Seithikathir - Tamil News
14.1K subscribers
163 photos
49 videos
734 links
Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014
Download Telegram
💥 ED ரெய்டு - அதிமுக கேள்வி!

டாஸ்மாக் MD வீட்டின் அருகே கிழிந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் தொடர்பாக முக்கிய விவரங்கள் குறித்த வாட்சப் Chat Screenshots கிடைத்ததாகவும், இவை துணை முதல்வர் உதயநிதியின் நண்பர் ரத்தீஷிடம் பேசியது எனவும் செய்திகள் வருகின்றன.

டாஸ்மாக் நிறுவனத்தின் MD-க்கு Directives கொடுக்க இந்த ரத்தீஷ் யார்?

டாஸ்மாக் ஏலம் வெளிப்படையாக நடந்தால் திமுக நிர்வாகிகளுக்கு பாதிப்பு என்று அதன் MD-யிடம் ரத்தீஷ் கூறுவது, யாருக்கான குரலாக அவர் பேசுகிறார்?

உதயநிதியுடன் டாஸ்மாக் MD எடுத்த புகைப்படத்தை அவருக்கே அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்தவரா இவர்?

டாஸ்மாக்கில் வாங்க வேண்டிய மதுபானங்கள் பட்டியலை அதன் MD-க்கு அனுப்பும் அளவிற்கு அதிகாரம் படைத்த இந்த ரத்தீஷ் தான் திமுகவின் புதிய
Power Center-ஆ?

Logical-ஆக பார்த்தால், ரத்தீஷ் எனும் தனிநபரின் மெசேஜுக்கு Reply பண்ண வேண்டிய அவசியம் டாஸ்மாக் MD-க்கு துளியும் இல்லை.

இவர் துணை முதல்வருக்கு இணை முதல்வராக இருப்பதனாலோ என்னவோ, அனைத்து அதிகாரிகளும் பணிந்தார்களா?

ரத்தீஷை நெருங்கும் ED-யின் விசாரணை வளையம்....
So, Sketch உதயநிதிக்கா?

#யார்_இந்த_தியாகி? எனவும், இந்த தியாகியின் பின்புலத்தில் உள்ள அந்த "சார்" யார்? எனவும் கேள்விகள் எழுகின்றன.

கேள்விகளுக்கான பதிலும், அதற்கான தண்டனைகளும் விரைவில் கிடைக்குமென நம்புவோம்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

ஒரே நேரத்தில் ரூ.450 கோடி பட்ஜெட்டில் திரைப்படங்கள்

சேலத்தை சேர்ந்த பெரும் தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ். தற்போது திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார்

தொழில் அதிபர் பாஸ்கரனின் மகன் ஆகாஷ்க்கு அண்மையில் கெவின்கேர் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகள் தாரணியுடன் திருமணம் நடைபெற்றது

கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் தயாரிப்பாளராக உருவெடுத்ததாக தகவல்

கெவின்கேர் ரங்கநாதன் மகளை திருமணம் செய்த பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களுக்கு பூஜை போட்டுள்ளார் ஆகாஷ்

இட்லி கடை திரைப்படம் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார் ஆகாஷ்

சுதா கொங்காராவின் பராசக்தி படத்தை பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஆகாஷ் தயாரிப்பதாக தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களான சிவகார்த்திகேயன், தனுஷ், சிம்புவை வைத்து ஒரே நேரத்தில் படம் எடுத்து வருகிறார் ஆகாஷ்

பிரபல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடன் ஆகாஷ் பாஸ்கருக்கு நல்ல நட்பு உள்ளதாக தகவல்

ஆகாஷ் பாஸ்கர் - தாரிணி திருமண நிகழ்வில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்

ஒரே நேரத்தில் ரூ.450 கோடி முதல் ரூ.500 கோடி வரை செலவழித்து ஆகாஷ் திரைப்படங்களை எடுத்து வருவதால் ED ரெய்டு

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
🔴 சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.!

அரசியல் அமைப்பு பற்றிய விளக்கங்களை சுப்ரீம் கோர்ட்டிடம் கேட்கும் அதிகாரத்தை அரசியல் சட்டம் ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளது. அதன்படியே அவர் 14 கேள்விகளைக் கேட்டுள்ளார்.

ஜனாதிபதியின் பரிசீலனையில் இருந்த மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்ததாலும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படாத காலக்கெடுவை அவருக்கும் கவர்னருக்கும் சுப்ரீம் கோர்ட் நிர்ணயித்ததாலும், இக்கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியைப் பொறுத்த வரை இது உரிமைப்பிரச்னை.

இதற்கு சுப்ரீம் கோர்ட் பதிலளிப்பதற்கு முன்பாகவே தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.

' சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து முடிந்து போன விவகாரத்தில், ஜனாதிபதியின் மூலமாக மத்திய அரசு விளக்கம் கேட்கிறது. இது அரசியல் அமைப்பையே நிலைகுலைய வைக்கும் செயல். இதிலிருந்தே, கவர்னரை மாநில அரசுக்கு எதிராக பாஜக தூண்டுவது தெரிகிறது. மத்திய பாஜக அரசின் தீய எண்ணம் வெளிவந்துள்ளது... 'என்ற வகையில் அவர் கூறியுள்ளார்.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு வெளியானபோதே, ' இது சர்ச்சைக்குரியதாக இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தன் அதிகார வரம்பை மீறியுள்ளதோ என்ற சந்தேகம் உருவாகும் வகையில் உள்ளது. மத்திய அரசு திருத்த மனு போட்டால்தான் தெளிவாகும் என்று எழுதியிருந்தேன்.

மத்திய அரசு திருத்த மனு போடவில்லை. ஜனாதிபதியே விளக்கம் கேட்டுள்ளார்.

எந்த மசோதாவும் ஜனாதிபதி அல்லது கவர்னர் ஒப்புதல் அளித்த பிறகே சட்ட அந்தஸ்தைப் பெறும். சுப்ரீம் கோர்ட்டே அதைச் செய்தது புதிய முறையாக உள்ளது. எனவேதான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி எப்படி மத்திய அரசின் பிரதிநிதியாக செயல்படுகிறாரோ, அப்படி கவர்னர்கள் மாநில அரசின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால், உண்மையில் கவர்னரும் மத்திய அரசின் பிரதிநிதிதான்.

மாநில அரசு தவறான திசையில் செல்வதாகத் தோன்றினால் அதைத் தடுப்பது அவரது கடமையாகிறது.

மத்திய அரசுக்கு முரண்பாடான மசோதாக்களை மாநில அரசு அனுப்பினால் அவற்றை கவர்னர் எப்படி ஏற்க முடியும்? மாநில அரசிடம் கேட்டுப் பார்ப்பார். முடியாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி விடுவார். அவ்வளவுதான் ஒரு கவர்னர் செய்ய முடியும்.

இது புரியாமல், ' கவர்னர் ஒரு போஸ்ட்மேன். கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை ' என்று மாநில அரசு கூறும்போது சிக்கல் ஏற்படுகிறது.

ஜனாதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க அரசியல் சட்டப்படி சுப்ரீம் கோர்ட் கடமைப்பட்டுள்ளது. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு தெரியாமல் இருக்க முடியாது.

சுப்ரீம் கோர்ட் பதில் தர வேண்டியதில்லை என்ற வாதம், அது பதில் தரக்கூடாதே என்று கவலைப்படுபவர்களின் எண்ணம்.

ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் முழுமையாக விசாரித்து பதில் அளித்தால், முந்தைய தீர்ப்பு மாற்றப்படும் வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என்றே தோன்றுகிறது.

- துக்ளக் சத்யா, மூத்த பத்திரிகையாளர்
வேளச்சேரி- சென்னை கடற்கரை மின்சார ரயில் ரத்து.

பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று மின்சார ரயில்கள் ரத்து இன்று இரவு 10 மணி முதல் மே 18 காலை 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து.

வேளச்சேரி- சென்னை மார்க்கத்தில் இன்று 4 ரயில்கள், நாளை 13 ரயில்கள் முழுமையாக ரத்து - ரயில்வே நிர்வாகம்.
வேன் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து.

கரூரில் வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

சேலத்திலிருந்து கரூர் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து, முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி சாலை தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்த்திசையில் வந்த சுற்றுலா வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து.

விபத்தில் படுகாயம் அடைந்த 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.
டாஸ்மாக் மேலாண் இயக்குநர் வீட்டில் 2வது நாளாக சோதனை.

ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

தேனாம்பேட்டையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரின் வீட்டிலும் 2வது நாளாக சோதனை தொடருகிறது.
சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.

அதிமுக முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.

சேவூர் ராமச்சந்திரனின் மகன்கள் விஜயகுமார், சந்தோஷ்குமார் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.
குறள் எண் : ௨௪௨(242)
பால் :அறத்துப்பால்
அதிகாரம் :அருளுடைமை

குறள் :
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.


உரை :
நல்லநெறியில் வாழ்ந்து, நமக்கு உதவும் அறம் எது என ஆராய்ந்து, அருளுடன் வாழ்க; எல்லாச் சமய நெறிகளால் ஆராய்ந்தாலும் அருளே நமக்குத் துணையாகும்.

English :
Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)

தி ஆ ௨௦௫௬ விடை (வைகாசி -௩)
தமிழ் வாழ்க
🔴 ராமதாஸ் கூட்டத்திற்கு எதிராக நிர்வாகிகள் அமைதிப் புரட்சி! - பா.ம.க. இரட்டைத் தலைமைப் போரில் அன்புமணி முன்னிலை!

- ஜி.எஸ்.பாலமுருகன்.

_அவசர கூட்டம்: அழைப்பு இருந்தும் பங்கேற்பு குறைவு_

பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரத்தில் மாவட்டத் தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான அவசரக் கூட்டத்தை நடத்தியது கட்சி உள்ளேயே புதிய பிளவுக்கு காரணமாகியுள்ளது. இந்த கூட்டத்தில், ராமதாஸின் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே பங்கேற்றனர்; பெரும்பாலான நிர்வாகிகள், குறிப்பாக அன்புமணியின் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முக்கியமாக, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், அழைப்பு பெற்றிருந்தாலும், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

_ஆதரவு எங்கே? நிர்வாகிகளின் பெரும்பான்மை அன்புமணி பக்கம்_

பா.ம.க.வில் மொத்தமுள்ள 216 மாவட்ட நிர்வாகிகளில் 94% பேர் அன்புமணி ராமதாஸை ஆதரிக்கின்றனர். இது, கட்சி நிர்வாக அடுக்குகளில் அன்புமணியின் பிடியையும், ராமதாஸ் அழைத்த கூட்டத்துக்கான எதிர்மறையான பதிலும் ஆகும். இது, பா.ம.க.வில் இரட்டைத் தலைமை சிக்கல் முற்றுப் பெறும் தருணத்தைக் குறிக்கலாம் என பார்க்கப்படுகிறது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

_கட்சியின் எதிர்காலம்: குழப்பம் மேலோங்கும் நிலையில்..._

உட்கட்சிப் பிளவுகள், பா.ம.க.வின் எதிர்கால அரசியல் பாதை பற்றிய குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் பொதுப் பணிகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் ஆலோசனைகள், கூட்டணி நிலைப்பாடுகள் அனைத்தும் நிலைதடுமாறும் சூழ்நிலையில் உள்ளன. இதனால் கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

_மேலிட ஒருமைப்பாடு அவசியம்..._

'சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறையாது' என்று டாக்டர் ராமதாஸ் சொல்வது அன்புமணியின் மீதான ஆதங்கத்தை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எனினும், சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், பா.ம.க.வின் மேலிட ஒருமைப்பாடு, செயல் திட்டங்கள் குறித்த தெளிவுகளுக்கு மிகுந்த அவசியம் எழுந்துள்ளது.

பாமக இளைஞரணி தலைவர் நியமனம், கூட்டணி நிலைப்பாடு ஆகியவற்றில்தான் ராமதாஸ் உடன் அன்புமணிக்கு பிணக்கு. எனவே இதை சரிசெய்து ராமதாஸ் - அன்புமணி ஆகிய இரு தலைவர்களும் இணைந்து செயல்பட வேண்டிய சூழல் அவசியமாகிறது. இது பா.ம.க.வுக்கு மட்டுமன்றி தமிழக அரசியலுக்கும் முக்கியமானது!

பதிவு: ஜி.எஸ்.பாலமுருகன்.
அர்ப்பணிப்பு!

"ரேஸிங்கிற்குள் வரவேண்டும் என்று முடிவெடுத்தவுடன், நான் மீண்டும் உடல் உறுதியுடன் இருக்க வேண்டும் என நினைத்தேன்.

இதற்காக கடந்த 8 மாதங்களில் டயட், உடற்பயிற்சி, சைக்கிளிங், நீச்சல் பயிற்சி ஆகியவற்றின் மூலம் 42 கிலோ எடையை குறைத்தேன்.

ஒரு டீடோட்லராகவும், சைவ உணவுகளை மட்டுமே உண்பவனாகவும் மாறினேன்.

என்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ரேஸிங்கிற்காக அளிக்க வேண்டியுள்ளது. அதைதான் நான் தற்போது செய்து கொண்டிருக்கிறேன்.

- அஜித்குமார், நடிகர் மற்றும் ரேஸர்

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 கடந்த மார்ச் 14 முதல் ஏப். 29 வரை நடந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார் ஆளுநர் ரவி!

இந்த கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
💥 புத்தகம் வேண்டாம்...

2025-26 கல்வியாண்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் கொண்டுவரத் தேவையில்லை என கேரள அரசு அறிவிப்பு!

இதற்கு பதிலாக மாணவர்கள் மத்தியில் சமூக பிரச்னைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. நாட்டிலேயே முதல்முறையாக இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளது கேரள அரசு.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
PSLV C-61 ராக்கெட்டுக்கான கவுன்ட் டவுன் தொடக்கம்.

நாளை விண்ணில் ஏவப்படவுள்ள PSLV C-61 ராக்கெட்டுக்கான 22 மணி நேர கவுன்ட் டவுன் தொடங்கியது.

PSLV C-61 ராக்கெட் மூலம் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

நாளை அதிகாலை 5.59க்கு ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து PSLV ராக்கெட் விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாயும் 101ஆவது ராக்கெட் PSLV C-61 ஆகும்.
💥 அமைச்சர் நேருவை அதிர வைத்த மயிலாடுதுறை திமுக மோதல்!

வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் நடத்தி வருகிற ஆலோசனைக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்ட திமுகவின் ஆலோசனைக் கூட்டம் டெல்டா மண்டல பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் மே 15 ஆம் தேதி மாலை மயிலாடுதுறையில் நடைபெற்றது.

மே 15 ஆம் தேதி மாலை நடந்த திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தின் கிட்டத்தட்ட பெரும்பாலான நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிராக அமைச்சர் நேரு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலையில் குரல் கொடுத்தனர்.

அவர்களுக்கு எதிராக நிவேதா முருகனின் ஆதரவாளர்களும் எதிர்க்குரல் எழுப்ப, ஒரு கட்டத்தில் கைகலப்பு ஆகும் நிலை ஏற்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், “இந்த மாவட்டத்தின் மீது முதலமைச்சர் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். முதல்வரை மாப்பிள்ளையாக பெற்ற மாவட்டம் இது.

> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

ஆனால், இங்கே நிலைமை எதுவும் நன்றாக இல்லை. நிர்வாகிகள் நன்றாக இல்லை. கட்சிக்காரனுக்கு மாவட்ட செயலாளர் எதுவுமே செய்யவில்லை. மாவட்ட செயலாளர் முன்னெடுத்துள்ள ஜாதி அரசியல் இங்கே கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சென்னையில் நடந்த இணைப்பு விழா பற்றி கூட இங்கிருக்கும் நிர்வாகிகள் பலரும் தலைமையிடம் புகார் சொல்லியிருக்கிறார்கள். இந்த நிலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தால் நமக்கு அது சரியாக இருக்காது” என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது மாவட்டச் செயலாளர் நிவேதா முருகனுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் இன்னொரு மாவட்ட துணைச் செயலாளர் செல்வமணி எழுந்து, ஞானவேலனை நோக்கி, ‘மாவட்டத்தை பத்தி குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு நீ உட்காரு’ என்று குரல் எழுப்பினார். அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலனுக்கு ஆதரவாக திரண்டார்கள்.

மாவட்டத் துணைச் செயலாளர் செல்வமணியோடு சில நிர்வாகிகள் சேர்ந்து கொண்டு நிவேதா முருகனுக்கு ஆதரவாக திரண்டார்கள். இரு தரப்பினரும் மேடையை நோக்கி சென்று தடித்த வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

இதையெல்லாம் பார்த்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அப்போது சடாரென எழுந்த அமைச்சர் நேரு மாவட்ட செயலாளருக்கு எதிர்ப்பான நிர்வாகிகள், ஆதரவு நிர்வாகிகள் என இரு தரப்பினரையும் கையைப் பிடித்து பின்னோக்கித் தள்ளி போய் உட்காருய்யா போய் உட்காருய்யா என்று சத்தம் போட்டு ஒரு வழியாக கூட்டத்தில் சலசலப்பை சற்று அமைதிப்படுத்தினார்.

உடனே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மெய்யநாதன் பக்கம் திரும்பிய மண்டல பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு, ‘என்னங்க இதெல்லாம்?’ என்று கேட்டார்.

அப்போது மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரான மெய்யநாதன், “நிர்வாகிகள் மாவட்ட செயலாளருக்கு எதிரா சொல்றதெல்லாம் உண்மைதான். நானும் இதை பலமுறை அவரிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஒரு கட்டத்துக்கு மேல் எனக்கே மரியாதை இல்லை” என்று ஓப்பனாக நேரு முன்னிலையில் போட்டு உடைத்து விட்டார்.

இதற்குப் பிறகு பேசிய அமைச்சர் மண்டல பொறுப்பாளர் கே.என்.நேரு,

“நானும் எத்தனையோ மாவட்ட பஞ்சாயத்துகளை பார்த்திருக்கேன். மயிலாடுதுறை நிலைமைய பார்க்க ரொம்ப வருத்தமா இருக்கு. தேர்தல் நெருங்கும் நேரத்துல இவ்வளவு பேர் இவ்வளவு புகார்கள் சொல்வது கட்சி வளர்ச்சிக்கு ஏற்றதா இல்லை. உடனடியாக இதுகுறித்து தலைவருக்கு தெரியப்படுத்துவேன். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று பேசி கூட்டத்தை முடித்தார்.

மே 16-ஆம் தேதி அதிகாலை மயிலாடுதுறையிலிருந்து மாவட்ட செயலாளர் நிவேதா முருகனுக்கு எதிரான சீனியர் நிர்வாகிகள் பலர் புதுக்கோட்டை சென்று அங்கே பொறுப்பு அமைச்சரான மெய்யநாதனை சந்தித்து பேசியிருக்கிறார்கள்.

நன்றி: மின்னம்பலம்.
இன்றைய புத்தக மொழி
17/05/25
📚📚📚🌹📚📚📚

பயத்தின் மறுபக்கத்தில்தான்
நீங்கள் விரும்பும்
அனைத்தும் உள்ளன.

- ஜாக் கேன்ஃபீல்ட் -

📚📚📚🌹📚📚📚