளலாம்.
அது அமெரிக்க ஆதிக்கத்தை குறைக்கும், வீழ்த்தினாலும் ஆச்சரியமில்லை!

எனவே இந்திய-பாகிஸ்தான் போர் உலக நாடுகளின் ஈகுவேஷனை மாற்றிய ஒரு டார்னிங் பாய்ண்டாக இருக்கலாம்!

நடப்பவை எல்லாம் நல்லதற்கே!

பதிவு: 🐶 #Indhea
🔴 JUST IN: 2026 தேர்தலில் தனித்தே களம் காண்போம் - கோவையில் நாதக சீமான் பேச்சு

கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை.

8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம் - சீமான்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 'நடிகர்கள்' மீது பவன் கல்யாண் பாய்ச்சல்!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அமைதியாக இருந்ததற்காகவும், நாட்டிற்காக ஒரு நிலைப்பாட்டை எடுக்காததற்காகவும், குறிப்பாக பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்களை பவன் கல்யாண் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

அவர்கள் கேமராவுக்காக மட்டுமே நிகழ்ச்சி நடத்துகிறார்கள், நாட்டிற்கு முக்கிய தேவை இருக்கும் போது அதற்கு ஆதரவாக எழுந்து கூட நிற்க மாட்டார்கள் என்று அவர் கூறினார்.

"உண்மையான ஹீரோக்கள் நாட்டைப் பாதுகாக்கும் நமது துணிச்சலான இராணுவ வீரர்கள்" - பவன் கல்யாண்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
குறள் எண் : ௨௪௪(244)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை

குறள் :
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.


உரை :
நிலைத்து வரும் உயிர்களைக் காத்து, அவற்றின் மீது அருள் உள்ளவனுக்குத் தன் உயிரைப் பற்றிய பயம் வராது.

English :
(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௫)
தமிழ் வாழ்க
தமிழகத்தில் வெளுத்து வாவ்கும் கோடை மழை.

தமிழகத்தில் கடந்த 2 மணிநேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் மேட்டூரில் 11.45 செ.மீ., மழை பதிவு.

திருச்சியில் 10 செ.மீ., தஞ்சை - அதிராம்பட்டினத்தில் 9 செ.மீ., கோவையில் 8 செ.மீ., மழை பதிவு; விருத்தாசலத்தில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ., தஞ்சை - ஆடுதுறையில் 5 செ.மீ., மழை பதிவு.
🔴 பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை!

இந்தியாவில் பல தாக்குதல்களில் தொடர்புடையவர்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகம் மீது கடந்த 2006-ஆம் ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் இவர்தான். அதுமட்டுமன்றி, இந்தியாவில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர்.

அபு சைஃபுல்லா காலித், முகமது சலீம், வினோத் குமார் என பல புனைப் பெயர்களில் அழைக்கப்பட்ட இவர், கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் லஷ்கர்-ஏ-தொய்பா நேபாள பிரிவின் தலைவராக செயல்பட்டார். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வந்தது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🏏 இந்தியா, பாகிஸ்தான் இடையான பிரச்சினைகளை மையப்படுத்தி அனைத்து விதமான ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தற்காலிகமாக இந்தியா விலகல்

பெஹல்காம் தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் உடனான எந்த விதமான உறவையும் இந்தியா ஆதரிப்பது இல்லை

பாகிஸ்தான் அணி உடனான கிரிக்கெட் தொடர்களிலும் இந்தியா விளையாடாது என ஏற்கனவே அறிவித்திருந்தது

இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்பு நடத்தும் மகளிர் மற்றும் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்தியா பங்கேற்காது என தகவல்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி அதிருப்தி!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்ற பிறகு பிஆர் கவாய் முதல்முறையாக சொந்த மாநிலமான மஹாராஷ்டிரா வந்தார். மும்பையில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்றார். மஹாராஷ்டிரா மற்றும் கோவா மாநில வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் மாநில தலைமைச் செயலர், டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் வரவில்லை.

இதனைத் தொடர்ந்து, அக்கூட்டத்தில் தலைமை நீதிபதி பேசியதாவது:

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான நீதித்துறை , சட்டம் இயற்றும் மன்றங்கள், நிர்வாகத்துறை ஆகியன சமம். ஒவ்வொரு அமைப்பும் ஒன்றை ஒன்று மதித்து நடக்க வேண்டும். மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவின் தலைமை நீதிபதியாக பதவியேற்று முதன்முறையாக மஹாராஷ்டிராவிற்கு வந்தால், மாநில தலைமைச் செயலர், டிஜிபி, அல்லது மும்பை போலீஸ் கமிஷனர் அங்கு இருப்பது பொருத்தமானது அல்ல என்று அவர்கள் நினைத்தால் அதைப் பற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

நெறிமுறைகள் புதிய ஒன்றல்ல. ஒரு அரசியலமைப்பு மற்றொரு அமைப்புக்கு அளிக்கும் மரியாதையைப் பற்றியது. ஒரு அரசியலமைப்பின் தலைவர் முதல்முறையாக மாநிலத்திற்கு வரும் போது அவர்கள் நடத்தப்படும் விதத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த நெறிமுறைகளை நீதிபதிகளில் ஒருவர் மீறியிருந்தால், அரசியல்சாசனப்பிரிவு 142 பற்றிய விவாதம் எழுந்திருக்கும். இவை சிறிய விஷயங்களாக தோன்றலாம். ஆனால், அது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் நினைவிடத்திற்கு சென்றார். பாராட்டு விழாவில் அதிருப்தி தெரிவித்து பேசியது குறித்து அறிந்த உடன் தலைமைச் செயலர் சுஜாதா சவுனிக், டிஜிபி ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் தேவன் பாரதி ஆகியோர் இங்கு வந்து தலைமை நீதிபதியை சந்தித்தனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து 70,040க்கு விற்பனை.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ.70,040க்கு விற்பனையாகிறது.

கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🔴 சிறப்பு செய்தி: ஆப்கானிஸ்தானில் 'ராமனின் தோட்டம்' இந்தியாவுக்கு கை மாறுகிறதா?

ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய ஏர்பேஸான பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது. 1950 களில் ஆப்கானிஸ்தானின்
நட்பு நாடாக இருந்த சோவியத் யூனியன் தான் பக்ராம் ஏர்பேஸை உருவாக்கி கொடுத்தது.

1989 வரை பக்ராம் ஏர்பேஸ் சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அடுத்து அமெரிக்காவின் கைகளுக்கு மாறியது. 2021 ல் அமெரிக்கா பக்ராம் ஏர்பேஸை விட்டு விலகிய பிறகு தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு வந்து விட்டது.

இப்பொழுது இந்த ஏர்பேஸை மீண்டும் கைப்பற்றி விட அமெரிக்கா துடிக்கிறது. சீனா பக்ராம் ஏர்பேஸை ஆட்டைய போட தலிபான்களை பணத்தினால் குளிப்பாட்டிக்கொண்டு இருக்கிறது.

இப்பொழுது இந்தியாவும் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்றி விட களத்தில் இறங்கி விட்டது. பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா களம் இறங்கியதால் தான் ட்ரம்பிற்கு இந்தியா மீது கோபம் வந்து விட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

இந்தியாவிற்கு பக்ராம் ஏர்பேஸ் மிக முக்கியமானது. ஏன் என்றால் இந்தியா தஜிகிஸ்தானில் பர்கோர் மற்றும் அய்னி என்கிற இரண்டு நகரங்களில் ஏர்பேஸ்களை வைத்து இருக்கிறது. இது முழு அளவில் இந்தியாவின் ராணுவப் பயன்பாட்டுக்காக மட்டுமே இருக்கிறது.

வெளிநாடுகளில் இந்தியாவின் மிலிட்டரி பேஸ் உள்ள மிக முக்கியமான நாடு தஜிகிஸ்தான் தான். தஜிகிஸ்தான் பாகிஸ்தான் இடையே அனுமார் வால் மாதிரி ஆப்கானிஸ்தான் நீண்டு
பாகிஸ்தானையும் தஜிகிஸ்தானையும் பிரித்து இருக்கிறது.

ஆப்கானிஸ்தானின் பக்ராம் ஏர்பேஸ் சீனாவின் கைகளுக்கு சென்று விட்டால் தஜிகிஸ்தானில் உள்ள இந்தியாவின் பர்கோர் மற்றும் அய்னி ஏர்பேஸ்களுக்கு
சிக்கல் உண்டாகி விடும். இந்திய விமானப் படைகள் பாகிஸ்தானை தாக்க விடாமல் சீனா பக்ராமில் இருந்து தடுத்து விடும்.

ஒரு வேளை பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவின் கைகளுக்கு வந்து விட்டால் பாகிஸ்தானின் கதை கந்தல் தான். வடக்கே தஜிகிஸ்தான் ஏர்பேஸ், மேற்கே ஆப்கானிஸ்தான் ஏர்பேஸ்களில் இருந்து இந்திய விமானப்படை
பாகிஸ்தானை அடித்து நொறுக்கி விடும்.

அதனால் பக்ராம் ஏர்பேஸை கைப்பற்ற இந்தியா அனைத்து
வழிகளிலும் முயற்சித்து கொண்டு இருக்கிறது. சோவியத் யூனியன் உருவாக்கி அமெரிக்கா நவீனப்படுத்திய பக்ராம் ஏர்பேஸ் இந்தியாவிற்கு கிடைத்து விட்டால் இந்தியாவும் வல்லரசுகளின் வழியில் பயணப்பட ஆரம்பித்து விடும்.

பக்ராம். இஸ்லாமிய நாட்டில் இந்து பெயர் மாதிரி தெரிகிறதே என்று யோசிக்கிறீர்களா... பக்ராம் என்றால் சமஸ்கிருதத்தில் ராமனின் தோட்டம் என்று பெயராம். அதனால் பக்ராம் இந்தியாவின் தோட்டமாக மாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
காவல்துறை சார்பில் ரூ. 457.14 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 1,118 காவலர் குடியிருப்புகள் மற்றும் ரூ. 211.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலை கட்டடத்திற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

முதலமைச்சர் முன்னிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டைக் கொலை வழக்கில் சிக்கியவர்கள் 6 மாதங்களில் 5 பேரைக் கொன்று நகைகளை கொள்ளையடித்தது அம்பலம்.

ஈரோடு சிவகிரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனங்களையும் நகையையும் பறிமுதல் செய்துள்ளோம். இறந்து போனவரின் செல்போனையும் கைப்பற்றியுள்ளோம்- மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார்
செய்தியாளர்கள் சந்திப்பு.

இந்த வழக்கில் முதல் குற்றவாளி ஐயப்பன் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் அடுத்த 2 பேரை விசாரித்தோம்.

மரக்கட்டையை கொண்டு இவர்கள் தாக்கி கொலை செய்துள்ளனர், கையுறையை பயன்படுத்தி உள்ளனர்.

குற்றம் நடந்த இடத்தில் இருந்த கால் பாத தடங்களை இவர்களின் பாதங்களுடன் ஒப்பீடு செய்துள்ளோம்.

கொள்ளையடித்த நகைகளை ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து அதனை உருக்கி விற்பனை செய்ய முயன்றனர்.

உருக்கப்பட்ட 82 கிராம் நகையை ஆட்சியப்பன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்துள்ளோம்.

நகையை உருக்கி கொடுத்து ஞானசேகரன் என்பவரையும் கைது செய்துள்ளோம்.

பல்லடம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் கூடுதல் தகவல்களுக்காக கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்தப்படும்- ஈரோடு சிவசிரி கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார்.
மழை முன்னெச்சரிக்கை - முதல்வர் ஆலோசனை.

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.

வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமைச் செயலர் முருகானந்தம், வருவாய்த் துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.

மழைக் காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
இரவு முழுவதும் பெய்த கனமழையால் வெள்ளம்.

பெங்களூருவில் நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் சில்க் போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம்.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீரால் மக்கள் கடும் அவதி, சாலைகளில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி.
"உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்"

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.

ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் ஆணை.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் - உச்சநீதிமன்றம்.
"அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி”- இபிஎஸ்.

மேடைதோறும் பொள்ளாச்சி எனக் கூவிய முதல்வர் ஸ்டாலினின் அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி.

அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக சார்களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திமுக குற்றவாளிகள் அடங்கிய கூடாரத்தை பாதுகாக்க முயலும் சார்கள் வெட்கித் தலைகுனியட்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
💥 டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி!

தமிழ்நாட்டை தனி நாடாக அறிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டு,

தமிழக ஆளுநருக்கு அந்த தீர்மானத்தை அனுப்பி வைத்து, தமிழக ஆளுநர் தீர்மானத்தை நிராகரித்து,

இரண்டாவது முறையும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் போட்டு அனுப்பி வைத்து குடியரசு தலைவரிடம் நிலுவையில் இருக்கும் நிலையில்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு தனி நாடாக மாறி விடுமா.?

இந்திய அரசியலமைப்பையே கேலிக் கூத்தாக மாற்றி இருக்கிறது உச்சநீதிமன்ற தீர்ப்பு.!

இந்திய அரசியலமைப்பின் நிர்வாக தலைவரான ஜனாதிபதிக்கு முடிவெடுக்கும் முழு அதிகாரம் உள்ளது.

இந்திய ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தை நோக்கி கேட்ட 14 கேள்விகளும் நியாயமானது.

- டாக்டர் கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம் கட்சி

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29